Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதய பூமி... இறுதிப் போரின் தொடக்கப் புள்ளியா?

Featured Replies

இதய பூமி... இறுதிப் போரின் தொடக்கப் புள்ளியா?

நோர்வே அனுசரணையாளர்கள் இன்னமும் சமாதானக் களத்தில் இருக்கிறார்களென்பதை உலகிற்கு நினைவூட்ட, தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

தற்போதைய களநிலவரம் குறித்து புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சலிப்புறாமல் நீண்ட விளக்கமொன்றை அவருக்கு அளித்துள்ளார்.

மட்டக்களப்பு எறிகணைச் சம்பவத்தின் பின் வருத்தத்தையும் கவலையையும் தெரிவித்த புலிகள், அரசியல் ரீதியில் பலவீனமானதொரு நிலையில் இருப்பதாக கற்பிதம் கொள்வதால், இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

இனியொரு பேச்சுவார்த்தையை எங்கிருந்து ஆரம்பிப்பது என்கிற சிக்கலான நிலைமைக்குள் அனுசரணையாளர்கள் புதையுண்டு போயுள்ளனர்.

மணலாறு களமுனையிலிருந்து பாரிய படைநகர்வொன்றினை இராணுவம் முன்னெடுக்கவிருப்பதாகப் பெற்ற தமது உளவுத் தகவல் குறித்து தூதுவரிடம் புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவின் தென்பகுதியான மணலாற்றில் அரசு யுத்தத்தை ஆரம்பித்தால், முழு அளவிலான போரொன்று வெடிப்பதற்கான சாத்தியப்பாடுகளை அது ஏற்படுத்துமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நோர்வேயினூடாக சர்வதேசத்திற்கு கூறப்பட்ட செய்தியாக இது அமைந்துள்ளது.

யாழ். குடாவை நோக்கிய புலிகளின் வலிந்த தாக்குதலை திசை திருப்புவதற்காகவே மணலாற்று களத்தினை திறப்பதற்கு அரசு அவசரப்படுகிறது.

வவுனியாவிலிருந்து நகர்வுகளை மேற்கொண்டால், இன்னுமொரு நீண்ட ஜெயசிக்குறு சமராக அது மாறக்கூடிய வாய்ப்புக்கள் தென்படுவதால், முல்லைத்தீவின் மையப் பகுதிக்கு அண்மித்துள்ள மணலாற்றிலிருந்து வலிந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவே இராணுவம் விரும்புகின்றது.

முல்லைத்தீவினை மீட்டெடுக்க புலிகள் நடத்திய ஓயாத அலைகள் ஒன்றில் அவர்களிற்கான சாதகமான களநிலைமைகள், மணலாற்றிலிருந்து புறப்படும் இராணுவத்திற்கு பொருத்தமானதாக இருக்காது.

முதல் நகர்வினை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தின் இரண்டாவது மீட்பு நகர்வும் புலிகளால் முன்பு முறியடிக்கப்பட்டது.

தற்போது இராணுவ ஆயுதக் களஞ்சியத்தில் பல்குழல் எறிகணை என்ற இராணுவச் சாதனம் மட்டுமே புதிய இணைவாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் புலிகளின் அதிகரித்த படை வலுவினை எடைபோடும் பரீட்சார்த்தக் களமாக மணலாறு அமையுமென்கிற அரசின் இராணுவ மயப்பட்ட எதிர்பார்ப்பானது பரீட்சையை ஆய்வு செய்யும் காலத்தை அவர்களுக்கு வழங்காதென்பதே நோர்வேயின் கிளிநொச்சிச் சந்திப்பில் வெளியான விடயமாகும்.

அதேவேளை இன்னுமொரு இராணுவ ஊகத்தினையும் மேற்குறிப்பிடப்பட்ட நகர்வுகளோடு இணைத்துப் பார்க்கலாம். மன்னாரை நோக்கிய புலிப் பாய்ச்சல் நிகழ்த்தப்பட்டால் படையினரின் நகர்வு இரு திசையிலிருந்து வெளிக் கிளம்பலாம். கிளாலியூடாக பூநகரியை நோக்கியும், வவுனியாவிலிருந்து மன்னாரை நோக்கிய பிறிதொரு முன்னகர்வும் ஏக காலத்தில் முன்னெடுக்கப்படலாம்.

ஆயினும் மணலாற்றினை முதன்மைத் தெரிவாக இராணுவம் எடுத்துக்கொண்டால் புலிகள் பிறிதொரு களமுனையை நிச்சயம் திறப்பார்கள். ஆனையிறவுச் சமர் வழங்கிய, களநிலை யதார்த்தப்பட்டறிவு அதற்கான புதிய உத்திகளை புலிகளுக்கு வகுத்துக் கொடுக்கும்.

முழு வன்னி நிலப்பரப்பையும், பெட்டி வடிவ வியூகச் சித்திரத்துள் அடக்கி, அவ்வடிவத்துள் அடங்கும் நான்கு முனைகளான நாகர்கோவில், பூநகரி, வவுனியா, மணலாறு என்கிற மையங்களிலிருந்து இராணுவம் தனது உபாயங்களை வகுத்து தாக்குதலைத் தொடுத்தால், பெரிய பெட்டி உடைந்து, சிறிய பெட்டிகளை முற்றுகைக்குள்ளாகும் நிலை உருவாகலாம்.

முகமாலையில் புலிகளால் பிரயோகிக்கப்பட்ட பெட்டி கட்டித் தாக்கும் உத்திகள், பரந்த நிலப் பிரதேசத்திற்கு பொருத்தமானதாக அமையாதென்பதை இராணுவம் உணரவில்லை.

மன்னார், வவுனியாவிலிருந்து நகர்த்தும் படையணிகள், புலிகளின் பின்தளத்தை அடைய எடுக்கும் நீண்ட காலத்தைவிட மணலாற்றிலிருந்து புறப்படும் இராணுவம் குறுகிய காலத்துள் அதன் இலக்கினை அடையலாமென்ற தூரக் கணிப்பொன்றை இராணுவ உயர்பீடம் வகுத்துள்ளது.

இராணுவ வியூக உத்தியில், குறுந்தூர இலக்குகளை இலகுவில் அடையலாமென்கிற கற்பிதங்களை அரசு ஏற்றுக்கொண்டால், முகமாலையிலிருந்து புறப்பட்ட இராணுவம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்திருக்கும்.

மூர்க்கமான தற்காப்பு யுத்தத்தை நடத்த வேண்டிய நுழைவாசல் பற்றிய தீர்க்கமான புரிதல் புலிகளுக்கு உண்டென்பதையே முகமாலை முறியடிப்புச் சமர் எடுத்துக் காட்டுகிறது.

வாகரைக்கும் முகமாலைக்கும் இடையே தென்படும் வேறுபட்ட அணுகுமுறையில் இருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். மணலாற்றுக் களமுனையை இன்னுமொரு முகமாலையாகவே புலிகள் கருதுவார்கள். ஓயாத அலைகள் ஒன்றின் இரண்டாம் பாகத்தை புலிகள் எழுதும்போது ஓயாத அலைகள் நான்கிற்குரிய தளப் பரிமாணம் பிரகடனப்படுத்தப்படுமென்பதை முன்கூட்டியே நோர்வேக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

முகமாலை போன்று, தாக்குதல்களின் பின் புலிகள் தமது முறியடிப்புச் சமரினை நிறுத்துவார்களென்று கருதி, மணலாற்றின் மீது வலிந்த தாக்குதலைத் தொடுத்தால் அதன் தொடர் விளைவுகளை எதிர்கொள்ளும் இராணுவ தந்திரோபாயம் அரசிடம் இருக்க வேண்டும்.

அவை இல்லாதவிடத்து, வன்னியின் தென்முனையிலுள்ள இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை அரசு இழப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமுண்டு.

இதய பூமி (மணலாறு) கைமாற்றப்பட்டால் திருமலையின் தலைவிதியை புலிகளே தீர்மானிக்கும் காலம் உருவாகும்.

மணலாற்றுப் படை நகர்வில், இராணுவமானது பெரும் இழப்பினை எதிர்கொண்டால், தொடரும் நிகழ்வுகள் பல பிரதேச இழப்புகளுக்கு கால்கோள் இட்டது போன்று அமைந்து விடும்.

நோர்வேயூடாக மணலாற்று நகர்வு பற்றிய செய்தி, புலிகளால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் இராணுவம் தனது மாற்றீட்டு உத்தியினை பிரயோகிக்க முனையலாம்.

வவுனியாவின் மாமடுக் களமுனையினூடாக படையெடுப்பினை ஆரம்பிப்பது போன்றதொரு காட்சியை ஏற்படுத்தி, மணலாற்றினூடாக தமது மூலத் தெரிவினை முன்னெடுக்கலாம்.

இங்கு குறிப்பிடத்தக்க விடயமென்னவென்றால் புதிய சமர்களை எதிர்கொள்ளப் போகும் விடுதலைப் புலிகளின் படையணித் தளபதிகள், நீண்டதொரு களமுனை அனுபவங்களை உள்வாங்கியவர்கள் என்பதை புரிதல் வேண்டும்.

இவர்களோடு பல களங்களில் மோதிய இராணுவத் தளபதிகள் பலர் இன்று ஓய்வு பெற்றுள்ளார்கள். புலிகளின் புதிய படைவலுவோடு மோதுவதற்கு புதிய இராணுவத் தளபதிகளே களமிறங்கவுள்ளார்கள்.

மணலாறு, தொப்பிக்கல என்கிற பிரதேசம் பற்றிய மிதந்திருக்கும் ஊகச் செய்திகளில் தொப்பிக்கலயை நோக்கிய நகர்வொன்றினை இராணுவம் ஆரம்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மணலாற்றுத் தாக்குதலுக்கு முன்பாக புலிகளைத் திசை திருப்பும் நகர்வாகவும் இதனை நோக்கலாம். கும்புறுப்பிட்டியில் புலிகளின் தளங்கள் பலவற்றை அழித்ததாக போடப்பட்ட நாடகத்தின் பிரதியாக்கத்தை தொப்பிகலயிலும் அரசு அரங்கேற்றும்.

கிழக்கை புலிகளிடமிருந்து மீட்டு, துணைவர்களின் கையில் ஒப்படைத்து, தனது இராணுவ ஆளணி வளங்களை வடக்கு நோக்கி நகர்த்தும் தந்திரோபாயமாகவே அரசின் போரியல் பரிமாணத்தை புரிந்து கொள்ளலாம்.

இராணுவத்தின் சமகால நகர்வுகளை உற்று நோக்கினால், பின் தளங்களில் குவிந்திருந்த வளங்கள் அனைத்தும் முன்னரங்க நிலைகளை நோக்கி குவிக்கப்படுவதைக் காணலாம்.

மாங்குளச் சமரில் கட்டளைத் தளபதியின் இழப்போடு, படைகள் சிதறியோடிய சம்பவத்தை மறு ஆய்வு செய்தால், அவ்வாறான களநிலை உருவாக்கம், பரந்த அளவில் மறுபடியும் உயிர்ப்பிக்கும் ஏது நிலைக்கான வாய்ப்புண்டு.

நன்றி தமிழ்நாதம்

  • கருத்துக்கள உறவுகள்

''நோர்வே அனுசரணையாளர்கள் இன்னமும் சமாதானக் களத்தில் இருக்கிறார்களென்பதை உலகிற்கு நினைவூட்ட தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்."

நாங்கள் எங்கபக்கம் இருக்கிற பிரச்சினையை மட்டும் சிந்திக்காமல் நோர்வேயின் இக்கட்டான நிலையையும் கொஞ்சம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது தான் எனது கருத்து.

இன்று எமது பிரச்சினைகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்துக்கள் போன்றவை சர்வதேச நாடுகளுக்கு தெரியப் படுத்துவதெல்லாம் நோர்வே மூலம் தான் என்பதை நாம் மறக்ககூடாது. இப்படிப்பட்ட பல காரணங்களினால் தான் சிங்களவர்கள் நோர்வையை வெறுக்கின்றார்கள்

என்பதும் உண்மை.

அடுத்ததாக நோர்வேயின் அண்மைய கிளிநோச்சி நோக்கிய பயணமானது விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நகர்வுகளை உலகுக்கு தெரிவிப்பதிற்கு ஒரு சந்தர்ப்பமாக தமிழர் தரப்பு தகுந்த முறையில் பயன்படுத்தியுள்ளது என்பது ஒரு மகிழ்சியான விடயம்.

அதாவது இனிமேல் தாங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றோம் என்றும் அந்த சந்தர்ப்பத்தில் உலக நாடுகள் என்ன செய்ய வேனும் என்ன செய்ய கூடாது என்பதையும் தெளிவாகவும் உறுதியாகவும் தெரியப் படுத்தியிருக்கிறார்கள்.

இங்கே ஒன்று மட்டும் தெட்டத் தெளிவாக தெரிகிறது அதாவது போர் மேகம் வெகு விரைவாக சூழ்ந்து கொண்டிருக்கிறது என்பது.

அடுத்ததாக விடுதலைப்புலிகள் தங்களது பாவித்த போர் யுக்த்திகளை மீண்டும் திரும்ப பாவிப்பதில்லை என்பதை நான் சொல்லித்தான் அறியவேண்டியதும் இல்லை. இதில் என்னுமொரு விடயத்தை நாங்கள் கவனமாக நோக்க வேண்டியுள்ளது, அதாவது புலிகளைப் பொறுத்தவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கள் செயல்களிற்கு கால எல்லை கூறுவதில்லை ஆனால் இப்போது அடிக்கடி ஒரு கருத்தை கூறுகிறார்கள். அதாவது இனியொரு யுத்தம் ஆரம்பித்தால் அது பிரிந்து சென்று தனியரசு அமைப்பதிற்கான இறுதி யுத்தமாகத்தான் அது இருக்கும் என்று. இதிலிருந்து அவர்களின் படைப்பலத்தில் நாம் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லையென்று கூறிக்கொண்டு தற்காலிகமாக விடைபெறுகின்றேன்

Edited by Valvai Mainthan

:lol: இராணுவம் மீண்டும் தொடங்கி தொங்கப்போற புள்ளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.