Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா ஆதரவாளர்கள் வீடுகளில், வருமான வரி சோதனை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டர்கள் சந்தேகம்

கருணாநிதி-மோடி சந்திப்பு.. சசிகலா ஆதரவாளர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு.. என்னமோ இடிக்குதே?

திமுக தலைவர் கருணாநிதியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து சென்ற ஒரு சில நாட்களில் சசிகலா குடும்பத்தாரை ஐடி ரெய்டுகள் சுற்றி வளைத்துள்ளதை திமுகவினர் சிலர் பெருமையாக பேசுவதை கேட்க முடிகிறது.

தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் பங்கேற்க, கடந்த திங்கள்கிழமை சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, திடீரென கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு திமுகவினருக்கே ஆச்சரியம் ஏற்படுத்தியது.

தொண்டர்கள் சந்தேகம்:  இந்த நிலையில், இன்று சசிகலா குடும்பத்தாருக்கு தொடர்புள்ள மற்றும் அவரின் ஆதரவாளர்கள் என மொத்தம் 90 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றுக்கொண்டுள்ளது. இது திமுக தொண்டர்கள் சிலருக்கே வேறு வகை சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

திமுகவுக்கு தொல்லையில்லை:  மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக இருந்தபோதே 2011ல் கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடைபெற்றது. ஆனால் இப்போது என்னதான் பாஜகவை திமுக எதிர்த்தாலும் திமுகவுக்கோ, அதை சார்ந்தவர்களுக்கோ ஐடி மற்றும் சிபிஐ தரப்பு எந்த நெருக்கடியும் தரவில்லை.

அதிமுகவினரே இலக்கு:  அதேநேரம், தொடர்ச்சியாக ஆளும் அதிமுக அரசுடன் தொடர்புள்ளவர்களே ரெய்டுகளுக்கு உள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக, தினகரன் மற்றும் சசிகலா தரப்புதான் பாதிக்கப்படுகிறது. நேரடியாகவே இம்முறை தினகரன், சசிகலா ஆகியோரின் வீடுகளில் ரெய்டுகள் நடைபெற்றுள்ளன.

திமுகவினர் மகிழ்ச்சி:  கருணாநிதியை மோடி சந்தித்தது, ஸ்டாலின் அவரை அன்போடு வரவேற்றது என இவை அனைத்தையும் பொருத்திப் பார்த்து சில திமுகவினர் மகிழ்ச்சியடைவதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

கள நிலவரம்:  இந்த ரெய்டுக்கும், கருணாநிதியுடனான மோடி சந்திப்புக்கும் தொடர்பு இல்லை என்று கள நிலவரங்கள் கூறுகின்றன. அப்படி தொடர்பிருந்தால் ஆளும் கட்சி பிரமுகர்கள் வீடுகளில்தானே ரெய்டு நடந்திருக்கும், ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுப்பவர் வீடுகளில் ஏன் ரெய்டுகள் நடக்கின்றன என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

- நன்றி தற்ஸ் தமிழ். -

 

################# ######################  ###################

Sasikala supporters raised slogans against Modi Where IT raid is going inside TTV Dinakaran residencce.

தினகரன் வீட்டுக்குள்,  தோண்டித் துருவும் அதிகாரிகள்...   வெளியே ஓங்கி ஒலிக்கும், மோடி எதிர்ப்பு கோஷம்!

அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் வீட்டிற்கு வெளியே பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டனர்.

அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகள் உள்பட 190 இடங்களில் வருமானவரித்துறையினர் காலை முதல் வருமான வரி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக சசிகலா தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. வருமானவரி சோதனை நடப்பதையொட்டி தினகரன் அவசரமாக தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வருமான வரி சோதனை நடப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் வீட்டிற்கு வெளியே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். பழிவாங்கும் விதமாகவே வருமான வரி சோதனை நடப்பதாக தினகரன் வீட்டின் முன்பு திரண்ட ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.

- நன்றி தற்ஸ் தமிழ். -

IT raid in Sasikala's relative Krishnapriya

இதுதான் ரெய்டுக்குள்ளான இளவரசி மகள் வீடு.. பரோலில் வந்த சசிகலா இங்குதான் தங்கியிருந்தார்!

கணவர் நடராஜனை பார்க்க பரோலில் வந்த சசிகலா தங்கியிருந்த இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் சென்னை தி.நகர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.

கணவர் நடராஜன் உடல் நிலை பாதிக்கப்பட்டு காரணமாக சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் உறுப்பு தான மையத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருந்தார். பின்னர் சில நாள்கள் கழித்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கணவரைப் பார்க்க பரோல் கோரி சசிகலா விண்ணப்பித்திருந்தார். பரோலில் வந்த சசிகலா எங்கு தங்குவது என்ற கேள்வி எழுந்தபோது, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

IT raid in Sasikala's relative Krishnapriya

5 நாள்கள் பரோல் பெற்ற சசிகலா, தி.நகரில் உள்ள கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்து மருத்துவமனைக்கு சென்று வந்தார். இந்நிலையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இன்று அதிகாலை 8 பேர் கொண்ட குழுவினர் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

ஜெயா டிவியானது தினகரன் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் சசிகலாவின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதில் பரோலில் வந்து சசிகலா தங்கியிருந்த கிருஷ்ணப்ரியா வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது.

இதேபோல் அடையாறில் உள்ள தினகரன் வீடு, மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் வீடு, மன்னார்குடியில் உள்ள திவாகரன் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.

- நன்றி தற்ஸ் தமிழ். -

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தம் மோடி அரசு பழிவாங்குவது என்றால் வருமானவரி ஆட்க்களை அனுப்பி வைப்பது அதுக்கு மற்றதுகளும் சுருட்ட தெரிந்த கொள்ளைக்காரர்களுக்கு ஒளிச்சு வைக்க தெரியாமல் வரிசையா பிடிபடுவது உதைக்குதே .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த பதட்டமும் இல்லாமல், சிரித்தபடி   பேட்டி கொடுத்த தினகரன்.

//எங்கள் குடும்பத்தில்,  85-வயது பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை உள்ளோம். நாங்கள் யாருக்கும் அஞ்ச மாட்டோம்//

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விலக்கப்பட்ட தினகரன்

தினகரனின், முகம்... அழகு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.