Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சர்வஜன வாக்கெடுப்புக்கு பங்கத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை"

Featured Replies

"சர்வஜன வாக்கெடுப்புக்கு பங்கத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை"

 

 

மாகாண சபைத் தேர்­தல்கள் உரிய நேரத்தில் நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்,ஆனாலும் புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பி­லான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும்­வரை ஏனைய தேர்­தல்­களை நடத்தி அதற்கு பங்­கத்தை ஏற்­ப­டுத்த நாம் விரும்­ப­வில்­லை­யென எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

sampanthan-mp.jpg

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பினர் குழு நேற்று  காலையில் கூடி­யது. இதன் போது 20ஆம் அர­சியல் சாசன திருத்தம் மற்றும் அதனால் ஏற்­படும் விளை­வுகள் என்­பன தொடர்பில் ஆரா­யப்­பட்­டது.

இதன் போது உரையாற்றிய சமபந்தன்,

"அர­சாங்கம் எந்த விதத்தில் இவற்றை  கையா­ளப்­போ­கின்­றது என்­பது எமக்கு தெரி­ய­வில்லை, எனினும்  இன்று மாகா­ண­சபை தொடர்­பி­லான சட்­ட­மூலம் விவா­தத்­திற்கு எடுக்­கப்­பட ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது. 

சபா­நா­யகர் தலை­மையில் கட்சி தலை­வர்கள் கூடி இந்த சட்­ட­மூ­லத்தை விவா­தத்­திற்கு கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் ஆரா­யப்­பட்­டுள்­ளது, இதில் மாகா­ண­சபை முறைமை தொடர்பில் சில திருத்­தங்கள் செய்ய அர­சாங்கம் முயற்­சிக்­கலாம், இதை பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்டும். சில திருத்­தங்கள் செய்­ய­வுள்­ளமை உறு­தி­யாக தெரி­கின்­றது. 

நாம் அறிந்த வகையில் இந்த திருத்­தங்கள் மாகா­ண­சபை மற்றும் பாரா­ளு­மன்ற, உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கும் ஏற்ற வகையில் கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை கொண்­டு­வர எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அவ்­வாறு ஒரு சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­ப­டு­மாக இருந்தால் சில சமயம் தேர்­தல்­களை பிற்­போட வேண்­டிய நிலைமை உரு­வாகும். புதிய முறைமை கொண்­டு­வ­ரப்­ப­டு­மாக இருந்தால் அதனை சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த கால அவ­காசம் தேவை. 

குறிப்­பாக இப்­போது மூன்று மாகா­ண­சபை தேர்­தல்­களை நடத்த வேண்டும். குறிப்­பாக அதன் கால எல்லை முடியும்  நிலையில் அர­சியல் சாச­னத்தின் அடிப்­ப­டையில் கலைக்க வேண்டும். ஆகவே இது குறித்து ஒரு சிக்கல் நிலைமை உள்­ளது.

அதேபோல்  21ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில்  வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட உள்­ளது. அர­சியல் அமைப்பு சபை கூடி  தனது இடைக்­கால அறிக்­கையை பிர­தமர்  சமர்ப்­பிக்க உள்ளார். அந்த அறிக்­கையும் ஆறு  உப குழுக்­களின் அறிக்­கையும் அர­சியல் அமைப்பு சபையில் விவா­தத்­திற்கு எடுக்­க­ப்படும். அதன் பின்னர் அர­சியல் சாசனம் தயா­ரிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்டால் அமைச்­ச­ர­வைக்கு  சமர்ப்­பிக்­கப்­பட்டு  அங்­கீ­கா­ரத்­துடன்ள  ­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையில் நிறை­வேற்­றப்­ப­டு­வது மட்டும் அல்­லாது சர்­வ­சன வாக்­கெ­டுப்பின் மூல­மா­கவும் அங்­கீ­காரம் பெறப்­பட வேண்டும். 

அனை­வரும் ஒத்­து­ழைத்து  ஒரு புதிய அர­சியல் சாச­னத்தை உரு­வாக்க வேண்டும் என்­பது பிர­த­ம­ரது நிலைப்­பா­டாக உள்­ளது. இதில் சகல கட்­சி­களும் தமது நிலைப்­பாட்டை சமர்ப்­பித்­துள்­ளனர். நாங்­களும் எமது நிலைப்­பாட்டை சமர்ப்­பித்­துள்ளோம். 

நாம் அம்­பாறை மாவட்­டத்தை 24 ஆம் திகதி கூட்டம் நடத்­த­வுள்ளோம். இதன்­போது கிழக்கு மாகா­ண­ச­பையில் எமது நிலைப்­பாடு தொடர்பில் தெரிவிக்கப்படும். மாகா­ண­சபை தேர்தல் உரிய திக­தியில் இடம்­பெற வேண்டும். அது நடத்­தப்­ப­டாது விட்டால் மக்­களின் ஜனநா­ய­கத்தை பாதிக்கும் வகையில் அமையும். அதே சமயம் அனைத்து தேர்­த­லையும் ஒரே நாளில் நடத்­து­வதில் பல நன்­மைகள் உள்­ளன. தேர்தல் முறை­யாக இடம்­பெற வேண்டும். அர­சாங்கம் இந்த விட­யத்தில் துஷ்­பி­ர­யோகம் செய்­யாது நடந்­து­கொள்ள வேண்டும். கடந்த காலங்­களில் தமது ஆதிக்­கத்தை தக்க வைக்க அர­சாங்கம் மோச­மாக நடந்­து­கொண்­டமை தெரிந்­ததே. 

ஆகவே ஒரே தினத்தில் தேர்தல் இடம்­பெ­று­மாக இருந்தால் அர­சாங்­கத்தின் செல்­வாக்கை தடுக்க முடியும். அதேபோல் ஒரு அர­சியல் சாசனம் மூன்றில் இரண்­டுடன் நிறை­வேற்­றப்­பட்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­பட்டு மக்­களின் அங்­கீ­கா­ரத்தை பெறும் சூழல் உரு­வாக்க முடி­யு­மாக இருந்தால் அந்த சந்­தர்ப்­பத்தில் வேறு தேர்­தல்­களை நடத்தி அதன் முடி­வுகள் சர்­வ­சன வாக்­கெ­டுப்பில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதை நாம் விரும்­ப­வில்லை. 

வட­மத்­திய, சப்­ர­க­முவ மற்றும் கிழக்கு மாகா­ண­சபை தேர்தல் நடத்­தப்­படும் நிலையில் முடி­வுகள் எவ்­வாறு வரும் என்­பதை எம்மால் கூற முடி­யாது. அந்த முடி­வுகள் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் ஒரு பாத­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என்­பதே எமது கருத்­தாகும். அதன் அடிப்­ப­டையில் நாங்கள் சிந்­திக்­காது  இருக்க முடி­யாது. ஆகவே குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த கூடாது என்பதை நாம் வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்றோம். ஆனால் விரைவில் தேர்தல் இடம்­பெற வேண்டும். அது எமது நிலைப்­பாடு. தேர்­தலை சந்­திக்க நாம் தயா­ராக உள்ளோம். அதேபோல் எமது முக்­கிய குறிக்­கோ­ளா­னது அர­சியல் சாச­னத்தை கொண்­டு­வர வேண்டும் என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்டும். அதனை குழப்பும் வகையில் எந்த நகர்­வு­களும் அமை­யக்­கூ­டாது. 

20 ஆம் திருத்­தத்தை எதிர்க்க இரண்டு கார­ணிகள் இருந்­தன. ஒன்று மாகா­ண­சபை கலைக்கும் திகதி பாரா­ளு­மன்றம் தீர்­மா­னிக்கும், மாகா­ண­சபை கலைக்­கப்­ப­டு­மாக இருந்தால் அந்த அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்றம் கைப்­பற்றும் என இருந்­தது. இவை இரண்­டையும் நாம் விரும்­ப­வில்லை. அதனால் தான் எதிர்த்­தோம். அவ்­வா­றான நிலையில் நாம் அர­சாங்­கத்­துடன் பேசினோம் அப்­போது இவை உள்­ள­டக்­கப்­ப­டாது என அர­சாங்கம் எமக்கு வாக்­கு­றுதி வழங்­கி­யது. அதற்­க­மைய நாம் ஆத­ரித்தோம். எம்மை பொறுத்த வரையில் அர­சியல் சாசனம் தொடர்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடை­பெறும் வரையில் எவ்­வி­த­மான தேர்­தலும் இடம்­பெறக் கூடாது. அவ்­வாறு இடம்­பெற்றால் தேர்தல் முடி­வு­களின் மூல­மாக இதற்கு பாத­க­மாக அமையும் வாய்ப்­புகள் உள்­ளன. இதனால் தான் நாம் ஆத­ரித்தோம். வட­மா­காண சபையும் இதனை கார­ண­மாக வைத்தே வட­மா­கா­ண­சபை 20 ஆம் திருத்­தத்தை நிரா­க­ரித்­தது. ஆனால் மாற்று திருத்தம் வந்தால் பரி­சீ­லிப்­ப­தாக கூறி­னார்கள். 

புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்றால், அதன் மூல­மாக எமக்­கான நோக்­கங்­களை நாம் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்றால் கூடு­த­லான அர­சியல் சக்­தி­களின் ஆத­ரவு எமக்கு அவ­சி­ய­மா­கின்­றது. அகவே அவர்­களை குழப்­பாது எமது காரி­யங்­களை நாம் சாதித்­துக்­கொள்ள வேண்டும். நிதா­ன­மா­கவும், அமை­தி­யாவும் நாம் செயற்­பட வேண்டும். ஆகவே சில சந்­தர்ப்­பங்­களின் நாம் மௌனம் காக்க வேண்­டிய தேவை உள்­ளது. எமது நட­வ­டிக்­கை­களில் இந்­தி­யாவின் அக்­கறை இல்­லை­யென கூற முடி­யாது. ஆனால் அதை தக்க வைக்க எமது தரப்பும் செயற்­பட வேண்டும். 13 ஆம் திருத்தம் ஒரு ஆரம்பம், இது தீர்வு இல்லை, அதை தீர்­வாக ஏற்­று­கொள்ளப் போவதும் இல்லை. ஆனால் அதி­கார பகிர்வு என்­பதை 13 ஆம் திருத்தும் மூலமே முதல் முதலில் அர­சியல் சாச­னத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டதை மறந்­து­வி­டக்­கூ­டாது. ஆனால் அதன் பின்னர் அர­சாங்­கத்தின் தீர்­மா­னங்கள் 13 ஆம் திருத்­த­திற்கு அப்பால் செல்­கின்­றது. ஆகவே நாம் 13 ஆம் திருத்­தத்தை மீண்டும் ஆத­ரிக்க முடி­யாது. புதிய அர­சியல் அமைப்பின் இறுதி எவ்­வாறு என்­பதை நாம் கூற முடி­யாது. இடைக்­கால அறிக்­கையில் அதி­கார பகிர்வு தோற்பில் சில கோட்­பா­டுகள் உண்டு. அதன் அடிப்­ப­டையில் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­படும் என்றால் அதி 13 ஆம் திருத்­த­த்திற்கு அதி­க­மான அதி­கார பகிர்வை கொண்­டு­வரும் என நம்­பு­கின்றோம். 

எங்­களைப் பொறுத்­த­வ­ரையில் நாம் எந்தத் தீர்­வையும் ஏற்­கப்­போ­வ­தில்லை. எமது மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக அமை­யாத எ­தையும் தீர்­வாக ஏற்­று­கொள்ள நாம் தயா­ராக இல்லை. இது உறு­தி­யா­னது. அர­சியல் அமைப்பு குறித்து இறுதியில் மக்களிடம் ஆலோசித்து தீர்மானத்தை தெரிவிப்போம். ஆனால் இப்போது ஒரு வாய்ப்பு உள்ளது. அதை நிராகரிக்கக் கூடாது. இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு ஏற்ற வகையில் வாய்ப்புகளை உருவாக்க எம்மாலான முயற்சிகளை முழுமையாக நாம் எடுத்து வருகின்றோம். ஜனாதிபதி, பிரதமர் தமது உறுப்பினர்களை முறையாக வழிநடத்தி தீர்வை உருவாக்க முயற்சித்தால் ஒரு நியாயமான தீர்வு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. அரசியல் அமைப்பு சொல் பிரயோகத்தில் தங்கியில்லை, உள்ளடக்கத்தில் தான் இவை  தனியுள்ளது. நாம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளோம். தீர்வை தரவில்லை என்றால் அதற்காக எமது மக்களை நாம்விற்க முடியாது. இது அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும்"என தெரிவித்தார்

http://www.virakesari.lk/article/24666

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.