Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலஸ்தீன சுதந்திரநாடு உருவாகுமா?

Featured Replies

பாலஸ்தீன சுதந்திரநாடு உருவாகுமா?

 

ஐயம்பிள்ளை  தர்மகுலசிங்கம் 
(இளைப்பாறிய  பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

 

இன்று ஐக்­கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டு எழு­பது ஆண்­டுகள் பூர்த்தி செய்த நிலையில் பல­வித சாத­னை­களை ஐ.நா. அமைப்பும் அதன் முகவர் நிலை­யங்­களும் நிகழ்த்­தி­யுள்­ளன என்­பதை பொது வெளியில் மறைக்­கவோ மறுக்­கவோ முடி­யாது என்­பது யதார்த்­த­மா­னது. இரண்டு உலக ­யுத்­தங்­களை எதிர்­கொண்டு மானிட இனம் அனு­ப­வித்த இன்­னல்­களால் மீண்டும் ஒரு உல­க­யுத்தம் ஏற்­படக் கூடா­தென்ற அடிப்­ப­டையில் ஐ.நா. சபை தாபிக்­கப்­பட்­டது. பிர­தான நோக்­க­மாக சமா­தா­னமும் பாது­காப்­புமே ஏற்றுக் கொள்­ளப்­பட்­டன. எனினும் மூன்றாம் உல­க­மகா யுத்தம் உரு­வா­க­வில்லை என்­பது நிம்­ம­தியைத் தந்­தாலும் இன்றும் உலகில் நாடு­க­ளுக்­கி­டையே முறுகல் நிலைகள் தொடர்ந்த வண்ணமே உள்­ளன. பாலஸ்­தீன மக்­களின் தாயக மீட்பு, இந்­திய சீன எல்லைப் பிரச்­சினை, ஜம்மு காஷ்மீர் விவ­காரம், தென் சீனக்­கடல் பிராந்­தி­யத்­திற்கு சீனா, ஜப்பான் உரிமை கோருதல் ஈராக், சிரியா ஆகிய நாடு­களில் ஐ.எஸ். பயங்­க­ர­வாதம்,ஈராக்கில், சிரி­யாவில் தொடர்ந்து நடை­பெறும் உள்­நாட்­டுப்போர்,மத்­திய கிழக்கு, ஆபி­ரிக்க பிர­தே­சங்­களில் உள்­நாட்டு அமை­தி­யின்­மை, ­ஆப்­கானிஸ்­தானில் அல்­ – கைதா, தலிபான் ஆகிய இயக்­கங்­களின் தாக்­குதல் போன்ற விவ­காரங்கள் சர்­வ­தேச ரீதி­யாக சிந்­திக்கும் மக்­களை வேதனை அடையச் செய்யும் விவ­கா­ரங்கள் ஆகும்.

இவற்றில் மிக நீண்ட கால­மாக தொடர்ந்து நடைபெறும் நெருக்­கடி, அரபு இஸ்ரேல் பாலஸ்­தீனப் பிரச்­சி­னை­யாகும் அரபு இஸ்ரேல் பிரச்­சினை 18ஆம் நூற்­றாண்­டி­லேயே ஆரம்­ப­மா­னது. பாலஸ்­தீன பிர­தே­சத்தில் சனத்­தொ­கையில் 90 வீதம் முஸ்­லிம்­க­ளாக இருந்­தனர். யூதர்­களில் தீவி­ர­மான சியோனிஸ்ட் என அழைக்­கப்­படும் ஒரு­கு­ழு­வினர் யூதர்­க­ளுக்கு ஒரு தனி நாடு தேவை எனவும் அந்­நாட்டை பாலஸ்­தீ­னத்தில் நிறுவ வேண்­டு­மென முயற்­சிகள் செய்­தனர். படிப்­ப­டி­யாக யூத குடி­யி­ருப்­புக்கள் அதி­க­ரித்துக் கொண்டு வரு­வதை சகிக்க முடி­யாத பாலஸ்­தீ­னி­யர்கள் எதிர்ப்பு காட்­டினர். 1920இல் முதன் முறை­யாக கலகம் வெடித்­தது. யூதர்­க­ளுக்கு ஜேர்மனியின் சர்­வ­ாதி­கா­ரி­யான ஹிட்லர் செய்த கொடு­மை­க­ளினால், யூத மக்கள் மீது சர்­வ­தேச ரீதி­யாக ஒரு அனு­தாபம் ஏற்­பட்­டது. எனினும் பாரம்­ப­ரிய பாலஸ்­தீன பிர­தே­சங்­களை விட்­டுக்­கொ­டுப்­பது என்­பது நியா­ய­மா­காது. பிரிட்டன், அமெரிக்­காவின் ஆத­ர­வுடன் உலக வரை­ப­டத்தில் இஸ்ரேல் எனும் புதிய நாடு 1947இல் உரு­வா­னது. ஐ.நா சபை­யில்­ செல்­வாக்கு மிக்க நாடுகள் தங்கள் எண்­ணங்­களை நிறை­வேற்ற ஐ.நா. சபையை கரு­வி­யாக பயன்­ப­டுத்­தினர் என்­பது வர­லாறு. மீண்டும் உள்­நாட்­டுபோர் 1947/48இல் ஆரம்­ப­மா­னது. இப்­போ­ரினால் ஏழு இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட பாலஸ்­தீ­னர்கள் அக­தி­க­ளாக வெளியே­றினர். ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இஸ்ரேல் கூடிய நிலப்­ப­ரப்­புக்­களை கைய­கப்­ப­டுத்திக் கொண்­டது. பின்னர் 1967ஆம் ஆண்டு 6நாள் யுத்தம் நடை­பெற்று அரே­பிய நாடுகள் ஒரு­பு­ற­மா­கவும் இஸ்­ரேல் தனி­யாயும் போரிட்­டன. அமெரிக்கா, பிரிட்டன் நாடு­களின் துல்­லி­ய­மான புல­னாய்வு தக­வல்­க­ளுடன் அரே­பிய நாடு­களின் விமானப் படைகள் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்­டன. எகிப்து,சிரியா ஜோர்டான் ஆகிய நாடுகளின் பகு­தி­களில் சில­வற்றை இஸ்ரேல் கைப்­பற்றிக் கொண்­டது. 73ஆம் ஆண்டு இஸ்­ரே­லுடன் சிரியா, எகிப்து ஆகிய நாடுகள் யுத்தம் புரிந்­தன. இவ்­வாறு இரா­ணுவ விஞ்­ஞான தொழில்­நுட்­பங்­களில் முன்­னே­றிய இஸ்ரேல், 7இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட பாலஸ்­தீ­னி­யர்­களை விரட்­டி­யதே பாலஸ்­தீ­னத்தின் அடிப்­படை பிரச்­சி­னை­யாகும்.உல­கிலே இன்று ஐரோப்­பா­வினுள் சட்ட விரோ­த­மாக அக­திகள் நுழை­வது பெரும் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. அக­திகள் பிரச்­சி­னை­களை கையாள்­வ­தற்கு ஐ.நா. சபையின் கீழ் UNHCR என்னும் முக­வ­ராண்மை அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. UNHCR ­பற்றி இலங்­கை­யர்கள் அனு­ப­வ­ரீ­தி­யாக புரிந்து கொண்­டனர். ஆனால் 1947/48 இல் பாலஸ்­தீ­னத்தில் இருந்து துரத்­தப்­பட்ட ஏழு இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட அக­தி­களின் பிரச்­சி­னை­களை கையாள்­வ­தற்கு ஐ.நா. ­ச­பை [ehrigUNRNA(United Nations Relief and Works Agency) என் னும் முக­வ­ராண்மை அமைப்பு 1948 இல் நிறு­வப்­பட்­ட­தைப்­பற்றி பல­ருக்கு தெரி­யாத விட­ய­மாகும். 1948 இல் ஏழு இலட்­ச­மாக இருந்த பாலஸ்­தீன அக­திகள் இன்று 50 இலட்சம் வரை­யில்­ அ­தி­க­ரித்­துள்­ளனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

1965ஆம் ஆண்டு யசீர் அர­பாத்தின் தலை­மையில் சகல ஆயுதம் தாங்­கிய பாலஸ்­தீன விடு­த­லைக்­காக போரா­டிய இயக்­கங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்­றி­ணைந்தன. சகல இயக்­கங்­களும் ஒன்­றி­ணைந்த கூட்டு அமைப்பே பாலஸ்­தீன விடு­தலை இயக்­க­மாகும் (PLO) யசீர் அர­பாத்தின் அல்­பற்றா இயக்­கமே சகல இயக்­கங்­க­ளிலும் பல­மான இயக்­க­மாகும். இஸ்ரேல் எனும் நாட்டை பூர­ண­மாக அழித்­தொ­ழித்து பாலஸ்­தீன மக்­களை மீண்டும் குடி­ய­மர்த்தி பாலஸ்­தீன இராஜ்ஜியத்தை உரு­வாக்­கு­வதே பாலஸ்­தீன விடு­தலை இயக்­கத்தின் தலை­யாய நோக்­க­மாகும். எனினும் காலத்­திற்கு காலம் ஜோர்­டான், லெபனான் போன்ற நாடு­களின் படை­க­ளுடன் பி.எல்.ஓ. மோதல்­களில் ஈடு­பட்­டது. பொது எதி­ரிக்­கெ­தி­ராக பரந்த ஐக்­கிய முன்­ன­ணியை கட்­டி­யெ­ழுப்ப முடி­ய­வில்லை. இதற்­கி­டையில் எகிப்­து, ­ஜோர்டான் தனித்­தனி ஒப்­பந்­தங்கள் செய்து இஸ்ரேல் நாட்டை அங்­கீ­க­ரித்­தன.

1993இல் ஒஸ்லோ, நோர்­வேயில் இடம் பெற்ற பேச்­சு­வர்த்­தை­களில் இஸ்ரேல் பி.எல்.ஓ. பிர­தி­நி­திகள் பங்கு பற்றி சில தீர்­மா­னங்­களை ஏற்றுக் கொண்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டனர். இதன் பிரகாரம் 1994இல் பாலஸ்­தீன தேசிய அதி­கார சபை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அதி­கா­ரங்­களுடன் அமைக்­கப்­பட்­டது. பூரண தனி நாட்­டுக்­கு­ரிய அம்­சங்கள் இல்­லா­வி­டினும் இது ஒரு முன்­னேற்­ற­க­ர­மான விட­ய­மாக பார்க்­கப்­பட்­டது ஆரம்­பத்தில் முதல் 5 வரு­டத்­திற்கு இடைக்­கால சபை­யா­கவும் பின்னர் பேச்­சு­வார்த்­தைகள் மூலம் சில முன்­னேற்­றங்­களை அடை­யலாம் எனவும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது பாலஸ்­தீன அதி­கார சபை, மேற்­குக்­கரை, காஸாப்­ப­கு­தி­களில் சுய நிர்­வாகம் செய்ய அனு­ம­திக்­கப்­பட்­டது. பாலஸ்­தீன ந­க­ரப்­ப­கு­தி­களில் பாது­காப்பு உள்­ள­டங்­க­லா­க ­சி­வி­லியன் மக்­களை நிர்­வ­கிக்­க­வும் கிராமப் பகு­தி­களில் சிவி­லி­யன்­களை நிர்­வாகம் மட்டும் செய்­யவும் அனு­ம­திக்­கப்­பட்­டது. அதே வேளை பாலஸ்­தீன குடி­யி­ருப்­புக்­களை இணைக்கும் வீதிகள், சந்­திகள், கிழக்கு ஜோர்டான் பகுதிகள் யாவும் இஸ்­ரேலின் கட்­டுப்­பாட்டில் அமையும் என்­பது ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது.

இஸ்­ரே­லிய படை­களின் அத்­து­மீ­றல்­களும் அடிக்­கடி பாலஸ்­தீன அதி­கார சபை பிர­தே­சங்­களில் இடம்பெற்­றன. 2005இல் பாலஸ்­தீ­னி­யர்கள் இன்­ரி­பாடா என்று அழைக்­கப்­பட்ட கிளர்ச்­சியில் ஈடு­பட்­டனர். இஸ்­ரே­லிய படை­யினர் மீது கல்­லெ­றிந்து தங்கள் எதிர்ப்­பு­களைக் காட்­டினர். இஸ்ரேல் படை­யினர் துப்­பாக்­கிகள் மூலம் பதி­லடி கொடுத்­தனர். மேலும் இஸ்ரேல் – பாலஸ்­தீன அதி­கா­ர­சபை ஆளு­கைக்கு உட்­பட்ட பகு­தி­கள் ­சி­ல­வற்றை தமது கட்­டுப்­பாட்டில் கொண்டு வந்­தனர். எனினும் பின்னர் தமது நிலை­க­ளுக்கு திரும்­பினர்.

2006இல் பாலஸ்­தீன அதி­கார சபைக்கு தேர்தல் இடம்பெற்­றது. ஹமாஸ் இயக்­கத்­தினர் கூடு­த­லான ஆச­னங்­களை கைப்­பற்­றினர். ஏற்­க­னவே அல்­பற்றா, ஹமாஸ் இயக்­கங்­க­ளுக்­கி­டையில் காணப்­பட்ட முரண்­பா­டுகள் ஆயு­த­மோ­தல்­க­ளாக உரு­வெ­டுத்­தன. பாலஸ்­தீன அதி­கார சபை (அல்­பற்றா) மேற்­குக்­கரை பிர­தே­சங்­க­ளிலும் ஹமாஸ் காஸா பகு­தி­யிலும் கட்­டுப்­பா­டு­களை இறுக்­கினர். இடை­யி­டையே ஹமாஸ் இஸ்­ரே­லிய படை­களும் மோதலில் ஈடு­பட்­டனர். அல்­பற்றா -ஹமாஸ் பிணக்­கு­களை தீர்க்க சில வெளிநாட்டு அர­சாங்­கங்­களின் ஆத­ர­வுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றன. 2014இல் இரு­ப­கு­தி­யா­ரும்­ உ­டன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­திட்­டனர். இப்­பேச்சு வார்த்­தைகள் கட்டார் எமிரின் ஆத­ர­வுடன் டோஹாவில் இடம்­பெற்­றன. இதன்­படி இரு­த­ரப்­பு­மி­ணைந்த ஆட்­சியை பாலஸ்­தீன அதி­கார சபையில் நடத்த வேண்டும் என்று ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. பலஸ்­தீன தலைவர் அப்பாஸ் தலை­மையில் அமைச்­ச­ர­வையில் ஹமாஸ் பிரதிநி­தி­களும் இடம்­பெற்­றனர்.ஆனால் இந்த ஏற்­பா­டு­களும் ஸ்திர­மாக அமை­ய­வில்லை. அமெ­ரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகி­யவை பி.எல்.ஓ. தலைவர் அப்­பா­ஸுக்கு ஆத­ரவு வழங்­கின. புனர்நிர்­மா­ணத்­திற்கும் வேறு சேவை­க­ளுக்கும் பெரும் நிதி உதவி வழங்­கினர். பொதுத்­தேர்­தலில் ஹமாஸ் பெரும்­பா­லான ஆச­னங்­களை பெற்ற பின்னர் அப்­பாஸின் அல்­பற்றா இயக்­கத்­துடன் மோதல்­களில் ஈடு­பட்­ட­தாலும் இஸ்­ரே­லிய படை­க­ளுடன் அடிக்­கடி மோதல்­களில் ஈடு­பட்­ட­தாலும் அமெ­ரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் நிதி­உ­த­வி­களை நிறுத்தி வைத்­தனர். பின்னர் மீண்டும் நிதி உத­வியை வழங்­கினர். இந் நிதி உதவி அப்­பாஸின் நிர்­வா­கத்­திற்கு பெயர் குறித்து வழங்­கப்­பட்­டது.

இரு இயக்­கங்­களின் இணைந்த ஆட்­சிக்கு ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா சீனா, இந்­தியா, துருக்கி ஆகிய நாடுகள் ஆத­ரவு வழங்­கின. இருப்­பினும் இஸ்ரேல் ஹமா­ஸுடன் இணைந்து தலைவர் அப்பாஸ் இயங்­கு­வதை ஏற்­க­வில்லை. ஹமாஸை பயங்­க­ர­வாத இயக்­க­மாக இஸ்ரேல் விமர்­சித்­தது. அத்­துடன் ஹமாஸ் இஸ்ரேல் நாட்டை அங்­கீக­ரிக்க தயா­ரா­க­வில்லை. இஸ்­ரேலை ஒழித்து பாலஸ்­தீன நாட்டை உரு­வாக்­கவே ஹமாஸ் முயற்­சிக்­கின்­றது. இஸ்­ரேலைப் பொறுத்­த­ளவில் எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடு­களின் ஒப்­பந்­தங்­களின் மூலம் நட்பு நாடாக்­கி­யது ஈராக், லிபியா தலை­வர்கள் ஒழிக்­கப்­பட்­டனர். அங்­கி­ருந்து ஆபத்து வர முடி­யாது. பி.எல்.ஓ.வும் இரு நாட்டு தீர்வை ஏற்றுக் கொண்­டது பி.எல்.ஓ. இஸ்­ரேலை அங்­கீ­க­ரித்து உள்­ளது. இஸ்­ரே­லுக்கு தலை­யி­டி­யா­க­வுள்­ளது ஹமாஸ் மட்­டுமே. ஆனால் ஹமாஸ் அல்­பற்­றா­வு­டனும் இஸ்­ரே­லிய படை­க­ளு­டனும் மோதி பல­வீ­ன­ம­டை­கி­றது.

பாலஸ்­தீன அரே­பிய இஸ்ரேல் நெருக்­க­டியில் உடந்­தை­யா­ளர்­க­ளாக ஐ.நா. ­சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா ஆகி­யவை செயற்­ப­டு­கின்­றன. 2013இல் ஐ.நா. சபை பாலஸ்­தீன அதி­கார சபையை அந்­தஸ்தை உயர்த்தி பாலஸ்­தீன அரசு என்று ஐ.நா. சபையில் பார்­வை­யாளர் அந்­தஸ்து வழங்­கி­யுள்­ளது. இதன் கார­ண­மாக பாலஸ்­தீன அதி­கார சபை என்ற உத்­தி­யோக பூர்வ இலச்­சினை தொடர்­பா­டல்­களில் தற்போது பாலஸ்­தீன அரசு என்ற பெயரே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

சர்­வ­தேச ரீதி­யாக இஸ்­ரேலின் நட்பு நாடு­க­ளா­கவும் ஆத­ர­வா­ளர்­க­ளா­கவும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா காணப்­ப­டு­கின்­றனர். அதில் ஆச்­ச­ரி­ய­மில்லை. ஏனெனில் பாலஸ்­தீன மக்­களை அவர்­களின் பாரம்­ப­ரிய பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து அகற்றி இஸ்ரேல் என்­கின்ற நாட்டை 1947ஆம் ஆண்டு உரு­வாக்­கி­ய­வர்கள் பிரிட்­டனும் அமெரிக்­கா­வுமே. மத்­திய கிழக்கு பிர­தே­சத்தை பொறுத்த மட்டில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பாஹ்ரெயின் ஆகி­யவை பாலஸ்­தீன தலைவர் அப்­பாஸின் அல்­பற்­றாவை ஆத­ரிக்­கின்­றனர். கட்டார் ஹமா­சுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றது. அண்­மையில் கட்டார் மீது சவூதி தலை­மையில் சில தடை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கட்டார் ஹமா­ஸுக்கு ஆத­ரவு அளிப்­பதும் பிர­தான கார­ணி­யாகும். ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் பாலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு தொடர்ந்து ஆத­ரவை வழங்­கு­கின்­றன.

ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடு­களில் ஏனைய அரே­பிய நாடுகள் போல மன்­ன­ராட்சி நடை­பெ­ற­வில்லை. ஈராக்கில் சதாம் ஹுசேனும் லிபி­யாவில் கேணல் கடா­பியும், சிரி­யாவில் அஸாத்தும் தலைமை தாங்­கினர். ஈராக் ஜனா­தி­பதி சதாம் ­பா­லஸ்­தீன விடு­த­லைக்கு பெரும் பக்க பல­மாக இருந்தார். லிபி­யாவின் கேணல் கடா­பியும் அவ்­வாறே ஆத­ரவு வழங்­கினார். இஸ்­ரேலின் இருப்­புக்கு சதாம் ஹுசேன், கேணல் கடாபி ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து ஏற்­படக் கூடிய பெரும் சவால்­களை முறி­ய­டிக்­கவே சதாமின் ஆட்­சியும், கேணல் கடா­பியின் ஆட்­சியும் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டன. அமெரிக்கா எனும் ஏக­வல்­ல­ரசு எவ்­வாறு இஸ்­ரே­லுக்கு பல­மாக நிற்­கின்­றது என்­பது மேற்­சொன்ன உதா­ர­ணங்­க­ளி­லி­ருந்து புல­னாகும்.

இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு யாது என்­கின்ற வினா மக்கள் மத்­தியில் எழு­கின்­றது. இரண்டு நாடுகள் தீர்வு என்­பது இப்­பொது பல தரப்­பி­ன­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­ட­தொன்­றாகும். பல­த­ரப்பு எனும் போது இஸ்ரேல் என்­கின்ற நாட்டை இல்­லா­தொ­ழிப்போம் என்று பாலஸ்­தீன விடு­தலை அமைப்பை தாபித்து சர்­வ­தேச ரீதி­யான அங்­கீ­கா­ரமும் அனு­தா­பமும் பெற்­றி­ருந்த யசீர் அரபாத்தின் பி.எல்.ஓ. இரண்டு நாடுகள் தீர்­வினை ஏற்றுக் கொண்­டது. அரே­பி­ய­நா­டு­களும் ஏற்றுக் கொண்­டன. இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. ஆகி­ய­வையும் ஏற்றுக் கொண்­டன. பாலஸ்­தீன விடு­தலை இயக்­கமும், அரே­பிய நாடு­களும் இஸ்ரேல் எனும் நாட்டை அங்­கீ­க­ரித்­த­ப­டியால் இஸ்­ரேலின் இருப்­புக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை. ஆனால் பல­வித இரா­ஜ­தந்­திர பேச்­சு­வார்த்­தைகள் குறிப்­பாக ஒஸ்லோ பேச்சு வார்த்தை, ஐ.நா. சபைத் தீர்­மா­னங்கள் கார­ண­மாக இரண்டு நாடுகள் பிரச்சினைக்கு தீர்வு எட்­டப்­பட்­டது. ஆனால் அரபு நாடுகள், பாலஸ்­தீன இஸ்ரேல் எல்­லை­களைத் தீர்­மா­னிப்­ப­தற்கு அடிப்­ப­டை­யாக 1967 யுத்­தத்­திற்கு முன்­னி­ருந்த எல்­லை­களை அடிப்­ப­டை­யாகக் கொள்ள வேண்டும் என வாதா­டு­கின்­றனர். இதில் பெரு­ம­ள­வு­நி­யாயம் உண்டு.எவ்­வா­றெனில் 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் எகிப்து, ஜோர்டன், சிரியா நாடு­களின் சில பகு­தி­களை கைப்­பற்­றி­யது. ஐ.நா. சபை பல தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யுள்­ளது. ஆனால் எந்த தீர்மானங்களையும் இஸ்ரேல் நிறைவேற்றவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றின் ஆதரவு இஸ்ரே லின் தான்தோன்றித்தனமான போக்குக்கு பெரும் துணையாகின்றது. ஹமாஸ் இரு நாட்டு தீர்வுக்கு ஆதரவு இல்லையாயினும் ஹமாஸ் தனித்து ஒன்றும் செய்யமுடியாது.

நிரந்தரமான தீர்வு ஏற்படுவதற்கு சிக்க லாக காணப்படும் விடயங்கள்.

* இரு நாட்டு தீர்வு தொடர்பாக எல்லைக ளையும் பிரதேசங்களையும் நிர்ணயித்தல்,

* மேற்கு கரையில் அமைந்துள்ள இஸ் ரேலிய குடியிருப்புகள் தொடர்பாக பலஸ் தீனியர்கள் மனப்பாங்கு,

* ஜெருசலம் நகரின் நிலை,

* பயங்கரவாதம், வன்முறை தூண்டல் ஆகியவை ஏற்படக்கூடாதென இஸ்ரே லின் அக்கறை,

* வெளிநாட்டு பாலஸ்தீன அகதிகள் மீண்டும் பாலஸ்தீனத்திற்கு திரும்புதல்,

நீண்டகால பிரச்சினையாக பாலஸ் தீன விவகாரம் நிரந்தர தீர்வு எட் டப்படாத சூழலில் இன்று இஸ்ரேல் மிகப்பலமாகவும் பாலஸ்தீன அரபு தரப் பினர் பலவீனமாகவும் இருப்பதாலும் பாலஸ்தீனர்களின் நியாயமான அடிப் படைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதில் ஐயப்பாடுகள் உள்ளன. அத்து டன் அமெரிக்காவின் நிலைப்பாடும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமை தியின்மையும் இஸ்ரேலின் இராணுவ, அரசியல் மேலாதிக்கத்திற்கு பாலஸ்தீனிய, அரபு நாடுகள் சவாலாக விளங்க முடியாது. இந்தச் சமன்பாடுகளின் அடிப்படையில் பாலஸ்தீனம் சுதந்திரமான தனிநாடு, ஐ.நா. சபையில் இறைமையுள்ள சுதந்திர நாடாக இடம்பெறுவதற்கான காலம் நெருங்கி விட்டது என்றே தோன்றுகின்றது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-02#page-7

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்திய கிழக்கிற்கு சவூதி அரேபியா ஒரு நாதாரி....
ஆசியாவிற்கு இந்தியா ஒரு நாதாரி.....
தாங்களும் செய்யாதுகள்...
மற்றவனையும் செய்ய விடாதுகள்.
அந்த இரண்டு நாடுகளினால் தான் உலகபிரச்சனைகள் உருவாகின்றன.

தாங்களும் ஈணாதுகள்....மற்றவனையும் ஈணவிடமாட்டுதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.