Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வழக்கை மீண்டும் மாற்றுவதற்கு மேன்முறையீடு செய்ய முடியும்

Featured Replies

வழக்கை மீண்டும் மாற்றுவதற்கு மேன்முறையீடு செய்ய முடியும்

2-2afb7ce66b24c7c96888976c864c97740052e2d8.jpg

 

நீதியமைச்சர் தலதா விளக்கம்
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

சாட்­சி­யா­ளர்கள் தமக்­கான பாது­காப்பு இல்­லை­யென்று கோரி­யதன் கார­ண­மா­கவே வவு­னியா நீதி­மன்­றத்­தி­லி­ருந்து அநு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­திற்கு வழக்கு மாற்­றப்­பட்­ட­தாக சபையில் தெரி­வித்த நீதி அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள வழக்கை மீண்டும் மாற்­று­வ­தற்­காக மேன்­மு­றை­யீடு செய்­ய­மு­டியும் என்றும் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்­க் கி­ழமை நீதித்­துறை, குற்­றச்­செ­யல்­க­ளுக்கு பலி­யாக்­கப்­பட்­டோ­ருக்கும் சாட்­சி­யா­ளர்­க­ளுக்­கு­மான உதவி மற்றும் பாது­காப்பு, குற்­றச்­செ­யல்­களை தடுத்தல் ஆகிய திருத்­தச்­சட்­ட­மூ­லங்கள் மற்றும் உள்­ளூ­ராட்சி அதி­கா­ர­ச­பைகள் விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூலம் ஆகி­ய­வற்றின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சியின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா,

வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்­திற்கு மூன்று தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்கு திடீ­ரென மாற்­றப்­பட்­டுள்­ளது. இதனால் அவர்கள் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­தினை 41 நாட்­க­ளாக தொடர்ந்­தி­ருந்த போதும் அதற்­கு­ரிய தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு திடீ­ரென மாற்­றப்­ப­டு­வ­தற்­கான காரணம் என்ன? தமிழ் அர­சியல் கைதி­களின் விடுதலை தொடர்­பாக அர­சியல் ரீதி­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டிய தரு­ணத்தில் நீதி அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள குறுக்­கீடு செய்தார்.

அச்­ச­ம­யத்தில் இந்த விடயம் சம்பந்­த­மாக சிறு விள­கத்­தினை வழங்­கு­கின்றேன் என்­று­கூறி தொடர்ந்த நீதி அமைச்சர், சாட்­சி­யா­ளர்­களின் கோரிக்­கை­யினால் தான் வழக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. விடு­தலைப் புலிகள் அமைப்பில் இருந்த இருவர் சாட்­சி­யா­ளர்­க­ளாக மாறி­யுள்­ளனர். இவர்­க­ளுக்கு பாது­காப்பு இல்­லை­யென்றே வழக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. இவர்கள் விடுத்த வேண்­டு­கோளை பரி­சீ­லித்து சட்­டமா அதிபர் வழக்கை மாற்ற நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார். ஒப்­புக்­கொள்ளக் கூடிய தரப்பின் அனு­ம­தி­யுடன் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருப்­ப­வர்கள் வழக்கை மீண்டும் வவு­னி­யா­வுக்கு மாற்­று­மாறு மேன்­மு­றை­யீடு செய்ய முடியும்.

மேலும் நாடு முழு­வ­தி­லு­முள்ள சிறைச்­சா­லை­களில் 17 அர­சியல் கைதி­களே இருக்­கின்­றனர். இதில் 10 பேர் தமி­ழர்­க­ளா­கவும் 7 பேர் சிங்­க­ள­வர்­க­ளா­கவும் உள்­ளனர். இவர்­களில் 12 பேர் புதிய மகசீன் சிறைச்­சா­லை­யிலும், 4 பேர் திரு­கோ­ண­மலை சிறைச்­சா­லை­யிலும், ஒருவர் மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லை­யிலும், ஒருவர் மொன­ரா­கலை சிறைச்­சா­லை­யிலும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர் என்றார்.

இதன்­போது டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி, தற்­போது நிலை­மைகள் மாற்­ற­ம­டைந்து விட்­டன. பாது­காப்புப் பிரச்­சி­னையை காரணம் காட்­டு­வது பொருத்­த­மற்­றது. சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு அர­சாங்கம் பாது­காப்­பை வழங்க முடியும். திடீ­ரென வழக்கை மாற்­றி­ய­மையால் அந்த மூன்று பேருக்கும் சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­வ­தி­ல் பிரச்­சி­னைகள் உள்­ளன. ஆகவே பாது­காப்­பை சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு வழங்கினால் பிரச்சினைகள் இல்லையல்லவா? என் றார்.

இதன்போது மீண்டும் நீதி அமைச்சர் தலதா, இந்த விடயம் சம்பந்தமாக மேன்முறையீடு செய்யமுடியும் என்று

முன்னர் அளித்த பதிலையே வழங்கி னார். அதனையடுத்து டக்ளஸ் எம்.பி தாங்கள் இந்த விடயம் தொடர்பில் கவ

னம்செலுத்தி சாதகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச் சரிடத்தில் கோரினார். 

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.