Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சனநெரிசலில் சிக்கி 27 பேர் பலி, 55 பேர் காயம் : மும்பை ரயில் நிலையத்தில் சம்பவம் (காணொளி இணைப்பு )

Featured Replies

22 பேரின் உயிரைப் பறித்த வதந்தி! மும்பை ரயில் நிலையத்தில் பயங்கரம்

 
 

மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் பரவிய வதந்தியால் கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர்.

நெரிசலில் மக்கள் பலி

 

மும்பை எல்பின்ஸ்டான் ரயில் நிலையத்தில் சிறிது நேரத்துக்கு முன்னர் மின்கசிவு ஏற்பட்டதாக ஒரு வதந்தி பரவியது. இதனால் பதற்றமடைந்த மக்கள் விபத்திலிருந்து தப்பிக்கும் பொருட்டு ஓடியதில் பலரும் நெரிசலில் சிக்கினர். மக்கள் கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக் காயமடைந்தனர். உடனடியாக மீட்புப் பணிகளில் போலீஸார் ஈடுபட்டனர். முதலில் மூன்று பேர் பலியானதாகக் கூறப்பட்டது. ஆனால், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.

 

மும்பை புறநகர் ரயில் பகுதியான இந்த ரயில் நிலையத்தில் ஏற்பட்ட இந்த எதிர்பாரா விபத்தால் இதுவரையில் 22 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனப் போலீஸார் கூறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. எப்போதும் மக்கள் வெள்ளத்திலேயே இருக்கும் எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் பரவிய ஒரு வதந்தியால் பலரும் பலியாகியுள்ளனர்.

http://www.vikatan.com/news/india/103636-people-dead-in-stampede-at-mumbai-elphinston-railway-station.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பயங்கரம்: 22 பேர் பலி; பலர் காயம்

 

 
Elphinstonejpg%202

சம்பவம் நடந்த எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய நடைபாதை மேம்பாலம்   -  படம். | இம்மானுவேல் யோகினி

மும்பையின் எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் மக்கள் நடைபாதை மேம்பாலத்தில் திடீரென மக்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் முச்சுத்திணறி 22 பேர் பலியாகி, பலர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். பலியானோரில் பெண்கள் அதிகம் என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். மும்பையில் கனமழை பெய்து வரும் நேரத்தில் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இன்று காலை 10.40 மணியளவில் நடைபாதை மேம்பாலத்தில் கடும் கூட்ட நெரிசல் இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மின்கசிவு ஏற்பட்டதாக விளைந்த வதந்தி என்று ஒரு தரப்பினர் கூற ரயில்வே போலீஸ் அதிகாரி கூறும்போது, “கனமழை பெய்ததால் இந்த நடைபாதை மேம்பாலத்தில் மழைக்காக ஒதுங்கியவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நடைபாதை மேம்பாலத்தின் தகரக்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் மக்களிடையே பீதியும் பரபரப்பும் ஏற்பட்டு முண்டியடித்துக் கொண்டு வெளியேற முயன்றதில் கடும் நெரிசல் ஏற்பட்டது” என்றார்.

இதில் 22 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர், காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூத்த அதிகாரிகள், ரயில்வே நிர்வாகிகள், ரயில்வே போலீஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களிடம் இன்று வாக்குமூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இங்கு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/india/article19775133.ece?homepage=true

  • தொடங்கியவர்

சனநெரிசலில் சிக்கி 27 பேர் பலி, 55 பேர் காயம் : மும்பை ரயில் நிலையத்தில் சம்பவம் (காணொளி இணைப்பு )

மும்பையிலுள்ள எல்பின்ஸ்டோனில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர்.

mumbai.jpg

இன்று வெள்ளிக்கிழமை காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மும்பையில் இன்று காலையில் பெய்த அடைமழையையடுத்து, எல்பின்ஸ்டோனில் அமைந்துள்ளது ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் பெருமளவிலான மக்கள் கூட்டம் ஏற்பட்டது.

xmumbai777-29-1506670596.jpg.pagespeed.i

இன்று காலை சுமார் 10.50 மணிக்கு குறித்த நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்ததால் அதில் இருந்த மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

பெரும் விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கருதி, அங்கிருந்த பெருமளவிலான மக்கள் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது, பெரும் பீதி ஏற்பட்டதையடுத்த அங்கு பெரும் சனநெரிசல் ஏற்பட்டது.

அதில் படுகாயமடைந்த பலர் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

அதில் 20 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், மேலும் ஏழு பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 27 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 55 பேர் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/25076

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் அவலம், செய்தி படித்ததும் மனம் பதறுது....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.