Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு - தெற்கு இனவாதிகளிடையே இரகசிய தொடர்பை அம்பலப்படுத்திய மனோ

Featured Replies

வடக்கு - தெற்கு இனவாதிகளிடையே இரகசிய தொடர்பை அம்பலப்படுத்திய மனோ

 

வடக்கு - தெற்கு இனவாதிகளிடையே இரகசிய தொடர்பை அம்பலப்படுத்திய மனோ

நாட்டில் இனவாதத்திற்கு உரமூட்டுவதற்காக வடக்கிலுள்ள இனவாதிகளுக்கும், தெற்கிலுள்ள இனவாதிகளுக்கும் இடையே உத்தியோகபூர்வற்ற உடன்படிக்கைகள் காணப்படுவதாக தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சகவாழ்வு பற்றி தெரியாத இனவாதிகளே ஐ.நா பொதுச் சபை அமர்வில் ஸ்ரீலங்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் உரை நிகழ்த்தவுள்ள நிலையில் அங்குகூடி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையர் எம் அடையாளம், பல இனங்கள் எம் சக்தி என்ற தொனிப்பொருளில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்க விழிப்புணர்வு நடவடிக்கை பதுளை மாவட்டத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக பதுளை மாவட்டத்திற்கு நேற்றைய தினம் அமைச்சர் மனோ கணேசன் விஜயம் செய்ததோடு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களையும் பேரூந்து உட்பட பொது இடங்களிலும் ஒட்டிவைத்தார்.

இந்த விஜயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரும் கலந்துகொண்டார்.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உரையாற்றவுள்ள நிலையில், அவருக்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பிலும் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

“இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கிற்கு சென்று ஐ.நா பொதுச் சபை அமர்வில் உரையாற்றவுள்ளார். அவர் உரையாற்றும்போது அங்குள்ள இனவாதக் குழுக்கள் அவருக்கெதிராக போராட்டங்களை செய்யவுள்ளனர். பரவாயில்லை. பிரச்சினையில்லை. இன்று இந்நாட்டில் சகவாழ்வை முன்னிலைப்படுத்தி பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். அதனைப் புரிந்துகொள்ள முடியாதவர்களே இன்னும் இனவாதத்தை தலைதூக்கச் செய்து மேற்கொள்கின்றனர். சர்வதேசத்தில் மட்டுமல்ல, இனவாதம் எமது உள்நாட்டிலும் இருக்கின்றது. வடக்கிலும், தெற்கிலும் இருக்கின்றனர். வடக்கிலுள்ள இனவாதிகள் வாய்திறக்கும்போது தெற்கிலுள்ள இனவாதிகளுக்கு புள்ளி கிடைக்கின்றது. அதேபோல தெற்கிலுள்ள இனவாதிகள் வாய்திறந்தால் வடக்கிலுள்ள இனவாதிகளுக்கு புள்ளிகிடைக்கிறது. வடக்கு, தெற்கு இனவாதிகளிடையே உத்தியோகபூர்வற்ற ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் அனைவரும் உறவினர்களாவர். அதனால் இப்படியான உறவினர்கள் சிறிதளவே இருக்கின்றனர். இவர்களை ஓரங்கட்டி இலங்கையர்கள் என்பதன் கீழ் பயணிப்போம். இவற்றை கணக்கில் எடுக்கவேண்டாம். தேர்தல்கள் காலத்தில் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றைய நேரங்களில் இலங்கையர்களாக நினைத்துக்கொள்ளுங்கள். இதனை புரிந்துகொண்டால் ஜெனீவா, ஐ.நா பொதுச் சபை செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. அதேபோல அல் ஹுசைன், டிரம்ப், நரேந்திர மோடி ஆகியோருடன் பேசுவதற்கும் அவசியம் ஏற்படாது” என்றார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/mano-ganesan-expose-secret-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.