Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போது வெளியாகியுள்ளது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

Featured Replies

தற்போது வெளியாகியுள்ளது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதாக  பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ளது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

நீர்கொழும்பு ஹரிச்சந்திரா மகாவித்தியாலய மாணவன் தினுக கிரிஷான்  குமார இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில்  அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில்  3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/scholership-result-relaese-now

  • தொடங்கியவர்

தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியாகின!!

 
 
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதுவரை வெளியான மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளிகள் வருமாறு

யாழ்ப்பாணம் – 155
கிளிநொச்சி – 154
மன்னார் – 153
வவுனியா – 154
முல்லைத்தீவு – 154
மட்டக்களப்பு – 154
அம்பாறை – 154
திருகோணமலை – 152
கொழும்பு – 156

பெறுபேறுகளை http://www.doenets.lk/exam/ இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்

http://newuthayan.com/story/34459.html

  • தொடங்கியவர்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான சித்திக்கான வெட்டுப்புள்ளிகள் இதோ

 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியாகியுள்ளன.இதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான சித்திக்கான வெட்டுப்புள்ளிகள் இதோ

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக 155 புள்ளிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக 154 புள்ளிகளும்,  மன்னார் மாவட்டத்தில் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 153 புள்ளிகளும், சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 158 புள்ளிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 160 புள்ளிகளும், தமிழ்மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 154 புள்ளிகளும் சித்திக்குரிய வெட்டுப்புள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான சித்திக்கான வெட்டுப்புள்ளிகள் இதோ

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 154 புள்ளிகளும், சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 161 புள்ளிகளும் சித்திக்கான புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான சித்திக்கான வெட்டுப்புள்ளிகள் இதோ

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமாக தோற்றியவர்களுக்கான சித்திக்குரிய வெட்டுப்புள்ளியாக 154 புள்ளிகளும்,  அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 159  புள்ளிகளும்,தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 154 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அநுராதபுரம் மாவட்டம் சிங்கள மொழி மூலம் மாணவர்களுக்கு 160 வெட்டுப்புள்ளிகளும், தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 153 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொலநறுவ மாவட்டத்திற்கான வெட்டுபுள்ளிகளில் சிங்கள மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கு 160 வெட்டுப்புள்ளிகளும்,தமிழ் மொழி மூலம் தோற்றி மாணவர்களுக்கு 151 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக சிங்கள மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கு 160 புள்ளிகளும், தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கு 153 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மொனராகல மாவட்டத்திற்கான சித்திக்கான வெட்டுப்புள்ளிகள் அடிப்படையில் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு 151 புள்ளிகளும், சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கு 158 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக சிங்கள மொழி மூல மாணவர்களுக்கு 162 புள்ளிகளும், தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்;கு 154 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான சித்திக்கான வெட்டுப்புள்ளிகள் இதோ

கேகாலை மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 164 புள்ளிகளும், தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 158  புள்ளிகளும், தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 152 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

குருநாகல மாவட்டத்தில் சிங்கள மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 164  புள்ளிகளும், தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டன.

அத்துடன் புத்தளம் மாவட்டத்தின் சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 160  புள்ளிகளும்,தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான புள்ளியாக 152 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

https://news.ibctamil.com/ta/internal-affairs/cut-marks-Grade-5-Scholarship-Examination

  • தொடங்கியவர்

வடக்கில் சென்.ஜோன்ஸ் பொஸ்கோ வித்தியாலய மாணவி முதலிடம் !!

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகின.

வெளியாகிய புலமைப்பரிசில்களின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில்  யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றார்.

வடக்கில்  சென்.ஜோன்ஸ் பொஸ்கோ வித்தியாலய மாணவி முதலிடம் !!

இந்நிலையில்  நீர்கொழும்பு, ஹரிசந்திர மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தினுக்க கிரிஷான் குமார என்ற மாணவர் 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதயில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/-St-Johns-Bosco-Vidyalaya-student-in-north

 

 

 

யாழில் 194 புள்ளிகளை பெற்ற மாணவி மாகாண மட்டத்தில் முதலிடம்

 

2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

அதே பாடசாலையை சேர்ந்த மைத்திரி அனுருத்திரன் 193 புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட வெட்டுப்புள்ளி 155ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2017 புலமைப்பரிசில் பரீட்சையில் 216 மாணவர்கள் தேற்றியதில்  அவர்களில் 120 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

யாழில் 194 புள்ளிகளை பெற்ற மாணவி மாகாண மட்டத்தில் முதலிடம்

யாழ் மாவட்டத்தில் புலமை பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவி ஊடகங்களுக்கு கருத்கு வெளியிட்ட போது தான் எந்தவொரு தனியார் கல்வி நிலையத்திற்கும் சென்று கல்விகற்கவில்லை எனவும், பாடசாலை கல்வியை பயின்றே பரீட்சையில் சித்தியெய்தியதாகவும் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாடசாலையில் கற்கும் பாடங்களை வீட்டில் மீண்டு படிப்பதன் மூலம் நல்ல பெறுபேற்றினை பெறமுடியும் எனவும்  குறித்த மாணவி  தெரிவித்தார்.

யாழில் 194 புள்ளிகளை பெற்ற மாணவி மாகாண மட்டத்தில் முதலிடம்

இதேவேளை மாவட்ட மட்டத்தில் 2ஆம் இடத்தினை பெற்றமாணவி கருத்து தெரிவிக்கையில் தான் இந்த பெறுறேற்றினை பெற்றுக்கொள்வதற்கு தனது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் வழங்கிய ஊக்கமே காரணம் என குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் தான் ஒரு வைத்தியராகி வட மாகாண தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே தனதும், தனது பெற்றோரின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/student-scored-194-points-Jaffna-provincial-level

  • தொடங்கியவர்

கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயம்: 188 புள்ளிகள், 1 இடம்

 

2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலய மாணவன் பாஸ்கரன் பார்த்தீபன் 188 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

தனியார் கல்விநிலையங்களிற்கு செல்லாது பாஸ்கரன் பார்த்தீபன் பாடசாலை மற்றும் வீட்டில் பெற்றோரின்  கற்பித்தல் மூலமே தான்  வெற்றியடைந்தாக  கூறியுள்ளார்.

இந்த பரீட்சையில் தான் சித்தியடைவதற்கு உதவிய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சக நண்பர்கள் அனைவரிற்கும் நன்றி கூறுவதாக    பாஸ்கரன் பார்த்தீபன் தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Kilinochchi-Hindu-Primary-first-place-188-points

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் 191 புள்ளிகளைப் பெற்ற இரண்டு மாணவர்கள் முதலிடம்

 

2017 ஆம்  ஆண்டு இடம்பெற்ற  ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின்  பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

இந்த வகையில் மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி  டிலக்சிக்கா வனராஜன் 191 புள்ளிகளை பெற்று  முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.  

மட்டக்களப்பில் 191 புள்ளிகளைப் பெற்ற இரண்டு மாணவர்கள் முதலிடம்

இதேளை மட்டக்களப்பு ஓட்டமாவடி சரீபலி வித்தியாலயத்தைச் சேர்ந்த நையீம் முகமட் சஜில் என்ற மாணவன் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலித்தைப் பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையிலிருந்து 56 மாணவிகள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதாக  பாடசாலை  அதிபர் இராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்தார்.             

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ஏகலைவன் அட்சரன் 188 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 4ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Two-students-scored-191-points-Batticaloa

  • தொடங்கியவர்

ஹட்டன் நல்லதண்ணி பாடசாலை மாணவி மாவட்ட மட்டத்தில் முதலிடம்

 

2017ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில்  நுவரெலியா  மாவட்டத்தில் 191 புள்ளிகளை பெற்று தமிழ் மாணவியொருவர் முதலிடம் பெற்றுள்ளார்.

ஹட்டன்  நல்லதண்ணி  பாடசாலை மாணவி  மாவட்ட மட்டத்தில் முதலிடம்

நுவரெலியா - ஹட்டன்  கல்வி  வலய நல்லதண்ணி (ஆரம்ப பிரிவு) தமிழ் வித்தியாலய மாணவியே முதலிடம் பெற்றுள்ளார்.

மறே வலதள தோட்டத்தை சேர்ந்த செல்வமணியம் தமயந்தி தம்பதிகளின் புதல்வியான  ஒன்ஷ என்ஷலேக்கா என்பவரே  மாவட்ட  மட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளளார் 

நல்லதண்ணி (ஆரம்ப பிரிவு) தமிழ் மகா வித்தியாலயத்தில் 35  மாணவர்கள்  புலமை பரிசில் பரிட்சைக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அதில் 9 பேர் சித்தி பெற்றுள்ளதாகவும் வித்தியாலய அதிபர் வீ.ஜெயபாலன் தெரிவித்தார்.

2011ஆம்  ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் மாணவியொருவர் முதலிடம் பெற்றுள்ளார். 

https://news.ibctamil.com/ta/internal-affairs/nuwara-eliya-grade-5-exam-

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் மகேந்திரன் கர்சனா முதலாம் இடம்: 188 புள்ளிகள்

 

நேற்று இரவு வெளியான  புலமைப்பரிசில் பரிட்சை புள்ளிகளின் அடிப்படையில் முல்லைத்தீவு  - புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியா பாடசாலை மாணவி மகேந்திரன் கர்சனா 188 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியா பாடசாலையில்   51 மாணவர்கள் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு விசுவமடு  விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலை  மாணவி வி.அன்பருவி   187 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தை வகித்துள்ளார்.

முல்லைத்தீவு விசுவமடு  விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலை 4௦  மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

186 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு நெத்தலியாறு தமிழ் வித்தியாலய மாணவி யெகதீபன் நிலவரசி மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு நெத்தலியாறு தமிழ் வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Mahendran-Karzana-Mullaitivu-Place-188-points

  • தொடங்கியவர்

2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டம், மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்

மன்னார், புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் குபேரகுமார் நயோலன் அபிசேக், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளைப்பெற்று மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

  • தொடங்கியவர்

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி வட மாகாணத்தில் முதலிடம்

 


புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி வட மாகாணத்தில் முதலிடம்
 

யாழ். ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தின் மாணவி 194 புள்ளிகளைப் பெற்று வட மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் ஜோன் பொஸ்கோ வித்தியாலத்தின் அனந்திகா உதயகுமார் என்ற மாணவி வட மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

194 புள்ளிகள் பெற்ற அவர் மாவட்டத்திலும் முதலிடத்தை அடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஜோன் பொஸ்கோ வித்தியாலத்தின் மைத்ரேயி அனிருத்தன் எனும் மாணவி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அவர் 193 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளைப் பெற்றுள்ள குபேரகுமார் நயோலன் அபிஷேக் மன்னார் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

அவர், புனித சாவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் மாணவராவார்.

புலமைப்பரிசில் பரீட்சையில், வவுனியா மாவட்டத்தில் முதல் இடங்களை இருவர் பெற்றுள்ளனர்.

இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் இருவர் 190 புள்ளிகளைப் பெற்று முதல் இடங்களை அடைந்துள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலும் இரு மாணவர்கள் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் தனராஜன் டிலக்ஷிகா மற்றும் ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயத்தின் என்.எம் சஜில் அஹமட் ஆகியோர்
191 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

191 புள்ளிகளைப்பெற்றுள்ள ஹொஸ்னி என்ஸலேகா எனும் மாணவி நுவரெலியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அவர், மஸ்கெலியா நல்லதண்ணீர் ஆரம்ப வித்தியாலயத்தின் மாணவியாவார்.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் அதீதித திறமையை வௌிப்படுத்தாத மாணவர்கள் கவலைப்பட வேண்டியது அவசியம் இல்லை என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/10/புலமைப்பரிசில்-பரீட்சை-5/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.