Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எச்சரிக்கை மணி !

Featured Replies

எச்சரிக்கை மணி !

 

தமிழ் மக்கள் தமது நீண்ட காலப் போராட்­டத்தில் சமஷ்டி என்ற தீர்வை நோக்­கியே நகர்ந்து வந்­துள்­ளனர். இடையில் ஏற்­பட்ட ஆயுதப் போர் காலத்தில் தனி ஈழம் என்ற தீவிரப்போக்கு உண்­டாக்­கி­ய­தற்­கான அடிப்­படைக் காரணம் சமஷ்டி மறுக்­கப்­பட்­டதன் எதிர்­வி­ளைவே. இன்றைய சூழ்நிலையில் அவற்றிலிருந்து இறங்கிவந்து பிளவுபடாத பிரிக்கப்படாத நாட்டுக்குள் (ஒருமித்த) அதிகாரப்பகிர்வை வேண்டி நிற்கின்ற போதும் அவற்றையும் இல்லாது ஆக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கை சமூகம் மும்முரம் காட்டுவது ஆத்திரத்தை ஊட்டுகிறது.

 

புதிய அர­சியல் யாப்பு இலங்­கைக்கு ஆபத்தை கொண்டு வர­வி­ருக்­கி­றது. நாடு பிரிந்து செல்­வ­தற்­கு­ரிய வழி­ச­மைத்துக் கொடுக்­கப்­போ­கி­றது. மக்­களின் ஆணை பெறப்­ப­டாமல் புதிய அர­சியல் யாப்பை கொண்­டு­வர அனு­ம­திக்­க­மாட்டோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜபக் ஷ கர்ஜித்து வரு­கிறார்.

உத்­தேச அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்தம் அமுல்­ப­டுத்­தப்­பட்டால் இலங்கை ஒரு குர்திஸ்­தா­னா­கவோ அல்­லது கட்ட­லோ­னியா பாணி­யி­லான சுதந்­தி­ரத்­துக்­கான சர்­வஜன வாக்­கெ­டுப்பை எதிர்­கா­லத்தில் கொண்­ட­தா­கவே அமைந்­து­விடும் என எச்­ச­ரித்­து­முள்ளார்.

மஹிந்த ராஜபக் ஷவின் கருத்­தையே பெரும்­பா­லான சிங்­க­ளத்­த­லை­மை­களும் தென்­னி­லங்கை பெரு­ம்பான்மை சமூ­கமும் கொண்­டி­ருக்­கின்­றன. இவர்கள் மட்­டு­மன்றி பௌத்த அடிப்­படைவாதி­களும் பௌத்த பீடங்­க­ளுங்­கூட இக்­க­ருத்தை கொண்­டி­ருக்­கின்­றன. மொத்­தத்தில் புதிய அர­சியல் யாப்பை வர­வேற்­ப­வர்­க­ளிலும் பார்க்க அதை நிரா­க­ரிப்­ப­வர்­களின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்­டே­யி­ருக்­கி­றது.

கடந்த வர­லாற்றுக் காலங்­களில் இருந்து நிலை­மை­களை விட தற்­போ­தைய அர­சியல் சூழ்­நிலை இறுக்­க­மானதா­கவே இருந்து கொண்­டி­ருக்­கி­றது.

 அந்த இறுக்கத் தன்­மைக்குக் காரணம் புதிய அர­சியல் யாப்­பா­னது சமஷ்­டியை தமிழ் மக்­க­ளுக்கு உரு­வாக்கிக் கொடுக்­கப்­போ­கி­றது, நாடு பிரிந்து செல்­வ­தற்­கான வழியை அமைத்­துக்­கொ­டுக்க கால்கோள் இடு­கி­றது.

உள்ளூர் மற்றும் சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கு அளித்த உறுதி மொழி­களை நிறை­வேற்­றவே புதிய அர­சியல் யாப்பு கொண்டு வரப்­ப­டு­கி­றது. புலம்­பெயர் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றி வைக்கும் முக­மா­கவே யாப்பு என்ற நாடகம் ஆடப்­ப­டு­கி­ற­தென கூட்டு எதி­ர­ணியைச் சேர்ந்­த­வர்கள் அர­சாங்­கத்தின் மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

13 ஆவது திருத்தம் கொண்டு வரப்­பட்­ட­போது சிங்­கள தலை­மை­க­ளிடமும் மக்­க­ளி­டமும் இருந்த மனப்­பாங்கு வடக்­கு–­கி­ழக்கில் விடு­தலைப் புலி­களின் ஆதிக்கம் நில­விய காலத்­தி­லி­ருந்த எண்­ணப்­பா­டு­க­ளுக்கும் போர் முடிந்த பின்பு உள்ள போக்­கு­க­ளுக்கும் பாரிய வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கி­றது என்­பது கூறா­மலே விளங்கிக் கொள்ள கூடிய விட­ய­மாகும்.

பிராந்­திய சபை­களை வழங்கி தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்வு காணுவோம் என்ற நிலைமை மாறி 13க்கு அப்பால் சென்று அதி­காரப் பகிர்­வினை வழங்­கு­வோ­மென்ற உத்­த­ர­வாதம் காணாமல் போய், தற்­பொ­ழுது ஏகிய ராஜ்­ஜிய கொண்டு வரு­வ­தையும் விட மாட்டோம் என்ற நிலைமை உக்­கி­ர­ம­டைந்­து­போன நிலையே இன்­றைய இலங்­கையின் அர­சியல் சூழ்­நி­லை­யாக காணப்­ப­டு­கி­றது.

மிக அண்மைக் காலத்தின் சர்­வ­தேச அளவில் இடம்­பெற்ற அர­சியல் மாற்­றங்கள் அல்­லது சம்­ப­வங்­களே உதா­ர­ணங்­க­ளாக கொண்டு நாடு பிரிந்­து­விடும். வட­கி­ழக்கு தனி ராஜ்­ஜி­ய­மா­கி­விடும் ஆபத்து உரு­வாகி விடு­மென்ற பூச்­சாண்டி காட்­டு­கின்ற வேலை­களை சிங்­களத் தலை­மைகள் மிக இன­பூர்­வ­மாக செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள் .

கடந்த செப்­டெம்பர் மாதம் 25 ஆம் திகதி குர்திஸ் வாழ் ஈராக் மக்கள் பிரிந்து செல்­வ­தற்­கான 92% உச்ச ஆணையை வழங்­கி­யுள்­ளனர். அவ்­வாறே ஒக்­டோபர் 1 ஆம் திகதி ஸ்பெய்ன் நாட்­டி­லி­ருந்து கட்டலோனியா மாகாணம் 90 சத­வீத மக்­களின் ஆத­ர­வுடன் பிரிந்து செல்­வ­தற்­கான ஒப்­பு­தலை தந்­துள்­ளது.

அண்­மையில் நடத்­தப்­பட்ட பொது வாக்­கெ­டுப்­பென்ற -ஆயு­தமே மேற்­படி நாடு­க­ளுக்­கான பிரிந்து செல்லும் சுதந்­தி­ரத்­துக்­கான அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளது.

ஸ்பெய்ன் நாட்டின் ஒரு மாகா­ண­மாக விளங்கும் கட்டலோனியா மாகாணம் 4 பிர­தான பிரி­வு­களைக் கொண்­டது. அந்த 4 பிரி­வு­களும் முறையே பார்­சி­லோனா, கிரோனா, லிலிடா, தாரக்­கோனா என்ற பிரி­வு­களே அவை­யாகும்.

கட்டலோனியா மக்கள் நீண்ட கால­மாக பிரிந்து செல்­வ­தற்­கான போராட்­டங்­களை நடத்தி வந்­துள்­ளனர். தாங்கள் பிரிந்து செல்­வ­தற்கு பொது வாக்­கெ­டுப்பு முறை ஒன்று ெகாண்­டு­வர வேண்­டு­மென்ற கோரிக்­கையை அவர்கள் நீண்­ட­கா­ல­மாக முன்­வைத்து வந்­துள்­ள­போதும் ஸ்பெய்ன் நாட்டின் இறுக்­க­மான நட­வ­டிக்­கைகள் அதற்கு இடங்­கொ­டுக்­க­வில்லை. 1935 ஆம் ஆண்டு தொடக்கம் 1975 ஆம் ஆண்டு வரை­யி­லான ஜெனரல் மாஸ்­கோவின் சர்­வா­தி­கார ஆட்சி கார­ண­மாக கட்டலோனியா அடி­மை­யாக்­கப்­பட்­டி­ருந்­தது .

 ஸ்பெயின் ஆட்­சியின் கடு­மை­யான பிடிக்குள் கட்டலோனியா தனது மனித உரி­மைகள், அடிப்­படை உரி­மைகள், தேசிய அடை­யாளம், ஜன­நா­யகம் அனைத்­தையும் இழந்து நின்­றது. ஜெனரல் மாஸ்கோவின் மறைவின் பின் பொரு­ளா­தாரம் மற்றும் பிறதுறை­களில் வளர்ச்சி கண்­டது.

1978ஆம் ஆண்டு இலங்­கையை போலவே ஜன­நா­யக குடி­ய­ரசு நாடாக ஸ்பெய்ன் மலர்ச்சி கண்­டது. 1982 ஆம் ஆண்டு கட்டலோனியா தன்னை சுதா­­ரித்துக் கொண்­டதுடன் ஸ்பெய்னின் வட­கி­ழக்கு மாகா­ண­மான இப்பிராந்தியம் தனக்­கான சுதந்­திரப் பிர­க­ட­னத்­துக்­காக போராட முற்­பட்ட போது அது அடக்கி ஒடுக்­கப்­பட்­டது. பிரி­வி­னைக்கு எதி­ராக தனது இரா­ணு­வத்­தினை பிர­யோ­கிக்க முடி­யு­மென ஸ்பெய்ன் எச்­ச­ரித்­தது.

இந்த மக்கள் பிரிந்து செல்­வ­தற்­கான கோரிக்­கையை முன் வைத்து ஜன­நா­யக முறைப்­படி போராடி வந்த போதும் 2003 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பல பொது­வாக்­கெ­டுப்­புகளுக்கு திட்­ட­மிட்டு இருந்­த­போ­திலும் அதை நடத்த முடி­யாத நிலையும் பல­வீன நிலை­மை­களும் காணப்­பட்­ட­போதும் கடந்த 1 ஆம் திகதி ஸ்பெய்ன் நாட்­டி­லி­ருந்து கட்டலோனியா மாகாணம் பிரிந்து செல்­வ­தற்­கான 90% ஆத­ரவு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதே போன்றே குர்திஸ் இன ஈராக் வாழ் மக்கள் பிரிந்து செல்­வ­தற்­கான 92% வீத ஆணையைக் கடந்த செப்ெ­டம்பர் மாதம் 25 ஆம் திகதி வழங்­கி­யுள்­ளனர்.

உல­கத்தில் முதன்முதல் பொது வாக்­கெ­டுப்­பென்­ற ­மு­றையை அறி­முகம் செய்த நாடு சுவிட்ஸர்­லாந்து ஆகும். குறிப்­பிட்ட தொகை மக்கள் பிரிந்து செல்ல விரும்­பினால் அதற்­கென ஒரு மசோ­தாவைக் கொண்டு வந்து அதை பொது­வாக்கெடுப்­புக்கு விடுத்து அதன் மூலம் தமது சுய நிர்­ணய அடிப்­ப­டையில் பிரிந்து செல்­ல­லா­மென அர­சியல் சட்­டத்தில் முதன்முதல் புகுத்­தியது சுவிட்ஸர்­லாந்து நாடாகும். சுய­நிர்­ணய உரி­மை­களை கோரு­வ­தற்கு ஒவ்­வொரு இனத்­துக்கும் பிரி­வி­ன­ருக்கும் உரி­மை­யுண்டு என்­பதை அந்த சட்ட விதிகள் விதந்­து­ரை­க்கின்­றன.

தமது இனம் சுதந்­திரம் அடை­வ­தற்­காக பல நாடு­களில் ஆயுதம் ஏந்திப் போரா­டிய வர­லா­று­க­ளு­முண்டு. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த எதி­ரி­க­ளாக விளங்­கிய பலஸ்­தீனம் எதிர் இஸ்­ரேல் ஆகிய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான ­போ­ராட்­டத்­துக்கு அமெ­ரிக்கா ஆயுதம் வழங்கி ஆத­ரவு கொடுத்து இஸ்­ரேலின் உரு­வாக்­கத்­துக்கு உத­வி­யது. இப்­போ­ராட்­டத்­துக்கு பிரித்­தா­னியா உதவி நல்­கி­யது.

முதன்முதல் ரஷியப் புரட்­சி­யாளர் லெனின் ஒரு தேசிய இனத்­துக்கு சுய நிர்­ணய உரி­மை­யுண்டு என்­பதை பிர­க­டனம் செய்த தலை­வ­ராவார்.

சுய­நிர்­ணய உரி­மைக்­கான பொது வாக்­கெ­டுப்­பொன்று ஸ்கண்டிநேவிய நாடு­க­ளான நோர்வே, சுவீடன், டென்­மார்க் ஆகி­ய­வற்­றுக்கு 1905 ஆம் ஆண்டு நடத்­தப்­பட்டு பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் நோர்வே தனி­நா­டா­கி­யது. 1944 இல் ஐஸ்­லாந்து பொது­வாக்­கெ­டுப்பின் மூல­மாக தனி­நா­டாக பிரிந்­தது. 1958 ஆம் ஆண்டு கயனா தனி நாடா­கி­யது. 1990 சுவே­சே­னியா பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் தனி­நா­டாக ஆகிக் கொண்­டது. குரே­ஷி­யாவும் இவ்­வாறே.

1991 இல் ஸான்யா பொது­வாக்­கெ­டுப்பில் தனி­நா­டா­கி­யது. பராத்­தீ­வுகள் சுமார் 11 ஆயிரம் மக்கள் தொகை­யை கொண்­டது. பொது­வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்ட போது 5 வீதத்தில் வெற்றி பெற்று தனி­நா­டா­கி­யது. 1991 இல் உக்ரேன் பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் தனி­நா­டாகிக் கொண்­டது. இதே­யாண்டு போஸ்­லி­னியா பிரிந்து கொண்­டது. 1993 இல் 6 இலட்சம் மக்­களைக் கொண்­ட எரித்­தி­ரிய நாடு பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் சுய­நிர்­ணய உரி­மையைப் பெற்­றுக்­கொண்­டது.

1999 இல் கிழக்கு தீமோர் பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் தனி­நா­டாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இவ்­வாக்­கெ­டுப்­புக்கு ஐ.நா. சபை நேர­டி­யா­கவே தனது கண்­கா­ணிப்பை மேற்­கொண்­டி­ருந்­தது. 2011 ஆம் ஆண்டு தென்­சூடான் பொது­வாக்­கெ­டுப்பின் மூலம் தனி­நா­டாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

இவ்­வா­றான உலக அனு­ப­வங்­க­ளையும் போக்­கு­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டே பௌத்த மத­பீ­டங்­களும் தென்­னி­லங்கை தலை­வர்­களும், மக்­களும் புதிய அர­சியல் சாச­ன­மா­னது வேண்­டற்­பா­லது, நாடு பிரிக்­கப்­ப­டு­வ­தற்­கான சாச­ன­மாக புதிய அர­சியல் சாசனம் இருக்­கப்­போ­கி­றது என்ற எதிர்­வா­தத்தை நாட்டில் கிளப்பி விடு­வ­துடன் புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்­துக்கு எதிர்ப்பும் காட்டி வரு­கின்­றார்கள்.

அண்­மையில் வடக்­கு­ மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் அஸ்­கி­ரிய பீடத்­த­லை­வரைச் சந்­தித்து அர­சியல் தீர்வு விவ­காரம் சம்­பந்­த­மாக கலந்­து­ரை­யா­டிய வேளையில் அஸ்­கி­ரிய பீடத்­தினர் பிரி­வினையை அங்­கீ­க­ரிக்­கவோ ஏற்­றுக்­கொள்­ளவோ நாம் தயா­ரில்­லை­யென்­பதை முகத்தில் அறைந்­தது போல் கூறி­யி­ருந்­த­மையை நாட்­டி­லுள்ள மக்கள் அனை­வரும் அறிவர். இதே­வேளை புதிய அர­சியல் சாச­னத்­துக்கு எதி­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­மையில் எலிய என்ற அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­பது நாட­றிந்த விட­ய­மாகும்.

இவை­யெல்­லா­வற்­றையும் ஒப்­பிட்டு நோக்­கு­கின்­ற­போது புதிய அர­சியல் சாச­ன­மொன்று கொண்­டு­வ­ரப்­ப­டுமா? அதன் மூலம் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­டுமா என்ற சந்­தேகம் தமிழ் மக்கள் மத்­தியில் வலுத்­துக்­கொண்டு போவது தவிர்க்­கப்­ப­ட­மு­டி­யாத விட­ய­மாகும்.

பல இழுத்­த­டிப்­புக்­களை செய்­ததன் பின்­னரே இடைக்­கால அறிக்கை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எதிர்­க்கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் அர­சியல் தீர்வு விவ­காரம் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­ற­தென்­பதை நேர­டி­யா­கவே வெளி­நாட்டு ராஜ­தந்­தி­ரி­க­ளிடம் முறை­யிட்­டுள்ள சந்­தர்ப்­பங்­க­ளு­முண்டு.

அண்­மையில் (10.08.2017) இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த அமெ­ரிக்க காங்­கிரஸ் உறுப்­பி­னர்­களை எதிர்­க்கட்சித் தலைவர் சந்­தித்து உரை­யா­டி­ய­போது புதிய அர­சியல்யாப்பை தயா­ரிக்கும் விட­யத்தில் தேவை­யற்ற இழுத்­த­டிப்­புக்கள் நில­வு­கி­றது என நேர­டி­யா­கவே அர­சாங்­கத்தின் மீது குறை கூறி­யி­ருந்­த­மையை கவ­னத்தில் கொள்­ளலாம்.

நாட்டை பிரிக்க அர­சாங்கம் தயா­ராகிக் கொண்­டி­ருக்­கி­றது. அதை எதிர்க்க இந்த நாட்­டி­லுள்ள அனைத்து தேரர்­களும் முன்­வர வேண்டும். 1956 ஆம் ஆண்டு இடம்­பெற்­ற­துபோல் யுக­மாற்­றத்­துக்கு நாம் தயா­ராகி விட்டோம். அப்­ப­ய­ணத்தில் சகல பௌத்த தேரர்­களும் இணைய வேண்­டு­மென்ற அப்­பட்­ட­மான இன­வாத கோஷத்தை முத்­தட்­டுவே தேரர் கிளப்­பி­யி­ருந்தார்.

இவ்­வா­றான இன­வாத கோஷங்கள், பௌத்­த ஆதிக்க கெடு­பி­டி­க­ளி­லி­ருந்து தப்­பித்து, ஜன­நா­யக பாரம்­ப­ரி­யங்­களின் வழியில் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்­வைக்­காண தமிழ்த்­த­லை­மைகள் போராடி வரு­கிற நிலையில் அதைக் ­கொச்சைப்படுத்­து­வ­தற்கும் தடுப்­ப­தற்கும் சிங்­களத் தலை­மை­களும் இன­வாதக் குழுக்­களும் மேற்­கொண்­டு­வரும் முஸ்­தீபுகள் இந்­நாட்டில் நிலை­யான சமா­தா­னத்­தையோ அமை­தி­யையோ கொண்டு வரு­வ­தற்­கு­ரிய எத்­த­னங்­களை உரு­வாக்க மறுக்கும் கரு­மங்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன.

தமிழ் மக்கள் தமது நீண்ட காலப் போராட்­டத்தில் சமஷ்டி என்ற தீர்வை நோக்­கியே நகர்ந்து வந்­துள்­ளனர். இடையில் ஏற்­பட்ட ஆயுதப் போர் காலத்தில் தனி ஈழம் என்ற தீவிர போக்கு உண்­டாக்­கி­ய­தற்­கான அடிப்­படைக் காரணம் சமஷ்டி மறுக்­கப்­பட்­டதன் எதிர்­வி­ளைவே. இன்றைய சூழ்நிலையில் அவற்றிலிருந்து இறங்கிவந்து பிளவுபடாத பிரிக்கப்படாத நாட்டுக்குள் (ஒருமித்த) அதிகாரப்பகிர்வை வேண்டி நிற்கின்ற போதும் அவற்றையும் இல்லாது ஆக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கை சமூகம் மும்முரம் காட்டுவது ஆத்திரத்தை ஊட்டுகிறது.

நாட்டைப் பிரிக்க நாம் விரும்பவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் ஒன்றுபட்ட இனங்களாகவே வாழ விரும்புகின்றோம்.

ஆனால் தமிழ் மக்களின் தனித்துவம் பேணப்பட வேண்டுமென்பதற்காகவே அதிகாரப் பகிர்வினை வேண்டுகின்றோம். அதுவும் பெரும்பான்மை சமூகத்தின் நூறு வீத உடன்பாட்டுடன் பெற விரும்புகின்றோம் என்று தெளிவாகவும், சத்தியவாக்காகவும் உரைத்த பின்பும் அதை உதாசீனம் செய்வதும் நாட்டைப்பிரிக்கப் பார்க்கிறார்கள் என வக்கிர எண்ணத்துடன் பிரசாரம் செய்வதும் எந்தளவுக்கு நன்மை பயக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

நெருக்கடிகள் நிலவுகின்ற ஒரு நாட்டில் தேசிய இனப்பிரச்சினைக்கோ அல்லது ஒரு பிரிவினரின் அடிப்படை உரிமைப் போராட்டங்களுக்கோ தீர்வு காணாத பட்சத்திலோ அவற்றுக்கான தீர்வை தேடித்தரும் பல்வேறு வழிகள் உலக ஏடுகளில் உள்ளது என்பதை அண்மைக்கால அனுபவங்களைக் கொண்டு இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்கான எச்சரிக்கை மணியையே தமிழ்த்தலைமைகள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

– திரு­மலை நவம் –

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-21#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.