Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னைக் கவர்ந்த கலைமகள் பாடல்

Featured Replies

இன்று சரஸ்வதி பூசை நிறைவு நாள். கல்வி / ஞானம் / அறிவு இவற்றிற்கு அதிபதியாகவும், கலைத்தெய்வமாகவும் போற்றப்படும் கலைமகளை  நன்றியுடன் போற்றும்  தினமாகும்.  இப்படியான ஒரு தினத்திலே ஒவ்வொரு நவராத்திரி காலத்திலும் என்னை ஆக்கிரமித்த, சரஸ்வதியின் புகழ்  பாடும் ஒரு பாடல் பற்றிய எனது எண்ணங்களை  பகிர வேண்டும் என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு. 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாரதி பாடல் என்னைப் பொறுத்தவரை ஒரு நவராத்திரி கால தீம் பாடல் (Theme song) ஆகிவிட்டது  என்பது விந்தையல்ல! பாரதியாரின் கவிதைகள் பாமரரும் புரிந்து கொள்ளும் எளிமையான ஆனாலும் அர்த்தம் பொதிந்த வரிகளுக்காகப் புகழ் பெற்றவை. அந்த வகையில் ஏறத்தாழ 90 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்தப்பாடல் எந்தஒரு விளக்கவுரைக்கும் அவசியமல்லாமல் இன்றும் அனைவராலும் இலகுவாக புரிந்துகொள்ளும் மொழிநடையில்  உள்ளது.  


சரி, இந்தப்பாடலின் கருப்பொருளை எனக்குப் புரிந்தபடி பின்வருமாறு கூறலாம்: பல்வேறு கலை வடிவங்களாகவும், உயிரினங்களின்  மொழியாகவும், வேதம் முதலானவற்றின் உட்பொருளாகவும் விளங்கும் கலைமகள் இன்பமே உருவாகி நிற்கின்றாள் என்பதாகும். வீணை ஒலி, கவிஞர்  உள்ளம், வேதத்தின் பொருள், முனிவர் வாக்கு, பெண்கள் பாடும் பாடல், மழலை, கிளி இவற்றின் பேச்சு, சிற்பம் என்பன கலைமகளின் உறைவிடம் என்று  பட்டியலிட்ட பாரதியார் ஆனந்தமே வடிவாகினாள் என முடிக்கின்றார். எல்லையற்ற ஆனந்தம் தான் ஆன்மா இறையுடன் ஒன்றிய நிலை என நினைத்து எழுதினாரோ என நாம் அறியோம்!


இது நிற்க, இப்பாடலை பல்வேறு கர்நாடக சங்கீதப் பாடகர்களும், மற்றோரும் பாடியுள்ளமையும், பல்வேறு இசைக்கருவிகள் வாயிலாக இசைக்கப்பட்டுள்ளமையும் மேலும் சிறப்பு. எத்தனை முறை செவிமடுத்தலும் சலிக்காத இப்பாடலை, இவ்வாறாக பல்வேறு குரல்களிலும், இசை வடிவங்களிலும் கேட்பது புதுவித அனுபவம்; இவை ஒவ்வொன்றும் கலைமகளின் தனித்துவமான வெளிப்பாடுகளோ?!  இப்பாடல்கள் சிலவற்றுக்கான  இணைப்பினை கீழே பதிந்துள்ளேன்.


இன்னொரு விடயம்; இப்பாடலை கலை நயத்துடன் நோக்கினால் கலைகளை போற்றும் பாடலாகவும், பக்தியுடன் நோக்கினால் எல்லாம் இறைமயம் என்று சொல்வது போன்றும்   தோன்றினாலும், கலைமகள் பற்றி பாரதியார் எழுதிய காதல் கவிதையாகவும் கொள்ளலாம்! 


நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்களின் குரலில்:
https://www.youtube.com/watch?v=BamHj90DSkE
பம்பாய் ஜெய்ஸ்ரீ அவர்களின் குரலில்:
https://www.youtube.com/watch?v=u84HlNMd_aE
மண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மண்டலின் இசையில்:
https://www.youtube.com/watch?v=SBw5BXzht34

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி மல்லிகை வாசம்....!

இம்மாதிரிப் பாடல்களுக்கெல்லாம் கருத்திடுவது யானையை ஒவ்வோர் இடத்தில் நின்று தடவி கருத்து சொன்ன குருடர் போன்றதாகும்.....!  tw_blush:

  • தொடங்கியவர்
21 hours ago, suvy said:

இம்மாதிரிப் பாடல்களுக்கெல்லாம் கருத்திடுவது யானையை ஒவ்வோர் இடத்தில் நின்று தடவி கருத்து சொன்ன குருடர் போன்றதாகும்.....!  tw_blush:

சரியாகச் சொன்னீர்கள், சுவி அண்ணா! :) இந்தப் பாடல் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். நேரச் சுருக்கத்தில் எழுதியதைப் பகிர்ந்துள்ளேன். பாடல்களை ஆற அமர்ந்து ரசித்த்து ஒரு காலம். முகநூல் உலகில் அந்த வழக்கம் மிக அருகியது கொடுமை.

ஊக்கத்திற்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாட்டைப் பற்றி கு.சா... இசை போன்றோரால் நிறைய சொல்ல முடியும் என்ன இன்னும் அவர்கள் டேபிளுக்கு பைல் போகவில்லை போலிருக்கு.....!  tw_blush:

  • தொடங்கியவர்
18 hours ago, suvy said:
18 hours ago, suvy said:

இந்தப் பாட்டைப் பற்றி கு.சா... இசை போன்றோரால் நிறைய சொல்ல முடியும் என்ன இன்னும் அவர்கள் டேபிளுக்கு பைல் போகவில்லை போலிருக்கு.....!  tw_blush:

அப்படியானால், அவர்களின் பார்வையிலும் இப்பாடல் பற்றிய விளக்கத்தினை எதிர்பார்க்கிறேன். tw_blush:

Edited by மல்லிகை வாசம்
Wrongly quoted

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.