Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டு எதிரணிக்குள் ஓரம்கட்டப்படுகின்றாரா தினேஸ்?

Featured Replies

கூட்டு எதிரணிக்குள் ஓரம்கட்டப்படுகின்றாரா தினேஸ்?

 

தற்­போது கூட்டு எதி­ர­ணிக்­குள்ளும் நெருக்­க­டிகள்  உரு­வாகத் தொடங்­கி­யி­ருக் ­கின்­றன. இந்த நிலை­மையை ஐ.தே.க.வும் சுதந் ­திரக் கட்­சியும் எவ்­ வாறு தமக்கு சாத ­கமாக பயன்­ப­டுத்தப் போகின்­றன  என்­பது குறித்தும்  மஹிந்த ராஜ ­பக் ஷ எவ்­வாறு இதனை  சமா­ளிக்கப் போகின்றார்  என்­ப­துமே தற்­ போது அர­சியல் சூழலில் காணப் ­படும் பர­ப­ரப்­பான கேள்­வி­யாகும். 

 

நாட்டின் அர­சியல் சூழ­லா­னது பாரிய பரப்­புக்­குள்­ளேயே சிக்கிக் கொண்­டுள்­ளது எனக் கூறலாம். அந்­த­ள­வுக்கு அர­சியல் நகர்­வுகள் பர­ப­ரப்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆளும் கட்சி மட்­டு­மின்றி எதிர்க்­கட்சி பக்­கத்­திலும் அர­சியல் சூடு பிடித்­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அந்­த­ள­வுக்கு நிலை­மைகள் பர­ப­ரப்­பாகிக் கொண்டு செல்­கின்­றன.

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற நிலையில் அந்த இரண்டு கட்­சி­க­ளுக்கு இடை­யேயும் முரண்­பா­டுகள் கருத்து வேறு­பா­டுகள் வலு­வ­டைந்து வரு­கின்­றன.

இந்­நி­லையில் எதிர்க்­கட்சி பக்­கமும் சிக்­கல்கள் ஏற்­பட்­டுக்­கொண்டு இருப்­ப­தா­கவே உள்­ளகத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. தற்­போ­தைய நிலை­மையில் சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் இணைந்து அமைத்­துள்ள தேசிய அர­சாங்­கத்­திற்கு பாரிய சவா­லாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியே காணப்­ப­டு­கின்­றது. இதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.

பிர­தான எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இருந்­த­போ­திலும் அக்­கட்சி இரா­ஜ­தந்­திர சாணக்­கிய அர­சியல் போக்கை முன்­னெ­டுத்து அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கிக் கொண்­டி­ருக்­கி­றது. குறிப்­பாக நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்­போ­யி­ருக்­கின்ற இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வொன்றைப் பெற்­றுக்­கொள்ளும் நோக்­கி­லேயே பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த அணு­கு­மு­றையைப் பின்­பற்றி வரு­கின்­றது.

இந்தச் சூழலில் அர­சாங்­கத்­திற்கு தலை­யி­டியைக் கொடுக்கும் எதிர்க்­கட்­சி­யாக மஹிந்த ராஜபக் ஷ தலைமை வகிக்கும் கூட்டு எதிர்க்­கட்­சியே செயற்­பட்டு வரு­கின்­றது என்­பதே நிதர்­ச­ன­மா­னது. கூட்டு எதிர்க்­கட்­சி­யா­னது அர­சாங்­கத்தின் கிட்­டத்­தட்ட அனைத்து செயற்­பா­டு­க­ளையும் விமர்­சித்தே வரு­கி­றது.

குறிப்­பாக அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் தொடக்கம் அனைத்து செயற்­பா­டு­க­ளுக்கும் கூட்டு எதிர்க்­கட்சி கடும் விமர்­ச­னத்தை முன்­வைத்து வரு­கி­றது. புதிய அர­சி­ய­லமைப்பின் ஊடாக அர­சாங்கம் நாட்டைப் பிரிக்க முயல்­கின்­றது என்ற குற்­றச்­சாட்டை கூட்டு எதிர்க்­கட்­சி­யா­னது தொடர்ச்­சி­யாக முன்­வைத்து வரு­கி­றது.

உண்­மையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் கூட்டு எதிர்க்­கட்­சியின் இந்தச் செயற்­பா­டுகள் அசௌ­க­ரி­யப்­ப­டுத்­திய வண்­ணமே இருக்­கின்­றன. இந்த பின்­ன­ணி­யி­லேயே அர­சியல் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. கூட்டு எதிர்க்­கட்­சியின் செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் அர­சாங்கம் ஏதா­வது அர­சியல் காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுக்­கும்­போது கூட்டு எதிர்க்­கட்­சி­யா­னது அரச எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு அர­சாங்­கத்தை அசௌ­க­ரி­யப்­ப­டுத்தி வரு­கி­றது.

இவ்­வாறு நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கும் கூட்டு எதிர்க்­கட்­சிக்கும் இடை­யி­லான அர­சியல் காய்­ந­கர்த்­தல்கள் உச்­ச­க்கட்­டத்தை அடைந்­தி­ருக்­கின்­றன. இவ்­வா­றான சூழலில் கடந்த வாரம் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்­திரக் கட்­சியின் 12 உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகி பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டப்­போ­வ­தாக தக­வல்கள் வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

எங்கே அவ்­வாறு நடந்­து­வி­டுமோ என்று அனை­வரும் எதிர்­பார்த்­தி­ருந்த நிலையில் கடந்த வாரம் அவ்­வாறு நடக்­க­வில்லை. எனினும் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சுதந்­திரக் கட்­சியின் பிர­தி­ய­மைச்­ச­ராக இருந்த அருந்­திக்க பெர்­னாண்டோ ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் பதவி நீக்­கப்­பட்­டி­ருந்தார். அவர் பதவி நீக்­கப்­பட்­ட­மைக்­கான காரணம் அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­வினால் கடந்த வியா­ழக்­கி­ழமை கூறப்­பட்­டது. அதா­வது அவர் தொடர்ந்து அர­சாங்­கத்தின் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி செயற்­பட்டு வந்­த­மை­யினால் இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யினால் பதவி நீக்கம் செய்­யப்­பட்­ட­தாக அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர கூறினார்.

இருப்­பினும் கார­ணங்கள் எவ்­வாறு கூறப்­பட்­ட­போ­திலும் அர­சாங்­கத்­திற்குள் இரண்டு கட்­சி­க­ளுக்கு இடை­யிலும் சர்ச்­சைகள் நீடிப்பதை புரிந்­து­கொள்ள முடி­கி­றது. இந்த நிலையில் 12 பேர் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கு­வ­தாக கூறி­ய­போ­திலும் அது இது­வரை நிக­ழாமல் இருப்­ப­தற்­கான காரணம் என்ன என்­பதை ஆராய்ந்­து­பார்க்க வேண்­டி­யுள்­ளது.

அதா­வது கூட்டு எதி­ர­ணி­யா­னது அரசாங்­கத்­திற்கு கடும் சவாலை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் தற்­போது அந்தக் கட்­சிக்­குள்­ளேயும் நெருக்­க­டிகள் ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதன் வெ ளிப்­பா­டா­கவே சுதந்­திரக் கட்­சியின் சார்­பாக அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்­களில் 12 பேர் விலகி சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தாக கூறி­ய­போ­திலும் அந்த நட­வ­டிக்கை ஸ்தம்­பிதம் அடைந்­துள்­ள­தாக தெரிய வரு­கி­றது. காரணம் கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் தற்­போது ஒரு­சில நெருக்­க­டிகள் ஏற்­பட ஆரம்­பித்து விட்­டன.

விசே­ட­மாக கூட்டு எதி­ர­ணிக்குள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் சகோ­தரர் ஒரு­வரின் ஆதிக்கம் வலு­வ­டைந்து வரு­வ­தாக கூட்டு எதி­ரணி உறுப்­பி­னர்கள் கவலை அடைந்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அது­மட்­டு­மின்றி கூட்டு எதி­ர­ணியின் தலை­வ­ராக செயற்­படும் தினேஷ் குண­வர்த்­த­ன­வையும் ஒரு சில இடங்­களில் ஓரம்­கட்டும் வகையில் சில நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

அதன்­படி பார்க்­கும்­போது கூட்டு எதி­ர­ணியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­த­னவும் விரக்­தி­யு­ட­னேயே இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் அவர் இது தொடர்பில் எங்கும் வெளிக்­காட்­ட­வில்லை. எனினும் கூட்டு எதி­ர­ணிக்குள் மஹிந்த ராஜ­பக் ­ஷவின் ஒரு சகோ­த­ரரின் தலை­யீ­டுகள் அதி­க­ரித்­துள்­ள­தாக அவர் கவ­லை­ய­டைந்­தி­ருப்­ப­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் இவ்­வாறு கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் நெருக்­க­டிகள் தலை­தூக்­கி­யுள்ள நிலையில் அர­சாங்கம் அதில் மகிழ்ச்­சி­ய­டையும் நிலைமை உள்­ளது. எப்­ப­டியும் பொது­வான அரச எதிர்ப்பு நோக்­கத்தைக் கொண்­டி­ருக்­கின்ற எதிர்க்­கட்­சி­க­ளுக்குள் முரண்­பா­டுகள் வலுப்­பது குறை­வாகும்.

காரணம் என்­னதான் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டாலும் அர­சாங்­கத்தை எதிர்த்து செயற்­பட வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­திற்­காக எதிர்க்­கட்­சிகள் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­வ­து­முண்டு. முரண்­பா­டுகள் தலை­தூக்­கி­னாலும் அவற்றை ஒரு பக்கம் வைத்­து­விட்டு அரச எதிர்ப்பு நோக்­கத்­திற்­காக செயற்­ப­டுவ­துண்டு. ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் கூட்டு எதிர்க்­கட்­சி­க­ளுக்குள் சில முரண்­பா­டுகள் வலு­வான முறையில் தலை­தூக்­கி­யுள்­ள­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஒன்­றுக்கு மேற்­பட்ட கட்­சிகள் இணைந்து ஒரு அமைப்­பாக செயற்­ப­டு­கின்ற போது இவ்­வாறு முரண்­பா­டு­களும் கருத்து வேறு­பா­டு­களும் கவ­லை­களும் ஏற்­ப­டு­வது சக­ஜ­மாக இருந்­தாலும் அரச எதிர்ப்பு என்று முன்னர் கூறப்­பட்ட கார­ணத்­திற்­காக அவற்றை கவ­னத்தில் கொள்ளும் நிலை­மைகள் மிகவும் குறை­வாகும். தற்­போ­தைய நிலை­மையில் கூட்டு எதி­ர­ணியில் ஏற்­பட்­டுள்ள இந்த நெருக்­க­டிகள் கார­ண­மாக கூட்டு எதி­ர­ணியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன கவ­லையில் இருப்­ப­தா­னது நெருக்­க­டியை அதி­க­ரிப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்­த­வொரு கட்­சியும் தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான பெரும்­பான்­மையைப் பெற­வில்லை. ஐக்­கிய தேசியக் கட்சி 106 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 95 ஆச­னங்­க­ளையும் பெற்­றுக்­கொண்­டன. எந்­த­வொரு கட்­சியும் ஆட்­சி­ய­மைக்கும் அதி­கா­ரத்தைப் பெறா­ததால் இரண்டு கட்­சி­களும் இணைந்து ஆட்­சி­ய­மைத்­தன.

அப்­போது சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அந்த ஆட்­சியில் இணைந்­து­கொள்­ளாமல் பிரிந்து கூட்டு எதி­ரணி என்ற பெயரில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷ­வுடன் இணைந்து செயற்­பட ஆரம்­பித்­தனர். இவர்­க­ளுடன் விமல் வீர­வன்­ச, உதய கம்மன்­பில, தினேஷ் குண­வர்த்­தன, வாசு­தேவ நாண­யக்­கார போன்­ற­வர்­களும் இணைந்­து­கொண்­டனர்.

இந்­நி­லையில் ஒன்­றுக்கும் மேற்­பட்ட கட்­சிகள் இணைந்து கூட்டு எதி­ர­ணியை உரு­வாக்கி செயற்­பட்டு வரு­கின்­றன. ஒரு­வ­கையில் அர­சாங்­கத்­திற்கு தலை­யி­டியைக் கொடுக்கும் வகை­யி­லேயே கூட்டு எதி­ரணி செயற்­ப­டு­கின்­றது என்­பதை ஏற்­றுக்­கொள்ளத் தான் வேண்டும். கூட்டு எதி­ர­ணியின் சவால்­க­ளையும் காய்­ந­கர்த்­தல்­க­ளையும் சமா­ளிப்­ப­தற்கே ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அமர்ந்து சிந்­திக்க வேண்­டி­ய­தாக இருக்­கி­றது.

இந்­நி­லை­யி­லேயே தற்­போது கூட்டு எதி­ர­ணிக்குள் நெருக்­க­டி­களும் சிக்­கல்­களும் ஏற்­ப­டு­வ­தற்கு ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. எதிர்­வரும் காலங்­களில் கூட்டு எதி­ர­ணியின் இந்த நெருக்­க­டிகள் அடுத்த கட்­டங்­களை அடையும் சாத்­தியம் காணப்­ப­டு­கி­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் பல்­வேறு முரண்­பா­டுகள் மற்றும் கருத்து வேறு­பா­டு­க­ளுக்கு மத்­தியில் தேசிய அர­சாங்­கத்தை கொண்டு செல்­கின்­றன. இந்­நி­லையில் இரண்டு துரு­வங்­க­ளான இந்தக் கட்­சி­களின் இணை­வையே தமது எதிர்ப்பு நட­வ­டிக்­கையின் பிர­தான மூல­த­ன­மாக்கி கூட்டு எதி­ரணி செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.

எப்­ப­டி­யி­ருப்­பினும் தற்­போது 12 உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகி சுயா­தீ­ன­மாக செயற்­படப் போவ­தாக கூறிய நிலையில் அந்த நட­வ­டிக்­கைகள் இடை­ந­டுவில் ஸ்தம்­பித்­துள்­ளன. கூட்டு எதி­ர­ணியில் தோன்­றி­யி­ருப்­ப­தாகக் கூறப்­படும் நெருக்­க­டி­களும் ஒரு­சில தலை­வர்­களின் விரக்தி நிலையும் இதற்கு கார­ண­மாக இருக்­கலாம்.

கூட்டு எதி­ர­ணி­யா­னது அர­சாங்­கத்தை தொடர்ந்து அசௌ­க­ரி­யப்­ப­டுத்தும் வகையில் செயற்­பட்டு வரும் நிலையில் அதற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ­ஷவின் ஆத­ரவு மிக முக்கியமானதாக காணப்படுகிறது. இந்நிலையில் கூட்டு எதிரணி யின் தலைவராக செயற்படும் தினேஷ் குணவர்த்தன ஓரங்கட்டப்படும் வகை யில் செயற்பாடுகள் இடம்பெற்றால் அது அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பலவீனத்தை ஏற்படுத் துவதாகவே அமையும்.  

எனவே இந்த நிலையில் ஐக்கிய தேசி யக் கட்சியும் சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பும் புரிந்துகொண்டு அரசியல் காய்நகர்த்தல்களை எதிர்வரும் காலங்களில் வலுப்படுத் தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்திலேயே அவரின் உறவினர்களினால் சுதந்திரக் கட்சிக்குள் பாரிய ஆதிக்கம் செலுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக கடந்த ஆட்சியிலிருந்து மைத்திரிபால சிறிசேன வெளியேறி பொது வேட்பாளராக ஐ.தே.கவுடன் இணைந்து போட்டி யிட்டமைக்கு இந்தப் பிரச்சினைகள் காரணமாகின.

இந்நிலையில் தற்போது இவ்வாறான நெருக் கடிகள் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலைமையை ஐ.தே.க.வும் சுதந்திரக் கட்சியும் எவ்வாறு தமக்கு சாதகமாக பயன் படுத்தப் போகின்றன என்பது குறித்தும் மஹிந்த ராஜபக் ஷ எவ்வாறு இதனை சமா ளிக்கப் போகின்றார் என்பதுமே தற்போது அரசியல் சூழலில் காணப்படும் பரபரப்பான கேள்வியாகும். என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  

 ரொபட் அன்­டனி

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-16#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.