Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2017 மே வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிப்பு

Featured Replies

2017 மே வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிப்பு

 


2017 மே வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிப்பு
 

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த வருடத்தின் மே மாதம் வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2021ஆம் ஆண்டிற்குள் வடக்கில் சுமார் 3,400 ஏக்கர் காணியும் கிழக்கில் 3000 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளதாக
மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

மீள்குடியேற்ற அமைச்சின் தரவுகளின் படி, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இராணுவத்தினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி வடக்கு, கிழக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிலுருந்த காணிகளில் யாழ். மாவட்டத்தில் 3623.17 ஏக்கரும், கிளிநொச்சியில் 23,323.24 ஏக்கரும் முல்லைத்தீவில் 1890.07 ஏக்கரும், மன்னாரில் 783.06 ஏக்கரும் வவுனியாவில் 1496.38 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 544.64 ஏக்கரும் மட்டக்களப்பில் 1005.68 ஏக்கரும் திருகோணமலையில் 79.68 ஏக்கரும் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானப்படையினர் வசமிருந்த 2617ஏக்கர் காணி நல்லாட்சி அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 37.53 ஏக்கர் காணியும் கிளிநொச்சியில் 851.38 ஏக்கரும் மன்னாரில் 926.20 ஏக்கர் காணியும் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அம்பாறையில் 5 ஏக்கரும் திருகோணமலையில் 244.13 ஏக்கரும் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்டியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தமது பூர்வீகக்காணிகள் இதுவரை விடுவிக்கப்படாமையால், தாம் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குறிப்பிட்டனர்.

இந்த வருட இறுதிக்குள் வடக்கில் 3323 ஏக்கர் காணியும் கிழக்கில் 2912.34 ஏக்கரும் விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

வட மாகாணத்தில் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளில் 2018 ஆம் ஆண்டில் 28.45 ஏக்கரும் 2019 இல் 11.16 ஏக்கரும் 2020 இல் 16.77 ஏக்கரும் 2021 இல் 25.98 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் 2018 ஆம் ஆண்டில் 44.24 ஏக்கரும் 2019 இல் 12.41 ஏக்கரும் 2020 இல் 16.77ஏக்கரும் 2021 இல் 32.98 ஏக்கர் காணியும் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2021ஆம் ஆண்டாகும் போது வடக்கில் சுமார் 3,400 ஏக்கர் காணியும் கிழக்கில் 3000 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 45 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட யாழ். கோட்டை, இராணுவம் மற்றும் பொலிஸார் இருக்க வேண்டிய இடம் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கடந்த மாதம் 31ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

மக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தினர் கோட்டைக்குச் சென்றால், காணிகளை விடுவிக்க முடியும் எனவும் சட்டத்திற்கமைய அங்கு செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், யாழ். கோட்டை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது எனவும் அது ஆளுநரின் தனிப்பட்ட கருத்து எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து இராணுவத்தினரையும் ஓரிடத்தில் குவித்து வைப்பது சாத்தியமற்றது எனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், பொதுமக்களின் காணிகளில் பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளமையால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சொந்த இருப்பிடத்தை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.

இவ்வாறு இன்னல்களை எதிர்நோக்கும் மக்களின் பூர்வீகக்காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

 

http://newsfirst.lk/tamil/2017/09/இவ்வருடத்தின்-மே-மாதம்-வ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.