Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு தீபாவளி நிகழ்வில் பிரதமர் அறிவிப்பு

Featured Replies

தேசிய பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு

P18-52c8cf02faec8987ff5934222d010b4634f3519f.jpg

 

தீபாவளி நிகழ்வில் பிரதமர் அறிவிப்பு
(எம்.எம்.மின்ஹாஜ்)

சுதந்திர இலங்கையின் 70 வருட பூர்த்தி யின்போது புதிய அரசியலமைப்பின் ஊடாக இனங்களுக்கு இடையில் பூரண நல்லிணக் கத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கின் றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

புதிய அரசியலமைப்பு பணிகளை வேக மாக செய்துவிட முடியாது. அனைத்து விடய  தானங்கள் குறித்தும் ஆராய்ந்து கலந்து ரையாடியதன் பின்னரே பிரச்சினைகளை தீர்க்க முடியும் என் றும் அவர் குறிப்பிட்டார்.  

தேசிய தீபாவளி விழா நேற்று அலரிமாளி கையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பல பிரதேசங்களில் இருந்து

 தேசிய தீபாவளி விழாவிற்கு பெருமளவிலான மக்கள் வருகை தந்துள்ளனர். இலங்கையில் மாத்திரமின்றி உலகம் பூராகவும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்து சமயமானது புராதன காலம் தொட்டு காணப்பட்ட சமயமாகும். தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மாத்திரமின்றி ஏனைய பல மதத்தவர்களும் கொண்டாடுகின்றனர்.

இன, மத, மொழி வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இலங்கையர் என்ற வகையில் சமய வழிபாடுகளில் பங்குபற்றும் சூழல் தற்போது நாட்டில் உருவாகியுள்ளது. இலங்கையில் அனைத்து இனங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.

பெளத்த சமயமும் இந்து சமயமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளன. இந்நிலையில் இலங்கையை சமாதானத்துடன் கூடிய நாடாக உருவாக்க வேண்டும். இதன் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப முடியும். சுதந்திரமான இலங்கையை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம். புதிய அரசியலமைப்பினை கொண்டு வரவுள்ளோம்.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைத்து செயற்பட்டு வருகின்றோம். தற்போது புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம். புதிய அரசியலமைப்பில் பல விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. மத விவகாரம், கலாசாரம், நாட்டின் நன்மைகள் மற்றும் அதியுச்ச அதிகார பகிர்வு தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். இதன்படி புதிய அரசியலமைப்பினை வேகமாக செய்து விட முடியாது. கலந்துரையாடல் மூலமாக இதற்கான பணிகளை முடிக்க வேண்டும்.

 இரு வருடங்களாகியும் பிரச்சினை தீர்க்கவில்லை என்று விமர்சிக்கின்றனர். எனினும் இது நாட்டின் பிரதான பிரச்சினையாகும். அதனை இலகுவில் தீர்க்க முடியாது. வேகமாக செய்து விட முடியாது.

 அடுத்த வருடத்தின் போது இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் பூர்த்தியாகின்றன. எனவே அடுத்த வருட 70 வருட பூர்த்தியின் போது நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி பிரதான பிரச்சினைகளை தீர்க்க முடியும் என நம்புகின்றோம். அனைத்து இனமக்களுக்கு இலங்கையர்களாக வாழும் சூழலை உருவாக்குவோம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.