Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டைய தமிழனின், கால நீட்டிப்பு கணிதம்.!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23167608_1334959056613594_3322430288446355860_n.jpg?oh=2008dcd793339943eb66546d228eae42&oe=5A65FF0A

என்னே நம் தமிழர்களின் ஒரு கணிதவியல்...

செயற்கைக்கோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர்.
பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாழிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும்.

நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக…்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24*60=1440 ஆகும்.

வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம்

ஆனால் நம்முடைய முன்னோர்கள் எந்த உபகரணங்களும் இல்லாமல் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும், எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டு கூறியுள்ளனர்.

ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலை முதன் முதலில் உலகிற்கு கூறினான் என்றும் நாம் பறைசாற்றிக்கொள்ளலாம்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்

“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு

ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்

பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்

மின்னே விடுபூ முடி “

விளக்கம்:

சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்

ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும்

ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்

பாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது இந்த வாக்கிய கணித முறை தான் சோதிடவியலுக்கு அடிப்படையானதாகும்.


வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

வி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி

டு என்பது ஆனி

பூ என்பது ஆடி

மு என்பது ஆவணி

டி என்பது புரட்டாசி

இது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளை கொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்

மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை

வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே

வ = 1/4 நாழிகை

வா= 1/4 நாழிகை

வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்

இது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது

பகல் நீட்டிப்பு

வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்

ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்

ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்

புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

இரவு நீடிப்பு

கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்

மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்

தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்

மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்

பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

தமிழ் மாதம் :

பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக

வழங்கி வந்தன, அவை :

மேழம் (சித்திரை)

விடை (வைகாசி)

ஆடவை (ஆனி)

கடகம் (ஆடி)

மடங்கல் (ஆவணி)

கன்னி (புரட்டாசி)

துலாம் (ஐப்பசி)

நளி (கார்த்திகை)

சிலை (மார்கழி)

சுறவம் (தை)

கும்பம் (மாசி)

மீனம் (பங்குனி)

  • கருத்துக்கள உறவுகள்

குருகுல முறையில் கல்வி கற்றவர்களுக்கு இவை பரிட்சயமாய் இருந்திருக்கும். நாங்கள் அவற்றில் இருந்து வெகுதூரம் விலகி விட்டோம். ஆயினும் சோதிடக் கல்வியை விரும்பிப் படிப்பவர்களுக்கு இவை நன்றாகப்  புரியும்......!

நல்ல பதிவு தமிழ்சிறி .....!  tw_blush:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.