Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குண்டு வீசித் தாக்குதல்படகு மூழ்கடிப்பு!

Featured Replies

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு படகு மூழ்கடிக்கப்பட்டது. தமிழக மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கலியபெருமாள் என்ற நாகை மாவட்ட மீனவர் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் போதாது என்று இலங்கை மீனவர்களும் இப்போது தமிழக மீனவர்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 100 படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு இலங்கை மீனவர்கள் வந்தனர்.

நாட்டு வெடிகுண்டுகளை தமிழக மீனவர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு மீனவர்கள் இருந்த ஒரு படகில் குண்டு வந்து விழுந்து வெடித்தது.

நான்கு மீனவர்களும் சுதாரித்துக் கொண்டு கடலில் குதித்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு தங்களது படகுகளில் ஏற்றிக் கொண்டு தப்பித்தனர். குண்டு வீச்சுக்கு ஆளான படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது.

இலங்கை மீனவர்களின் இந்தத் தாக்குதலில் தமிழக மீனவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/03/05/fisherman.html

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சொல்லும் இலங்கை மீனவர்கள் யார்? இராணுவமா? அல்லது வேணுமென்றே இன்னொரு சதியா?

கருணாநிதியின் கூற்றுப்படி இனி இந்திய மீனவர்களும் கடலிலே தங்கள் கைவரிசையைக் காட்டுவார்கள். விரைவில் பாரிய கடல் சமர் ஒன்றை எதிர்பார்க்கலாம். இந்திய கடற்படை இதற்கு மத்தியஸ்தம் வகிக்கும்.

  • தொடங்கியவர்

கருணாநிதியின் கூற்றுப்படி இனி இந்திய மீனவர்களும் கடலிலே தங்கள் கைவரிசையைக் காட்டுவார்கள். விரைவில் பாரிய கடல் சமர் ஒன்றை எதிர்பார்க்கலாம். இந்திய கடற்படை இதற்கு மத்தியஸ்தம் வகிக்கும்.

இப்படி கிண்டல் செய்வது சரியல்ல அவர்கள் சாதாரணம் தமிழ் மக்கள் அரசியல் வாதிகல் அல்ல எம்மை போல உனர்வு கொண்ட எம் சக தமிழ் சகோதரர்கள்.எம்மால் எதுவும் முடியும் போது தாய்த்தமிழகத்தவரால் முடியாதா அவர்களின் கஸ்டங்கள் எங்களின் கஸ்டங்களை போலல்ல நாம் வலியை அனுபவித்து அனுபவித்து பழ்க்கப்பட்டவர்கள் அவர்கள் அப்படியல்ல அவர்களை தயவு செய்து கிண்டலடித்து கொச்சை படுத்தாதீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி கிண்டல் செய்வது சரியல்ல அவர்கள் சாதாரணம் தமிழ் மக்கள் அரசியல் வாதிகல் அல்ல எம்மை போல உனர்வு கொண்ட எம் சக தமிழ் சகோதரர்கள்.எம்மால் எதுவும் முடியும் போது தாய்த்தமிழகத்தவரால் முடியாதா அவர்களின் கஸ்டங்கள் எங்களின் கஸ்டங்களை போலல்ல நாம் வலியை அனுபவித்து அனுபவித்து பழ்க்கப்பட்டவர்கள் அவர்கள் அப்படியல்ல அவர்களை தயவு செய்து கிண்டலடித்து கொச்சை படுத்தாதீர்கள்

உண்மைதான். மீனவத்தொழில் என்பது உயிரைப்பணயம் வைப்பது போன்றது. கடலுக்குப்போய் மீண்டும் திரும்பி வரும் வரை உறவுகளுக்குப் போராட்டம் தான்.

பாவம் அப்பாவிமீனவர்கள் மீது ஏன் இவர்கள் தங்களின் கைவரிசையைக்காட்டுகின்றார்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.