Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் சுரங்க ரயில் குண்டு வெடிப்பு: 18 வயது இளைஞர் கைது

Featured Replies

லண்டன் சுரங்க ரயில் குண்டு வெடிப்பு: 18 வயது இளைஞர் கைது

 

 
16INTHVLRBRITAINSUBWAYINCIDENT

லண்டன் சுரங்க ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 24 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை வேட்டையாடிய போலீஸார் 18 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

ஆனாலும், ஒரு நபருக்கு மேல் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் அதிகாரிகள் ரகசிய புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் விவரங்களை வெளியிட இடமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இங்கிலிஷ் கால்வாய், டோவர் துறைமுகப் பகுதியிலிருந்து 18 வயது இளைஞர் ஒருவரை கெண்ட் போலீஸ் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

“இன்று காலை எங்கள் விசாரணை அடிப்படையில் முக்கியக் கைது ஒன்றை மேற்கொண்டுள்ளோம்” என்று துணையுதவி போலீஸ் ஆணையர் நீல் பாசு தெரிவித்தார். ஆனால் விசாரணை நீளமானது, ஏனெனில் பயங்கரவாத அச்சுறுத்தல் தீவிரமாக உள்ளது என்றார். அதாவது இன்னொரு தாக்குதலுக்கு வெள்ள நீரோட்டம் பார்ப்பதாக இந்தத் தாக்குதல் இருக்கலாம் என்பதால் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னொரு அபாயகர பயங்கரவாதி தலைமறைவாக இருப்பதாக நீல் பாசு நம்புகிறார்.

சிசிடிவி காமரா மற்றும் ஐஇடி வெடிகுண்டின் மீதமுள்ள பகுதிகளை போலீஸார் தீவிர ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர். ரயில் உள்ளேயிருந்த காமராவில் பதிவான படங்களில் ஐஇடி வெடிகுண்டு பக்கெட்டில் வைக்கப்பட்டிருந்ததாகக் காட்டுகிறது. பக்கெட்டில் பிளாஸ்டிக் பையில் ஐஇடி குண்டு வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

தென் மேற்கு லண்டனில் பார்சன்ஸ் கிரீன் ரயில் நிலையத்தில் ரயிலில் குண்டு வெடித்தது. இந்த சுரங்க ரயில் ஒட்டுமொத்த அமைப்பும் பல நூறு காமராக்களால் கண்காணிக்கப்பட்டு வருபவையாகும்.

ஐஇடி வெடிகுண்டு பாதிதான் வெடித்துள்ளது, முழுதும் வெடித்திருந்தால் சேதம் மோசமாக இருந்திருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது, இதன் துணை அமைப்பொன்று இந்த குண்டு வெடிப்பை ஏற்பாடு செய்ததாக அது தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/world/article19698632.ece

  • தொடங்கியவர்

இரண்டாவது சந்தேக நபர் இலண்டனில் கைது

 

இலண்டன் பாதாள ரயில் குண்டு வெடிப்பு தொடர்பில் , இரண்டாவது சந்தேக நபரை கைது செய்துள்ளதாக இன்று  பிரித்தானியா பொலிசார் தெரிவித்துள்ளனர் . நேற்று சனி இரவு , பெயர் கூறப்படாத , 21 வயதான ஒருவர் ஹவுன்ஸ்லோ என்னும் இடத்தில் கைதாகி இருந்ததாக பொலிசார் அறிவித்துள்ளனர் . வெள்ளியன்று பாதாள ரயில் நிலையத் தாக்குதல் தொடர்பாக , 18 வயது இளஞன்  ஒருவர் கைதாகி இருந்தார் . சந்தேக நபர்கள் பலரை பொலிசார் தேடிவருவதாக கூறி உள்ளார்கள் .

கடந்த ஆறு மாதங்களில் , பிரிட்டனில் இடம்பெறும் 5வது தாக்குதல் இதுவென்பதும் , இந்தத் தாக்குதல்கள் 35 பேர்களின் உயிர்களைப் பறித்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

https://news.ibctamil.com/ta/world-affairs/Second-person-is-arrested

  • தொடங்கியவர்

இலண்டன் குண்டுவெடிப்போடு தொடர்புடையவரின் புகைப்படம் வெளியானது

 

 

இலண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் ரயில் பாதை குண்டு வெடிப்போடு தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

Local_News.jpg

கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் 21 வயதான யாஹியா ஃப்ரூக் என்பவரின் புகைப்படத்தையே அந் நாட்டு பொலிஸ் வெளியிட்டுள்ளது.

குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புடைய 18 வயதுடைய மற்றுமொறு இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/24607

  • தொடங்கியவர்

லண்டன் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு: மூன்றாவது நபர் கைது

லண்டன் சுரங்க ரெயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக மூன்றாவது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 
 
 
 
லண்டன் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு: மூன்றாவது நபர் கைது
 
லண்டன்:

லண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் செல்லும் சுரங்க ரெயில் (டியூப் டிரெயின்) சேவை இயங்கி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ரெயிலில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். கிரீன் நிலையத்தை நெருங்கியபோது ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த வெடி குண்டு வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பில் 30 பேர் காயம் அடைந்தனர்.

அந்த பக்கெட்டுக்குள் சில ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என பெருநகர லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒருவரை நேற்று போலீசார் கைது செய்தனர். வேல்ஸ் பகுதியில் 25 வயது வாலிபர் பிடிபட்டதாகவும், தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தீவிரவாத எதிர்ப்பு படை கமாண்டர் டீன் ஹைடன் கூறுகையில், சுரங்க ரெயில் வெடி விபத்து தொடர்பாக 4 இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். இன்னும் சில தினங்களில் தேடுதல் பணி முடிவடைந்து விடும். வெடி விபத்து குறித்து முழு விவரமும் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/20074847/1108874/police-says-third-arrest-made-in-london-subway-attack.vpf

  • தொடங்கியவர்

லண்டன் சுரங்க ரெயில் குண்டு வெடிப்பு: கைது செய்த இரண்டு பேரை போலீசார் விடுவித்தனர்

லண்டன் சுரங்க ரெயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரை போலீசார் விடுவித்துள்ளனர்.

லண்டன் சுரங்க ரெயில் குண்டு வெடிப்பு: கைது செய்த இரண்டு பேரை போலீசார் விடுவித்தனர்
 
லண்டன்:

லண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் செல்லும் சுரங்க ரெயில் (டியூப் டிரெயின்) சேவை இயங்கி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ரெயிலில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். கிரீன் நிலையத்தை நெருங்கியபோது ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த வெடி குண்டு வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பில் 30 பேர் காயம் அடைந்தனர்.

அந்த பக்கெட்டுக்குள் சில ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என பெருநகர லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சுரங்க் ரெயிலில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரை போலீசார் நேற்று விடுவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சுரங்க ரெயில் தாக்குதல் தொடர்பாக செப்டம்பர் 16-ம் தேதி அவுன்ஸ்லோ பகுதியில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய நபரும், செப்டம்பர் 20-ம் தேதி நியூபோர்ட் பகுதியில் கைது செய்யப்பட்ட 48 வயதுடைய நபரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள மற்ற நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் கொடுத்துள்ள முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/22084843/1109277/british-police-release-two-men-in-parsons-green-attack.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.