Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அண்ணனின் ஆட்சியில் இடம்பெற்ற பிழைகளுக்கு தான் பொறுப்பேற்பதாக பஷில் தெரிவிப்பு

Featured Replies

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் மிகுந்த அனுபவம் உள்ளவர். எனவே அவருக்கு எனது ஆலோசனை தேவையில்லை. இருந்தபோதிலும் அவர் எடுத்த சகல தீர்மானங்களின் பின்னாலும் நாம் உள்ளோம். ஆகவே அவரது காலப்பிரிவில் இடம்பெற்ற பிழைகளுக்கு தான் பொறுப்பேற்பதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

mahinda-rajapaksa-basil-rajapaksa.jpg

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சர்வதிகாரயாகச் செயற்பட்டதாகவும் அவர் எவருடை ஆலோசனைகளையும் செவிமடுக்கவில்லை என சில தரப்பினர் குறிப்பிடுகின்றனர். இதேவேளை அதற்கு மாற்றமான கருத்தை மற்றும் சில தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் அவர் எமது ஆலோசனைகளின் பிரகாரம் செயற்படாததனால்தான் தேர்தலில் தோல்வியடைந்ததாக சிலர் குறிப்பிடுகின்றனர். எனினும் மஹிந்த ராஜபக்க்ஷ எம்மைவிட அரசியலில் மிகுந்த அனுபவம் உள்ளவர். 

எனவே அவருக்கு எனது உபதேசம் அவசியமல்ல. இருந்தபோதிலும் அவர் எடுத்த சகல தீர்மானங்களின் பின்னாலும் நாம் உள்ளோம். ஆகவே அவரது காலப்பிரிவில் இடம்பெற்ற பிழைகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.

மேலும் எமது அரசாங்கம் ஒருபோதும் வைராக்கிய அரசியல் நடத்தப்போவதில்லை. எமக்கெதிராக செயற்படுபவர்களையும் நாம் உரிய சட்டப் பிரகாரம் முன்னெடுப்போமே தவிர சட்டத்திற்கு முரணாக செயற்படப் போவதில்லை. எனினும் நல்லாட்சி அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கவலையடைய வேண்டியுள்ளது. பழிவாங்கும் படலத்தையே தேசிய அரசாங்கம் அரங்கேற்றி வருகிறது. 

எமக்கெதிராக அரசாங்கம் முன்கெடுக்கும் கெடுபிடிகள் தொடர்பில் எமக்கு மிகுந்த வைராக்கியம் ஏற்பட வேண்டும். எனினும் நாம் மீண்டும் பதவிக்கு வருகின்றபோதிலும் வைராக்கிய உணர்வுடன் செயற்படப்போவதில்லை. 

இருந்தபோதிலும் அதன் மூலம் பிழை செய்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது சுதந்திரமாக விட்டுவிடுவதாகவும் பொருள்கொள்ள முடியாது. எனவே பிழைசெய்பவர்களுக்கு எதிராக சட்டத்திற்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். ஆகவே தேசிய வளங்களை சூறையாடி நாட்டுக்குப் பாதகமான முறையில் செயற்படுபவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

எனினும் எதிர்காலத்தில் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருகின்ற போதிலும் நல்லாட்சியில் இடம்பெறும் பிழைகளைத் தேடிக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது எனக் கருதுகிறேன். ஏனெனில் அவ்வாறான மோசடிகளை தற்போதே வெளிப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

http://www.virakesari.lk/article/25690

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.