Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''நல்­லி­ணக்­கத்தின் மேன்­மையை பறை­சாற்றும் ஹஜ் பெருநாள் ''

Featured Replies

''நல்­லி­ணக்­கத்தின் மேன்­மையை பறை­சாற்றும் ஹஜ் பெருநாள் ''

 

ஹஜ் யாத்­தி­ரையின் ஊடாக உல­கெங்­கிலும் உள்ள இஸ்­லா­மி­யர்கள் ஒரே நோக்­கத்­திற்­காக ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து மானிட ஐக்­கி­யத்­தையும் சமூக நல்­லி­ணக்­கத்தின் மேன்­மை­யையும் உல­கிற்கு பறை­சாற்­று­கின்­றனர் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்­தியில்   தெரி­வித்­துள்ளார்.

maithripala-sirisena.gif

அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

தொன்மைக் காலங்­களில் இருந்தே மனிதன் சமய நிகழ்­வு­களில் ஒன்று சேர்ந்து ஈடு­ப­டு­வதை மனித வர­லா­றுகள் குறிப்­பி­டு­கின்­றன. பல யுகங்கள் கடந்து இன்று கூட தாம் பின்­பற்றும் சம­யத்­துடன் பிணைந்­துள்ள மனி­தர்கள் தமது சம­யத்­துடன் தனித்­து­வ­மான வணக்க வழ­பாட்டு முறை­களைப் பாது­காப்­ப­தற்கு ஒற்­று­மை­யோடு தம்மை அர்ப்­ப­ணித்­துள்­ளனர்.

ஹஜ் யாத்­தி­ரையின் ஊடாக உல­கெங்­கிலும் உள்ள இலட்­சக்­க­ணக்­கான இஸ்­லா­மி­யர்கள் ஒரே நோக்­கத்­திற்­காக ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து மானிட ஐக்­கி­யத்­தையும் சமூக நல்­லி­ணக்­கத்தின் மேன்­மை­யையும் உல­கிற்கு பறை­சாற்­று­கின்­றனர்.

இறை­வ­னுக்கும் மனி­த­னுக்கும் இடை­யி­லான தெய்­வீகப் பிணைப்பை சிறப்­பாக எடுத்­துக்­காட்டும் இந்த ஹஜ் வணக்­க­மா­னது, மனி­தர்­க­ளுக்கு இடை­யி­லான அனைத்து வேறு­பா­டு­க­ளையும் மறந்து உலகின் நாற்­தி­சை­க­ளிலும் இருந்து வரு­கின்ற அனைத்து மக்­களும் ஒரே வித­மாக இறை­வனை வணங்கும் உயர்ந்த வணக்­க­மாகும்.

பிரி­வினை மட்­டுமே கோலோச்சும் இன்­றைய உலகில் பரஸ்­பர பிணைப்­பையும் தலை­மைத்­து­வத்­திற்கு கட்­டுப்­படும்  போத­னை­க­ளையும் சமூ­க­ம­யப்­ப­டுத்தும் ஹஜ் உல­கிற்கு வழங்கும் உன்­னத செய்தி சமத்­து­வத்தின் மூலம் கட்­டி­யெ­ழுப்­பப்­படும் உயர்ந்த சமூக நீதி­யாகும்.

புனித மக்கா நகரை மைய­மாகக் கொண்டு முழு உல­கிற்கும் விடுக்­கப்­படும் மனி­தர்­க­ளுக்கு இடை­யி­லான சமத்­துவம் குறித்த இந்த உன்­னத செய்­தியை மதித்து ஹஜ் வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் யாத்திரிகர்களுக்கும் உலக வாழ் முஸ்லிம் சமூகத்திற்கும் எனது இதயபூர்வமான ஈதுல் அல்ஹா தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.#

 

 

"சகோ­தர இனங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கு­மாறு இலங்கை மக்­க­ளிடம் வேண்­டு­கின்றேன்"

"புனித ஹஜ்ஜுப் பெரு­நாளின் உண்­மை­யான தாற்­ப­ரி­யத்­தினை உணர்ந்து ஒரு­வ­ரை­யொ­ருவர் புரிந்­து­ கொண்டு சகோ­தர இனங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கு­மாறு இலங்கை மக்­க­ளிடம் மிகவும் அன்­புடன் வேண்­டிக்­கொள்­கின்றேன். அத­னூ­டாக அர்ப்­ப­ணிப்பின் உண்மைத் தன்­மை­யினை எமது சகோ­தர மக்­க­ளிடம் கொண்டு செல்ல வாய்ப்புக் கிட்­டு­கின்­றது" என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

Local_News.jpg

அவர் விடுத்­துள்ள புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்­தியில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

"புனித ஹஜ்ஜுப் பெரு­நாளைக் கொண்­டா­டு­கின்ற இலங்­கையின் அனைத்து முஸ்­லிம்­க­ளுக்கும் எனது மன­மார்ந்த வாழ்த்­துக்­களைத் தெரிவித்­துக்­கொள்ள விரும்­பு­கின்றேன். இறை­வ­னுக்­கா­கவும், தமது சகோ­த­ரர்­க­ளுக்­கா­கவும் ஒருவர் செய்யக் கூடிய தியா­கத்தின் முக்­கி­யத்­து­வத்தை புனித ஹஜ்ஜுப் பெருநாள் தின­மா­னது பிர­தி­ப­லிக்கச் செய்­கின்­றது. 

சமய நம்­பிக்­கை­யினை முதன்­மைப்­ப­டுத்தி வழி­பா­டு­களில் ஈடு­படல், வறிய மக்­க­ளுக்கு உத­வுதல், நோன்பு நோற்றல் மற்றும் தியாகம் செய்தல் போன்ற பண்­புகள் இஸ்லாம் சம­யத்தில் முக்­கிய இடம் வகிக்­கின்­றன. பல்­வேறு சமூ­கங்­களைச் சார்ந்­த­வர்கள் ஒரு­வரை ஒருவர் புரிந்­து­கொள்­வ­தற்கும் ஒற்­று­மை­யு­டனும் சமா­தா­னத்­து­டனும் வாழ்­வ­தற்கும் உத­வு­கின்ற அர்ப்­ப­ணிப்பின் முக்­கி­யத்­துவம் பற்றி இன்­றைய நாளில் கொண்­டா­டப்­ப­டு­கின்ற புனித ஹஜ்ஜுப் பெரு­நாளின் ஊடாக நினை­வூட்­டப்­ப­டு­கின்­றது.

இத்­தி­னத்­திலே, புனித ஹஜ்ஜுப் பெரு­நாளின் உண்­மை­யான தாற்­ப­ரி­யத்­தினை உணர்ந்து ஒரு­வ­ரை­யொ­ருவர் புரிந்­து­கொண்டு, மற்­றை­ய­வர்­களின் பல்­வ­கை­மைக்கு மதிப்­ப­ளிக்­கு­மாறு நான் இலங்கை மக்­க­ளிடம் மிகவும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். அதனூடாக அர்ப்பணிப்பின் உண்மைத் தன்மையினை எமது சகோதர மக்களிடம் கொண்டு செல்ல வாய்ப்புக் கிட்டுகின்றது ".

 

 

சமத்­து­வத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு புனித ஹஜ் முன்­னு­ரிமை வழங்­கு­கி­றது : ரணில் விக்­கி­ர­ம­சிங்க

"சுய­நலம், பேராசை என்­ப­வற்­றி­லி­ருந்து விடு­பட்டு தம்­மி­ட­முள்­ள­வற்றை ஏனை­யோ­ருடன் பகிர்ந்து கொள்­ளுதல், சக வாழ்வு மற்றும் உயர்வு, தாழ்­வினை நீக்கி சமத்­து­வத்­தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் போன்ற உய­ரிய நோக்­கங்­க­ளுக்கு ஹஜ் பெரு­நாள் முன்­னு­ரிமை வழங்­கு­கி­றது. அது முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி முழு உல­கவாழ் மக்­க­ளுக்கும் மிகச் சிறந்த முன்­மா­தி­ரி­யாகும் என நான் கரு­து­கிறேன்" என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

Local_News.jpg

அவர் விடுத்­துள்ள ஹஜ் பெருநாள் செய்­தியில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

"உலகம் முழு­வ­து­முள்ள முஸ்­லிம்கள் ஏழை – பணக்­காரன், கற்­றவர் – கல்­வி­யற்­றவர் என்ற எவ்­வி­த­மான பேத­மு­மின்றி மக்கா நகரில் ஒன்று சேர்ந்து, சமயக் கிரி­யை­களை மேற்­கொள்ளும் ஹஜ் நிகழ்வு இஸ்லாம் மார்க்­கத்தில் மிகவும் உய­ரி­ய­தாகக் கரு­தப்­படும் முக்­கி­ய­மா­னதோர் சமய நிகழ்­வாகும் .

இப்­ராஹீம் நபி­ய­வர்கள் தனது மக­னான இஸ்­மாயில் நபியை இறை­வ­னுக்­காகத் தியாகஞ் செய்ய முன்­வந்­த­மையை வெளிப்­ப­டுத்தும் இந்த நிகழ்­வினை உலகம் முழு­வதும் பரந்­துள்ள இஸ்­லா­மிய பக்­தர்கள் ஒன்­றி­ணைந்து உலக அமைப்­புக்­காக சமயக் கிரி­யை­களை மேற்­கொள்ளும் சர்­வ­தேச மாநா­டா­கவும் கரு­த­மு­டியும்.

சுய­நலம் மற்றும் பேராசை என்­ப­வற்­றி­லி­ருந்து விடு­பட்டு தம்­மி­ட­முள்­ள­வற்றை ஏனை­யோ­ருடன் பகிர்ந்து கொள்­ளுதல், சக வாழ்­வுடன் வாழுதல், சமூ­கத்தில் உயர்வு, தாழ்­வினை நீக்கி சமத்­து­வத்­துத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் போன்ற உய­ரிய நோக்­கங்­க­ளுக்கு ஹஜ் பெரு­நாளில் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கின்­றது. அது முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மின்றி முழு உல­கவாழ் மக்­க­ளுக்கும் மிகச் சிறந்த முன்­மா­தி­ரி­யாகும் என நான் கரு­து­கிறேன். 

அந்த ஆன்­மீகப் பெறு­மா­னங்­களை உல­கிற்கு கொண்டு செல்வதற்கான பலம், துணிச்சல் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்து, இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் பக்தர்களுக்கும் மகிழ்ச்சியான பெருநாளாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்". என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.