Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கூட்­ட­மைப்­புக்குள் பிளவு : தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க முடி­யாது என்­கி­றது ஈ.பி.ஆர்.எல்.எப்.

Featured Replies

தமிழ்க் கூட்­ட­மைப்­புக்குள் பிளவு : தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க முடி­யாது என்­கி­றது ஈ.பி.ஆர்.எல்.எப்.

3-fc377cf99138f7cca6c5cfefd3322d4e819f80f1.jpg

 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினுள் மற்­று­மொரு பிளவு ஏற்­பட்­டுள்­ளமை பகி­ரங்­க­மா­கி­யுள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யாக செயற்­பட்டு வரும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது ஏதேச்­ச­திகாரமாக செயற்­பட்டு வரு­கின்ற நிலையில் அக்­கட்­சி­யுடன் தொடர்ந்தும்

இணைந்து பய­ணிக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களில் ஒன்­றான ஈழ­மக்கள் புரட்­சி­கர முன்­னணி அறி­வித்­துள்­ளது.

2001 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் பூர­ண­மான அங்­கீ­கா­ரத்­து­டனும், ஆத­ர­வு­டனும் 2001 அக்­டோபர் 20 இல் தமிழர் விடு­தலைக் கூட்­டணி, ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி (சுரேஷ் அணி), தமி­ழீழ விடு­தலை இயக்கம் (ரெலோ) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. கூட்டமைப்பானது தேர்­தல்­களில் போட்­டி­யிட்டு வடக்கு கிழக்கு மக்­களின் அதி­க­ள­வான ஆணை­களைப் பெற்று பெரும்­பான்மை தமிழ்ப் பிர­தி­நி­தித்­து­வங்­களை கொண்ட தரப்­பாக இது­வ­ரையில் இருந்து வரு­கின்­ற­தோது 2015ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் பிர­தான எதிர்க்­கட்­சி­யா­கவும் இருக்­கின்­றது.

இந்­நி­லையில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் உத­ய­சு­ரியன் சின்­னத்தில் 2001 பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்­டது. அதன் பின்னர் தமிழர் விடு­தலைக் கூட்­டணி கூட்­ட­மைப்பில் இருந்து விலகிச் செல்­லவும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியை முன்­னி­லைப்­ப­டுத்தி அதன் சின்­ன­மான வீட்டுச் சின்­னத்தில் அடுத்து வந்த தேர்­தல்­க­ளுக்கு இக்­கூட்­ட­மைப்பு முகங்­கொ­டுத்­தது.

இந்­நி­லையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் நடை­பெற்ற 2010ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்­கிரஸ் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வௌியே­றி­யது. அத­னை­ய­டுத்து புளொட் அமைப்பு கூட்­ட­மைப்பில் இணைந்து கொள்­ளவும் நான்கு கட்­சி­களைக் கொண்­ட­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தொடர்ந்தும் செயற்­பட்டு வந்­தி­ருந்த நிலையில் கூட்­ட­மைப்­பினை ஒரு அர­சியல் கட்­சி­யாக பதிவு செய்­ய­வேண்டும், வௌிப்­ப­டைத்­தன்­மை­யுடன் கொள்­கை­ரீ­தி­யான முடி­வு­களை எடுத்துச் செயற்­ப­ட­வேண்டும் போன்ற கருத்­துக்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி ஈ.பி.ஆர்.எல்.பிற்கும், இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கும் இடையில் அவ்­வப்­போது சில முரண்­பா­டுகள் எழுந்­தி­ருந்­தன.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடை­பெற்ற போது தேர்தல் விஞ்­ஞா­பனம் தயா­ரிப்­பின்­போது இரு­த­ரப்­பி­ன­ருக்கும் இடையில் இருந்த முரண்­பா­டுகள் மேலும் வலுத்­தன. அத­னை­ய­டுத்து தொடர்ந்து வந்­த­கா­லப்­ப­கு­தியில் ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்­மா­னத்­திற்கு ஆத­ர­வ­ளிப்பு, ஐ.நா.வில் அர­சாங்­கத்தின் கோரிக்­கைக்கு அமைய கால அவ­கா­சத்­தினை வழங்­குதல், புதி­ய­அ­ர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் போன்ற விட­யங்­களில் இந்த முரண்­பா­டுகள் உச்­சத்­தினை அடைந்து இரு­த­ரப்­பி­னரும் பரஸ்­பரம் பகி­ரங்­க­மாக விமர்ச்­சிக்கும் அள­விற்கு நிலைமை சென்­றது.

அத்­துடன் ஈ.பி.ஆர்.எல்.எப் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் இணைத்­த­லை­மையில் உரு­வாக்­கப்­பட்ட தமிழ் மக்கள் பேர­வை­யிலும் இணைந்து கொண்­டது. இது­தொ­டர்­பா­கவும் தமி­ழ­ர­சுக்­கட்சி கடு­மை­யான விமர்­ச­னத்­தி­னையே கொண்­டி­ருந்­தது.

இவ்­வாறு தமிழ்க் கூட்­ட­மைப்­பிற்குள் நடை­பெற்று வந்த தமி­ழ­ர­சுக்­கட்சி மற்றம் ஈ.பி.ஆர்.எல்.எப்­.இற்கு இடை­யி­லான பனிப்போர் தற்­போது பகி­ரங்­க­மா­கி­யுள்­ளது. அண்­மையில் நடை­பெற்ற புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பான கருத்­த­ரங்­கிற்கு முன்­ன­தாக கூட்­ட­மைப்பு ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்டம் நடத்­தப்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு இடைக்­கால அறிக்கை தொடர்பில் கொள்கை தீர்­மானம் எடுக்­கப்­பட வேண்டும் என்று அவ்­வ­றிக்­கையை முழு­மை­யாக நிரா­க­ரிப்­ப­தாக தமது கட்­சி­ய­ளவில் தீர்­மானம் எடுத்­தி­ருந்­தி­ருந்த ஈ.பி.ஆர்.எல்.பினால் கோரப்­பட்­ட­டி­ருந்து.

எனினும் இரு நாள் கருத்­த­ரங்கின் ஆரம்­ப­நா­ளன்று மாலை­யி­லேயே ஒருங்­கி­ணைப்­புக்­குழு நடை­பெற்­றது. அதில் ஈ.பி.ஆர்.எல்..இன் தலைவர் சுரேஸ்­பி­ரே­மச்­சந்­திரன் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை. அதே­நேரம் அக்­கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த அக்­கட்­சியின் செய­லாளர் சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி. தமி­ழ­ர­சுக்­கட்­சி­யி­ன­ருடன் கடு­மை­யாக முரண்­பட்­டி­ருந்தார்.

அத்­துடன் ஈ.பி.ஆர்.எல்.எப்.தரப்பின் இடைக்­கால அறிக்கை தொடர்­பான கருத்­த­ரங்கும் புறக்­க­ணிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு கருத்­த­ரங்கில் பங்­கேற்­கா­த­வர்­க­ளுக்கு இடைக்­கால அறிக்கை குறித்த வி­வா­தத்தில் உரை­யாற்ற இட­ம­ளிப்­ப­தில்லை என்றும் தீர்­மா­னித்­துள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் அறி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் தனக்கு நேர ஒதுக்­கீட்டை வழங்க மறுக்­கின்றார் என்று சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி பகி­ரங்­க­மான குற்­றச்­சாட்டைச் செய்து அர­சி­ய­ல­மைப்பு தலைவர் கரு­ஜெ­ய­சூ­ரி­ய­வி­டத்­திலும் முறைப்­பாட்­டினை செய்­தி­ருந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷின் கருத்து

இவ்­வாறு முரண்­பா­டுகள் வலுத்து பகி­ரங்­க­மா­கி­யுள்ள நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­விக்­கையில்,

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பெயரால் ஏதேச்­ச­தி­கா­ர­மாக செயற்­ப­டு­கின்­றது. ஒரு ஜன­நா­யக கட்­ட­மைப்­பாக இருந்த கூட்­ட­மைப்­பினை தமது கொள்­கை­க­ளுக்கு ஏற்ற ஒரு தரப்­பாக இட்டுச் செல்லும் வகை­யி­லான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க ஆரம்­பித்­தனர்.

பல சந்­தர்ப்­பங்­களில் நாம் அதனை சுட்­டிக்­காட்­டி­ருந்தோம். கூட்­ட­மைப்­பினுள் இருந்து கொண்டு நடை­பெற்ற பல கலந்­து­ரை­யா­டல்­களில் பங்­கேற்று இவற்றைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தோம். எமது அடிப்­படைக் கொள்­கை­க­ளி­லி­ருந்து, மக்கள் ஆணை வழங்­கிய விட­யத்­தி­லி­ருந்து நாம் விலகிச் செல்­ல­மு­டி­யாது என்­பதை எத்­த­னையோ சந்­தர்ப்­பத்தில் கூறி­வந்தோம்.

இவ்­வாறு பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் நாம் சுட்­டிக்­காட்­டி­ய­போதும் அனைத்­துமே செவிடன் காதில் ஊதிய சங்­காக இருந்து வந்­துள்­ளது. அத்­த­கைய நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை மீதான விவாத்தில் எமது கட்­சியின் செய­லா­ளரும் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஒரு பிர­தி­நி­தி­யு­மான சிவ­சக்தி ஆனந்தன் எம்.பியினை உரை­யாற்­று­வ­தற்கு இட­ம­ளிப்­ப­தில்லை என்று மிலேச்­சத்­த­ன­மாக முடிவு எடுக்­கின்­றார்கள்.

இடைக்­கால அறிக்கை தொடர்பில் மக்­க­ளுக்கு ஒரு கருத்­தையும் அர­சாங்­கத்­தினை பாது­காக்கும் வகை­யிலும் கருத்­துக்­களை முன்­வைக்கும் செயற்­பட்­டி­லேயே இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி இருக்­கின்­றது. அத்­த­கைய ஒரு­வி­டத்­திற்கு நாம் ஆத­ர­வ­ளித்து வர­லாற்றுத் தவ­றினை இழைக்க முடி­யாது.

இவ்­வாறு தமது கட்­சியை முன்­னி­லைப்­ப­டுத்தி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினை நடத்திச் சென்­ற­வர்கள் ஏனைய பங்­கா­ளிக்­கட்­சி­களை முடக்கும் வகையில் செயற்­பட்­டதை தாண்டி தற்­போது அடக்­கு­மு­றை­க­ளையும் பிர­யோ­கிக்க ஆரம்­பித்­துள்­ளார்கள். அத்­த­கைய இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் எவ்­வாறு இணைந்து பய­ணிக்க முடியும் என்­பதே எமது கேள்­வி­யா­கின்­றது.

உள்­ளு­ராட்சி தேர்­தலில் தனித்தே போட்டி

இவ்­வா­றான நிலையில் நாம் ஒரு தேர்தல் கூட்­டுக்­காவோ அல்­லது தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான சின்­னத்­துக்­கா­கவே அவர்­க­ளுடன் கூட்டுச் சேர்ந்து இருக்க வேண்­டிய அவ­சியம் எமக்கு இல்லை. எதிர்­வரும் உள்­ளு­ராட்சி தேர்­தலில் தனி­யாக போட்­டி­யி­டு­வ­தற்கு நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

அதே­நேரம் எமது கொள்­கை­க­ளுடன் இணைந்து செயற்­படக் கூடிய தரப்­புக்கள் விருப்பம் தெரி­விக்கும் பட்­சத்தில் ஒரு முன்­ன­ணி­யா­கவும் நாம் போட்­டி­யி­ட­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம். எனினும் அது தொடர்­பான தீர்­மா­னங்கள் அத்­த­கைய கால­கட்­டங்­களில் முடி­வெ­டுக்­கப்­படும் என்றார்.

அதிக உறுப்­பி­னர்­க­ளுக்கு விரும்­ப­மில்லை

இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்தில் கருத்­த­ரங்கில் கலந்து கொள்­ளா­த­வர்­க­ளுக்கு இட­ம­ளிப்­ப­தில்லை என்று பாரா­ளு­மன்றக் குழு தீர்­மா­னித்­துள்­ளது. ஆகவே பாரா­ளு­மன்றக் குழுவின் தீர்­மா­னித்­தினை உறுப்­பினர் ஒரு­வரின் தனிப்­பட்ட விட­யத்­திற்­காக மாற்ற முடி­யாது என கூட்­ட­மைப்பின் அதி­க­ள­வான உறுப்­பி­னர்கள் விரும்­பு­வதால் நேர ஒதுக்­கீட்டை சிவ­சக்தி ஆனந்தன் எம்.பிக்கு ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­வது அதிகம் சாத்­தி­யப்­ப­டா­த­தா­கவே இருக்கும் என கூட்­ட­மைப்பின் உயர்­மட்டத் தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன. குறிப்­பாக கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னி­டத்தில் இந்த கருத்­தினை அதி­க­ள­வி­லான உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தா­கவும் மேலும் பாரா­ளு­மன்­றக்­கு­ழுவின் தீர்­மானம் மாற்­றப்­ப­டு­மாயின் எதிர்­கா­லத்­திலும் இவ்வாறு கட்டுக்கோப்பற்ற நிலைமையொன்று ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

ஈ.பி.ஆர்.எல்.எப்.பங்கேற்காது.

இந்நிலையில் எதிர்வரும் 4ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆசனப்பங்கீடு தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இதில் ஈ.பி.ஆர்.எல்.எப் பங்கேற்க மாட்டாது. அதேநேரம் இக்கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்பிலான விடயங்களும் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

9இல் பாராளுமன்றக்குழு கூட்டம்

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அவசர பாராளுமன்றக் குழு கூட்டமொன்று இன்று நடைபெறவிருந்தபோதும் சில உறுப்பினர்கள் தமது பிரதேசங்களுக்கு திரும்பவுள்ளதால் அக்கூட்டம் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டள்ளது. அத்துடன் இக்கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் எம்.பி விடயம் மற்றும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்த விடயங்கள் தொடர்பாக அதிகளவிலான அவதானம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.