Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இண்டர்நெட் லாட்டரி மோசடி

Featured Replies

சூப்பர் பம்பர் பரிசு ரூ. 10 கோடி தருவதாக கூறி இண்டர்நெட் மூலம் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகள் தமிழக இளைஞர்களை குறி வைத்து தகவல்கள் அனுப்பிய வண்ணம் உள்ளன. இதைப்பெறுவதற்காக பலர் தொடர்ந்து பணம் கட்டி வருகின்றனர். இதில் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் நமது மாலை மலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு நேர்ந்த பரபரப்பு அனுபவம் குறித்து தெரிவித்தனர்.

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். திரைப்பட வினியோகஸ்தர். இவரது மகன் பாலாஜி (வயது 22). இவர் இண்டர்நெட் லாட்டரியில் ரூ. 4 கோடி பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:-

நான் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வருகிறேன். தினமும் மாலை கல்லூரி முடிந்தவுடன் 5 ரோட்டில் உள்ள இண்டர்நெட் மையம் செல்வேன்.

ஒருமுறை குறிப்பிட்ட வெப் சைட்டுக்கு சென்றேன். அதில் லக்கி பிரைஸ் என்ற பைல் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் என்னுடைய பெயர், விலாசம், ஈமெயில் முகவரி உள்பட தகவல்களை கேட்டனர். இதையடுத்து கிளிக் டூ விண் என்ற மெசேஜ் வந்தது. அதை நான் கிளிக் செய்தவுடன் 60 வெவ்வேறு எண்கள் வந்தன. அதில் 6 நம்பர்களை தேர்வு செய்து அனுப்ப சொன்னார்கள்.

பரிசு பல கோடி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நான் மிக ஆர்வமாக ராசி நம்பர்களை தேர்வு செய்து அனுப்பினேன். அடுத்த சில நிமிடங்களில் அப்படியொரு அதிர்ச்சி தகவலை நான் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை.

நான் தேர்வு செய்த எண்ணுக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டதாகவும், ஒரு மில்லியன் டாலர் (ரூ. 4 கோடி) பரிசு கிடைத்ததாகவும் தகவல் வெளிவந்தது.

உடனடியாக நான் வீட்டுக்கு ?#8220;டோடிச் சென்று அந்த தகவலை சொன்னேன். எனக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. எனது தந்தை மிகவும் சந்தோஷப்பட்டார். உடனே பரிசுத் தொகை வாங்கி வா என்றார்.

நான் மறுநாள் இண்டர்நெட் மையம் சென்று குறிப்பிட்ட இணைய தளத்தை கிளிக் செய்து பரிசு தொகையை பெற விருப்பம் தெரிவித்தேன். ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் பேசும்படி தகவல் வந்தது.

அந்த எண்ணை தொடர்பு கொண்டு ஆங்கிலத்தில் பேசினேன். எதிர்முனையில் பேசியவர் பரிசுப் பணம் முழுவதையும் பெறுவதற்கு முன்பணமாக ரூ. 80 ஆயிரம் அனுப்பும்படி கூறினார். நான் எனது பரிசுப்பணத்தில் கழித்துக் கொண்டு மீதியை அனுப்பி வைக்கும்படி அவரிடம் கூறினேன்.

மேலும் அவர் உங்கள் ஊரில் காசு கொடுத்து லாட்டரி வாங்கிய பிறகுதானே பரிசு கிடைக்கும். அதைப்போல்தான் இதுவும் என்றார். சில சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

நேரில் வந்தால் 48 மணி நேரத்தில் பணத்தை பெற்றுக் கொண்டு ஊருக்கு திரும்பலாம் என்று அவர் கூறியபோது எனக்கு முழு நம்பிக்கை பிறந்துவிட்டது. டி.டி. எடுத்து குறிப்பிட்ட வங்கிக்கு அனுப்பினால் ஒருவேளை ஏமாற்றப்படலாம் என்று கருதி நான் நேரில் செல்ல முடிவெடுத்தேன்.

அடுத்த 15 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் செல்வதற்காக பாஸ்போர்ட் எடுத்தேன். சென்னை தூதரகத்தை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தபோது குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் அழைப்பாணை இருக்க வேண்டும். அல்லது பிரீ விசாவில்தான் செல்ல வேண்டும் என்றனர்.

இதுபற்றி அந்த நிறுவனத்தாரிடம் பேசியபோது பிரீ விசாவில் வரும்படி கூறினர். நான் 7-வது கோடீஸ்வர அதிர்ஷ்டசாலி என்றும் தெரிவித்தனர். இதன்பிறகு பலரிடம் இதுபற்றி நான் விசாரித்தபோது மோசடி வேலை என்பது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தேன். நல்ல வேளை தப்பித்தேன் என்று நினைத்துக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி விஜயகுமார் கூறியதாவது:-

எனது சகோதரர் பிரேம்குமார் டெக்ஸ்டைல் என்ஜினீயராக உள்ளார். அவருக்கும் இதேபோல் நெதர்லாந்தில் இருந்து சூப்பர் பம்பர் பரிசு கிடைத்திருப்பதாக தகவல் வந்தது. பிரேம்குமாருக்கு நிறைய வெளிநாட்டு தொடர்புகள் இருப்பதால் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நண்பரிடம் இதுபற்றி விசாரித்து மோசடி வேலை என்பதை தெரிந்து கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை, ரத்தினபுரியில் வசிக்கும் ஹரிகிருஷ்ணன் வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். அவர் கூறியதாவது:-

கோவையில் 10-ம் வகுப்பு படித்து வரும் எனது தம்பி மகள் தினமும் இண்டர்நெட் மையம் செல்வார். குறிப்பிட்ட இணைய தளத்தில் ஒருநாள் அவருக்கு வார்த்தை விளையாட்டு போட்டி வந்தது. இதில் கலந்து கொண்ட அவர் ரூ. 5 கோடி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். பரிசை பெற ரூ. 20 ஆயிரம் அனுப்பும்படி கூறினர். அவரும் அனுப்பி வைத்தார். தற்போது அந்த நிறுவனம் பற்றிய இணைய தளம் செயல்படாமல் உள்ளது. தொலை பேசி எண்ணும் கேன்சலாகி விட்டது.

இந்த சமயத்தில் எம்.எஸ்.சி. கம்ப்ïட்டர் சயின்ஸ் படிக்கும் எனது மகளுக்கும் சூப்பர் பம்பர் பரிசு கிடைத்திருப்பதாக இண்டர்நெட் மூலம் தகவல் வந்தது. ஏற்கனவே எனது தம்பி மகளுக்கு நேர்ந்த அனுபவத்தால் எனது மகளை எச்சரித்தேன். இதனால் மோசடியில் இருந்து தப்பிவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து முக்கிய நகரங்களில் உள்ள கம்ப்ïட்டர் மையங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஏராளமான கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

Edited by Prashanna

இவர்களிற்கு ஓரளவாவது Common Sense வேண்டாமோ? இப்படி ஏமாளிகளாக இருக்கிறார்களே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.