Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கைதிகளுக்காக அமைதிப் போராட்டம் : பொலிசார் இடையூறு

Featured Replies

அரசியல் கைதிகளுக்காக அமைதிப் போராட்டம் : பொலிசார் இடையூறு

 
 
அரசியல் கைதிகளுக்காக அமைதிப் போராட்டம் : பொலிசார் இடையூறு
 
 
 

27ஆவது நாளாக உண்ணா போராட்டம் நடத்திவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பிலுள்ள நீதியமைச்சுக்கு முன்பாக இன்று (23) அமைதிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அரசியல் கைதிகளை விடுவித்துக் கொள்வதற்கான தேசிய அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அரசியல் கைதிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் அடங்கிய கடிதமொன்று ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் மத்தியில், அமைதியாக அந்த இடத்தில் காற்சட்டை அணியாது, முகத்தை மூடியவாறு நூதனப் போராட்டம் (Performance art) நடத்திய இளைஞர் ஒருவரை பொலிசார் கைதுசெய்ய முயற்சித்தனர். இதனால் ஆர்ப்பாட்டக் காரருக்கும், பொலிசாருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது.

குறித்த இளைஞன் இராணுவச் சிப்பாயின் சீருடைக்கு ஒத்த உடையை அணிந்திருந்ததாகவும், அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாகவும் பொலிசார் குற்றஞ்சாட்டினர். இதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் காரசாரமான பதில்களை வழங்கினர்.

தொடர் முறுகலுக்குப் பின்னர் பொலிஸ் உயர் அதிகாரியொருவரும் தலையிட்ட இதனைத் தடுக்க முயன்றார். ஆர்ப்பாட்டக் காரர்களின் எதிர்ப்பு, வாக்குவாதத்தினால் இதுவொரு கலைப் படைப்பு என்பதை ஏற்று பொலிசாருக்கு விலகிச் செல்ல நேரிட்டது.

ஆர்ப்பாட்டக் காரர்களின் பாதுகாப்பிற்கே பொலிசார் நாம், வந்துள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் இதன்போது தெரிவித்தார். இதற்கு ஆர்ப்பாட்டக் காரர்கள் 'ஊ" சத்தமிட்டு பதிலளித்தனர்.

கடந்த 10 மாதத்தில் 10 பேர் பொலிசாரால் கொல்லப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர் சத்தமிட்டு கூறினர்.

ஆர்ப்பாட்டம் முடிந்து, அனைவரும் வீடு திரும்ப தயாராகிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் குறித்த நூதனப் போராட்டக் கலைஞனை பொலிசார் கைதுசெய்ய முயற்சித்தனர்.
இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட நல்லாட்சி பொலிசார் இடமளிக்க மறுக்கின்றனர் என பொலிசார் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

- தரன்

pol pri 001

pol pri 002

pol pri 004

pol pri 005

http://tamil.lankanewsweb.net/news/item/4764-protest

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.