Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கா சரேயில் என்ன கூறினார் தெரியுமா ? ( காணொளி இணைப்பு )

Featured Replies

சங்கா சரேயில் என்ன கூறினார் தெரியுமா ? ( காணொளி இணைப்பு )

 

 

மிகச் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். பல வீரர்கள் பல்வேறு கசப்புணர்வுகளுடன்தான் கிரிக்கெட்டை விட்டு விலகுவார்கள். ஆனால், நான் சில கசப்புணர்வுகளுடன் விலகுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், எனது ஆட்டமும் அதன் மூலம் நான் சாதித்தவையும் எனக்கு மிகத் திருப்தி தருவனவாக இருக்கின்றன என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தெரிவித்தார்.

kumar-sangakara.jpg

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார இங்கிலாந்து பிராந்திய கழகமான சரே பிராந்திய கழகத்துடனான ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளார். சரே பிராந்திய அணிக்காக சங்கக்காரா கடந்த மூன்று வருடங்களாக விளையாடிய நிலையில், முதற்தரப் போட்டிகளில் இருந்து குமார் சங்ககார முழுமையாக ஓய்வு பெறுகிறார்.

 

இந்நிலையிலேயே குமார் சங்கக்கார ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சங்கா மேலும் தெரிவிக்கையில்,

“இதையிட்டு நான் நிச்சயம் வருந்துகிறேன், சந்தேகமேயில்லாமல்! ஆனால் எனது முடிவு நல்ல முடிவு என்றே நம்புகிறேன்! மிகச் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். பல வீரர்கள் பல்வேறு கசப்புணர்வுகளுடன்தான் கிரிக்கெட்டை விட்டு விலகுவார்கள். ஆனால், நான் மிகச் சில கசப்புணர்வுகளுடன் விலகுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், எனது ஆட்டமும் அதன் மூலம் நான் சாதித்தவையும் எனக்கு மிகத் திருப்தி தருவனவாக இருக்கின்றன.

 

“சில வேளைகளில், ‘இன்னும் சிலகாலம் விளையாடலாமோ’ என்று சில வீரர்கள் எண்ணுவார்கள். ஆனால், அவர்களது எண்ணத்தைச் செயற்படுத்திய பிறகுதான், ‘முன்னதாகவே விலகியிருக்கலாம்’ என்று எண்ணத் தோன்றும். அவ்வாறான உணர்வுக்கு இடம் கொடுக்க நான் விரும்பவில்லை.”

” சரே அணியின் தலைவர், மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோருக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். சரே அணி கடந்த மூன்று வருடத்தில் எனக்கு உதவியாக இருந்துள்ளது. எனது சொந்த நாட்டில் நான் எப்படி இருந்தேனோ அதே போன்ற நிலையினை எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இங்கு உருவாக்கி தந்திருந்தார்கள் “. 

 

” நான் அதிக முதற்தரப்போட்டிகளில் விளையாடியதில்லை. சரே அணிக்காக விளையாடியது சிறந்த அனுபவமாக எனக்கு அமைந்தது.”  

“ இளம் வீரர்கள், சிரேஷ்ட வீரர்கள் கலந்து விளையாடுவது நல்ல அனுபவமாகவும், இங்கிலாந்தில் வீரர்கள், ரசிகர்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்குகிறார்கள் என்பதனையும் இங்கே வந்து அறிந்துகொண்டேன்.”

 

 

“ கிரிக்கெட்டின் தொடர் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. இங்கே நான் பெற்ற சதங்களை விட, விளையாடிய அனுபவம் சிறந்தது” என குமார் சங்கக்கார மேலும் தெரிவித்தார்.

 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக 2015ஆம் ஆண்டு அறிவித்த சங்கக்கார, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். 

தற்போது முதற்தரப் போட்டியில் இருந்து விலகியிருக்கும் சங்கா, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வதேச இ-20 போட்டிகளில் விளையாடுவார் என்பது அவரது ரசிகர்களுக்கு ஆறுதலான செய்தி!

சரே மற்றும் சமர்செட் அணிகளுக்கிடையில் கடந்த 22ஆம் திகதி நிறைவடைந்த போட்டியுடன் குமார் சங்கக்கார இங்கிலாந்தில் இருந்து விடைபெறுகின்றார். 

குமார் சங்ககாரா இறுதியாக விளையாடிய போட்டியிலும் சதமடித்து நிறைவு செய்துள்ளார்.

சமர்செட் அணியுடன் 157 ஓட்டங்களையும், 35 ஓட்டங்களையும் அவர் பெற்றுக்கொண்டார். 2017 ஆண்டு தொடரில் குமார் சங்கக்கார 1,442 ஓட்டங்களை 110 என்ற சராசரியில் பெற்றுள்ளார். இந்த பருவகாலத்தில் மட்டும் 8 சதங்களை அவர் பெற்றுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் 545 ஓட்டங்களை 77 என்ற சராசரியில் பெற்றுள்ளார். 20-20 போட்டிகளில் 120 ஓட்டங்களை 30 என்ற சராசரியில் பெற்றுள்ளார். குமார் சங்ககாராவின் சேவையை பாராட்டி சரே அணி குமார் சங்ககாராவுக்கு வாழ்நாள் கழக அங்கத்துவம் வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25042

  • தொடங்கியவர்

 

Thank you Kumar Sangakkara 1f64c.png?

The legend bows out of first-class cricket after a stellar final summer of cricket!

  • தொடங்கியவர்

தான் எட்டிய சாதனைகள் குறித்த மகிழ்ச்சியுடன் விடைபெறும் சங்கக்கார

Sanga-Firewell-696x392.jpg
 

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, தான் அதிகம் கிரிக்கெட்டை இழக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.  

தனது கடைசி முதல்தரப் போட்டியில் இங்கிலாந்தின் சர்ரே அணிக்காக ஆடிய 39 வயதான சங்கக்கார லங்கர்ஷர் அணிக்கு எதிராக தான் விளையாடிய கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களை பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான நான்கு நாள் போட்டி இன்று முடிவடைகிறது.

 

134 டெஸ்ட் போட்டிகளில் 12,400 ஓட்டங்களை பெற்றிருக்கும் சங்கக்கார டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டம் பெற்றோர் வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

“சிலவேளை நீண்ட காலம் நின்றுபிடித்து இருக்க முடியும் என்றபோதும் தாமதிப்பதை விடவும் விரைவாக விடைபெறுவது சிறந்தது என்றே எப்போதும் நான் கருதுவேன்” என்று சங்கக்கார தனது ஓய்வு குறித்து குறிப்பிட்டார்.

வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி தனது 40ஆவது வயதை எட்டும் இடது கைது துடுப்பாட்ட வீரரான சங்கக்கார, முதல்தர கிரிக்கெட்டில் மொத்த 20,911 ஓட்டங்களை பெற்றிருக்கும் நிலையில் ஓய்வு பெறுகிறார்.

இதில் அவர் இந்த பருவகாலத்தில் கௌண்டி சம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணிக்காக பெற்ற சுமார் 1,500 ஓட்டங்களும் அடங்கும். இதன் ஓட்ட சராசரி 106.50 ஆகப் பதிவாகின்றது.

BBC Sport செய்திச் சேவைக்கு அவர் அளித்த போட்டியில் கூறியதாவது,

“கிரிக்கெட்டை நான் அதிகம் இழப்பேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இது ஒரு நல்ல விடயமாகும். பெரும்பாலான வீரர்கள் கவலை, ஏமாற்றம், வருத்தம் என்று பல விடயங்களுடனேயே எப்போதும் ஓய்பெற்று செல்கின்றனர்.

எல்லோருக்கும் இருப்பதுபோல் ஒருசில ஏமாற்றங்களுடனேயே நான் ஓய்வு பெறுகிறேன். ஆனால் எனது ஆட்ட முறை மற்றும் எட்டிய சாதனைகள் பற்றி நான் முழுமையாக மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்பதுவே எல்லா விளையாட்டினதும் அழகு. யார் ஓய்வு பெறுகிறார், யார் புதிதாக வருகிறார் என்பது பெரிய விடயமல்ல. எம் அனைவரையும் விடவும் விளையாட்டு என்பது சிறப்பானதாகும்” என்று சங்கக்கார கூறினார்.

 

எனினும், T-20 போட்டிகளிலும் சிறந்த பதிவுகளைக் கொண்டுள்ள சங்கக்கார வெளிநாட்டு T-20 போட்டிகளில் 2018 வரை தொடர்ந்து ஆட உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு போதுமான திறமை இருப்பதாக, ஓர் இளைஞராக இருந்தபோது தான் நம்பவில்லை என்றே சங்கக்கார குறிப்பிட்டிருந்தார்.

சங்கக்காரவை விடவும் (28,016) இந்தியாவின் சச்சின் டென்டுல்கர் (34,357) மாத்திரமே அனைத்துவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் பெற்றுள்ளார். அதேபோன்று இலங்கைக்காக அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்றவராகவும் அவர் உள்ளார்.

சங்காவைத் தவிர இலங்கைக்காக மஹேல ஜயவர்தன (11,814) மாத்திரமே 10,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்துள்ளார்.

சங்கக்கார டர்ஹம், வொர்விக்ஷயர் மற்றும் சர்ரே ஆகிய மூன்று இங்கிலாந்து கௌண்டி அணிகளுக்காக விளையாடியபோதும் தனது கடைசி பருவத்திலே முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டில் அவர் விளையாடிய 16 கௌண்டி சம்பியன்ஷிப் இன்னிங்ஸ்களில் எட்டு சதங்களுடன் 1,491 ஓட்டங்களை பெற்றார். இது இந்த பருவத்தில் வீரர் ஒருவரின் அதிக ஓட்டங்களாகவும் இருந்தது.

கடந்த மே மாதம் லோட்ஸ் மைதானத்தில் நடந்த மிடில்செக்ஸ் அணியுடனான போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்ற அவர், தனது அணி குறித்த ஆட்டத்தை சமநிலையில் முடிப்பதற்கு பாரிய அளவில் உதவினார்.

கடந்த ஜுனில் யொக்ஷயர் அணியுடனான ஒருநாள் போட்டியில் சங்கக்கார பெற்ற 121 ஓட்டங்கள் மூலம் அவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 100 ஆவது சதத்தை பெற்று சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.