Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கமம் விழா புலிகளுக்காகவா ? - பாதிரியார் ஜெகத் கஸ்பர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சங்கமம் விழா புலிகளுக்காகவா ? - பாதிரியார் ஜெகத் கஸ்பர்

gasperky0.jpg

சங்கமத்துக்கும், சர்ச்சைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் போலிருக்கிறது. சென்னையில் நடந்து முடிந்த சங்கமம் கலைவிழா, இன்னும் சிக்கலில் இருந்து ஓய்வதாகத் தெரியவில்லை. அந்த வரிசையில் இப்போது, ‘சென்னை சங்கமம் கலை விழாவை நடத்திய தமிழ் மையத்தின் நிர்வாக இயக்குநராக ஃபாதர் ஜெகத் கஸ்பார் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘கஸ்பார் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர். ஏற்கெனவே அவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றியபோது ‘புலிகளுக்கு உதவி’ என்ற புகாருக்கு ஆளானவர். இளையராஜாவின் ‘திருவாசகம்’ சி.டி. வெளியீடு நடத்தி, அதன்மூலம் பெரும் தொகையைப் புலிகளுக்குக் கொடுத்தவர். அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் புலிகளுக்காக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக உளவுத்துறையால் கைது செய்யப்பட்ட நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் என்ற நபருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர். அமெரிக்காவில் நடந்த திருவாசகம் சி.டி. வெளியீட்டு விழா மேடையில் நாச்சிமுத்துவோடு, ஃபாதர் ஜெகத்கஸ்பாரும் உள்ளார். அப்படிப்பட்டவர் சென்னை சங்கமத்தில் கனிமொழி ஒருங்கிணைப்பாளராக உள்ள சங்கமத்தின் நிகழ்ச்சிகளை நடத்தலாமா?’ என்பதே அந்தப் புதிய குற்றச்சாட்டு!

இது குறித்து விளக்கமறிய ஃபாதர் ஜெகத்கஸ்பாரையே நேரில் சந்தித்தோம்.

நீங்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராமே? இளையராஜாவின் ‘திருவாசகம்’ வெளியீட்டில் சுமார் ஆறரைக் கோடி ரூபாய் வசூலானதாகவும் அந்தத் தொகை எங்கோ போனது என்கிறார்களே... அதைப் பற்றி...?

‘‘முழுக்க முழுக்க வதந்திதான் இது. இளையராஜா அவர்களுடன் சேர்ந்து ‘திருவாசகம்’ சி.டி.யை நான் வெளிக் கொண்டு வர சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவானது. ஆனால் அதன் மூலம் வந்த வருமானம் வெறும் பதினைந்து லட்சம் மட்டுமே. அதை வெளிக் கொண்டு வருவதற்காக அமெரிக்காவில் பலரிடம் வாங்கிய கடனை ‘திருவாசகம்’ சி.டி.களைத்தான் கொடுத்து கணக்குத் தீர்த்துள்ளோம். எந்த தணிக்கைத் துறை வேண்டுமானாலும் வந்து கணக்குகளைப் பார்த்துக் கொள்ளலாம். பெருந்தொகை வந்தது; ‘எங்கோ’ கொடுத்தோம் என்பதெல்லாம் மிகவும் தவறு.’’

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ‘வெரிதாஸ்’ வானொலியில் நீங்கள் பணியாற்றியபோது ‘இலங்கைத் தமிழர்களிடையே ஒருங்கிணைப்பு’ என்ற பேரில் பெரும் நிதி திரட்டினீர்கள். அதை புலிகளுக்குக் கொடுத்து உதவினீர்கள். அது போப் ஆண்டவர் வரையிலும் புகாராகச் சென்று நீங்கள் அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை வந்தீர்கள் என்பது பற்றி...?

‘‘திருச்சபைக்குச் சொந்தமான அனைத்துலக வானொலி நிலையம்தான் ‘ரேடியோ வெரிதாஸ்!’ வெரிதாஸ் என்ற லத்தீன் வார்த்தைக்கு தமிழில் ‘உண்மை’ என்று அர்த்தம். ஈழத்தமிழர்களின் பிரச்னையை மனிதாபிமான, மனித உரிமைநோக்கில் அணுகும் பார்வை கொண்டது வெரிதாஸ்.

அங்கு பணியாற்ற, 1996_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எங்கள் திருச்சபை என்னை அனுப்பி வைத்தது. அந்த வானொலி நிகழ்ச்சியில் ‘உறவுப் பாலம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினோம். தாய் வேறு, தந்தை வேறு என போர்க்களத்தில் சிதறிய ஈழத் தமிழர்கள் எங்கெங்கோ பிரிந்துபோய் யார் எங்கே இருக்கின்றோம் எனத் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களை கடிதங்கள் மூலம் இணைப்பதுதான் அந்த நிகழ்ச்சி. பல லட்சக்கணக்கான குடும்பங்கள் அதனால் இணைந்ததால் அந்த நிகழ்ச்சி பெரிய வரவேற்பைப் பெற்றது. உறவுப்பாலம் நிகழ்ச்சி மூலம் இலங்கையில் கல்வி வசதி கிடைக்காத பதினேழாயிரம் பிள்ளைகளை வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தத்தெடுத்துக் கொள்ள வழி செய்தோம். இந்த நிகழ்வு இலங்கையில் உள்ள சிங்கள பாதிரியார்கள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம். அது எனக்குத் தெரியாது!

ஆனால், நான் எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் அங்கே ஆளாகவில்லை. ஏழாண்டு காலமும் சிறப்பாக பணியைச் செய்து 2006_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெருமை மிக்க சான்று வழங்கி கௌரவித்துதான் என்னை வழியனுப்பி வைத்தார்கள். (அந்த சான்றைக் காட்டினார்).

அமெரிக்காவில் ‘திருவாசகம்’ வெளியீட்டு விழா நடத்தியதே நாச்சிமுத்துதான். அவரோடு நீங்களும் ஒரே மேடையில் இருக்கிறீர்கள். புலிகளுக்கு ஆயுதம் கடத்தும் பெரிய குழுவோடு தொடர்புடைய உங்களை, கனிமொழி ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியில் இணைத்துக் கொண்டது எப்படி என்ற குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில்?

‘‘நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் என்பவர் தமிழ்நாட்டுக்காரர்தான். முன்னாள் அமைச்சர் ராஜாராமின் உறவுமுறையில் பெண்ணெடுத்தவர். அமெரிக்க அரசின் அணுவியல் விஞ்ஞானத்துறையில் பணியாற்றியவர். அவர் சாதாரண நபர் இல்லை. அந்தத் துறையில் பெரிய படிப்பாளி. அங்கே மதிக்கப்பட்டு வருபவர். விருப்ப ஓய்வு பெற்று, இப்போது தனியாக வேறு தொழில் செய்து வருகிறார்.

அப்படிப்பட்டவர் அங்கே ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு இயக்கங்களில் வெளிப்படையாகச் செயல்படுகிறார். அப்படித்தான். அமெரிக்காவில் புலிகள் அமைப்பிற்குத் தடை விதித்ததை நீக்கவேண்டும் என்று அவர் வெளிப்படையான அரசியல் களத்தில் இயங்கி வருகிறார். தடையை நீக்குவதற்காக அங்குள்ள ஓர் அதிகாரிக்கு ஆயிரம் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர்மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி ஆயுதம் வாங்கச் செயல்பட்டது வேறு ஒரு குழு. இரண்டும் ஒன்றல்ல.’’

நாச்சிமுத்து சாக்ரட்டீஸ§டன் உறவு பற்றி...?

‘‘அதைத்தான் சொல்ல வருகிறேன். அமெரிக்கா முழுதும் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புதான் ‘ஃபெட்னா’. அந்த ‘ஃபெட்னா’வில் நாச்சிமுத்து சாக்ரட்டீஸ§ம் ஒரு நிர்வாகி. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை நான்காம் தேதி முதல் ஏழாம் தேதிவரை அவர்கள் மாநாடு ஒன்றை நடத்துவார்கள்.

அப்படி நடத்தும்போது தமிழகத்திலிருந்தும் வி.ஐ.பி.க்களை அழைப்பார்கள். நடிகர் திலகம் முதல் இன்றைய இளம் நட்சத்திரங்கள் வரை அப்படிச் சென்று வந்திருக்கிறார்கள். அந்த வகையில் என்னை முதன்முதலாக 1999_ம் ஆண்டு அங்கே அழைத்தார்கள். அடுத்தடுத்து 2001_லும், 2005_லும் என்னை அழைத்தார்கள். அந்த சமயங்களில் மற்ற நிர்வாகிகளிடம் பழகியதைப் போன்றுதான் நாச்சிமுத்துவிடமும் பழகினேன். நல்ல பண்பாளர்.

நான் கேட்டுக் கொண்டதால் இளையராஜாவின் திருவாசகம் வெளியீட்டு விழாவையும் ஃபெட்னா அமைப்பினர் பிரமாதமாக நடத்தினார்கள். நம் ஊரிலிருந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சிம்பு உள்பட நிறைய வி.ஐ.பி. அழைப்பாளர்கள் திருவாசக விழாவின்போது அங்கே இருந்தார்கள். அதில் நான் பேசியதை மட்டும் காட்டி, அந்த மேடையில் நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் இருப்பதை தொடர்புபடுத்தி சிந்தித்துள்ளார்கள். அவர்கள் கூறுவதில் சிறிதும் உண்மை இல்லை!’’ என்றார்.

சென்னை சங்கமத்துக்கு அளவில்லாமல் அரசுப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும் தொகையை நீங்கள் புலிகளுக்கு கொடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறதே?

‘‘தமிழ் மையத்தின் சென்னை சங்கமம் விழாவுக்கு, ஒதுக்கப்பட்ட பணம் இந்திய தணிக்கை விதிகளுக்கு உட்பட்டே செலவிடப்பட்டது. இதற்கான முழு வரவு செலவுக் கணக்குகளையும் இணைய தளத்தில் வெளியிடப் போகிறோம். உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை சில ஊடகங்கள் வைப்பது இயல்புதான். ஆனால் இந்த அளவுக்கு நகைப்புக்குரிய விதத்தல் அவர்கள் குற்றம் சுமத்துவதை நினைத்தால் சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை!’’ என்று முடித்துகொண்டார்.

-குமுதம்

  • கருத்துக்கள உறவுகள்

'' சங்கமம் விழா புலிகளுக்காகவா ? - பாதிரியார் ஜெகத் கஸ்பர் "

ஒரு சமூக சேவையில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தாலே இது போன்ற பொய் குற்றச் சாட்டுக்கள் வருவது ஒரு சர்வ சாதாரணமாகிவிட்டது. நாமும் செய்யமாட்டோம் செய்கிறவர்களையும் விடமாட்டோம் இவை எனது வாழ்க்கையில் நிறைய அனுபவித்த உண்மைகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா எப்படி தி.மு.க அரசினை வீழ்த்தலாம் என்று நினைத்து இப்படியான கீழ்த்தரமான கட்டுக்கதைகளை பரப்புவார். அவருக்கு ஒத்திசைத்து புலிகளை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி, ராம் ,சோ போன்றவர்களும் பாப்பண ஊடகங்களும் இப்படியான கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.