Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு

இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் 6ந் தேதி சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் படி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். அந்தளவுக்கு இலங்கை அரசின் இனவெறி ஈழத்தமிழர்கள் மீது மட்டுமின்றி, தமிழக மக்கள் மீதும் திணிக்கப்படுகிறது.

அண்மையில் கலியபெருமாள் என்ற மீனவத் தமிழர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர். தமிழக கடலோரங்களில் மீனவப் பெருங்குடி மக்களின் ஒப்பாரி ஓலங்கள் கேட்கின்றன. இத்தகைய சூழலில், தமிழக மக்கள் யாவரும் ஒருங்கிணைந்து இலங்கை அரசை கண்டிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

அத்துடன் தமிழக மீனவர்களைப் பாதுகாத்திட இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டுமென வலியுறுத்துவதும் தமிழக மக்களின் கடமையாக உள்ளது. ஆகவே வரும் 6.3.2007 அன்று சென்னையில் விடுதலைச்சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது. தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

-மாலைச்சுடர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து நாகை மீனவர்கள் தொடர் போராட்டம்.

சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்தும் கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் கண்டித்தும் நாகை மாவட்ட மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை தமிழகம் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த கரியப்பெருமாள் என்பவர் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் பலியாகியிருந்தார். அத்தாக்குதலில் காயமடைந்த அஜித்குமார் நாகை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறிலங்காக் கடற்படையினரின் இந்த அத்து மீறலைக் கண்டித்து நாகைப் பகுதியில் உள்ள மீனவர்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

- சூரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, மார்ச் 6: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து, தொல். திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை கண்டித்ததுடன், இந்த நிகழ்ச்சிகள் தொடராதவண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் தமிழக மீனவர்கள் சும்மாஇருக்க மாட்டார்கள் என்றும் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார். இந்நிலையில் கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமரங்கள், வலைகளுடன் ஏராளமான மீனவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். உலக தமிழர் பேரவை தலைவர் ஜனார்த்தனம், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வபெருந்தகை, ரவிகுமார் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார். இலங்கை கடற்படையினர் அத்துமீறல்கள் குறித்து அவர் கண்டனம் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

-மாலைச்சுடர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.