Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழலில் சிக்கிக் கொண்ட அரசாங்கமும் விஜயதாசவும்

Featured Replies

ஊழலில் சிக்கிக் கொண்ட அரசாங்கமும் விஜயதாசவும்
 

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, கடந்த 10 ஆம் திகதி, அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார்.   

இப்போது, நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தில் இருக்க முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது.   
தமது அரசாங்கத்தில் உள்ளவர்களின் நெருக்குவாரத்தினாலேயே, அவர்கள் இந்த நெருக்கடி நிலையை எதிர்நோக்க வேண்டியதாயிற்று.   

உண்மையிலேயே, ரவி கருணாநாயக்க விவகாரமே, இம்முறை விஜயதாசவுக்கும் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது.   

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன், ரவி கடந்த 2 ஆம் திகதி சாட்சியமளித்தார். அப்போது, பிணைமுறி விவகாரம் தொடர்பாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸிடம், அவர் நிதி உதவிகளைப் பெற்றமை அம்பலமானதை அடுத்தே, அவர் மீது நெருக்குவாரம் ஏற்பட்டது.  

இதற்கு 21 மாதங்களுக்கு முன்னர், 2015 ஆம் ஆண்டு, இதேபோல் அரசாங்கத்தில் உள்ளவர்களாலேயே நெருக்குதலுக்கு உள்ளாகிச் சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய நேர்ந்த, மூத்த சட்டத்தரணி திலக் மாரப்பன, ரவி கருணாநாயக்கவுக்குப் பதிலாக இப்போது வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.   

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடியொன்றாக கருதப்படும் ‘அவன் காட்’ விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சில சந்தேக நபர்களைப் பாதுகாத்து, கருத்து வெளியிட்டமையினாலேயே மாரப்பனவுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு, அரசாங்கத்துக்குள்ளிருந்தே எதிர்ப்புக் கிளம்பியது.  

ரவியின் இராஜினாமாவை ஐக்கிய தேசியக் கட்சியில் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. எனவே, அவருக்குப் பிணைமுறி விவகாரத்துடன் இருக்கும் தொடர்பை அம்பலப்படுத்தி, அவரை இராஜினாமாச் செய்யச் செய்த சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடன் அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால்தான், அத்திணைக்களத்துக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பக்கம் அவர்களது கோபம் திரும்பியது.  

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் மந்த கதியில் நடைபெறுவதாகவும் அதற்குச் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குப் பொறுப்பான நீதி அமைச்சரே காரணம் எனவும் அவர்கள் இதுவரை மறைமுகமாகக் குற்றஞ்சாட்டி வந்தனர்.   

அந்த விசாரணைகள் மந்த கதியில் நடைபெற்றாலும் தமது கட்சி, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே, அக் கட்சியின் தலைவர்களில் ஒருவருக்கு (ரவிக்கு) எதிரான விசாரணைகள் துரித கதியில் நடைபெற்றமை அவர்களது கோபத்தை இரட்டிப்பாக்கியது.  

போதாக்குறைக்கு நீதி அமைச்சர் அரசாங்கத்தின் முக்கிய பொருளாதார உத்தியாகக் கருதப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீன நிறுவனம் ஒன்றுக்குக் குத்தகைக்கு வழங்கும் திட்டத்தையும் விமர்சித்து வருகிறார்.   

அவையெல்லாம் ஒன்று சேர்ந்தே விஜயதாச, இராஜினாமாச் செய்யவேண்டும் என்ற கருத்து கடந்த வாரம் ஐ.தே.கவுக்குள் மேலோங்கி வந்தது.  

விஜயதாசவுக்கு எதிரான இந்தப் போக்கை, நாட்டில் சிறுபான்மை மக்கள் பெரும்பாலும் விரும்புவார்கள். ஏனெனில், ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தின் நீதி அமைச்சராக இருந்தாலும், விஜயதாச சிறுபான்மை மக்கள் விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கையையே கடைப்பிடித்து வந்துள்ளார்.  

 2015 ஆம் ஆண்டு, இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் அணுசரனை வழங்கியதையும் அவர் விரும்பவில்லை.   

அண்மையிலும் ஐ.நா உயர் அதிகாரி ஒருவருடன், இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக அவர் மோதலில் ஈடுபட்டு இருந்தார்.  

 இலங்கையில் போர் நடைபெற்ற, காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரணை செய்யும் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள் இருக்கக்கூடாது என்பதே அவரது நிலைப்பாடாகும்.   

இவ்வாறு, தமிழர்களை ஆத்திரமூட்டிய விஜயதாச, 32 இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக சென்றுள்ளதாக, சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் கூறி, முஸ்லிம்களுக்கு எதிராகவும் சிங்கள மக்களைத் தூண்டிவிட முயற்சித்தார்.  

 ஆனால், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி, அவர் கூறியதை மறுத்திருந்தார். அண்மையில், அவர் பொது பல சேனா அமைப்பின் தலைவரான கலகொட அத்தே ஞானசார தேரருடன் இணைந்து செயல்படும் காட்சி, பத்திரிகைகளில் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்தது.   

அவர், புத்த சாசன மற்றும் நீதி என்ற இரு அமைச்சுகளுக்கும் பொறுப்பாக இருப்பது, சிறுபான்மை மக்களுக்கு நீதி வழங்குவதில் தடையாக இருக்கும் என ‘ராவய’ என்னும் சிங்கள பத்திரிகையில் அண்மையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஏனெனில், ஞானசார தேரர் போன்ற பௌத்த மதகுருக்களுக்கும் சிறுபான்மை மதத்தினருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படும்போது, அவர் புத்த சாசன அமைச்சராக நீதித்துறையை வழிநடத்தக் கூடும் என்பதனாலேயாகும்.   

2015 ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல், அமைச்சராக இருந்து கொண்டே, விஜயதாச இந்த அரசாங்கத்தின் சில முக்கிய நடவடிக்கைகளை எதிர்த்து வருகிறார். பதவிக்கு வந்தது முதல், அரசாங்கம் கடந்த அரசாங்கத்தின் தலைவர்களும் அதிகாரிகளும் செய்த சில குற்றச் செயல்களைப் பற்றி விசாரணைகளை முடுக்கிவிட்டது. கடற்படை செய்து வந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் தொழிலை ‘அவன்ட் கார்ட்’ என்ற நிறுவனத்துக்கு வழங்கியமை அவ்வாறான பாரதூரமான ஊழல்களில் ஒன்றெனக் கூறப்படுகிறது.  

அமைச்சர் மாரப்பன, ‘அவன்ட் கார்ட்’ நிறுவனத்தின் சட்டத்தரணியாகக் கடமையாற்றியிருந்தார். அமைச்சர் விஜயதாச, அந்நிறுவனத்தின் அதிபரான மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியின் நெருங்கிய நன்பர். எனவே, விஜயதாசவும் மாரப்பனவும் ஆரம்பத்திலிருந்தே அந்நிறுவனத்துக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து அந்நிறுவனத்தைப் பாதுகாக்க முற்பட்டனர்.   

‘அவன்ட் கார்ட்’ வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய இடமளிக்க மாட்டேன் என நீதி அமைச்சராக இருக்கும் நிலையிலேயே விஜயதாச அப்போது நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். இது ஐ.தே.கவில் உள்ள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன போன்றவர்களை வெகுவாகச் சினம்கொள்ளச் செய்தது.  

‘அவன்ட் கார்ட்’ நிறுவனம் எந்தவித சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனச் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மாரப்பன, 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறினார். 

அதற்கு ஐ.தே.கவுக்குள்ளிருந்தே எழுந்த எதிர்ப்பின் விளைவாக, அவர் அம்மாதமே தமது பதவியை இராஜினாமாச் செய்தார்.  

ஆனால், அவரைப் போலவே, ‘அவன்ட் கார்ட்’ நிறுவனத்தைப் பாதுகாத்து வந்த விஜயதாச, தமது பதவியை இராஜினாமாச் செய்ய முன்வரவில்லை. 

தமக்கும் ‘அவன்ட் கார்ட்’ நிறுவனத்துக்கும் இடையே, எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் அந்நிறுவனத்தின் அதிபரைத் தமக்குத் தெரியாது என்றும் அவர் வாதாடினார். அப்போது, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தை எந்த வகையிலாவது சிறையில் அடைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படும், அப்போதைய ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாசவின் குடும்பத்தினரும் ‘அவன்ட் காரட்’ அதிபர் நிஸ்ஸங்க சேனாதிபதியின் குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்து, 2006 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் டிஸ்னிலாந்தில் உல்லாசமாக இருந்தபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கினார். அத்தோடு அடங்கிவிட்டாலும், விஜயதாச மாரப்பனவைப் போல் பதவியைத் துறக்க முன்வரவில்லை.  

அவருக்கு எதிராக, ஐ.தே.க இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறது. கோட்டாபயவைப் பாதுகாத்தது போலவே முன்னைய அரசாங்கத்தின் ஏனைய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை அக்கறையோடு முன்னெடுக்காமை, ஒரு குற்றச்சாட்டாகும். 

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி தொடர்பான ஐ.தே.கவின் திட்டத்தை எதிர்ப்பது மற்றைய குற்றச்சாட்டாகும். இவை பாரதூரமான குற்றச்சாட்டுகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  

இராஜினாமாச் செய்ய வேண்டும் எனத் தமது கட்சியின் உறுப்பினர்களாலேயே இதுவரை மூன்று ஐ.தே.க அமைச்சர்கள் அண்மையில் வற்புறுத்தப்பட்டுள்ளனர். மாரப்பன, ரவி மற்றும் விஜயதாச அம் மூவராவர். ‘அவன்ட கார்ட்’ விவகாரம் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட உடனேயே மாரப்பன தமது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தார். 

ரவி, ஊழல் பேர்வழிகளிடமிருந்து சன்மானம் பெற்றார் என்பது அம்பலமாகி, விமர்சனங்களை எதிர்நோக்கி சுமார் ஒரு வாரகாலம், தாக்குப் பிடித்துவிட்டு, நெருக்குவாரம் அதிகரிக்கவே அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தார்.   

விஜயதாச 2015 ஆம் ஆண்டு ‘அவன்ட் கார்ட்’ விவகாரம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டபோது, மௌனமாக இருந்தார். சிறிது நாட்களில் எதிர்ப்புகள் தணிந்துவிடும் என அவர் நினைத்திருக்கலாம். அவ்வாறே எதிர்ப்புகள் தனிந்தன. ஆனால், இம்முறை முன்னைய அரசாங்கத்தின் மோசடிகள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் திருப்பித் தாக்க முற்பட்டார்.   

ஐ.தே.கவில் பெரும்பாலானவர்கள் கூறுவதைப்போல், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துவதாக இருந்தால், தாம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விவகாரங்களில் தலையிட வேண்டும் என்றும், அது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு முரணானது என்றும் தாம் அதைச் செய்யப் போவதில்லை என்றும் விஜயதாச கூறி வருகிறார்.   

ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய இடமளிக்கப் போவதில்லை என்று கூறியவரும் அவரே. சட்டமா அதிபர் திணைக்கள விவகாரங்களில் தலையிடாமல், அவர் எவ்வாறு கோட்டாபயவை கைது செய்வதைத் தடுக்கப்போகிறார்?   

அரசாங்கம் கடந்த மாதம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதை அவர் விமர்சிக்கலானார். தேசிய வளங்களை, வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதைத் தாம் விரும்பவில்லை எனக் கூறினார்.

துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வழங்கினாலும் விற்றாலும் வித்தியாசம் இல்லை என அவர் வாதிடுகிறார்.  

 அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், அரசாங்கத்தைப் பகிரங்கமாக விமர்சித்துக் கொண்டு, அரசாங்கத்தில் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.   
ஏற்கெனவே கடந்த வாரம் ஐ.தே.கவின் செயற்குழுவில் விஜயதாச மீது நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, அவர் தொடர்ந்தும் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக இருக்க முடியாது.   

கடந்த சனிக்கிழமையாகும் போது, அவர் எதிர்க்கட்சிக்காரர் ஒருவரைப் போலவே அரசாங்கத்தை விமர்சிக்கலானார். அனுராதபுரம் மாவட்டத்தில் ரம்பேவ என்னும் இடத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது, அவர் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கும் வகையில் அரசாங்கம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் பிரேரணை நிறைவேற்ற அணுசரனை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டினார்.  

 அதேபோல், அவர் தமக்குப் பாதுகாக்க குடும்பமோ அல்லது பரம்பரையோ இல்லை எனக் கூறிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் கொள்கையைச் சிலர் இன்றும் கடைப்பிடித்து வருவதாகவும் அது, நாட்டுக்குச் சாபமாக அமைந்துள்ளதாகவும் மறைமுகமாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் குறைகூறினார். அத்தோடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர், தாம் பதவி விலகப் போவதில்லை எனக் கண்டியில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின் கூறியிருந்தார்.  

ஆனால், ஐ.தே.க எம்பிக்கள், அவர் விடயத்தில் உறுதியாக இருந்தனர். அதாவது, அவர் பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர், ஜனாதிபதி மூலம் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாகியது.   

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என விஜயதாசவை குறை கூறினாலும், ஊழல் என்று வரும் போது, ஐ.தே.கவும் இந்த அரசாங்கமும் ஒரு வித தார்மிக நெருக்கடியை சந்தித்து இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. ஐ.தே.க தலைமையிலான இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை மாதத்தில்தான் நாட்டில் மிகப்பேரும் ஊழல்களில் ஒன்றான பிணைமுறி விவகாரம் இடம்பெற்றுள்ளது.  

 அது தொடர்டபாக, இதுவரை எவரும் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்படாவிட்டாலும், ஊழல் இடம்பெற்றமை தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது.   
நாட்டுக்கு பல கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய ‘அவன்ட் கார்ட்’ விவகாரத்தின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அரசாங்கத்தின் அமைச்சர்களே பாதுகாக்க முற்பட்டனர்.

அவர்களில் ஒருவர், அதன் காரணமாகவே அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தாலும், அவர் மீண்டும் ஒன்றல்ல, இரண்டு அமைச்சர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவரான விஜயதாச, தற்போது மாட்டிக் கொண்டு இருந்தாலும் அது ‘அவன்ட் கார்ட்’ விவகாரத்துக்காக அல்ல.   

மாரப்பனவின் மறு நியமனம் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவர் 21 மாதங்களுக்கு முன்னர் எந்த விவகாரத்தில் சந்தேக நபர்களைப் பாதுகாப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு, பதவி விலகினாரோ, அந்த விவகாரம் முடிவடைந்து, சந்தேக நபர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட முன், அவர் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறாயின் அவர் அன்று பதவி விலகாமலே இருந்திருக்கலாமே.  

ஓர் ஊழல் விடயத்தில், குற்றஞ்சாட்டப்பட்டு, பதவி விலகியவர் மற்றொரு ஊழல் விடயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு பதவி விலகிய ஒருவரின் இடத்துக்கு நியமிக்கப்படுகிறார். இது என்ன நாகரிகம்? பதவி விலகியவர் வாழ் நாள், முழுவதிலும் ஒதுங்கியிருக்க வேண்டியதில்லைத்தான். ஆனால், எதற்கும் ஒரு முறை இருக்க வேண்டும்.   

அதன் பின்னர் பிணைமுறி விவகாரத்துடன் ஐ.தே.கவின் உப தலைவரும் நிதி அமைச்சருமாக இருந்த, ரவி கருணாநாயக்கவுக்கு தொடர்பு இருந்துள்ளதாக இப்போது அம்பலமாகியுள்ளது. அந்த ஊழலை முடி மறைக்கவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கியின் அதிபர் அர்ஜூன மகேந்திரனையும் அவரது மருமகனான அர்ஜூன் அலோசியஸையும் பாதுகாக்க, ஐ.தே.க ஆரம்பம் முதல் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டது. ‘கோப் குழு’ விசாரணையிலும் ஐ.தே.க அதற்காக பெரும் பாடுபட்டது. அது இப்போது நாடறிந்த விடயமாகிவிட்டது.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கடந்த வருடம் ‘அவன்ட் கார்ட்’ விவகாரம் தொடர்பாக, பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் விசாரணை செய்யப்பட்டதை அடுத்து ஊழல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவையும் இரகியப் பொலிஸாரையும் இலஞ்ச ஆணைக்குழுவையும் கடிந்து பேசினார். அதனால், இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட திலருக்ஷி விக்கிரமசிங்க பதவியை இராஜினாமாச் செய்தார்.   

எனவேதான், இந்த அரசாங்கமும் ஊழலை ஒழிக்குமா என்று மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் சந்தேகப்படுகின்றன.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஊழலில்-சிக்கிக்-கொண்ட-அரசாங்கமும்-விஜயதாசவும்/91-202792

  • தொடங்கியவர்

விஜேதாசவுக்கு ஏன் இந்த நிலை

 
 
விஜேதாசவுக்கு ஏன் இந்த நிலை
 

அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் ஆட்­சி­யைத் தக்­க­வைக்க முடி­யுமா என்ற சந்­தே­கம் இப்­போது ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஏற்பட்டுள்ளதாகத் தோன்­று­கி­றது.ஊழலை ஒழிக்­கப் போவ­தா­கக் கூறிக்­கொண்டு ஆட்­சி­யைப் பிடித்த கூட்டு அர­சின் பங்­கா­ளி­யான ஐக்­கிய தேசிய கட்­சியே இன்று ஊழ­லுக்­குள் சிக்­கித் தவிக்­கின்­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வந்த சாபக்­கே­டு­தான் மத்­திய வங்கி பிணை­முறி ஊழல்.அந்த விவ­கா­ரம் இன்று அந்­தக் கட்­சியை பல்­வேறு வடி­வங்­க­ளிலும் ஆட்­டிப் படைக்­கின்­றது.ஐக்­கிய தேசிய கட்­சி­யின் பெய­ரைக் கெடுப்­ப­தற்கு கூட்டு அர­சின் ஆயுட்­கா­லம் வரை இது ஒன்றே போதும் என்றே தெரி­கி­றது.இதை வைத்தே எதிர்க்­கட்­சி­கள் தொடர்ந்து ஐ.தே.கட்­சியை விமர்­சித்­துக் காலத்­தைப் போக்­கப் போகின்­றன.

இந்த ஊழ­லு­டன் தொடர்­பு­பட் டி­ருந்­தார் என்று குற்­றஞ்­சாட் டப்­பட்ட முன்­னாள் அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணை­யைக் கொண்டு வந்­த­னர் மகிந்த அணி­யி­னர்.அதை நிறை­வேற்­று­வ­தற்கு முன்பே, அவரை அமைச்­சுப் பத­வி­யில் இருந்து தாமாக வில­கச் செய்த பெருமை மகிந்த தரப்­பி­ன­ரையே சாரும்.

இவ்­வாறு பதவி வில­கி­ய­தன் மூ­லம் அவர் ஊழல் புரிந்­துள் ளார் என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டுள் ளது. இது ஐக்­கிய தேசிய கட்­சிக்கு பெரும் அவ­மா­ன­மா­கப் போயுள்­ளது.

திரு­டர்­களை பிடித்­துத் தண்­டிப்­போம் என்று கூறி ஆட்­சிக்கு வந்த கட்­சியே, திருட்­டில் ஈடு­பட்­டுள்­ளது என்ற முடி­வுக்கு மக்­கள் வந்­தி­ருக்­கின்­ற­னர். இந்த நிலைமை ஆட்­சிக்கு ஆபத்­தா­னது என்­பதை உணர்ந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்சி, இதை மக்­கள் மனங்­க­ளில் இருந்து நீக்­கு­ வ­தற்­காக கடந்த அர­சின் திரு­டர்­களை பிடித்து அடைப்­பது என்ற முடி­வுக்கு வந்­தது.

அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக மகிந்த ஆட்­சி­யின் திரு­டர்­களை பிடிப்­பதை ஒத்­திப்­போட்­ட­தன் விளைவை தலைமை அமைச் சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இப்­போ­து­தான் அனு­ப­விக்­கத் தொடங்­கி­யுள்­ளார்.ஆனால், இந்த ஒத்­திப்­போ­டல் மேலும் தொடர்ந்­தால் மகிந்த தரப்­பி­னர் அப்­பா­வி­க­ளா­க­வும், ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னர் திரு­டர்­க­ளா­க­வும் மக்­க­ளால் பார்க்­கப்­ப­டு­வது நிச்­ச­யம். இதை ரணி­லும் நன்­றி­வார்.

தலைக்கு மேல் வெள்­ளம் செல்­வ­தற்கு முன்­னர் அணை கட்­டும் வித­மாக மகிந்த அணி­யின் ஊழல்­வா­தி­களைக் கைது செய்து சிறை­யில் அடைப்­ப­தற்­கான சட்ட ஏற்­பா­டு­களை செய்­வ­தற்கு ரணில் திட்­ட­மிட்­டார்.ஆனால்,அந்­தத் திட்­டத்­துக்கு விஜேதாச முட்­டுக்­கட்­டை­யாக மாறி­ய­மை­தான் ஐக்­கிய தேசிய கட்­சிக்­குள் இப்­போது ஏற்­பட்
டி­ருக்­கும் சல­ச­லப்­புக்கு கார­ணம்.

சுதந்­தி­ரக் கட்­சி­யை
பல­வீ­னப்­ப­டுத்த
ரணில் வகுத்த திட்­டம்

மகிந்­த­வின் ஆட்சி கவிழ்ந்­த­தும் அவ­ரது ஆட்­சிக் காலத்து ஊழல்­க­ளில் சில­வற்­றின் விவ­ரங்­கள் ஒன்­றன்­பின் ஒன்­றாக வெளி­வ­ரத் தொடங்­கின.பலர் கைது செய்­யப்­பட்டு விசா­ ரிக்­கப்­பட்­ட­னர்.அது மகிந்­த­வுக்­குப் பெரும் சிக்­க­லா­கிப் போனது.அவ­ரது மக்­கள் செல்­வாக்கு சரி­யும் நிலை ஏற்­பட்­டது.

ஆனால், நாள்­கள் செல்­லச் செல்ல, அந்த வேகம் குறை­யத் தொடங்­கி­யது.பெரும் ஊழல்­கள் கிடப்­பில் போடப்­பட்டு, நகைப்­புக்­கி­ட­மான சிறு சிறு ஊழல்­கள் விசா­ரிக்­கப்­பட்­டன.கரம் போர்ட் ஊழல் என்­றும், கட­வுச் சீட்டு ஊழல் என்­றும், விசா­ர­ணை­கள் சென்­றன.ஆனால்,கோடிக்­க­ணக்­கான ரூபா பெறு­ம­தி­யான நிதி மோசடி ஊழல்­கள் ஒரு­பு­றம் கிடப்­பில் போடப்­பட்­டன.

அவ்­வா­றான சம்­ப­வங்­களை மாத்­தி­ரம் விசா­ரித்து வந்­த­தால், மகிந்த எது­வித ஊழ­லும் செய்­ய­ வில்லை என்­பது போன்­றும், அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக இவ்­வாறு சம்­ப­வங்­கள் தொடர்­பாக விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றன என்­பது போன்­றும் ஒரு தோற்­றப்­பாடு மக்­கள் மத்­தி­யில் எழத் தொடங்­கி­யது.

உப்­புச்­சப்­பற்ற இந்­தச் சம்­ப­வங்­களை மக்­க­ளுக்கு காட்­டிக் காட்டி மகிந்த அணி­யி­னர் அர­சி­யல் செய்­யத் தொடங்­கி­னர்; அர­சி­யல் இலா­பம் தேடத் தொடங்­கி­னர்.ஊழல் செய்­யாத எம்மை, வீணா­கப் பழி வாங்­கு­வ­தற்­காக அரசு இவ்­வாறு உப்­புச்­சப்­பற்ற சம்­ப­வங்­களை விசா­ரணை செய்­கி­றது என்று அவர்­கள் பரப்­புரை செய்­யத் தொடங்­கி­னர்.மக்­கள் அதை நம்­பும்­வ­கை­யில்­தான் அர­சின் செயற்­பா­டு­க­ளும் அமைந்
தி­ருந்­தன.

அது­போக, தமக்கு வேண்­டப்­பட்­ட­வர்­க­ளைக் கைது செய்ய வேண்­டாம் என்­றும், வெறு­மனே விசா­ரித்­து­விட்டு அனுப்­பு­மா­றும் அரச தரப்­பில் இருந்து பொலிஸ் உயர்­மட்­டத்­துக்கு அழுத்­தங்­க­ளும் கொடுக் கப்பட்டன.
லஞ்ச ஊழல்,ஆணைக்­கு­ழு­வின் முன்­னாள் தலைவி தில்­ருக்சி சில முக்­கிய புள்­ளி­களைக் கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­த­போது அரச உயர்­மட்­டம் அவ­ருக்கு முட்­டுக்­கட்டை இட்­டது.இத­னால் அவர் தாமா­கத் தமது பத­வி­யைத் துறக்­கும் செய்­யும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டார்.

விசா­ர­ணை­கள் என்ற பெய­ரில்-, ஊழல்­வா­தி­க­ளைப் பிடிக்­கின்­றோம் என்ற பெய­ரில் அரசு ஏன் இவ்­வாறு கண்­ணா­மூச்சி ஆட்­டம் ஆடு­கின்­றது என்ற கேள்வி எழுந்­தது.மகிந்­த­வைக் கொண்டு சுதந்­தி­ரக் கட்­சி­யைப் பிள­வு­ப­டுத்­தும் திட்­டம் ஒன்றை ரணில் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­வதே இந்த ஆட்­டத்­துக்­குக் கார­ணம் என்ற பதில் அர­சி­யல் அரங்­கில் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இதில் உண்மை இல்­லா­மல் இல்லை.அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் ஐக்­கிய தேசிய கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்­டும் என்­ப­தும், அடுத்­த­ அ­ரச தலை­வர் தேர்தலில் தான் அ­ரச தலை­வ­ராக வேண்­டும் என்­ப­தும் ரணி­லின் திட்­ட­மா­கும்.இந்­தத் திட்­டம் நிறை­வேற வேண்­டு­மென்­றால் சுதந்­தி­ரக் கட்சி பிள­வு­பட்டு பல­வீ­னப்­பட்டே ஆக வேண்­டும்.ஆகவே, இப்­போது சுதந்­தி­ரக் கட்­சிக்­குள் ஏற்­பட்­டி­ருக்­கும் பிள­வுக்கு கார­ணம் ரணில்­தான் என்­பதை மறுக்க முடி­யாது.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் மைத்­திரி தரப்­பும், மகிந்த தரப்­பும் ஒன்று சேர முடி­யா­த­படி தலைமை அமைச்சர் காய் நகர்த்தி வரு­கின்­றமை அவ­ருக்கு ஓர­ளவு வெற்­றி­யைக் கொடுத்­துள்­ள­போ­தி­லும்,அந்த இரண்டு தரப்­புக்­க­ளும் தலைமை அமைச்­ச­ருக்கு ஆத­ர­வான நிலைப்­பாட்­டில் இல்லை.

மகிந்த தரப்பு ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ராக எவற்­றை­யெல்­லாம் செய்ய முடி­யுமோ, அவற்­றை­யெல்­லாம் செய்து வரு­கின்­றது. மைத்­திரி தரப்பு தலைமை அமைச்­சரை ஆத­ரிப்­ப­தாக இல்லை.மைத்­திரி -மகிந்த தரப்­பி­னர் ஒன்­று­சே­ரா­விட்­டா­லும் ஐக்­கிய தேசிய கட்­சி­யைத் தாக்­கும் விட­யத்­தில் ஒன்று சேர்ந்தே செயற்­ப­டு­கின்­றனர்.
ரவி கரு­ணா­நா­யக்­க­வின் விட­யத்­தி­ லும் விஜேதா­ச­வின் விட­யத்­தி­லும் இந்த இரண்டு தரப்­புக்­க­ளும் ஒன்­றி­ணைந்து நின்­றதை நாம் கண்­டோம்.

ரவிக்கு எதி­ரான பிரே­ரணை

wijedasa-rajapaksa.jpg

ஐக்­கிய தேசிய கட்­சியை வீழ்த்­து­வ­ தற்­குக் கிடைக்­கின்ற ஒவ்­வொரு
துரும்­பை­யும் சரி­யா­கப் பயன்­ப­டுத்தி வரும் மகிந்த அணி, ரவிக்கு எதி­ரான மத்­திய வங்கி ஊழல் குற்­றச்­சாட்­டைத் தூக்­கிப் பிடித்து அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணை­யைக் கொண்டு வந்­தது.

ஆட்­சி­யின் பங்­கா­ளி­யான சுதந்­தி­ரக் கட்சி மாத்­தி­ர­மன்றி, ஐக்­கிய தேசிய கட்­சி­யின் அரை­வா­சிப் பேர்­கூட இந்­தப் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கத் தொடங்­கி­ய­தால் தலைமை அமைச்­ச­ரால் எது­வும் செய்ய முடி­ய­வில்லை.

வாக்­கெ­டுப்­பின்­போது பிரே­ரணை வெற்றியடைந்தால் அது அர­சின் இருப்­புக்கு ஆபத்­தாக அமைந்­து­வி­டும் என்­ப­தால் வாக்­கெ­டுப்­புக்கு முன்பே ரவி­யைப் பதவி வில­கச் செய்­தார் தலைமை அமைச்­சர்.
இருந்­தா­லும்,அந்­தப் பதவி வில­கல் கூட ரவி செய்த ஊழலை ரவியே ஏற்­றுக்­கொண்­ட­ார் என்று அமைந்­து­விட்­டது.

இதில் இருந்து மக்­க­ளின் கவ­னத்­தைத் திசை திருப்­பு­வ­தற்­காக மகிந்த அணிக்கு- மகிந்த குடும்­பத்­துக்கு எதி­ரான ஊழல் விசா­ர­ணை­யைத் துரி­தப்­ப­டுத்தி அவர்­க­ளுள் சிலரை சிறை­யில் அடைக்க வேண்­டிய தேவை தலைமை அமைச்­ச­ருக்கு ஏற்­பட்­டது.

மகிந்­த­வின் ஆள்­களை
காப்­பாற்­றினார் விஜே­தாச

மகிந்­த­வைக் கொண்டு சுதந்­தி­ரக் கட்­சி­யைப் பல­வீ­னப்­பப்­டுத்­தும் நோக்­கில் மகிந்த அணி­யி­ன­ருக்கு எதி­ரான விசா­ர­ணையை தலைமை அமைச்­சர் தாம­தப்­ப­டுத்­தி­யமை ஒரு பக்­கத்­தில் அவ­ருக்கு வெற்­றி­யைக் கொடுத்­துள்­ள­போ­தி­லும் மறு­பு­றத்­தில் தோல்­வி­யையே கொடுத்­துள்­ளது.

அதா­வது, சுதந்­தி­ரக் கட்­சி­யைப் பல­வீ­னப்­ப­டுத்­தல் என்­பது ஒரு பக்­கத்­தில் வெற்­றி­ய­ளிக்­கின்­ற­போது,மறு­பு­றத்­தில் மகிந்த தரப்­பி­னர் ஐக்­கிய தேசிய கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்­தும் வேலை­யைச் செய்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.அதன் உச்­சக்­கட்­டம்­தான் ரவிக்கு எதி­ரான பிரே­ரணை.

இத­னால் மகிந்த அணிக்கு எதி­ரான பிரே­ர­ணை­யைத் துரி­தப்­ப­டுத்து­ வ­தற்கு தலைமை அமைச்­சர் முடி­வெ­டுத்­தார்.இதற்­கான சட்ட ஏற்­பா­டு­களை செய்­யு­மாறு நீதி அமைச்­ச­ராக இருந்த விஜே­தா­ச­வுக்கு உத்­த­ர­விட்­டார் மகிந்­த­வின் ஆள்­களை மறை­மு­க­மா­கப் பாது­காத்து வந்த விஜே­தாச சட்­டத்­தில் உள்ள சில ஓட்­டை­களை வைத்து தலைமை அமைச்­ச­ரின் திட்­டத்தை முடக்­கு­வ­தற்கு முயன்­றார்.

இத­னால் பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கொண்டு விஜே­தா­ச­வுக்கு எதி­ரா­கக் காய் நகர்த்­தி­னார் தலைமை அமைச்­சர். அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கி­ய­மையை விஜே­தாச எதிர்த்­த­மைக்­கா­க­வும், மகிந்த அணிக்கு எதி­ரான விசா­ணை­யைத் தாம­தப்­ப­டுத்­தி­ய­மைக்­கா­க­வும் என இரண்டு விட­யங்­க­ளுக்­காக நம்­பிக்கை இல்­லாப் பிரே­ர­ணை­யைக் கொண்டு வரு­வ­தாக ஐ.தே.கவின் பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அறி­வித்­த­னர்.

இதை அறி­வித்த உட­னேயே அடித்­துப் பிடித்­துக் கொண்டு ஓடி­வந்து விஜே­தா­ச­வைப் பாது­காக்­கப் போவ­தாக அறி­வித்­தார் மகிந்த.இத­னால் மகிந்­த­வுக்­கும் விஜே­தா­ச­வுக்­கும் இடை­யி­லான தொடர்பு வெளி­யா­கி­யது.
விஜே­தாச ஆரம்­பம் முதல் மகிந்­த­வின் ஆள்­க­ளைப் பாது­காத்து வரு­கின்­றமை வெளிப்­ப­டை­யான ஒன்­றா­கும்.குறிப்­பாக,அவன்­கார்ட் சம்­ப­வத்­தில் அரசு ஒரு நிலைப்­பாட்டை எடுத்­த­போது விஜே­தாச அதற்கு எதி­ராக வேறொரு நிலைப்­பாட்டை எடுத்­தார்.

அவன்­கார்ட் நிறு­வ­னத்­து­ட­னான அனைத்து ஒப்­பந்­தங்­க­ளை­யும் கைவிட்­டு­விட்டு, அதன் செயற்­பா­டு­களை கடற்­ப­டை­யி­ன­ரி­டம் ஒப்­ப­டைப்­பது என முடி­வெ­டுத்து அதை அரச தலை­வ­ருக்கு அறி­வித்­தார்.ஆனால், அந்த அறி­விப்­புக்கு விஜே­தாச வேறு விளக்­கம் ஒன்­றைக் கொடுத்­தார்.

அத­னைத் தொடர்ந்து விஜே­தா­ச­ வுக்­கும் அவன்­கார்ட் நிறு­வ­னத்­தின் சொந்­தக்­கா­ரர் நிசங்க சேனா­தி­ப­திக்­கும் இடை­யில் இருந்த தொடர்பு அம்­ப­ல­மா­னது.

அதே­போல்,கோத்­த­பாய ராஜ­பக்ச தொடர்­பி­லும் அரசு கொண்­டி­ருந்த நிலைப்­பாட்­டில் இருந்து மாறு­பட்ட நிலைப்­பாட்­டையே விஜே­தாச கொண்­டி­ருந்­தார்.அதா­வது,கோத்தா­வுக்கு ஆத­ர­வான நிலைப்­பாட்டை எடுத்­தி­ருந்­தார்.புலி­க­ளி­டம் இருந்து நாட்­டைக் காப்­பாற்­றிய கோத்­த­பா­ய­வைக் கைது செய்­வது சரி­யல்ல என்று கூறி அவர் கோத்தாவைக் காப்­பாற்­றி­னார்.

சரத் பொன்­சே­கா­வும் விஜே­தா­ச­வும் கீரி­யும் பாம்­பு­மாக இருப்­ப­தற்கு விஜே­தா­ச­வின் கோத்­த­பாய ஆத­ர­வுப் போக்கே கார­ணம்.

ரவி­யின் சம்­ப­வத்­துக்­குப் பின்­னர் இனி­யும் விஜே­தா­ச­வின் மகிந்­த-­ஆ­த­ர­வுப் போக்­குக்கு இடம்­கொ­டுத்­தால், அது ஐக்­கிய தேசிய கட்­சி­யின் வீழ்ச்­சிக்கு வழி­வ­குத்­து­வி­டும் என்­பதை உணர்ந்த தலைமை அமைச்­சர் அந்த நிலைப் பாட்டை மாற்­று­மாறு கூறி­யும் விஜே­தாச கேட்­க­வில்லை. இத­னால் அவரை அமைச்­சுப் பத­வி­யில் இருந்து நீக்­கு­ வ­தைத் தவிர தலைமை அமைச்­ச­ருக்கு வேறு வழி இருக்­க­வில்லை.

மகிந்­த­வின் திரு­டர்­க­ளைக் கைது செய்­ய­வி­டா­மல் தடுத்­த­வர் விஜே­தா­ச­தான் என்று மக்­க­ளி­டம் கூறித், தான் தப்­பு­கின்ற வாய்ப்பு இப்­போது ஐக்­கிய தேசிய கட்­சிக்­குக் கிடைத்­துள்­ளது.ஆனால், அவரை நீக்­கிய பின்­பும் திரு­டர்­களை பிடிப்­ப­தில் அரசு தாம­தம் காட்­டி­னால் அடுத்த தேர்­த­லில் ஐ.தே.கட்சி வீழ்ச்­சியை சந்­திக்­கும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

கிடைக்­கின்ற வாய்ப்பை தவ­ற­வி­டு­கின்ற சோம்­ப­றித்­த­ன­மான அர­சி­யல் செய்­யும் ஐக்­கிய தேசிய கட்சி, இனித் தொடர்ந்து எப்­படி செயற்­ப­டப் போகின்­றது என்­ப­தைப் பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்.

எம்.ஐ.முபா­றக்

http://newuthayan.com/story/23885.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.