Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டன் சுரங்க ரயிலில் வெடிப்பு ; பயங்கரவாதச் செயலா ?

Featured Replies

இலண்டன் சுரங்க ரயிலில் வெடிப்பு ; பயங்கரவாதச் செயலா ?

 

இலண்டனின் பார்சன்ஸ் க்றீன் சுரங்க ரயில் நிலையத்தில் ரயிலொன்றுக்குள் சற்று முன்னர் நிகழ்ந்த வெடிவிபத்தில் பயணிகள் காயமடைந்ததாக தெரியவருகிறது.

8_London.JPG

மாவட்டங்களுக்கு இடையிலான ரயிலின் கடைசிப் பெட்டியில் இருந்த வெள்ளை நிறக் கொள்கலன் ஒன்று வெடித்ததிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில், பயணிகள் சிலர் முகத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

article-4887032-444CD8FF00000578-707_964

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர். இது பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து உடனடியாகத் தெரிவிக்க முடியாது என இலண்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/24487

  • தொடங்கியவர்

லண்டனில் நிலக் கீழ் புகையிரத நிலையத்தில் குண்டுத் தாக்குதல்

Parsons.jpg

லண்டனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள  பார்சன் கிறீன் நிலக் கீழ் ( parsons green under ground tube station   ) புகையிரத நிலையத்தில் குண்டுத் தாக்குதல் ஒன்று  இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பயணிகள் சிலர் காயமுற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த தாக்குதலையடுத்து  டிஸ்ரிக் லைன் ( Distric line   நிலக் கீழ்  புகையிரத நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.  அத்துடன் தற்போது     பார்சன் கிறீன் நிலக் கீழ் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  காலை 8.20 அளவில் இடம்பெற்ற இத் தாக்குதலில் பயணிகள் சிலர் காயமுற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத்தின் உள்ளே இருந்த பை ஒன்றே வெடித்ததாக  செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

குண்டுவெடிப்பு சத்தத்தினைக் கேட்டதும் அச்சடைந்த பயணிகள்   தப்பிக்க முயன்ற வேளை ஏற்பட்ட நெரிசலாலே        சிலர்    காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்  குறித்த பகுதியில்  காவல் படையினரும் தீயணைப்புப் படையினரும்   இணைந்து  பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

 

 

Parsons-Green-tube-station-2.jpg

Parsons-Green-tube-station-3-1024x576.jpParsons-Green-tube-station.jpg

Parsons-2.jpgParsons-3-1024x683.jpgParsons-4.jpgParsons.png

http://globaltamilnews.net/archives/41173

  • தொடங்கியவர்

இலண்டனில் நடத்தப்பட்டது பயங்கரவாதத் தாக்குதலே!

 

 

இலண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் நிகழ்ந்தது பயங்கரவாதத் தாக்குதலே என்று ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயங்களுக்குட்பட்ட இருபத்து இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10_London_Update.JPG

உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.20 மணியளவில், இலண்டனின் தென்மேற்குப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பார்சன்ஸ் க்றீனின் சுரங்க ரயில் நிலையத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. 

மாவட்டங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரயில் ஒன்றின் கடைசிப் பெட்டியிலேயே குண்டு என்று சந்தேகிக்கப்படும் வெடிபொருள் வெடித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற ஒரு சில நிமிடங்களில் பொலிஸார், இராணுவத்தினர், அம்பியூலன்ஸ் மற்றும் குண்டு அகற்றும் பிரிவினர் உட்படப் பலரும் அங்கு குவிந்தனர். 

பார்சன்ஸ் க்றீன் ரயில் நிலையத்தைச் சுற்றிலும் இருந்த மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதுடன், அந்த ரயில் நிலையம் ஊடான ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 

இவ்வெடிபொருள் வெடித்ததும் ஒரு சில வினாடிகளுக்கு அந்தப் பெட்டியில் தீச்சுவாலைகள் எழுந்ததாக பாதிக்கப்பட்டவர்களும் சம்பவத்தைக் கண்டவர்களும் கூறினர்.

இச்சுவாலைகளால் பலரும் முகங்களில் எரிகாயங்களுக்கு உட்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதும் அங்கிருந்து உடனடியாக வெளியேற ஒரே நேரத்தில் பலநூற்றுக்கணக்கானவர்கள் முயன்றனர். இந்த நெரிசலிலும் சிலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இத்தாக்குதலை இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

 

http://www.virakesari.lk/article/24498

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

லண்­டனில் சுரங்கப் புகை­யி­ர­தத்தில் வெடி­பொருள் உப­க­ர­ணத்தைப் பயன்­ப­டுத்தி தீவி­ர­வாதத் தாக்­குதல்

14-85ebdaa916f92b4a2a68c50bcaa031814d4a241d.jpg

 

 10 வயது சிறுவன் உட்­பட 22 பேர் காயம்

லண்­டனில் சுரங்கப் புகை­யி­ ர­த­மொன்றில் நேற்று வெள்­ளிக்­ கி­ழமை இடம்­பெற்ற வெடிப்பு சம்­ப­வத்தில் சிக்கி 10 வயது சிறு  வன் ஒருவன் உட்­பட 22 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. தென் மேற்கு லண்­டனில் பார்ஸன் கிறீன் எனும் இடத்  தில் சுரங்கப் புகை­யி­ரதம் மொன்றில் மேம்­ப­டுத்­தப்­பட்ட வெடி­பொருள் உப­க­ர­ண­மொன்று வெடித்­ததை அந்­நாட்டு பொலிஸார் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். 

அந்த வெடி­பொருள் உப­க­ர­ணத்தில் குறித்த நேரத்­துக்கு வெடிக்க வைக்கும் கருவி பொருத்­தப்­பட்­டி­ருந்­தாக கூறிய அவர்கள், இது ஒரு தீவி­ர­வாதத் தாக்­குதல் எனவும் தாக்­கு­தலை நடத்­தி­யவர் என நம்­பப்­படும் நபரை வலை­வீசித் தேடி வரு­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.

அந்­நபர் வெடிப்பு சம்­பவம் இடம்­பெற்ற பின்னர் புகை­யி­ரத நிலை­யத்தில் கத்­தி­யுடன் செல்­வதை பலரும் அவ­தா­னித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்த சம்­ப­வத்தில் காய­ம­டைந்­த­வர்கள் மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்­று­வ­ரு­வ­தா­கவும் அவர்­களில் பல­ருக்கு எரி­கா­யங்­களே ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் மருத்­து­வ­மனை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

விம்­பிள்­ட­னி­லி­ருந்து வந்த டிஸ்றிக் லைன் புகை­யி­ர­தத்தில் இடம்­பெற்ற இந்த வெடிப்பு சம்­ப­வத்தை தீவி­ர­வாதத் தாக்­குதல் ஒன்­றாக கருதி விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக பொலிஸார் கூறு­கின்­றனர்.

புகை­யி­ர­தத்தில் வெடிப்பைத் தொடர்ந்து பாரிய நெருப்புப் பந்து போன்று பெரும் தீ ஏற்­பட்­டதால் பய­ணிகள் அல­றி­ய­டித்துக் கொண்டு நாலா­பு­றமும் சிதறி ஓடி­ய­தாக சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

பய­ணிகள் நிறைந்­தி­ருந்த புகை­யி­ர­தப்­பெட்­டி­யொன்றில் இடம்­பெற்ற இந்த வெடிப்பால் பல­ருக்கு முகத்தில் தீக்­கா­யங்கள் ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சிறப்பு சந்­தை­களில் வழங்­கப்­படும் பையொன்றில் வைக்­கப்­பட்­டி­ருந்த பிளாஸ்டிக் வாளி­யொன்றில் இருந்த மின்­கம்பி இணைப்­பு­க­ளைக கொண்ட அந்த வெடி­பொருள் உப­க­ர­ணத்தின் சிதை­வு­களைக் காண்­பிக்கும் புகைப்­ப­டங்கள் அந்­நாட்டு ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

வீட்டில் தயா­ரிக்­கப்­பட்ட வெடி­பொருள் உப­க­ரணம் ஒன்றே இந்த சம்­ப­வத்தில் இவ்­வாறு வெடித்­த­தாக நம்­பப்­ப­டு­கி­றது. ஆனால் அது வெடி குண்டா என்­பதை பொலிஸார் இன்னும் உறு­திப்­ப­டுத்­த­வில்லை.

அதே­ச­மயம் அந்தப் புகை­யி­ர­தத்தில் வெடிக்­காத நிலை­யி­லி­ருந்த இரண்­டா­வது உப­க­ர­ண­மொன்றை குண்டு செய­லி­ழக்க வைக்கும் பிரி­வினர் கண்­டு­பி­டித்­துள்­ள­தாக பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரை மேற்­கோள்­காட்டி சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

வெடிப்பு இடம்­பெற்று 5 நிமி­டத்­திலும் குறைந்த காலப் பகு­தியில் அந்தப் புகை­யி­ரத நிலை­யத்தை பெரு­ம­ளவு ஆயு­தந்­தாங்­கிய பொலி­ஸாரும் மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்­களும் தீய­ணைப்புப் படை­வீ­ரர்­களும் வந்­த­டைந்­தி­ருந்­த­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

வெடிப்பு சம்­ப­வத்­தை­ய­டுத்து அந்தப் பிராந்­தி­யத்­திற்­கான வீதிகள் பொலி­ஸாரால் மூடப்­பட்­ட­துடன் அந்தப் பிராந்­தி­யத்­துக்கு மேலாக உலங்­கு­வா­னூர்­திகள் வட்­ட­மிட்ட வண்ணம் இருந்­த­தா­கவும் அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. இந்த சம்­ப­வத்­தை­ய­டுத்து அந்தப் புகை­யி­ரத நிலையம் மூடப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் பிரித்­தா­னிய பிர­தமர் தெரேஸா மே டுவிட்டர் இண­யத்­த­ளத்தில் வெ ளியிட்­டள்ள செய்­தியில் பார்ஸன்ஸ் கிறீனில் இடம்­பெற்ற சம்­ப­வத்தில் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்­கு­அ­னு­தா­பத்தைத் தெரி­வித்­துள்­ள­துடன் மேந்­படி தீவி­ர­வாதத் தாக்­குதல் தொடர்பில் அவ­ச­ர­சேவைப் பிரி­வினர் துணிச்­ச­லுடன் செயற்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து அந்­நாட்டு நேரப்­படி நேற்று பிற்­பகல் ஒரு மணிக்கு அர­சாங்­கத்தின் அவ­ச­ர­கால சபை­யான கொப்­ராவின் கூட்­ட­மொன்று கூட்­டப்­பட்­டது.  அதே­ச­மயம் லண்டன் மேயர் சாதிக் கான் மக்களை அமைதி காக்கக் கோரியுள்ளார். நாம் ஒருபோதும் தீவிரவாதத்தால் தோற்கடிக்கப்படமாட்டோம் என அவர் கூறினார். 

இந்த வெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிட்ட செய்தியில், லண்டனில் தீவிரவாதிகளால் இன்னுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அத்தகையவர்களை முறியடிக்க ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார் செயல்திறனுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-16#page-1

  • தொடங்கியவர்

இலண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

 

 

இலண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

2_IS.JPG

இலண்டன் தென்மேற்குப் பகுதியிலுள்ள சுரங்க ரயில் நிலையத்தில், ரயிலின் கடைசிப் பெட்டியில், ஒரு வாளியில் பொலித்தீன் பையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இருபத்தொன்பது பேர் காயமடைந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், அந்த குண்டு தாக்குதல்தாரியால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் அந்த குண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், அதைத் தயாரிக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும், இந்தத் தாக்குதலுடன் நின்றுவிடாது என்றும், இது போன்ற தாக்குதல்கள் தொடரலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, இத்தாக்குதலை ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றிருப்பதாக, அதன் செய்தி இணைய தளமான அமாக் அறிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/24513

  • தொடங்கியவர்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.