Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகங்களை தாக்கிய கேகலிய ரம்புக்வெல

Featured Replies

[வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 07:11 ஈழம்] [க.திருக்குமார்]

ஊடகத்துறையின் உரிமைகளுக்கான குழுவினால் 'சிறிலங்காவில் ஊடகத்துறையின் நிலை' என்ற அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஊடகத்துறையினருக்கும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெலவிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு நிலமைகள் தொடர்பான வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் விக்டர் பெரெராவினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை சில ஊடகங்கள் தவறாக வெளியிட்டுள்ளதாக ஊடகங்களின் பெயர்களை குறிப்பிடாது கேகலிய ரம்புக்வெல குற்றம் சாட்டியிருந்தார்.

கால்துறை மா அதிபர் சில படையினருக்கும் வேறு சிலரும் குறிப்பாக முன்னாள் ஊடகத்துறையினரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் ஊடகங்கள் அதனை படையினரும் காவல்துறையினரும் கடத்தல்களிலும், படுகொலைகளிலும் ஈடுபடுவதாக முதன்மைப்படுத்தி தெரிவித்துள்ளன என்று கேகலிய ரம்புக்கெவல தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஊடகவியலாளர்கள் அமைச்சரின் கூற்றுக்கு தமது எதிர்ப்பை தெரிவித்ததுடன் அவரால் கூறப்பட்ட கருத்துக்களை அதிகாரிகள் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என தெரிவித்ததுடன், காவல்துறை மா அதிபரின் கருத்துக்கள் அடங்கிய ஒலிநாடாவும் ஆதாரப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து நான் ஊடகத்துறையை குற்றம் சுமத்தவில்லை, குற்றம் சுமத்துதல் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். நாங்கள் சொல்வது சில ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்தியுள்ள என்பதையே, ஏனெனில் கைது செய்யப்பட்ட எல்லோரும் படையினர் அல்ல.

சிலர் இதில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் எல்லோரும் அல்ல. இதில் முன்னாள் ஊடகத்துறையினர், மாணவர்கள், பாதாள உலகக்குழு போன்றவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றே காவல்துறை மா அதிபர் கூறியிருந்தார் என ரம்புக்வெல தெரிவித்தார்.

எனினும் காவல்துறை மா அதிபர் என்ன கூறினார் என்பது தொடர்பாக ஆரயப்பட வேண்டும் என சில ஊடகவியலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் இந்த வாக்குவாதங்கள் முப்பது நிமிடங்கள் நீடித்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : புதினம்

இந்தியாவில் ஒரு சுப்பிரமண்ய சுவாமி போல சிரி லங்கிக்ககு ஒரு கோமாளி கேஹெலிய ரபுக்வல்ல. பயங்கர வாத அரசில் கோமளிகள் பலர் இருப்பினும், இவர் முதன்மையானவர். இவரது பேட்டிகளை நேரடி ஒளிபரப்பில் பார்க்கும் போது முகத்தில் தெரியும் மழுப்பல்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம் எவ்வளவு துாரம் கோமாளி பொய் பேசுகின்றார் என்பதனை. பேனாவுடன் மோதி பாவம் முகத்தில் கரி.....!

ஈழத்திலிருந்து

ஜானா

ஆட்கடத்தல், படுகொலைகளுடன் பொலிஸார், படையினருக்கு தொடர்பு - அரசு சந்தேகிப்பதாக அமைச்சர் கெஹலிய கூறுகிறார்

[08 - March - 2007] [Font Size - A - A - A]

ஆட்கடத்தல், படுகொலைகளுடன் பொலிஸார், படையினருக்கு தொடர்பு - அரசு சந்தேகிப்பதாக அமைச்சர் கெஹலிய கூறுகிறார்

நாட்டில் மோசமாக அதிகரித்துள்ள ஆட்கடத்தல்கள், படுகொலைச் சம்பவங்களுடன் அரச பாதுகாப்புப் படைகளுக்கு சம்பந்தம் இருப்பதாக சந்தேகப்படுவதாக அரசாங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் நிர்வாகம் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் கடத்தல்கள், படுகொலைகளுடன் படையினருக்கு தொடர்பு இருக்கின்றதென்பதை அரச தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

இராணுவத்திலுள்ள சக்திகளிடமிருந்தும் விடுதலைப் புலிகளிடமிருந்தும் அவர்களிடமிருந்து பிரிந்து சென்ற தரப்பினரிடமிருந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, ஜெனீவாவில் மனித உரிமை பேரவை இன்னும் சில நாட்களில் கூடவுள்ளது. இந்தப் பேரவை இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடுமையான விடயங்களை வெளிப்படுத்துமென எதிர்பார்க்கப்படும் நிலையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அரசின் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

குற்றச்செயல்கள் மற்றும் நிதி உதவி பெற்றுப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் 430 க்கும் அதிகமானோரை பொலிஸார் கடந்த செப்டெம்பரின் பின் கைது செய்துள்ளனர். இவர்களில் சுமார் 20 பேர் இராணுவம் மற்றும் பொலிஸ் படையைச் சேர்ந்தவர்களாகும்.

கடத்தல்கள், படுகொலைகள் காணாமற்போதல் போன்றவற்றுடன் பாதுகாப்புப் படையினர் சிலருக்கு சம்பந்தமிருக்கலாமென்பது எமது சந்தேகம் என்று பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று புதன்கிழமை இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 24 மணிநேரத்தில் நடவடிக்கைகளை எடுக்க முடியாது. இதற்கு சில காலம் எடுக்கும் என்றும் ரம்புக்வெல கூறியுள்ளார்.

இந்த வருடம் மாத்திரம் கொழும்பிலும் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் சுமார் 100 ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம் பெற்றிருப்பதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேசமயம், இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்புக்குழுவை அனுப்பிவைக்க வேண்டுமென்பது தொடர்பாக மனிதஉரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஏனெனில், சாட்சிகளைப் பாதுகாப்பதற்குரிய பாதுகாப்பு நடைமுறைத் திட்டம் இல்லாததால் சாட்சிகள் பகிரங்கமாக வெளிவந்து விடயங்களை கூறத்தயங்குவதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

படையினரும் புலிகளும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இதய சுத்தியுடனான ஈடுபாட்டை வெளிப்படுத்தாத வரை மனித உரிமை மீறல்களை குறைக்க முடியாதென சர்வதேச மன்னிப்புச்சபை கருதுவதாக அந்த அமைப்பின் இலங்கைக்கான ஆய்வாளர் ஜோலந்த போஸ்ரர் ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.