Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு சுவரொட்டிகள் உணர்த்தும் உண்மைகள்

Featured Replies

varai-s.jpg

-எஸ்.நயனகணேசன்-

நாட்டின் அதிபர் முதல் சாதாரண அரச அதிகாரி வரை இவர்கள் அனைவரும் கொண்டுள்ள போர் மனோபாவத்தை நோக்கும் பொழுது நாட்டில் முழு அளவிலான போர் மூண்டுவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.

இதற்கு ஒரு சான்றாக கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ரூபவாஹினி தேசிய தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பான `ஜனபதி ஹமுவ' என்ற ஜனாதிபதி சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ `புரிந்துணர்வு உடன்படிக்கை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அதைப்பற்றி எனக்கு எதுவித தேவையுமில்லை' என வசைமாறியதை அனைவரும் பார்த்து கேட்டிருப்பின் அதனை எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள்.

ஆவணமாக கிழியாத கடதாசியாகவும் அழிந்து போன எழுத்துக்களாகவும் திகழ்கின்ற புரிந்துணர்வு உடன்படிக்கையைப் பார்த்து நாட்டின் அதிபரே அவ்வாறு கூறுகையில் நாட்டில் தற்பொழுது வடகிழக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரகடனப்படுத்தப்படாத போர் எந்தளவு தூரம் முழு அளவிலான போருக்கு தன்னை அது சுதாகரித்துக் கொண்டுள்ளது என்பதனை விளங்கிக்கொள்வதொன்றும் கடினமான விடயமல்ல.

அந்த வகையில் கடந்த வாரம் கொழும்பின் பல புறங்களில் யுத்தத்திற்கு ஆதரவாகவும் சமாதானத்திற்கு ஆதரவாக செயற்படுபவர்களை நாட்டிற்கு குந்தகத்தை விளைவிக்கக்கூடியவர்கள் என குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைப்பற்றி இங்கு குறிப்பிட்டிருந்தோம். அந்த வகையில் அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் ஜனாதிபதியின் புகைப்படத்துடன் வாகரையில் விடுதலைப்புலிகளுடனான சமரில் வெற்றி வாகை சூடிய இராணுவ வீரர்களுடன் பலத்த புன்னகையுடன் அளாவளாவும் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகள் கொழும்பின் எல்லா இடங்களிலும் தற்பொழுது காணக்கூடியதாயுள்ளது.

அச்சுவரொட்டியில் குறிப்பிட்டிருந்ததாவது

`கொலைகார புலிகள் அழிந்து விட்டனர்

புலியின் வால் தடுமாற்றத்தில்

முடிவு சரியானதே,

ஜனாதிபதி அவர்களே தொடர்ந்து செல்வோம் '-

நில் படையணி-

என்பதே அச்சுவரொட்டியின் மூலம் கூறப்பட்டிருந்த தகவல்.

இன்று தெற்கில் ஒரு காட்டுத்தர்பார் போன்ற போக்கே தலைதூக்கியுள்ளது.அந்த வகையில் எவர் சமாதானத்தைப் பற்றி பேசினாலோ அவர் ஒரு புலி,எவர் போரை விமர்சிக்கின்றாரோ அவர் ஒரு தேசத்துரோகி.நியாயமற்ற முறையில் இனவாத அடிப்படையில் இப்படியான குழுக்களினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கே வழியில்லாமல் பண்ணிவிடும் அது.இன்று மௌனம் சாதிக்கும் அனைவரும் வேதனைப்படுவர்.

எவரும் தமது வெற்றியை கொண்டாடுவதற்கும் அனுபவிப்பதற்கும் உரிமையுண்டு.அதேவேளை அவை ஏனைய சமூக இனத்தவர்களை புண்படுத்தாத வகையிலும் அச்சுறுத்தாத வகையிலும் அதனால் வேறு விளைவுகள் ஏற்படாத வகையில் தமது வெற்றியை களிப்புறல் வேண்டும்.

அண்மைக்காலங்களில் கொழும்பு சுற்றுப்புறங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளின் பின்னணி அவை எதனடிப்படையில் ஒட்டப்பட்டுள்ளதென்றால் சமாதானத்திற்கு ஆப்பு வைப்பதாகவே அவை அமைந்துள்ளன.

நூற்றுக்கனக்கான புல்லட்டுகளை தாங்கிய இராணுவ வீரர்களின் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார் ஜனாதிபதி.இதனால் உணர்த்தப்படுவது யாது யுத்தம் என்பதாகும். அப்படியாயின் இலங்கையில் சமாதானம் உயிர்துறந்து கொண்டிருக்கின்றது என்பதாகும்.

இன்று சமாதானத்திற்கான சகல வழிகளும் மூடப்பட்டு விட்டதென்றே எண்ணத்தோன்றுகிறது.

* நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட சர்வகட்சி மகாநாடு செயலிழந்துள்ளது.

* போர் நிறுத்த உடன்படிக்கையைப் பற்றி எந்தவித உத்தரவாதமுமில்லை.

* போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

* சர்வதேச சமூகம் அமைதிகாக்கின்றது.

* நோர்வே சமாதான தூதுவர்கள் இடையிடையே முகம் காட்டுகின்றனர்.

* வடக்கு கிழக்கில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.

* தலைநகரிலும் ஏனைய புறங்களிலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலையில் அவர்கள் மீது பாதுகாப்பு கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ் `நில் படையணி' என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி மேற்கூறப்பட்ட விடயங்களையா உணர்த்துகின்றது? அப்படியாயின் இச் சுவரொட்டி நியாயமானதென அரசாங்கம் கருதுமாயின் சுவரொட்டிக்கு அமைய ஜனாதிபதி அதே வழியில் செல்லுங்கள் தமிழர்கள் அதலபாதாளத்தை நோக்கிச் செல்வதை தடுக்கமுடியாது போகும்

http://www.thinakkural.com/news/2007/3/4/a...s_page22618.htm

சுவரொட்டிக்கு பொருத்தமான படம்தான் தேர்வு செய்து போடப்பட்டிருக்கிறது! :3d_039:

இதை கொழும்பில் ஒட்டினால் நல்லாக இருக்கும். சிங்களவன் துள்ளிக்குதித்து சந்தோசப்படுவான்.

ஒரு சிறு திருத்தம்: நில் பலகாய என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதின் அர்த்தம் "நில் படையணி" அல்ல "நீல படையணி".

இந்த நீல படையணிகள் சீக்கிரத்தில் "தேங்காய், மாங்காய் பட்டாணி சுண்டல்" :rolleyes::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது அன்பான மக்களே,

நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானத்திற்கான இந்த அமைதிப் பயணம் ஆரம்பமாகி நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் நாம் எம்மால் இயன்றதைச் செய்தோம். பொறுமையினைக் கடைப்பிடித்தோம். அமைதிவழித் தீர்வினைக் கொண்டுவருவதற்காக எண்ணிலடங்கா சந்தர்ப்பங்களை வழங்கினோம். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது ஒரு தடவையும், மகிந்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இன்னொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான திட்டத்தினை ஒத்திவைத்து, சமாதான முயற்சிகளுக்கு மேலும் சந்தர்ப்பங்களை வழங்கினோம்.

தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதுமே முன்வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெட்டத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை.

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். விடுதலைக்கான பாதையின் தமது பயணத்தினை மீளவும் தமிழர்கள் ஆரம்பித்திருக்கின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உலகத் தமிழினத்திடமிருந்து தொடர்ச்சியான ஆதரவினையும் உதவியையும் நாம் வேண்டிநிற்கின்றோம். தங்களது ஆதரவுக்குரலினை வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் நாங்கள், அவர்களது முயற்சிகளைத் தொடர்ந்தும் வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் படியும் அவர்களைக் கேட்டுநிற்கின்றோம். இடம்பெயர்ந்து உலகம் ப+ராகவும் பரந்து வாழும் புலம்பெயர்வாழும் தமிழ் உறவுகள் எமது போராட்டத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்புக்களுக்கு எங்களது அன்பையும் நன்றிகளையும் நாம் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், அவர்களது தொடர்ச்சியான பங்களிப்பினையும், ஆதரவினையும் தொடந்தும் வழங்கும்படி கேட்டுநிற்கின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.