Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பஷில் தலை­மை­யி­லான குழு­வினர் அடுத்த வாரம் வடக்­கிற்கு

Featured Replies

பஷில் தலை­மை­யி­லான குழு­வினர் அடுத்த வாரம் வடக்­கிற்கு

 

 

வடக்கு, கிழக்கில் தமது கட்­சியின் அர­சியல் செயற்­பா­டு­களை ஆரம்­பிப்­ப­தற்­காக பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் அடுத்த வாரம் அப்­ப­கு­தி­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷில் ராஜபக் ஷ தலை­மை­யி­லான குழு­வி­னரே இவ்­வாறு விஜயம் செய்து கட்­சியின் செயற்­பா­டு­களை வடக்கு கிழக்கில் வியா­பிப்­பது குறித்து ஆரா­ய­வுள்­ளனர்.

Image result for பஷில் ராஜபக்ஷ

எதிர்­வரும் 21, 22, 23 ஆம் திக­தி­களில் பஷில் ராஜபக் ஷ தலை­மையில் இவர்கள் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். முன்னாள் வட­மா­காண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்­தி­ர­சிறி மற்றும் முக்­கி­யஸ்­தர்­களே இவ்­வாறு அங்கு செல்­ல­வுள்­ளனர். 

யாழ்ப்­பாணம் உட்­பட வடக்கில் தமது கட்­சிக்கு புதிய அமைப்­பா­ளர்­களை நிய­மிப்­பது குறித்தும் தமது கட்­சிக்­கான ஆத­ர­வினை திரட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை இந்த குழு­வினர் மேற்­கொள்­ள­வுள்­ளனர். மூன்று தினங்கள் அங்கு தங்­கி­யி­ருந்து மக்­க­ளையும் இவர்கள் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர்.

எதிர்­வரும் ஜன­வரி மாதம் நாடு தழு­விய ரீதியில் உள்­ளூ­ராட்சி தேர்தல் நடை­பெறும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­விட மாகாண சபைத் தேர்­தல்­களும் அடுத்த வருடம் இடம்­பெறும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவைத் திரட்டும் முகமாகவே பொது எதிரணியைச் சேர்ந்த குழுவினர் அப்பகுதிக்கு  விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.virakesari.lk/article/24510

basil-chandrasiri.jpg

மகிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கு மாகாணத்தை இராணுவப் பிடிக்குள் வைத்திருந்து சர்வாதிகார ஆட்சி நடத்திய பசில் ராஜபக்ஷ மற்றும் ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யவுள்ளனர்.

எதிர்வரும் 21, 22, 23ஆம் நாட்களில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்யவுள்ள இவர்கள், தமது ஆட்சிக்காலத்தில் தமக்கு ஆதரவாகவும், நெருக்கமாகவும் பணியாற்றியவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சரால் ஆரம்பிக்கப்பட்ட சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளராக பசில் ராஜபக்ஷ உள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணி, அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் என்பவற்றை இலக்கு வைத்து காய்கள் நகர்த்தும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், வட மாகாணத்தில் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கான அமைப்பாளர்களையும், உறுப்பினர்களையும்தெரிவு செய்வதற்கே இக்குழு யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்கின்றது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவரது ஆலோசகராகவும் அமைச்சராகவும் இருந்த பசில் ராஜபக்சவே, வடக்கின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக செயற்பட்டார். வடக்கின் வசந்தம் என்ற பெயரில், எல்லாத் திட்டங்களையும் கையாண்டார். இதில் பெருமளவு முறைகேடுகளும், மோசடிகளும் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் வடக்கு மாகாண ஆளுனராக இருந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, பசில் ராஜபக்சவுடன் இணைந்து, வடக்கு மக்களையும், அரச நிர்வாகத்தையும் இராணுவ ஆட்சிப் பிடிக்குள் வைத்திருந்தார்.

இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வடக்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://thuliyam.com/?p=78954

  • தொடங்கியவர்

பசில், சந்­தி­ர­சிறி இணைந்து அடுத்த வாரம் யாழ்.வருகை

 

 

முன்­னாள் அமைச்­சர் பசில் ராஜ­பக்ச மற்­றும் வடக்கு மாகாண முன்­னாள் ஆளு­நர் மேஜர் ஜென­ரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி ஆகி­யோர் அடுத்த வாரம் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தரு­கின்­ற­னர்.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தரப்­பால் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட பொது­ஜன மக்­கள் முன்­ன­ணியை வடக்கு மாகா­ணத்­தில் காலூன்­றும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கவே அவர்­கள் இரு­வ­ரும் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மகிந்த ராஜ­பக்ச ஆட்­சிக்­கா­லத்­தில் அவ­ரது ஆலோ­ச­க­ரா­க­வும் அமைச்­ச­ரா­க­வும் இருந்த பசில் ராஜ­பக்­சவே, வடக்­கின் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் பொறுப்­பா­கச் செயற்­பட்­டார். வடக்­கின் வசந்­தம் என்ற பெய­ரில், எல்­லாத் திட்­டங்­க­ளை­யும் அவரே கையாண்­டார்.

அந்­தக் கால­கட்­டத்­தில் வடக்கு மாகாண ஆளு­ந­ராக இருந்த மேஜர் ஜென­ரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி, பசில் ராஜ­பக்­ச­வு­டன் இணைந்து, வடக்கு மக்­க­ளை­யும், அரச நிர்­வா­கத்­தை­யும் இரா­ணுவ ஆட்­சிப் பிடிக்­குள் வைத்­தி­ருந்­தார்.

ஆட்­சி­மாற்­றத்­துக்­குப் பின்­னர், வடக்கு அரங்­கில் இருந்து அகற்­றப்­பட்ட இவர்­கள் இரு­வ­ரும், மீண்­டும் ஒன்­றி­ணைந்து வடக்­குக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­வுள்­ள­னர்.

இவர்­கள் இரு­வ­ரும் எதிர்­வ­ரும் 21ஆம் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்து மூன்று நாள்­க­ளுக்­குத் தங்­கி­யி­ருப்­பர். இதன்­போது, கடந்த ஆட்­சிக்­கா­லத்­தில் தமக்கு நெருக்­க­மாக இருந்­த­வர்­கள், ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­வர்­களை அழைத்­துப் பேசத் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

மகிந்த ஆத­ரவு பொது­ஜன மக்­கள் முன்­ன­ணி­யின் யாழ்ப்­பாண அமைப்­பா­ள­ராக ஈ.பி.டி.பியின் முன்­னாள் ஆத­ர­வா­ளர் தம்­பித்­துரை ரஜீவ் நிய­மிக்­கப்­பட்­டி­ருந் தார். அவ­ரு­டன் இணைந்து மேலும் 40 பேருக்கு மகிந்த ஆத­ர­வுக் கட்­சி­யின் யாழ்ப்­பா­ணத்­துக்­கான முக்­கிய பொறுப்­புக்­க­ளும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

அடுத்த சில மாதங்­க­ளில் நடத்­தப்­ப­ட­வுள்ள உள்­ளூ­ராட்­சித் தேர்­தல், மற்­றும் அடுத்த ஆண்­டில் நடத்­தப்­ப­ட­வுள்ள மாகாண சபைத் தேர்­தல் ஆகி­ய­வற்றை இலக்கு வைத்தே, பசில் ராஜ­பக்ச- சந்­தி­ரி­சிறி கூட்­டணி மீண்­டும் வடக்­கில் செயற்­ப­டத் தொடங்­கி­யுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/29432.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.