Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராம் ரஹீமுக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு! #WhyInGodsName

Featured Replies

ராம் ரஹீமுக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு! #WhyInGodsName

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். இதன்மூலம் அவருக்கு மொத்தம் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வழக்குகளுக்கும் தலா ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், தலா ரூ.14 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங், தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 

ராம் ரஹீம் சிங்

 

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான ராம் ரஹீம் சிங் மீது கடந்த 2002-ம் ஆண்டில் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவில், ராம் ரஹீம்சிங் குற்றவாளி என்று பஞ்ச்குலா சி.பி.ஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, ராம் ரஹீம்சிங் ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் உள்ள சோனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். தீர்ப்பையடுத்து அவரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில்கள், பேருந்துகள், அரசு அலுவலகங்கள் போன்றவை தீயிட்டு கொளுத்தப்பட்டன. கலவரத்தால் ஏற்பட்ட இழப்புகளை ராம் ரஹீம் சிங்கின் சொத்துகளைப் பறிமுதல் செய்து ஈடுகட்ட வேண்டும் என்று நீதிமன்றம் கண்டிப்பு காட்டியது. மேலும், ராம் ரஹீமுக்கான தீர்ப்பு விவரங்களை நீதிபதி ஜக்தீப் சிங், சிறையில் வைத்தே அறிவிப்பார் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, நீதிபதி ஜக்தீப் சிங்கை ஹெலிகாப்டரில் சிறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஹரியானா மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், ஹெலிகாப்டர் மூலம் சோனாரியா சிறைக்கு வந்த நீதிபதி ஜக்தீப் சிங், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்கு முன்பாக, இருதரப்பினரும் இறுதிவாதத்தை முன்வைக்க தலா 10 நிமிடங்கள் அவகாசம் அளித்தார். ராம் ரஹீம் சிங்குக்கு அதிகப்படியான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ராம் ரஹீம் தரப்பில், அவர் மக்களின் நன்மைக்காக உழைத்தவர் என்பதைக் கருத்தில்கொண்டு நீதிபதி தண்டனை விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாமியார் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது, இரண்டு வழக்குகளிலும் தனித்தனியே 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், ராம் ரஹீம் மொத்தமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், இரண்டு வழக்குக்கும் தலா 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கும் தலா 14 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவரங்களை ராம் ரஹீம் சிங்கின் வழக்கறிஞர் எஸ்.கே.நர்வானா தெரிவித்தார். இறுதி வாதத்தின்போது நீதிபதி முன்பாக சாமியார் ராம்ரஹீம் சிங், தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுதார்.

http://www.vikatan.com/news/india/100591-ram-rahim-singh-sentenced-for-10-more-years.html

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
'செக்ஸ்' சாமியாருக்கு 20 ஆண்டு சிறை
ஹரியானா, பஞ்சாபில் பலத்த பாதுகாப்பு
 

 

  • gallerye_225542111_1843507.jpg

 

 
 

ரோதக்: பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவன், குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு, 20 ஆண்டு சிறை தண்டனையும், 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சிர்சாவை தலைமையிடமாக வைத்து, செயல்பட்டு வருகிறது, தேரா சச்சா சவுதா அமைப்பு.
 

பெண் துறவிகள் புகார்



இதன் தலைவனான, குர்மீத் ராம் ரஹீம் சிங், ௫௧, தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இரண்டு பெண் துறவிகள் புகார் கூறியிருந்தனர். கடந்த, 2002ல், அப்போதைய பிரதமர், வாஜ்பாய்க்கு, இந்த பெண் துறவிகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது. சி.பி.ஐ., விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், 'ராம் ரஹீம் குற்றவாளி' என, சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 'தண்டனை விபரம், 28ம் தேதி அறிவிக்கப்படும்' என, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங் கூறியிருந்தார். பாலியல் பலாத்கார வழக்கில், ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும், ஹரியானா, பஞ்சாப், டில்லியில் அவனது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

ரயில்களுக்கு தீ வைப்பு



இதில், 38 பேர் உயிர் இழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். ரயில்கள், பஸ்கள் உட்பட பொது சொத்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனை குறித்த விசாரணையை, பஞ்ச்குலாவில் உள்ள நீதிமன்றத்தில் அறிவிக்காமல், ராம் ரஹீம் அடைக்கப்பட்டுள்ள, ரோதக் சிறை வளாகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஹெலிகாப்டர் மூலம், பஞ்ச்குலாவில் இருந்து, ரோதக் சிறை வளாகத்துக்கு நேற்று வந்தார். இரு தரப்பினரின் இறுதி விவாதங்களை கேட்ட நீதிபதி, பின், தண்டனை விபரத்தை அறிவித்தார்.

தலா, 10 ஆண்டு



இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததால், இதை இரண்டு வழக்காக

கணக்கில் எடுத்து, ராம் ரஹீமுக்கு, ஒவ்வொரு வழக்கிலும், தலா, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். இந்த தண்டனையை, தனித் தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.மேலும், 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், தலா, 14 லட்சம் ரூபாயை, பாதிக்கப்பட்ட பெண் துறவிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சாமியார் ராம் ரஹீம், 20 ஆண்டு, சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உள்ளூர் போலீசாருடன், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராணுவமும் தயார் நிலையில் இருந்தது.ரோதக் நகருக்குள் நுழைவதற்கு வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ராம் ரஹீம் அடைக்கப்பட்டுள்ள சிறை வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 

கதறி அழுதான்



பாலியல் பலாத்கார வழக்கில், தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டதும், குர்மீத் ராம் ரஹீம், தரையில் புரண்டு, கண்ணீர் விட்டு கதறியதாக தெரிகிறது.''நான் அப்பாவி, என்னை மன்னித்து விடுங்கள்,'' என்று, அவன் கைகூப்பி அழுததாகவும் கூறப்படுகிறது. சிறிது நேரம் தரையிலேயே அமர்ந்திருந்த அவனை, சிறை காவலர்கள் பலவந்தப்படுத்தியே, சிறைக்குள் அழைத்து சென்றனர்.
 

அடுத்த வாரிசு யார்?



சாமியார் ராம் ரஹீம், பாலியல் பலாத்கார வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள நிலையில், தேரா சச்சா சவுதா அமைப்பை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராம் ரஹீமின் மனைவி, ஹர்ஜீத் கவுர். இவர்களது மகள்கள்சரண்பிரீத், அமன்பிரீத் ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. மகன் ஜஸ்மீத். ஆனால், தேரா சச்சா அமைப்பின் அடுத்த வாரிசாகப் போவது யார் என்ற போட்டியில், இவர்கள் யாரும் இல்லை.

அமைப்பின் நிர்வாகத்தை கவனித்து வரும், பெண் ஆதரவாளரான, விபாசனா மற்றும் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இடையே கடும் போட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

தற்போது, 35 வயதாகும் விபாசனா, கல்லுாரியில் படிக்கும் காலத்தில் இருந்தே, ராம் ரஹீமின் தீவிர பக்தையாக இருந்தார்.
தற்போது, அமைப்பின் முழு நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். ராம் ரஹீம் நடித்த படங்களில் உதவியதுடன், அந்த படத்திலும் நடித்தவர், அவனது வளர்ப்பு மகள் ஹனிபிரீத். ராம் ரஹீமின் அடுத்த வாரிசு என்று தன்னை அவர் முன்னிலைப்படுத்தி வருகிறார்.
 

வன்முறைக்கு இளைஞர் படை!


குர்மீத் ராம் ரஹீம் விவகாரம் குறித்து, பஞ்சாப் மாநில போலீசார் கூறியதாவது: பாலியல் பலாத்கார வழக்கில், ஆக., 25ல் தீர்ப்பு அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டதும், ராம் ரஹீமுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், வன்முறையில் ஈடுபடுவதற்காக, இளைஞர் படையை உருவாக்கி வைத்திருந்தனர். இவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தி, வன்முறையை துவக்கி வைத்தனர்.
பொது சொத்துகளுக்கும் தீ வைத்தனர். அதைத் தொடர்ந்தே, ரஹீமின் தீவிர ஆதரவாளர்களும் வன்முறையில் ஈடுபட்டனர்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள தேரா சச்சா அமைப்பின் கிளையில், போலீசார் நடத்திய சோதனையில், வன்முறையில் ஈடுபடுவதற்காக, நுாற்றுக்கணக்கான லத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிர்சா அருகே, கார் ஒன்றையும், வன்முறையாளர்கள் நேற்று தீ வைத்து எரித்தனர்.
 

கலவரத்தை துாண்டும் சதி முறியடிப்பு



தேரா சச்சா சவுதா தலைவன் ராம் ரஹீமுக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்படும் என்ற நிலையில், பஞ்சாப் மாநிலத்தில், போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

கடந்த வாரம் நடந்த வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்திருந்தனர். அவர்கள் கொடுத்த தகவல்களின்படி, அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த, தேரா சச்சா ஆதரவாளர், ஜெய்ராம் என்பவன் வீட்டில் இருந்து, 38 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தண்டனை அறிவிப்பு நாளில், வன்முறையை தூண்டுவதற்காக, இந்த பணத்தை வைத்திருந்ததாக போலீசார் கூறியுள்ளனர். தலைமறைவாகிவிட்ட ஜெய்ராமை தேடி வருகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1843507

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.