Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் வியூகங்களை ஆழமாய் அறிந்திருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்

Featured Replies

அரசியல் வியூகங்களை ஆழமாய் அறிந்திருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்

அரசியல் வியூகங்களை ஆழமாய் அறிந்திருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்

வன்­னிப் பெரு நிலப் ப­ரப்பை விடு­த­லை புலி­க­ளின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து முற்­று­மு­ழு­தாக விடு­விப்­ப­தற்கான பெரும்  தாக்­கு­தல்­களை மகிந்த அர­சும் படை­க­ளும் ஆரம்­பித்த காலப்­ப­கு­தி­யான 2007ஆம் ஆண் டின் நவம்பர் மாதம் 2ஆம் திக­தி­யன்று அதி­காலை வேளை­யில் கிளி­நொச்சி திரு­வை­யா­றுப் பகு­தி­யில் திடீ­ரென பயங்­க­ர­மாக குண்­டு­ வீச்­சுத்­தாக்­கு­தல்­களை வான்படை மேற்­கொள்­கின்­றது.

அதி­காலை 5.40 மணி­ய­ள­வில் அந்­தப் பகு­தி­யி­லி­ருந்த விடு­த­லைப் புலி­க­ளின் முகாம் மீது நடத்­திய குண்­டு­வீச்­சில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் சு.ப.தமிழ்ச்­செல்­வன் கொல் லப்­ப­டு­கின்­றார். அவ­ரு­டன் ஆறு போரா­ளி­க­ளும் உயி­ரி­ழந்­த­னர்.

தமிழ்ச்­செல்­வன் கொல்­லப்­பட்ட செய்தி பொழுது விடிந்ததும் படிப்­ப­டி­யாக வன்னி முழு­வ­தும் பரவ உத்­தி­யோ­க­பூர்­வ­மான வீர­சா­வுச் செய்­தி­யாக நண்­ப­கல் நேரத்­தில் புலி­க­ளின் கு­ரல் வானொலி பிரி­கே­டி­யர் சு.ப. தமிழ்ச்­செல்­வன் விமா­னக் குண்டுத் தாக்­கு­த­லில் கொல்­லப்­பட்­ட­ார் என்று அறி­விக்­கின்­ற­து.

தமி­ழர் தாய­கம் மட்­டு­மன்றி உல­கில் வாழ்­கின்ற தமி­ழர்­கள் மத்­தி­யிலும் தமிழ்ச்­செல்­வ­னின் சாவுச் செய்தி பேர­திர்ச்­சி­யை­யும் ஆழ்ந்த துக்­கத்­தை
யும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. பன்­னாட்டு மட்­டத்­தி­லும் தமிழ்ச்­செல்­வ­னின் பெயர் இரா­ஜ­தந்­தி­ரி­கள் மத்­தி­யில் தொடர்ந்து பேசப்பட்டு இருந்­து­ கொண்­டே­யி­ருக்­கும்.

உல­கத்­துக்­குப் பிடி கொடுக்­காத மதி­நுட்­பம்­மிக்க அர­சி­யல் ராஜ­தந்­தி­ரி­யாக நடந்­து­ கொண்ட தமிழ்ச்­செல்­வன் ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்த வரை ஒரு வர­லாறு.

தமிழ்ச்­செல்­வ­னின் போரி­யல் திற­மை­க­ளை­யும், அர­சி­யல் நகர்­வு­க­ளை­யும் எந்­த­வொரு தமி­ழ­ரும் மறந்­து­வி­ட­மு­டி­யாது. ஆயு­தப் போரா­ளி­யாக, அர­சி­யல் போரா­ளி­யாக எப் போ­தும் புன்­னகை ததும்­பும் முகத்­தோடு வலது கையில் ஊன்றுகோல் தாங்­கியே உலா வந்த ஆளு­மை­மிக்க, விடு­த­லைப் புலி­க­ளது அர­சி­யல் து­றைப் பொறுப்­பா­ள­ரான சு.ப.தமிழ்ச் செல்­வன் வீர­சா­வ­டைந்து இன் றுடன் பத்­தாண்டுகள் நிறை­வ­டை­கின்­றன.

ஆயு­தப் போராட்­டத்­து­டன் அர­சி­யல் முன்­னெ­டுப்­பை­யும் மேற்­கொண்­ட­வர்

தமி­ழர்­க­ளின் விடு­த­லைப் போர் என்­பது எண்­ணற்ற தியா­கங்­க­ளி­னா­லும் அர்ப்­ப­ணிப்­பு­க­ளி­னா­லும் கட்டி எழுப்­பப்­பட்­ட ஒன்று. ஆயு­தப் போராட்­ட­மும் அர­சி­யல் முன்­னெ­டுப்­பு­க­ளும் சம­கா­லத்­தில் இணைந்­தி­ருந்­தா­லும் அர­சி­யல் பலம் அவ­சி­ய­மா­கின்­றது.

விடு­த­லைப் புலி­க­ளின் அப­ரிமி­த­மான வளர்ச்­சிக்­கும் தமிழ் மக்­க­ளின் அர­சி­யல் பலத்­துக்­கும் மலை­யாக நின்று இறுதி மூச்­சு­வரை பணி­யாற்­றிய தமிழ்ச்­செல்­வ­னின் போராட்ட வாழ்க்­கை­யில் 23ஆண்­டு­கள், தமி­ழர்­க­ளின் நியா­ய­மான கோரிக்­கை­களை உலக அரங்­குக்கு கொண்டு செல்­வ­தற்­காக இரவு பக­லான உழைப்பாக இருந்திருக்கிறது.

17 வய­தில் தமிழ்ச்­செல்­வன் விடு­த­லைப் போராட்­டத்­துக்­குள் பிர­வே­சித்த காலம் விடு­த­லைப்­பு­லி­கள் கெரில்­லாப் படை­யாக யாழ்.நக­ருக்­குள் உல­விக் கொண்­டி­ருந்த காலம்.

இந்­தச் சம­யத்­தில் தினேஸ் என்ற இயற் பெய­ரைக் கொண்ட இளை­ஞ­னாக யாழ்ப்­பா­ணத்­தில் விடு­த­லைப்­பு­லி­ க­ளின் பயிற்சி முகாம் ஒன்­றில் இணைந்து கொள்­கின்­றார். 24 ஆவது வய­தில் அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ள­ராக பொறுப்பை ஏற்­றுக் கொண்­ட­தி­ல் இ­ருந்து இறக்­கும்­வரை அர­சி­யல்­து­றைக்கு செயல்­வ­டி­வம் கொடுத்­தி­ருந்­தார்.

1984ஆம் ஆண்டு விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தில் இணைந்­து­ கொண்ட தமிழ்ச்­செல்­வன் ஆரம்­ப­கா­லப் போரா­ளி­யா­கிய பின்­னர், தமி­ழ­கத்­தி­லி­ருந்து புலி­க­ளின் மருத்­து­வப் போரா­ளி­யா­கச் செயற்­பட்­டி­ருந்­தார். அவர் பின்­னர் களத்­துக்­கும் தளத்­துக்­கு­மி­டையே விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வ­ருக்­கான இணைப்­புச் செயற்­பாட்­ட­ள­ரா­கப் பணி­யாற்­றி­ய­தன் மூலம் அவ­ரது ஆளுமையை வெளிப்படுத்திக்காட்டினார்.

அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ள­ராக பொறுப்­பேற்­றுக் கொண்ட தமிழ்ச்­செல்­வன், 1984ஆம் ஆண்­டி­லி­ருந்து 1993ஆம் ஆண்­டு­வரை ஆற்றிய படைத்­து­றை­யி­லான செயற்­பா­டு­க­ளையும், 1993ஆம் ஆண்­டி­லி­ருந்து 2007ஆம் ஆண்டு நம்­ப­வர் மாதம் 2ஆம் திகதி அதி­காலை வரை ஆற்றிய அர­சி­யல் செயற்­பா­டு­க­ளை­யும் நோக்­கு­கை­யில் பிற்­பட்ட கால­மா­னது மிக­வும் முக்­கிய காலப்­ப­கு­தி­யா­கும்.

பிர­பா­க­ர­னால்  நேசிக்­கப்­பட்ட தலை­வர்

பிரிகே­டி­யர் சு.ப.தமிழ்ச்­செல்­வ­ னைப் பொறுத்­த­வ­ரை­யில் அவர் தலை­வர் பிர­பா­க­ர­னால் ஆழ­மாக நேசிக்­கப்­பட்­ட­வர். தலை­வ­ரது யதார்த்­த­பூர்­வ­மான சிந்­த­னை­களையும் செயற்­பா­டு­ க­ளையும் புடம்­போ­ட்டுச் செயற்படுத் தக் கூடிய அறி­வாற்­றல் கொண்­ட­வ­ராக வளர்க்­கப்­பட்­டார்.

1987ஆம் ஆண்டு பிர­பா­க­ரன் இந்தி யாவில் இருந்து நாடு திரும்­பி­யதுடன் தமிழ்ச்­செல்­வ­னின் பணி­க­ளும் அதி­க­ரித்­தன. இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ரு­டனான போரில் தென்­ம­ராட்­சிப் பகு­திக்குத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­ட­ பின்னர் தமிழ்ச்­செல்­வன் இந்­திய இரா­ணு­வத்­து­டன் இறு­தி­வரை கள­மா­டி­னார்.

தமிழ்ச்­செல்­வன் 1991ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் யாழ்.மாவட்ட சிறப்­புத் தள­ப­தி­யாக செயற்­ப­ட்ட கால­கட்­டத்­தில் மர­புவ­ழி­யி­லான போரை விடு­த­லைப் புலி­கள் ஆரம்­பிக்­கின்­ற­னர்.

இலங்கை இரா­ணு­வத்­துக்கு  எதி­ரான தாக்­கு­தல்­க­ளுக்­கு  தலைமை வகித்­த­வர்

யாழ்ப்­பாண மாவட்­டத் தள­ப­தி­யாக பணி­யாற்றி அந்­தக் காலப்­ப­கு­தி­யில் சிங்களப் படையினரது வட போர் மு­னை­யின் கட்­ட­ளைப்­பீ­ட­மா­கத் திகழ்ந்த பலாலி முக்­கூட்டு படைத்­த­ளத்­தின் அச்­சு­றுத்­த­லி­ல் இ­ருந்து போராட்­டத்­தின் மையத்­த­ள­மாக விளங்கிய யாழ்ப்­பா­ணத்­தைப் பாது­காப்­ப­தற்­கான ஒரு தற்­காப்­புச் சம­ருக்­கான முகம் கொடுத்­த­படி இவ­ரது தலை­மை­யில் பல­வ­லிந்த தாக்­கு­தல்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

அவற்­றி்ல் மன்­னார் சிலா­வத்­துறை இரா­ணுவ முகாம் மீதான தாக்­கு­தல், ஆகா­யக்­க­டல் வெளிிச்­ச­ம­ரில் கடல்­வ­ழி­யான படை இறக்­கத்துக்கு எதி­ரான சமர் என்­பவை தமிழ்ச்­செல்­வ­னின் வெற்றிகரமான படைத்­துறை ரீதி­யி­லான செயற் பாட்டை வெளிப்­ப­டுத்­தக் கூடி­ய­வை­ யா­கும்.

ஒரு விடு­தலை இயக்­கத்­தின் அர­சி­யல் நகர்­வு­கள் கடி­ன­மா­னவை. பரப்­புரை முன்­னெ­டுப்பு, பன்­னாட்­டை­யும், போரா­ளி­க­ளை­யும் சம­கா­லத்­தில் சமா­ளிக்­கின்ற திறமை, அர­சி­யல் கொள்­கை­களை நகர்த்­திச் செல்­லும் திறன் என்பவை தமிழ்ச்­செல்­வ­னுக்­குச் சுமை­யாக இருக்­க­வில்லை.

1995ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 20 ஆம் திகதி ஏற்­பட்ட யாழ்ப்­பாண இடப்­பெ­யர்­வா­னது, புலி­கள் அமைப்­பி­ன­ருக்கு பெரும் போராட்­ட­மாக இருந்­தது. நான்கு லட்­சம் மக்­கள் வரை­யில் தென்­ம­ராட்­சி­யை­யும் வன்­னி­யை­யும் நோக்கி இடம்
பெ­யர்ந்­த­னர். தமிழ் மக்­களை அர­வ­ணைத்­துச் செயற்­பட வேண்­டிய பொறுப்பு தமிழ்ச்­செல்­வ­னுக்கு சுமை­யா­கியது.

தமிழ்ச்­செல்­வனது எதற்­கும் கலங்­காத நிலைப்பாடும் பிரச்­சி­னை­ க­ளைச் சுமு­க­மாக அணு­கும் திற­னும் இடம்பெ­யர்ந்து சென்ற மக்­க­ளுக்கு ஆறு­தலை அளித்­தி­ருந்­தன. அக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பல வேலைத் திட்­டங்­க­ளுக்­கு அவரே தலைமை தாங்­கி­யி­ருந்­தார். இந்­தக் காலப்­ப­குதி­யில் மிகப்­பெ­ரிய இடப்­பெ­யர்வு , நோய்த்­தாக்­கம், உண­வுப் பிரச்­சி­னை­கள் பின்­னர் ஏற்­பட்ட இயற்கை இடர் உட்­பட இன்­னும் பல்­வேறு பிரச்­சி­னை­கள் தொடர்ந்த வேளை­க­ளில் அத்தனையையும் எதிர்கொண்டு நிறைவேற்றி முடிக்­கின்ற பணி­யும் அவ­ரது கைக­ளிலே தங்­கி­யி­ருந்­தது.

சிங்கள ஆட்சித் தரப்பினரை ஆச்சரியப்பட வைத்தவர்

ஒரு­பு­றத்­தில்­போர், மறு­பக்­கத்­தில் அர­சி­யல்­பணி ஆகி­ய­வற்­றுக்கு மத்­தி­யில் தமிழ்ச் செல்­வன் வன்­னிப் பெரு­நி­லப்­ப­ரப்பை தனது ஆளு­மைக்­குள் கொண்டுவந்து தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­தி­களை ஆச்­ச­ரி­யப்­பட வைத்­தார். தமிழ்ச்­செல்­வ­னின் நிதா­ன­மான போக்கு, மென்­மை­யான அணு­கு­முறை, அவ­ரி­டம் காணப்­பட்ட ஆக்கபூர்வமான சிந்­த­னை­கள், அர­வ­ணத்­துச் செல்­கின்ற மனப்­பான்மை, அவ­ரது மன­தில் எழுந்து வரு­கின்ற கருத்­துக்­கள் யாவற்­றுக்­கும் பொருத்­த­மான தலைவராக விளங்­கி­யி ­ருந்­தார்.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்­னர் அவ­ரது பாதிக்­கா­ல­மா­னது மக்­க­ளோடு மட்­டும் சார்ந்­த­தா­க­வும் அர்ப்­ப­ணிப்­புள்­ள­தா­க­வும் இருந்­தது. மக­ளி­ருக்­கான அர­சி­யல் பிரிவு, அபி­வி­ருத்­திக்­கான வேலைத்­திட்­டங்­கள் அவரால் உரு­வாக்­கப்­பட்­டன.

உல­கில் எவ­ர் தானும், எங்­கி­ருந்துதான் வந்தாலும் வர­வேற்று உள்­வாங்கி தொடர் போரி­னால் தமிழ் மக்­கள்­பட்ட அவ­லத்­துக்­குச் சிகிச்­சை­யாக, புத்­தூக்­க­மாக அதனை மாற்­றிப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய தேவை­யு­மி­ருந்­தது.

சிங்­கள அர­சு­டன் விட்­டுக்­கொ­டுப்பு ­கள் எத­னை­யும் சாதா­ர­ண­மாக தமிழ்ச்­செல்­வன் கையா­ள­வில்லை. இணைந்து செயற்­ப­டு­தல் என்ற போர்­வை­யில் சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளின் மடி­யில் அவர் விழ­வு­மில்லை. கால­டிக்­குப் போக­வு­மில்லை.

விடு­த­லைப் புலி­கள் அமைப்பை ஓர் அர­சி­யல் நீரோட்­டத்­துக்­குள் கொண்டு வரு­வ­தற்கு பன்­னாட்­டுத் தரப்­புக்­கள் விரித்த சதி­வ­லைக்­குள் சிக்­கிக் கொள்­ள­க்கூடும் என்ற போலிக் கன­வை­யும் உடைத்து சிங்­கள அர­சுக்கும் பன்­னாட்­டுக்­கும் தமது நிலைப்பாட் டைத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

பன்­னாட்டு இரா­ஜ­தந்­தி­ரங்­க­ளுக்கு ஈடு­கொ­டுத்து கொள்­கை­யை­யும், இலட்­சி­யத்­தை­யும், தலை­மை­யின் முடி­வு­க­ளை­யும் பாது­காக்­கின்ற இரா­ஜ­தந்­தி­ரப் போரா­ளி­யா­க­வும் செயற்­பட்டு தனித்­தி­ற­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார். தமிழ்ச்­செல்­வ­னி­டம் இரா­ஜ­தந்­தி­ரக் குணா­தி­ச­யங்­கள் இயல்­பா­க­வே­யி­ருந்­தன.

ஜெனிவா பேச்­சு­க­ளி­லும் பங்­கெ­டுத்­த­வர்

இறு­திப் பேச்சு முறி­வ­டைந்த நிலை­யின் பின்­ன­ரான காலத்­தில், ஓர் ஊட­க­வி­ய­லா­ளர் மாநாட்­டில் பன்­னாட்டுச் செய்தி நிறுவனமொன்றின் பிர­பல நிரு­பர் ஒருவர் எழுப்பிய கேள்வி புலி­க­ள் சமா­தா­ன முயற்சிகளைப் போலி­யா­கத்­தான் நடத்­தி­னார்­கள் என்று திரித்து அம்­ப­லப்­ப­டுத்­தும் முயற்­சி­ யா­கவே இருந்­தது. அதற்கு அவர் அளித்த பதி­லா­னது; நீர் குதர்க்­க­மான கேள்­வி­யைக் கேட்­கி­றீர் என்­ப­தைச் சுட்டி சபை­யில் நிரு­பரை அடங்க வைத்த பதிலாக அமைந்தது.

‘‘காட்­டில் வாழும் சிறுத்தை தனது புள்­ளி­களை மாற்­றிக் கொள்­வ­தில்லை என்று ஒரு பழ­மொழி இருக்­கி­றதே? நாங்­கள் இங்கு மனி­தர்­க­ளைப் பற்றித்தான் கதைத்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம். மிரு­கங்­க­ளைப் பற்றி கேள்வி எழுப்ப இது இட­மல்ல’’ என்ற தமிழ்ச்செல்வ னது பதி­லில் அவர் தலை­கு­னிந்­தார்.

தமிழ்ச்­செல்­வன் ஜெனிவா பேச்­சின்­போது அரச தரப்­பி­ன­ரின் போலித் தி­ரை­யைக் கிழித்­தெ­றிந்­தார். ஜெனிவா– 2 பேச்­சுக்கு தமிழ்ச்­செல்­வன் தலைமை தாங்­கி­னார். ஜெனிவா 2 இறு­தி­யாக நடந்த பேச்சு ஆகும். நோர்வே நாட்­டுப் பிர­தி­நி­தி­யான எரிக்­சொல்கெய்ம் தமிழ்ச் செல்­வ­னி­டம் ‘‘நீங்­கள் அடுத்த கட்­டப் பேச்­சுக்கு ஒப்­புக்­கொள்­ளா­வி­டில், பேச்சு முறிந்­த­தா­கவே கரு­தப்­ப­டும். நீங்­கள் இங்­கி­ருந்து நாட்­டுக்­குத் திரும்­பும்­போது உங்­கள் பய­ணத்­தின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த முடி­யாது’’ எனக் கூறி­னார்.

அதற்­குத் தமிழ்ச்­செல்­வன் ‘‘உயிர் அச்­சு­றுத்­தல்­க­ளைக் கொடுத்து விடு­த­லைப் புலி­க­ளைப் பணிய வைக்க முடி­யாது’’ எனப் பதி­ல­ளித்­தி­ருந்­தார். இறு­தி­யில் எரிக்­சொல்­கெய்ம் , ‘‘நீங்­கள் பேச்­சுத் திகதி குறிக்­கா­மல் போவது நல்­ல­தல்ல என அமெ­ரிக்க அரச தலை­வர் ஜோர்ஜ் புஷ் கரு­து­கி­றார்’’ என்­றார்.

அதற்கும் கூட தமிழ்ச்­செல்­வன் சொன்ன பதில் எரிக்­சொல்­கெய்­மை­யும் அங்­கி­ருந்த ராஜ­தந்­தி­ரி­க­ளை­யும் சங்­க­டத்­தில் ஆழ்த்­தி­யி­ருந்­தது. ‘‘நாங்­கள் அமெ­ரிக்க முன்னாள் அரச தலை­வ­ரான வொஷிங்­டன், ஆபி­ர­காம்­லிங்­கன், வுட்­ரோ­வில்­சன் ஆகி­யோர்­க­ளது கருத்­துக்­க­ளில் தான் கரிசனை கொண்டுள்ளோம்’’ எனத் தமிழ்ச் செல்வன் தெரிவித்திருந்தார்.

ஜெனிவா – ௦2 பேச்சுக்கு அரச தரப்­புப் பேச்­சுக் குழு­வி­னர் மகிழ்ச்சியோடு வருகை தந்­தி­ருந்­த­னர். கார­ணம் புலி­க­ளின் தரப்­பில் கலா­நிதி அன்­ரன் பால­சிங்­கம் இல்லை என்ற படி­யால் , புலி­கள் தரப்­பி­னர் பல­மாக இல்லை என்­ப­தாக அரச தரப்­பி­னர் சிந்­தி­த்தி ருக்­கக்­கூ­டும். மேலும் பேச்­சின்
நிகழ்ச்­சி ­நி­ரல் முன்­கூட்­டியே தீர்­மா­னிக்­கப்­ப­டா­மல் நடக்­கும்­போது ஒரு அசா­தா­ரண சூழல் பேச்சாக அது இருக்கும்.

இத­னால் தயார்ப்படுத்­திக் கொண்டு வரு­வ­தற்­கான வாய்ப்­பு­மில்லை.அந்­தப் பேச்சு மேசை­யில் தமிழ்ச்­செல்­வன் கையாண்ட உத்­தி­தான் நியா­யத்தை தமி­ழர் பக்­கம் திருப்பி அரச தரப்பு மேதை­களை தலை­கு­னிய வைத்­தது. முதல்­நாள் கர்­வத்­தோடு வந்த அரச தரப்­பி­ன­ரைப் பேசத்­தூண்டி, அவர்­கள் கையி­ருப்­பில் இருந்த விவா­தத்­தைக்கக்க வைத்து அதற்கு எதிர்­வா­தம் செய்­யாது அக்­க­ருத்­தில் அரச தரப்­பி­னரை நிலை­பெற வைத்து, மறு­நாள் அந்த விவாத்­துக்கு எதிர்­வி­யூ­கம் அமைத்து அரச தரப்பின் திருகுதாளங்களை அம்­ப­லப்­படுத்தி வைத்­தார்.

இவ்வாறான திறமைசாலியை இழந்தமை தமிழ்மக்களின் போராட்ட வர லாற்றில் ஏற்பட்ட பேரிழப்பே.

http://newuthayan.com/story/42664.html

  • கருத்துக்கள உறவுகள்

அட.. உதயனுக்கு தமிழ்ச்செல்வனை ஞாபகம் இருக்குது. tw_blush::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.