Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அருந்திக்கவை நீக்கியதன் மூலம் தலையிடி குணமாகிவிட்டதா?

Featured Replies

அருந்திக்கவை நீக்கியதன் மூலம் தலையிடி குணமாகிவிட்டதா?

 

அமைச்­சர்­கள் அமைச்­சுப் பத­வி­யில் இருந்து வில­கு­வ­தும், விலக்­கப்­ப­டு­வ­தும் இன்று சாதா­ரண நிகழ்வுகளாகµ மாறி­யுள்­ளன.முத­லில் திலக் மாரப்­பன.

அதன்­பின் ரவி கரு­ணா­நா­யக்க.அடுத்­த­தாக விஜ­ய­தாச ராஜ­பக்ச விலக்­கப்­பட்­டார்.அந்த வரி­சை­யில் இப்­போது அருந்­திக்க பெர்­னாண்­டோ­வும் இணைந்­துள்­ளார்.

ஜன­நா­ய­கம் வளர்ச்­சி­ய­டைந்­துள்ள மேற்கு நாடு­க­ளில் மாத்­தி­ரம் இருந்து வரு­கின்ற இந்த அர­சி­யல் கலா­சா­ரம், இப்­போது இலங்­கை­யின் அர­சி­ய­லுக்­குள்­ளும் ஊடு­ரு­வி­யுள்­ள­மையை நாம் எவ்­வாறு எடுத்­துக்­கொள்­வது?இந்த அர­சில் நல்­ல­தோர் அர­சி­யல் கலா­சா­ரம் மல­ரத் தொடங்­கி­யுள்­ளது என்று எடுத்­துக்­கொள்­வதா அல்­லது தங்­க­ளின் குறு­கிய அர­சி­யல் இலா­பத்­துக்­காக அர­சி­யல் கட்­சி­கள் இந்­தக் கலா­
சா­ரத்தைப் பயன்­ப­டுத்­து­கின்­றன என்று எடுத்­துக்­கொள்­வதா என இரண்டு கேள்­வி­கள் எம்­மி­டையே எழு­கின்­றன.

மேற்கு நாடு­க­ளில் உள்ள அர­சி­யல் கலா­சா­ரம் ஒரு சரி­யான இலக்­கைக் கொண்­ட­தா­கவே இருக்­கும்.

குறித்த அந்த நாட்டை உலக அள­வில் அபி­வி­ருத்தி அடைந்த நாடாக மாற்­று­வ­தற்­கான திட்­டத்தை உள்­ள­டக்­கி­ய­தாக அது காணப்­ப­டும்.அப்­ப­டி­யான அர­சி­யல் கலா­சா­ரத்­துக்­குள் அனைத்து அர­சி­யல்­வா­தி­க­ளும் கட்சி பேத­மின்றி உள்­வாங்­கப்­ப­டு­வர்.

அடுத்­த­வர் காலை வாரு­தல் மற்­றும் சூழ்ச்சி செய்­தல் என்­பவை அங்கு இருக்க மாட்­டா. ஊழல்,மோச­டி­கள் என்­பது அரி­தா­கவே இடம்­பெ­றும்.அப்­படி இடம்­பெற்­றால் அவர்­கள் கௌர­வ­மா­கத் தாமா­கவே பத­வி­ வி­ல­கி­வி­டு­வர். உண்­மை­யை­யும் ஒத்­துக்­கொள்­வர்.

ஆனால்,இலங்­கை­யில் அப் ப­டி­யான ஒரு கலா­சா­ரம் உண்டா?நாட்டை முன்­னேற்ற வேண்­டும் என்ற இலக்கு எவ­ரி­ட­மா­வது உண்டா?சம்­பந்­தப்­பட்ட அமைச்­சின் ஊடாக-, அந்த அமைச்­சின் கீழ் உள்ள நிறு­வ­னங்­க­ளின் ஊடாக எப்­ப­டிப் பணத்தை கவ­ர­லாம். எப்­ப­டிச் சம்­பா­திக்­க­லாம். எப்­படி தர­குப் பணம் ஈட்­ட­லாம் என்­று­தான் எமது அர­சி­யல்­வா­தி­கள் யோசிக்­கின்­ற­னர்.

இலங்­கை­யின் அர­சி­யல் கலா­சா­ரத்­தைப் பொறுத்­த­வரை அர­சி­ய­லுக்கு வரு­வதே பணம் சம்­பா­திப்­ப­தற்­குத்­தான்.இது எழு­தப்­ப­டாத விதி­யா­கும்.பயன்­ப­டுத்­து­வ­தற்­குச் சொந்­த­மாக ஒரு துவிச்­சக்­கர வண்­டி­கூட இல்­லா­மல் இருக்­கும் ஒரு­வர், அர­சி­ய­லுக்கு வந்து ஓரிரு வரு­டங்­க­ளில் 5 கோடி ரூபா பெறு­ம­தி­யான வாக­னத்­துக்கு சொந்­தக்­கா­ர­ரா­வ­தை­யும் பல கோடி ரூபா பெறு­ம­தி­யான வீடு­க­ளைக் கட்­டு­வ­தை­யும், சொத்­துக்­களை வாங்­கிக் குவிப்­ப­ தை­யும் நாம் காண்­கி­றோம்.

இப்­ப­டி­யான ஓர் அர­சி­யல் கலா­சா­ரத்­தின் கீழ்த்­தான் எமது நாட்டு அமைச்­சர்­க­ளின் பதவி விலக்­கல்­க­ளும், வில­கல் க­ளும் இடம்­பெ­று­கின்­றன.

இவ்­வாறு இடம்­பெ­று­கின்ற வில­கல்­க­ளும் விலக்­கல் களும் அவ­ர­வர் மீது சுமத்­தப் ப­டும் குற்­றச்­சாட்­டுக்­களை மூடி மறைப்­ப­தற்­கான தந்­தி­ரோ­பா­யமே அன்றி வேறில்லை என்­ப­து­தான் உண்மை.

இந்­தச் செயற்­பா­டு­க­ளுக்கு நல்­ல­தோர் அர­சி­யல் கலா­சா­ரம் என்­றும், அதி உச்ச ஜன­நா­ய­கம் என்­றும் பெய­ரி­டு­வது மக்­க­ளின் பார்­வையை மறைப்­ப­தற்­கான திட்­ட­மிட்ட செய­லா­கும்.

இந்த ஆட்­சி­யில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கும் பதவி வில­கல்­க­ளும் விலக்­கல்­களும், பிர­தா­ன­மான இரண்டு நோக்­கங்­க­ளைக் கொண்­ட­வை­யா­கும். ஒன்று ஊழல், மோச­டிக் குற்­றச் சாட்­டுக்­களை மூடி மறைத்­தல். மற்­றை­யது அர­சி­யல் பழி­வாங்­கல்.

அருந்­திக்க பெர்­ணாண்­டோ­வின் பத­வி­வி­ல­கல் அர­சி­யல் பழி­வாங்­கலே

இப்­போது இறு­தி­யாக இடம்­பெற்­றி­ருக்­கும் பதவி விலக்­க­லா­னது, முற்று முழு­தான அர­சி­யல் பழி­வாங்­க­லா­கும்.

இந்­தப் பழி­வாங்­கல்­க­ளுக்கு இலக்­காகி இருக்­கும் அருந்­திக்க பெர்­னாண்டோ, மைத்­திரி தரப்­பில் இருந்­து­கொண்டு ஆட்­சிக்கு எதி­ரா­க­வும் மகிந்­த­வுக்கு ஆத­ர­வா­க­வும் செயற்­பட்­ட­மையே அவ­ருக்கு இந்த நிலை ஏற்­ப­டக் கார­ண­மாகியது.

இன்றோ அல்­லது நாளையோ அர­சில் இருந்து வில­கு­வது என்ற நிலைப்­பாட் டில் அருந்­திக்க இருந்­த­தால், அவ­ரது பதவி விலக்­க­லைப் பரி­தா­ப­க­ர­மான ஒன்­றா­கப் பார்க்க முடி­யாது.

தாமாக வில­கு­வ­தற்கு முன் விலக்­கப்­பட்­டார்.அவ்­வ­ள­வு­தான்.இதற்­கான கார­ணம் என்­ன­வென்­பதை இப்­போது பார்ப்­போம். சுதந்­தி­ரக் கட்­சி­யின் செய­லா­ள­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன, 2015 ஆம் ஆண்டின் அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்­தவை எதிர்த்­துக் கள­மி­றங்­கி­ய­தும், அந்­தக் கட்சி மகிந்த தரப்பு என்­றும் மைத்­திரி தரப்பு என்­றும் இரண்­டா­கப் பிள­வு­ பட்­டது.

மைத்­திரி வெற்­றி­பெற்­ற­தும் சுதந்­தி­ரக் கட்சி மைத்­திரி வச­மா­னது. ஆனால், பிளவு என்­பது விசா­ல­மா ­கிக்­கொண்டே வரு­கின்­றது.

மகிந்த அணி­யில் இருப்­ப­வர்­கள் ஒரே நிலைப்­பாட்­டி­லும், மைத்­திரி அணி­யில் உள்­ள­வர்­கள் மூன்று வெவ்­வேறு நிலைப்­பா­டு­க­ளி­லும் இருப்­பதே மைத்­திரி இப்­போது எதிர்­நோக்கி வரும் பிரச்­சி­னை­க­ளுக்கு அடிப்­ப­டைக் கார­ணம்.

அதா­வது மகிந்த அணி­யி­னர் மகிந்­த­வின் விசு­வா­சி­க­ளா­க­வும், மைத்­திரி அணி­யி­னர் மகிந்த,மைத்­திரி மற்­றும் மைத்­திரி விசுவாசிகளாக இருப்­ப­தை­யும் காண­லாம்.மைத்­திரி அணி­யில் இவ்­வாறு மூன்று வகை­யான விசு­வா­சி­கள் இருப்­பதே மைத்­தி­ரி­யின் தலை­யி­டிக்­குக் கார­ணம்.

மைத்­தி­ரி­யு­டன் சேர்ந்து வெளி­யே­றி­யோரே மைத்­தி­ரி­யின் உண்­மை­யான விசு­வா­சி­கள்

2015 அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்­தவை எதிர்த்­துப் பொது வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யி­டு­வ­தற்கு மைத்­திரி சுதந்­தி­ரக் கட்­சி­யில் இருந்து வெளி­யே­றி­ய­போது, அவ­ரு­டன் இணைந்து இன்­னும் பலர் வெளி­யே­றி­னர்.

அவர்­கள்­தான் மைத்­தி­ரி­யின் உண்­மை­யான விசு­வா­சி­கள். மகிந்­த­வின் தலை­மைத்­து­வத்தை கடு­மை­யாக எதிர்ப்­ப­வர்­கள்.

மைத்­திரி அரச தலை­வர் தேர்­த­லில் வெற்­றி­பெற்று சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைத்­து­வப் பத­வி­யைக் கைப்­பற்­றி­ய­தும் மகிந்த அணி­யில் இருந்து பலர் மைத்­திரி அணி­யில் இணைந்­து­கொண்­ட­னர்.அவர்­க­ளுள் இரண்டு பிரி­வி­னர் உள்­ள­னர்.

அவர்­க­ளுள் ஒரு சாரார் சுதந்­தி­ரக் கட்­சிக்கு மகிந்­த­வும் வேண்­டும் மைத்­தி­ரி­யும் வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டில் உள்­ள­னர்.இரு­வ­ரும் இணைந்தே சுதந்­தி­ரக் கட்­சியை வழி­ந­டத்த வேண்­டும் என்­கின்­ற­னர் அவர்­கள்.இவர்­கள்­தான் மைத்­திரி -மகிந்த விசு­வா­சி­கள்.

அடுத்த பிரி­வி­னர் மகிந்­த­வை தலைமை அமைச்சராக்க வேண்­டும் என்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் இணைந்து ஆட்சி அமைக்­கக்­கூ­டாது என்­றும், மைத்­தி­ரிக்கு அழுத்­தம் கொடுத்து வரு­ப­வர்­கள்.இவர்­கள்­தான் மைத்­திரி அணிக்­குள் இருக்­கும் மகிந்­த­வின் விசு­வா­சி­ கள்.

இந்­தப் பிரி­வின் முக்­கி­யஸ்­த­ராக இருப்­ப­வர்­தான் இப்­போது பதவி விலக்­கப்­பட்­டி­ ருக்­கும் அருந்­திக்க பெர்­னாண்டோ.இந்­தப் பிரி­வி­னர்­தான் மைத்­தி­ரிக்கு மிக­வும் ஆபத்­தா­ன­வர்­கள்.

மகிந்­தவை தலைமை  அமைச்­ச­ராக்­கும் திட்­டத்­து­டன் செயற்­பட்­ட­வர் அருந்­திக்க பெர்­ணாண்டோ

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் இணைந்து சுதந்­தி­ரக் கட்சி ஆட்சி நடத்­து­வதை எதிர்த்து- மகிந்­த­வைத் தலைமை அமைச்சராக்க வேண்­டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து அருந்­திக்க பெர்­னாண்டோ மற்­றும் மற்­றொரு பிரதி அமைச்­சர் நிமல் லான்ஸா உள்­ளிட்ட குழு­வி­னர் அர­சில் இருந்து வில­கு­வ­ தற்­குத் தீர்­மா­னித்­த­னர்.

இவ்­வாறு 18பேர் விலகி எதிர்­கட்சி வரி­சை­யில் அம­ரப்­போ­வ­தா­கக் கூறி­னர்.இது தொடர்­பில் அவர்­கள் அரச தலை­வ­ரைச் சந்­தித்­துப் பேசி­ய­போது டிசம்­பர் வரை பொறுத்­தி­ருக்­கு­மாறு அரச தலை­வர் மைத்­திரி கேட்­டுக்­கொண்­ட­தற்கு இணங்க அவர்­கள் அவ்­வாறே செய்­வ­தற்­குத் தீர்­மா­ னித்­த­னர்.

இருந்­தும்,அருந்­திக்க பெர்­னாண்டோ சுதந்­தி­ரக் கட்­சி­யில் இருந்து மேலும் அதி­க­மா­ன­வர்­க­ளைத் திரட்­டிக் கொண்டு போய் மகிந்த அணி­யில் அம­ரு­வ­தற்­கான சூழ்ச்­சி­யில் தீவி­ர­மாக இறங்­கி­னார். அது தொடர்­பில் மகிந்­தவை ஜப்­பா­னில் சந்­தித்துப் பேசி­னார்.

இத­னைத் தொடர்ந்தே இவரை அமைச்­சுப் பத­வி­யில் இருந்து நீக்­கி­னார் மைத்­திரி. தாமாக வில­க­வி­ருந்­த­ வர் அதற்கு முன்­னர் விலக்­கப்­பட்­டார்.இவரை விலக்­கி­ய­தன் மூலம் கட்­சிக்­குள் மைத்­தி­ரிக்கு இருந்த தலை­யி­டி-­நீங்­கி­விட்­டது என்று சொல்ல முடி­யாது.

மகிந்­த­வின் விசு­வா­சி­க­ளை­யும் மைத்­திரி- மகிந்த விசு­வா­சி­க­ளை­யும் அரு­கில் வைத்­துக்­கொண்டு மைத் தி­ரி­யால் பய­ணிக்க முடி­யாது.உண்­மை­யில் மைத்­திரி அணியை விட­வும் மகிந்த அணி­யில்­தான் விசு­வா­சி­கள் அதி­கம்.

இந்த நிலை­யில் தனது தரப்­பிலே மகிந்­த­வின் விசு­வா­சி­களை மைத்திரி வைத்­துக் கொண்­டி­ருப்­பது எந்த வகை­யில் மைத் தி­ரிக்கு நன்மை தரப்­போ­கின்­றது?
எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்கு முன்னர், மைத் திரி இந்த ஆபத்­தில் இருந்து விடு­ப­ட­ வில்­லை­யென்­றால், அந்­தத் தேர்­த­லில் மைத்­திரி தரப்பு தோல்­வி­யையே எதிர்­கொள்ள வேண்டி நேரி­டும்.

http://newuthayan.com/story/29415.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.