Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடியிருப்புகளுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி போராட்டம்

Featured Replies

குடியிருப்புகளுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி போராட்டம்

 

 

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்ற கோரி யாழ் புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

jaffna.jpg

"மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து" என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த புதன் கிழமை தொடக்கம் தொடர்ந்து 65 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை புத்தூர் மேற்கு, கலைமதி கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்னால் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந் நிலையில் இந்தப் போராட்டத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை என்றும் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காத நிலையில்  மக்களுக்குத் தீர்வை வழங்கக்கோரி இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்  கவனயீர்ப்பு போராட்டத்தில் 500க்கும் அதிகளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/24499


“வடக்கு மாகாண சபையே, மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்று. மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து, கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து” என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த 12.07.2017 புதன்கிழமை தொடக்கம் தொடர்ந்து 65 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை, மேற்கொண்டு வருகின்ற புத்தூர் மேற்கு, கலைமதி கிராம மக்களுக்குத் தீர்வை வழங்கக் கோரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று, நாளை காலை 10 மணியளவில், யாழ்ப்பாண கச்சேரிக்கு முன்பாக, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மயானங்களால் பல்வேறு சுற்றுச் சூழல், சுகாதார மற்றும் உளவியற் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் ஏனைய அமைப்புக்களுடனும் இணைந்து முன்னெடுக்கவுள்ள இக்கவனயீர்ப்புக்கு ஆதரவு வழங்குமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தொழிற் சங்கங்கள், வர்த்தகர் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரைக் கோரியுள்ளது.

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மயானங்களை-அகற்றக்-கோரி-கச்சேரிக்கு-முன்பாக-கவனயீர்ப்பு/71-203824

  • தொடங்கியவர்

யாழில் மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள மயானங்களை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

 

யாழில் மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள மயானங்களை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்

 

 
 
குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றுமாறும், மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து, கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று (15) யாழ்.கச்சேரிக்கு முன்பாக பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

புத்தூர் மேற்கு, கலைமதி கிராம, மக்கள் மண்டபத்திற்கு முன்னால் கடந்த 65 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்ற மக்களுக்குத் தீர்வை வழங்கக்கோரியே கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், எங்கள் கிராமத்தில் பிணம் எரிக்க வேண்டாம், மக்களின் முற்றத்தில் பிணம் எரிக்க விடமாட்டோம். சிகரெட் புகைக்குத் தடை, வாகப் புகைக்குத் தடை, பிணப்புகைகுத் தடை இல்லையா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பல்லாயிரக்கரணக்கான மக்கள் ஒன்றுகூடி இந்த போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தொழிற் சங்கங்கள், வர்த்தகர் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=95424

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.