Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது ராகுல் எங்கேபோனார்?- தமிழிசை கேள்வியும் குஷ்புவின் பதிலும்

Featured Replies

இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது ராகுல் எங்கேபோனார்?- தமிழிசை கேள்வியும் குஷ்புவின் பதிலும்

 
khushbu

தமிழின் பெருமை பற்றி பேசும் ராகுல் இலங்கையில் இனஅழிப்பு போர் நடத்தியதற்கு காங்கிரஸ் துணைபோன போது எங்கே போனார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியதற்கு குஷ்பு பதிலளித்துள்ளார்.

குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏன் மேடம், அரைச்ச மாவே திரும்ப திரும்ப அரைக்கறீங்க. இதில் மெர்சலைப் பற்றி நீங்கள் பேசாமல் இருப்பதனால் மட்டும் எதுவும் மாறிவிடாது. அதற்கும் நீங்கள் பேசுவதற்கும் என்ன சம்மந்தம். நிஜப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவோம்.

எங்களிடம் மோடி இருக்கிறார், டிரம்பால் கூட எங்களை எதுவும் செய்ய முடியாது என்று சொன்ன அதிமுக அமைச்சருக்கு பதில் சொல்லுங்கள். தமிழகத்தின் உண்மையான பிரச்சினை டெங்கு. அது பலரை தினம் தினம் சாகடிக்கிறது. அது அதிமுகவின் மிகப்பெரிய தோல்வி. எப்படி மக்களைக் காப்பாற்றுவது என்று எல்லோரும் சேர்ந்து பேசுவோம்.

சட்டம் ஒழுங்கு இல்லை. தமிழகத்தில் வளர்ச்சி இல்லை. முதல்வர் ஈபிஎஸ் வளர்ச்சி பற்றி பேசுகிறார். எப்போ, எங்கே,  யாருடைய வளர்ச்சி? கண்டிப்பாக மக்களிடம் இல்லை. அதை பற்றிப் பேசுங்கள். ஒரு கட்சியாக திரைப்படத்தில் இருக்கும் 2 வசனங்களைக் கூட உங்களால் தாங்க முடியவில்லை என்றால், மன்னித்துவிடுங்கள், நீங்கள் அவ்வளவு பயத்தில் இருக்கிறீர்கள். மோடி அவர்களின் நண்பர் ஒபாமா சொன்னதைப் படியுங்கள்" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, மெர்சல் படத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்திருந்த நிலையில், தற்போது குஷ்பு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19905794.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இன அழிப்பு போர் நடத்தியதற்கு காங்கிரஸ் துணைபோன போது ராகுல் காந்தி எங்கே போனார்? இப்பொழுது மட்டும் தமிழின் பெருமை குறித்து பேசுகிறாரே? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எழுப்பிய கேள்விக்கு நடிகை குஷ்பு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாடலாளரான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மெர்சல் படத்துக்கும் இன அழிப்பிற்கும் என்ன சம்மந்தம்? சீறிப்பாய்ந்த குஷ்பு!

"ஏன் மேடம், அரைச்ச மாவே திரும்ப திரும்ப அரைக்கறீங்க. இதில் மெர்சலைப் பற்றி நீங்கள் பேசாமல் இருப்பதனால் மட்டும் எதுவும் மாறிவிடாது. அதற்கும் (மெர்சல்) நீங்கள் பேசுவதற்கும் (இன அழிப்பு) என்ன சம்மந்தம். நிஜப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவோம்.

எங்களிடம் மோடி இருக்கிறார், டிரம்பால் கூட எங்களை எதுவும் செய்ய முடியாது என்று சொன்ன அதிமுக அமைச்சருக்கு பதில் சொல்லுங்கள். தமிழகத்தின் உண்மையான பிரச்சினை டெங்கு. அது பலரை தினம் தினம் சாகடிக்கிறது. அது அதிமுகவின் மிகப்பெரிய தோல்வி. எப்படி மக்களைக் காப்பாற்றுவது என்று எல்லோரும் சேர்ந்து பேசுவோம்.

சட்டம் ஒழுங்கு இல்லை. தமிழகத்தில் வளர்ச்சி இல்லை. முதல்வர் ஈபிஎஸ் வளர்ச்சி பற்றி பேசுகிறார். எப்போ, எங்கே,  யாருடைய வளர்ச்சி? கண்டிப்பாக மக்களிடம் இல்லை. அதை பற்றிப் பேசுங்கள். ஒரு கட்சியாக திரைப்படத்தில் இருக்கும் 2 வசனங்களைக் கூட உங்களால் தாங்க முடியவில்லை என்றால், மன்னித்துவிடுங்கள், நீங்கள் அவ்வளவு பயத்தில் இருக்கிறீர்கள். மோடி அவர்களின் நண்பர் ஒபாமா சொன்னதைப் படியுங்கள்" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, மெர்சல் படத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்திருந்த நிலையில், தற்போது குஷ்பு தமிழிசையிடம் மேற்போன சில சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும் தமிழிசை கேட்ட இனவழிப்பு தொடர்பான கேள்விக்கு குஷ்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் மெர்சல் படத்திற்கும் இன அழிப்புக்கும் என்ன சம்மந்தம் என்று மழுப்பிவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தமது கருத்துக்களினை முன்வைத்துவருகின்றனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/kushboo-said-tamil-genocide

  • தொடங்கியவர்

“தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வர அவர்கள் யாரும் தேவையில்லை!” - தமிழிசை சௌந்தரராஜன் 

 
 

மெர்சல்

'நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் அரசியலுக்கு வருவதில் எந்தத் தவறும் இல்லை; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு சேவை செய்யவரும் அனைவரையும் வரவேற்போம். ஆனால், திரைப்படத்தின் கவர்ச்சி மட்டும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மூலதனமாக இருக்கக் கூடாது" என்று குறிப்பிட்டிருந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். அவர், இப்படிக் கருத்து தெரிவித்த சில நாள்களுக்குள்ளாகவே தற்போது நடிகர் விஜய் மற்றும் பி.ஜே.பி-யை இணைத்து பரபரப்பான செய்தி ஒன்றை மீண்டும் வெளியிட்டுள்ளார்.

 

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம், தீபாவளி தினத்தன்று வெளியானது. இந்தப் படம் தமிழக அரசியல் அரங்கில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் விஜய் பேசியிருக்கும் ஜி.எஸ்.டி. குறித்த வசனமே பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் காரணமாக அமைந்துள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி வரி முறையை விமர்சனம் செய்து விஜய் அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் பேசியிருப்பார். ஜி.எஸ்.டி. வரி விதிப்புமுறை குறித்து ஏற்கெனவே கமல் உள்ளிட்ட நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், 'மெர்சல்' திரைப்படத்திலும் இந்த வரிமுறைக்கு எதிரான வசனம் இடம்பெற்றிருப்பது அரசியல் களத்தை அதிரச் செய்துள்ளது. இதற்கு பி.ஜே.பி சார்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

விஜய்

பி.ஜே.பி-யின் கண்டனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விஜய்-க்கு ஆதரவாகவும் பல தரப்பிலும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. நடிகர்கள் கமல், ரஜினி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.

திருமாவளவன்"தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. டெங்குவால் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்வது வேதனை அளிக்கிறது. டெங்கு குறித்து ஆய்வு நடத்த தமிழகம் வந்த மத்தியக் குழுவினர் இதுவரை எந்த அறிக்கையையும் அளிக்கவில்லை. டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிவிட்ட மத்திய-மாநில அரசுகள், அந்தப் பிரச்னையை திசைதிருப்புவதற்காகவே  தற்போது 'மெர்சல்' பட சர்ச்சையை கையில் எடுத்துள்ளன.

இதைவிட அரசியலை விமர்சித்த படங்களைப் பற்றிக் கண்டுகொள்ளாதவர்கள், தற்போது மெர்சல் படம் குறித்து விமர்சிப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது. தணிக்கை செய்யப்பட்டே இப்படம் வெளியாகியுள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் இந்தப் படத்தை எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்று மறைமுக ஆதரவைத் தருகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அரசியலில் ஆர்வம் காட்டும் ரஜினி, கமல், விஜய் போன்றவர்களை வளைத்துப் போட்டு, அவர்கள் மூலமாக தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறது" என்றார் திருமாவளவன். 

அவரின் இந்தக் கருத்து பற்றி மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “ ‘நடிகர்களை வளைத்துப் போட பி.ஜே.பி. பொன் ராதாகிருஷ்ணன்முயற்சிக்கிறது' என்று அண்ணன் திருமாவளவன் பேசியதாகக் கேள்விப்பட்டேன். திருமாவளவனும் திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் அவரையும்கூட பி.ஜே.பி-யில் வளைத்துப்போட நான் முயற்சிக்கிறேன் என்பதே அவருக்கு என்னுடைய பதில். யாருடனும் பகையை வளர்க்க பி.ஜே.பி. விரும்பவில்லை. எங்களுடைய கொள்கையும் அதுவல்ல. மெர்சல் திரைப்பட விவகாரத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட யார் மீதும் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்பு ஏதும் கிடையாது. எந்தக் காரணத்துக்காகவும் யாரையும் ஒழிக்கவேண்டும் என்றோ அல்லது அதட்டிவைக்க வேண்டும் என்றோ பி.ஜே.பி. எண்ணியது கிடையாது" என்றார்.

இதுகுறித்து பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் பேசியபோது, "சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தவறான கருத்துகளை பதிய வைக்கக்கூடாது என்று தணிக்கைக் குழுவின் விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு படத்தை முறையாகத் தணிக்கை செய்திருந்தால் குறிப்பிட்ட அந்தக் காட்சி இடம்பெற்றிருக்காது. சில காட்சிகள் மூலம் மக்கள் மனதில் தவறான கருத்துகள் பதியப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நான் மெர்சல் படத்தில் வரும் வசனங்களை எதிர்க்கிறேன். இது யதார்த்தமான ஒன்றுதான். என்னுடைய எதிர்ப்பைச் சுட்டிக்காட்டி, பலரும் எவ்வளவு ட்வீட் செய்ய முடியுமோ, அவ்வளவு ட்வீட் செய்கிறார்கள். இதுபோன்று ஆளாளுக்கு ஓர் திரைக்கதை, வசனம் எழுதினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. யார் வேண்டுமானாலும் எந்தவொரு திரைக்கதை, வசனத்தை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும். ஜி.எஸ்.டி. போன்ற நல்லதொரு திட்டத்தின் உண்மைத்தன்மையை மறைத்து பொய்யான தகவலை அந்தப் படத்தில் சொல்லியிருப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அனைத்துப் பொருள்களுக்கும், அனைவரும் 28 சதவிகித வரி கட்டுவது போன்றும், இந்த நாட்டில் இலவச மருத்துவமே இல்லை என்பது போன்றும் அந்த வசனம் அமைந்துள்ளது. இது எந்தவகையில் நியாயம்? தமிழகத்தில் டயாலிசிஸ் சென்டர் குறைவாக இருப்பது தொடர்பாக நான் எழுதிய கடிதத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழிசை சவுந்திரராஜன்அனைவருக்கும் இலவச மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் இங்கு யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. என்னுடைய கருத்தில் யதார்த்தமான எதிர்ப்பு மட்டுமே உள்ளது. அதுபற்றி மற்றவர்களின் எதிர்விமர்சனங்களுக்கு நான் பதிலளிக்க முடியாது. உண்மைக்கு புறம்பான கருத்தை திருமாவளவன் சொன்னால், அதற்குப் பதில் சொல்ல முடியாது. எங்களின் நாயகர்களாக பிரதமர் மோடியும், பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷாவும் உள்ளனர். இதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். தமிழகத்தில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வரத்தான் போகிறது. நடிகர்களை பி.ஜே.பி-க்கு அழைத்துதான் நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில்லை" என்றார் தடாலடியாக.

 
 

எது எப்படியோ, 'மெர்சல்' படம் பற்றி அறியாதவர்கள்கூட, "அப்படி என்னதான்யா நடிகர் விஜய் பேசியிருக்கிறார்?" என்ற ஆர்வத்தை அனைத்துத் தரப்பினரிடத்திலும் தூண்டிய பெருமை தமிழக பி.ஜே.பி. நிர்வாகிகளையே சேரும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

http://www.vikatan.com/news/coverstory/105733-we-dont-need-anybodys-support-here-in-tamilnadu-except-people-to-come-to-power-says-tamilisai-soundarajan-of-bjp.html

  • தொடங்கியவர்

தமிழிசையின் விக்கிப்பீடியா பக்கத்தை தாறு மாறாகத் திருத்திய நெட்டீசன்கள்!

 

 
tamilisai

 

மெர்சல் படத்தில் சில காட்சிகளை நீக்கச் சொல்லி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள தமிழக பாஜக கட்சி தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் விக்கிப்பீடியா பக்கத்தில் சிலர் பூந்து விளையாடியுள்ளனர்.

உலகில் உள்ள பல முக்கிய பிரபலங்களின் முழு விவரத்தையும் நாம் அறிந்துகொள்ள உதவுவது விக்கிப்பீடியா வலைத்தளம். இதில் யார் வேண்டுமானாலும் அதில் இருக்கும் செய்தியை திருத்தி எழுதும் வசதி உள்ளது. இந்த வசதி இன்று ஒரு பெரிய பிரச்னையாக வளர்ந்து நிற்கிறது என்றே சொல்லலாம். 

ஜி.எஸ்.டி, மற்றும் மருத்துவ துறை பற்றி பொய்யான கருத்துகளை மெர்சல் படத்தில் விஜய் பேசியிருப்பதாகப் பா.ஜ.க கட்சியினர் படத்தையும், நடிகர் விஜய் பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த பிரச்னை பூதாகரம் எடுக்கத் தமிழிசையும் ஒரு முக்கிய காரணம் என்பதால் அடையாளம் தெரியாத சிலர் அவரது விக்கிப்பீடியா பக்கத்தில் அவரை அவமானம் படுத்தும் வகையில் தகவல்களை திருத்தியுள்ளனர்.

22773489_823222437837278_72642945_n.jpg

தமிழிசை சௌந்தரராஜன் என்கிற பெயரை ‘டுமிலிசை சௌந்தரராஜன்’ எனவும் ‘சவுண்டு சரோஜா’ எனவும் மாற்றியுள்ளனர். மேலும் முன்னுரையில் அவருடைய தலை முடியைக் கேலி செய்து ‘பரட்டை’ என விமர்சித்தும் அவரை பாரதிய ஜனதா கட்சியின் அடிமை எனவும், மேலும் பெண்கள் நல மருத்துவரான அவரை மிருக நல மருத்துவரெனவும் தகவல்களை திருத்தியுள்ளனர். பின்பு சிறிது நேரத்தில் இந்தச் செய்திகளும் அவரது பெயரும் மீண்டும் பழைய நிலைக்கே மாற்றப்பட்டது. 

http://www.dinamani.com/tamilnadu/2017/oct/24/tamilisai-s-wikipedia-page--edited-2795143.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.