Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருப்பன் திரை விமர்சனம்

Featured Replies

 
card-bg-img
 

தமிழ் சினிமா ஹீரோக்கள் மாஸ் ஹீரோவாக எடுக்கும் அவதாரம் போலீஸ் அல்லது கிராமத்து கதைக்களம். இந்த இரண்டிலுமே நடித்து ஹிட் அடித்துவிட்டால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்கள் தங்களை என்று ஒரு நம்பிக்கை. அப்படி சேதுபதியில் போலீஸாக ஜெயித்த விஜய் சேதுபதி, கிராமத்து இளைஞனாக கருப்பனிலும் ஜெயித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

வாடி வாசலில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருந்து ஆரம்பிக்கின்றது கதை. ஊரில் பெரிய தலைக்கட்டு பசுபதி, அவருடைய காளையை இதுவரை யாரும் அடக்கியது இல்லை என்ற கர்வத்தில் இருக்க, அவரிடம் வாயை கொடுத்து இந்த காளையை அடக்குபவருக்கே தன் தங்கையை திருமணம் செய்து வைக்கின்றேன் என சொல்ல வைக்கின்றனர்.

அதை தொடர்ந்து அந்த காளையை விஜய் சேதுபதி அடக்கி ஒரு சில பிரச்சனைகளை கடந்து தான்யாவை கரம் பிடிக்கின்றார். பசுபதிக்கும் ஒரு வீரனுக்கு தான் தன் தங்கையை கொடுக்கின்றோம் என மன நிம்மதியுடன் இருக்கின்றார்.

ஆனால், அதே வீட்டில் சிறு வயதில் இருந்து வளரும் பசுபதி மனைவியின் தம்பி பாபி சிம்ஹாவிற்கு தான்யா மீது காதல் இருக்க, இவர்களை பிரித்தாவது தான்யாவுடன் வாழவேண்டும் என்று அவர் ஆட்டத்தை ஆரம்பிக்க, பிறகு என்ன ஆகின்றது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி இதுவரை சென்னை வட்டார மொழியில் கலக்கியவர் மதுரை தமிழிலும் மிரட்டுகின்றார். உருவம் பெரிதாக இருந்தாலும் கிராமத்தில் இருப்பவர்களை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகின்றார். குடித்துவிட்டு பாபி சிம்ஹா அனுப்பும் ஆட்களை நடனமாடிக்கொண்டே அடிக்கும் இடத்திலும் சரி, தான்யாவுடன் ஒரு கணவனாக அவர் செய்யும் கலாட்டாவும் சரி எப்போதும் போல் சூப்பர் ஜி சூப்பர் ஜி.

தான்யா என்ன தான் முன்பு இரண்டு படம் நடித்திருந்தாலும், இந்த படத்திற்கு பிறகு தான் மார்க்கெட் சூடுபிடிக்கும் போல, கணவராக இருந்தாலும் தவறு என்ற இடத்தில் விஜய் சேதுபதியை செல்லமாக அதட்டும் இடத்தில் எல்லோரையும் கவர்கின்றார். அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படத்தில் இனி இவர் கமிட் ஆனாலும் ஆச்சரியமில்லை.

இறைவி படத்தில் என்ன செய்தாரோ அதை தான் இதிலும் செய்துள்ளார் பாபிசிம்ஹா. ஆனால், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல ரோல், திருமணமாகி சென்றாலும் அடைந்தே தீருவேன் என்று அவர் செய்யும் வில்லத்தனம், கடைசி நொடியில் கூட ஐ லவ் யூ என்று அவர் சொல்வது செம்ம. ஹீரோ ஆசையை ஒதுக்கி இப்படி தேர்ந்தெடுத்து நடித்தால் மீண்டும் நல்ல எதிர்காலம் தான்.

அதே நேரத்தில் ஒரு வில்லன் என்றால் நேரடியாக ஹீரோவிடம் மோதினால் தான் அனல் பறக்கும். ஆனால், பாபி சிம்ஹா கிளைமேக்ஸ் வரை விஜய் சேதுபதியிடம் நட்பாகவே தான் இருக்கின்றார். இருவருக்குமிடையே இன்னும் கொஞ்சம் மோதல் அதிகமாகியிருந்தால் படம் மேலும் பரபரப்பாகியிருக்கும்.

படத்தின் ஆரம்பத்திலேயே ஜல்லிக்கட்டு காட்சிகளை காட்டுகின்றனர். அதை எடுத்த விதம், CG Work என படக்குழு மிகவும் சிரமப்பட்டுள்ளது. ரேணிகுண்டா படத்திற்கு பிறகு பன்னீர் செல்வம் எங்கு சென்றார் என்று தேட, கருப்பனாக மீண்டு வந்துள்ளார்.

சக்திவேலின் ஒளிப்பதிவில் மதுரை பகுதிகளின் சுற்று வட்டாரத்தை அழகாக படம் பிடித்துள்ளனர். அதிலும் ஜல்லிக்கட்டு காட்சி, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மிரட்டல், மிகவும் ஏமாற்றியது டி.இமான் தான்.

க்ளாப்ஸ்

விஜய் சேதுபதி- தான்யா இருவருக்குமிடையே உள்ள காட்சிகள், மிக யதார்த்தமாக பதிவு செய்துள்ளனர்.

இத்தனை நாட்கள் ஒரு தரப்பினரை மட்டும் திருப்திப்படுத்திய விஜய் சேதுபதி இதில் B,C என இறங்கி அடித்துள்ளார்.

பல்ப்ஸ்

எப்போதும் கேட்டவுடன் பிடிக்கும் இமான் பாடல்கள் இதில் மிஸ்ஸிங்.

ஹீரோ- வில்லனுக்கான மோதலை கொஞ்சம் சுவாரசியப்படுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் சென்னை விஜய் சேதுபதியாக மட்டுமில்லை, மதுரையிலும் மீசையை முறுக்கியுள்ளார்.

http://www.cineulagam.com/films/05/100872?ref=top_latest

  • கருத்துக்கள உறவுகள்

image.jpeg.bae73704b3cb8eebf77194596f47b5fd.jpeg

 

  • தொடங்கியவர்

சினிமா விமர்சனம்: கருப்பன்

ரேணிகுண்டா படத்தின் மூலம் திரையுலகின் கவனத்தைத் திருப்பிய இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கிய படம். அந்தப் படத்தில் புதிய இடம், புதிய கதை, புதுமுகங்கள் என ஆச்சரியப்படுத்தியவர், இந்தப் படத்தின் மூலம் பல ஆண்டுகள் பின்னுக்குச் சென்றிருக்கிறார்.

சினிமா விமர்சனம்: கருப்பன்

கீரிப்பட்டியைச் சேர்ந்த கருப்பன் மாடு பிடிக்கும் வீரன். ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில், தன் மாட்டைப் பிடித்தால் தன் தங்கை அன்புவை திருமணம் செய்துவைப்பதாகச் சொல்கிறான் மாயி. அதன்படி மாட்டைப் பிடித்து, அன்புவைத் திருமணம் செய்கிறான் கருப்பன்.

அன்புவை கல்யாணம் செய்ய விரும்பிய கதிர் இதில் அதிர்ச்சியடைகிறான். கருப்பனையும் அன்புவையும் பிரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறான். அம்மாதிரி சூழ்ச்சியால் மாயியும் கருப்பனும் பகையாளியாகிறார்கள். உள்ளூர் கந்துவட்டிக்காரனின் பகையும் ஏற்படுகிறது. முடிவில் எல்லாம் சுபம்.

   
திரைப்படம் கருப்பன்
   
நடிகர்கள் விஜய் சேதுபதி , பாபி சிம்ஹா, தான்யா
   
இசை டி. இமான்
   
இயக்கம் பன்னீர்செல்வம்
   

இந்தப் படத்தின் பல காட்சிகளைப் பார்க்கும்போது கொம்பன், கிழக்குச் சீமையிலே படங்களில் பார்த்த பல காட்சிகள் நினைவுக்குவருகின்றன. ரொம்பவும் பழைய ஒரு கதையை ரொம்பவும் பழைய திரைக்கதையோடு அளித்திருக்கிறார் பன்னீர்செல்வம்.

ஜல்லிக்கட்டு பற்றி ஏற்கனவே பல கட்டுக்கதைகள் நிலவும் நிலையில், மாட்டைப் பிடித்தால் தன் வீட்டுப் பெண்ணைக் கட்டிக்கொடுப்பதுபோல கதை துவங்குகிறது.

இதற்குப் பிறகு, பல படங்களில் பார்த்துப் பழகிப் போன கணவன் - மனைவி அன்னியோன்ய காட்சிகள். இதற்குப் பிறகு, குடித்துவிட்டு கோவில் விழாவில் கலாட்டா செய்தார் என்ற காட்சியால் கருப்பனும் மாயியும் பிரிகிறார்கள் என்று போகிறது கதை.

சினிமா விமர்சனம்: கருப்பன்

துவங்கி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகே, பிரதானமான சிக்கலுக்குள் வருகிறது படம். இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் எல்லாமே ஏற்கனவே பல படங்களில் பார்த்தவை என்பதால், சலிப்பு ஏற்பட ஒரு வழியாக எதிர்பார்த்ததைப் போல படம் முடிகிறது.

நல்ல கதைகளைத் தேர்வுசெய்து நடித்துவந்ததால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த விஜய் சேதுபதி இந்தப் படத்தில் சறுக்கியிருக்கிறார். வழக்கமான நடிப்பு, மேனரிசங்களோடு கடந்துசெல்கிறார் அவர்.

சினிமா விமர்சனம்: கருப்பன்

மிகவும் குயுக்தியான வில்லன் பாத்திரம் என்றாலும், பாபி சிம்ஹாவுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை. பழங்கால வில்லனைப் போல நடித்து செத்துப் போகிறார் பாபி. பசுபதி, காவேரி, மற்றொரு வில்லனாக வரும் சரத் லோகிதஸ்வா ஆகியோருக்கும் பழகிப்போன பாத்திரங்கள்.

கதாநாயகியா வரும் தான்யா மட்டுமே படத்தில் கவனிக்க வைக்கிறார். ஏற்கனவே பலே வெள்ளையத்தேவா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்கு புதிய கவனத்தைப் பெற்றுத்தரக்கூடும். அதேபோல, விஜய் சேதுபதியுடனேயே வரும் சிங்கம் புலி சில காட்சிகளில் சிரிக்கவைக்கிறார்.

ஒளிப்பதிவு, இசை போன்றவை பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருந்தால், ஒரு வேளை ரசிக்கவைத்திருக்கலாம்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-41442359

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காளையை அடக்கிக்கோ... தங்கச்சியை கட்டிக்கோ... வாவ்..! ‘கருப்பன்’ விமர்சனம்

 

முறுக்கு மீசை, கிறுக்கு வீரம் என யாருக்கும் அடங்காத ஹீரோ. அவரை அன்பால் அடக்கும் மனைவி. அந்த மனைவி மேல் ஆசைப்படும் வில்லன். ’அட, எட்டுப்பட்டி ராசாவின் ரீமேக்கா?' எனக் கேட்க வைக்கிறான் கருப்பன்.

விஜய் சேதுபதி

 

கருப்பன் (விஜய்சேதுபதி) காளைகளையும், அநியாயங்களையும் கண்டால் அவ்வளவுதான். அதை அடக்கிவிட்டுதான் அடுத்த வேலை. யாரும் அடக்க முடியாத தனது காளையை அடக்கினால் தன் தங்கையைத் திருமணம் செய்து தருவதாக அவரிடம் சவால் விடுகிறார் பசுபதி. போட்டியில் விஜய் சேதுபதி ஜெயித்துவிட பசுபதி தங்கை அன்புக்கும் (தன்யா) விஜய் சேதுபதிக்கும் திருமணம். ஆனால், தன்யாமீது அவளது தாய் மாமன் பாபி சிம்ஹாவுக்கு பலகாலமாக ஒருதலைக் காதல். கூடவே விஜய் சேதுபதிக்கு உள்ளூர் பிரமுகர் சரத் லோகித்துடன் மோதல். இந்தக் காதலும் மோதலும் என்ன ஆகிறது என்பதே கதை.

ரேணிகுண்டா இயக்குநர் என்பதால் படத்துக்கு இணையத்தில் எதிர்பார்ப்பு கூடியிருந்தது. ஆனால், அதிலிருந்த ஃப்ரெஸ்ஷ்னெஸ் இந்த முறை பன்னீர்செல்வத்திடம் மிஸ்ஸிங். 

Karuppan

பழகிய கதை, பட்டென கண்டுபிடிக்கக்கூடிய ட்விஸ்ட் என இருந்தாலும் கருப்பனைக் கைக்குள் வைத்து காப்பாற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி. ஆக்‌ஷனோ, கோபமோ, காதலோ, அழுகையோ... வழக்கம் போல அத்தனையும் அசால்ட்டாக வருகிறது `மக்கள் செல்வன்' விஜய் சேதுபதிக்கு. மனநலம் குன்றிய அம்மாவிடம் பாசம், அன்பைக் கொட்டும் மனைவியிடம் ரொமான்ஸ், சீண்டிப் பார்ப்பவர்களிடம் வீரம் என வெரைட்டி விருந்துதான். கருப்புப் பொட்டு, வேஷ்டி சட்டை என கெட்டப்பில் கிராமத்தானாக மாறிவிட்டாலும், நடிப்பில் பாபி சிம்ஹா அத்தனை பொருத்தமாக இல்லை. கிட்டத்தட்ட இதே கதாபாத்திரத்தின் வேறு வெர்ஷனை இன்னும் நல்ல பெர்ஃபாமென்ஸில் `இறைவி' படத்தில் பார்த்துவிட்டதாலோ? க்ளைமாக்ஸில் கழுத்து வரை காதலைத் தேக்கி வைத்து ஹீரோயினைப் பார்த்து ரொமான்டிக்காகக் கண்ணடிப்பதைத் தவிர அவருக்கான வேலை பெரிதாக ஒன்றுமில்லை.

தன்யா நடிப்பு எந்த அலட்டலும் இல்லாமல் இயல்பாக இருக்கிறது. லட்சுமி மேனனை எதிர்த்து தேனி ஏரியாவில் போட்டியிட்டால் அம்மணிக்கு டெபாசிட் நிச்சயம் கிடைத்துவிடும். `தேசிங்கு ராஜா'வில் கேட்ட பாயாசம் இந்தப் படத்தில்தான் சிங்கம்புலிக்குக் கிடைக்கிறது. அதேபோல் சில இடங்களில் அவரது காமெடியும் ஒர்க் அவுட் ஆகிறது. அதைவிட கண்கலங்கும் காட்சியில்தான் மெர்சல் காட்டுகிறார். பசுபதிக்கு சாதாரணமான ஒரு ரோல், அதை மிக சாதாரணமாக நடித்துவிட்டுப் போகிறார். "அவன அரத்துப் போடுங்கடா, ஆரையும் ஒயரோட விடாதீங்கடா" என தமிழா, தெலுங்கா, கன்னடமா எனப் புரியாத மாதிரி டப்பிங் பேசியபடி சரத் லோகித் வந்து போகிறார். தமிழை வெட்ருங்க சார்.

Vijay Sethupathy

பஞ்சாயத்தில் பத்து நாளில் பேசிக்கலாம் என்கிறார்கள். ஆனால், அதன்பின் ஒரு போகம் விவசாயமே செய்துவிடுகிறார் ஹீரோ. ஆனால், பாபி சிம்ஹாவும் பஞ்சாயத்தும் ஒன்றுமே செய்யாமலா இருப்பார்கள்? சரத் லோகித்துக்கு பசுபதியிடம் ஒரு வேலை நடக்க வேண்டுமே. அது என்ன வேலை? அது என்ன ஆனது? அந்த அம்மா கேரக்டர் படத்துக்கு எதற்கு? அந்த ஊரில் யார் வீடுமே சரியாக கட்டப்படவில்லையா? சுவர்கள் இடிந்து விழுந்துகொண்டிருக்கின்றன.

 

கதையே பழசு; ட்யூன் மட்டும் புதுசு வேணுமா என்ற இசையமைப்பாளர் இமானின் கோபம் பாடல்களில் தெரிகிறது. ஆனாலும், மெலடிகள் இதம்தான். கிராமத்து லொகேஷன்களில் முடிந்த அளவு எதாவது புதுமையாகக் காட்டிவிட முயற்சி செய்கிறது சக்திவேலின் ஒளிப்பதிவு. இத்தனை சுமார்களுக்கும் நடுவில் சுழற்றியடித்திருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர் ராஜசேகர். குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முந்தைய சண்டைக்காட்சி அருமை. 

மொத்தத்தில், இந்தக் கருப்பன்.க்ளிஷேக்களின் தலைவன்!

http://cinema.vikatan.com/movie-review/103678-karuppan-movie-review.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.