Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டாட்சியை குழப்புமா சீற்றம்?

Featured Replies

கூட்டாட்சியை குழப்புமா சீற்றம்?

திடீரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு ஞானம். அது பயத்தின் வெளிப்பாடு என்றும், தனது கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடப்பாடு என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கமீது ஏற்பட்ட குரோதம் என்றும், தேர்தலை இலக்குவைத்த நகர்வுகள் என்றும் பல விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.

அதற்கேற்றாற்போல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது வியூகங்களை மிகவும் ஆக்ரோஷமாக, தான் பங்கேற்கும் ஒவ்வொரு மேடைகளிலும் வெளிப்படுத்தி வருகின்றார். இத்தனை காலமும் நல்லாட்சி அரசு ஐக்கிய தேசியக் கட்சியினுடையது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம்,
"நிறைவேற்று ஜனாதிபதி நானே என்றும் எனது ஆட்சிதான் இங்கு நடக்க வேண்டும்'' என எண்ணும் தோரணைதான் அவரின் பேச்சில் வெளிப்பட்டது.மாதுலுவாவே சோபித தேரரின் இரண்டாவது வருட நினைவுதினத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல உண்மைகளை மிகவும் காரசாரமாக எடுத்துக்கூறியிருந்தார்.
"பெற்றோல் தட்டுப்பாடு விவகாரத்தினால் அனைவரும் என்னை நிந்திக்கின்றனர்; எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு நானே பெற்றோல் பகிர்வதாக நினைத்துக்கொண்டுள்ளனர்;
வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு ஒன்று இடம்பெற்றாலும் என்னையே நிந்திக்கின்றனர்; நானே சென்று குளிசைகள் வழங்குவதாகவும் அவர்களின் கற்பனை உள்ளது'' எனத் தெரிவித்தார்.

உண்மையிலேயே வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கும், பெற்றோல் தட்டுப்பாட்டுக்கும் தனிப்பட்ட வகையில் ஜனாதிபதியை மட்டும் குறைகூறிவிடமுடியாது. ஆனால், சாதாரண மக்களுக்கு அடிப்படையான தெளிவு இல்லாதபோது நிறைவேற்று ஜனாதிபதி என்ற பெரும் ஆளுமையில் உள்ளவரின் மீது குற்றம் சுமத்துவது சாதாரணமான விடயம். தேசிய கூட்டாட்சிக்குள் என்னை மட்டும் எல்லாவற்றுக்கும் குறைகூறாதீர்கள் எனும்போது எவரிடம் நாம் சென்று எமது குறைகளைக் கூறுவது என்ற சந்தேகமும், நல்லாட்சி அரசில் ஜனாதிபதியின் கட்டளைக்கு அடிபணியாத அமைச்சுக்குழு ஒன்று இருப்பதுவும் அம்பலமாகியுள்ளது.
எனக்கு எவரும் கட்டுப்படுவதில்லை என்ற விடயத்தை இப்படி சுற்றி வளைத்து கூறியிருக்கிறார் மைத்திரி. அடுத்ததாக "தவறிழைப்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படல் வேண்டும் ஆனால், இங்கு அது நடைபெறுவதில்லை. இதுவே பிரச்சினையாகக் காணப்படுகின்றது. நான் அமைச்சரவையில் கதைக்கின்ற விடயங்கள் அமைச்சர்களுக்குத் தெரியும். பிணைமுறிகள் மோசடி குறித்து நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் சில தரப்பினர் எனக்கு எதிராக செயற்படுகின்றனர்'' என்ற கருத்தையும் அவர் தெரிவித்திருந்தார்.

பிணைமுறி ஆணைக்குழுவின் சூட்சுமம்:

இவை நல்லாட்சி அரசுக்கு சாவு மணியடிக்கக்கூடிய விடயங்கள். காரணம், நல்லாட்சி அரசின்மீது ஓரளவேனும் நம்பிக்கைகொள்ள பிணைமுறி விசாரணை ஆணைக்குழு பெரும் பங்காற்றியிருந்தது. பிணைமுறி ஆணைக்குழுவை நியமித்தது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான். உண்மையிலேயே தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் இந்த ஆணைக்குழுவுக்கு மட்டும்தான் உள்ளது என்றுகூடக் கூறலாம். இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட உதலாகம ஆணைக்குழுவாகட்டும், காணாமல் போனோரைக் கண்டறிவதற் கான ஜனாதிபதி ஆணைக்குழு வாகட்டும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவாகட்டும் இவை அனைத்துமே எந்த நோக்கத்துக்காக அமைக்கப்பட்டனவோ அந்த நோக்கத்தை அடையவே இல்லை.

பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மாத்திரமே தெளிவாக குற்றவாளிகள் யார் என்பதை அடையாளம் காட்டும் இயலுமை உள்ளதாகப் பலரும் நம்புகின்றனர். ரவி கருணாநாயக்க எம்.பியின் பதவி விலகல், ஐக்கிய தேசியக் கட்சியின்மீது ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள், மத்திய வங்கி மீது நம்பிக்கை இழந்தமை என இவையெல்லாம் வெறுமனே உள்நோக்கத்துக்காக நடந்தவை எனக் கூறிவிடமுடியாது. தண்டனை செய்தவர்கள் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும்.

ஆனால், தற்போது பிணைமுறி விசாரணைகள் கூட்டரசுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளன. நல்லாட்சி அரசு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பிரதமர் ரணிலின் கையே ஓங்கியிருந்தது. இதனை அமைச்சுப் பதவிகளை பிரதமர் வழங்கியதிலிருந்தே உணரமுடிந்தது. பிணைமுறி ஆணைக்குழு இவைகளுக்கு அப்பால் சென்று ஐக்கிய தேசியக் கட்சியையே ஆட்டங்காண வைத்துள்ளது. நேரடியாகவே மத்திய வங்கி பிணைமுறி விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசிம், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ளவர்களாக இருக்கும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு என்னதான் சுயாதீனமானதாக இயங்கினாலும் அது ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானதாகவோ அல்லது பக்கச்சார்பானதாகவோதான் பிறருக்குத் தெரியும்.

கூட்டரசு என்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கவேண்டிய தேவையோ அல்லது குற்றம் புரிந்தவர் களைப் பாதுகாக்கவேண்டிய தேவையோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடையாது. அப்படியான சூழலில் கூட்டரசு தெளிவான முரண்பாட்டுக்குள் தற்போது சிக்கிக்கொண்டுள்ளது.

தேர்தல் வியூகங்கள்:

நல்லாட்சி அரசு சந்திக்கின்ற இன்னுமொரு மிகப்பெரிய சவால் தேர்தலை எவ்வாறு முகங்கொடுப்பது என்பதுதான். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. தேர்தல் ஒன்று நடக்குமாயின் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியே வெல்லக்கூய சாத்தியம் அதிகமுள்ளது. காரணம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பின்வரிசை மற்றும் அடிமட்டத் தொண்டர்களில் 90 சதவீதமானோர் தற்போது மஹிந்த பக்கம் தாவிவிட்டனர்.

இப்படியிருக்கும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டியதேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது. யுத்தக்குற்ற விசாரணை, வடக்குக்கான முன்னுரிமை போன்றன தொடர்பில் நல்லாட்சி அரசு கரிசனைகொள்ளுமா யின் அது நிச்சயம் பெரும்பான்மையின மக்களின் வாக்குகளுக்கு, தான் வைத்துக்கொள்ளும் சூனியமாகிவிடும் என்பதை அறிந்த ஜனாதிபதி, பெரும்பான்மையின மக்களுக்காக ஏதேனுமொரு விடயத்தை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பதுவும் அவரின் அண்மையகால உரைகளின்மூலம் தெளிவாக விளங்கியது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடும் ஒரு மாற்றுக்கட்சி தற்போதைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாக இருக்க முடியாது. அவ்வளவு பெரிய நம்பிக்கையை கட்சி உறுப்பினர்கள் வைத்துள்ளார்களா என்பதுவும் சந்தேகமே. இதன்காரணமாகத்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஓரங்கட்டும் வியூகங்களும் தீட்டப்படுகின்றன.

இராணுவத்தைப் பாதுகாக்க நினைப்பது ஏன்?

"நாட்டின் தலைவராக நான் இருக்கும் வரையில் எந்தவொரு போர் நீதிமன்றத்திலும் இராணுவ வீரர்களை நிறுத்த இடமளிக்கமாட்டேன் எனவும் அப்படியே தவறு செய்த இராணுவத்தினரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக இருந்தால், நாட்டின் சட்டங்களுக்கமைவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உலகின் எந்தவொரு மனித உரிமை அமைப்பும், எந்த விதத்திலும் இலங்கை இராணுவத்தைக் கட்டுப்படுத்த அனுமதி வழங்கப்படாது'' என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்திருந்தார்.

அதுமட்டு மல்லாது, "யுத்த வீரர்களின் வெளிநாட்டு நுழைவிசைவுகள் எதிர்காலத்தில் நிராகரிக்கப்படாது என்றும், தங்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எந்தத் தடங்கலும் ஏற்படாமல் உதவுவோம் '' என்றும் இராணுவத்தினருக்கு நம்பிக்கை வழங்கியிருந்தார். இப்படியிருக்கும்போது, ,வடக்கு மக்களும் சர்வதேசமும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியான விசாரணை மற்றும் அரசியல் தீர்வு விடயங்களை எதிர்பார்த்திருக்கின்றபோது அம்மக்களை எல்லாம் எரிச்சலுக்குள்ளாக்கும் வகையிலேயே ஜனாதிபதியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

யுத்தக்குற்றம், காணி விடுவிப்பில் அழுத்தம், வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைப்பு, வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பிண்னனியில் இராணுவம் என எத்தனையோ குற்றச்செயல்கள் இராணுவம் மீது சுமத்தப்பட்டுக்கொண்டிருக்கையில், மனிதாபிமானத்துடன் அல்லது அனைத்தின மக்களதும் ஒருமைப்பாட்டைப் பாதிக்காத வகையில் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்திருக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது.

ஆனால், எவர் மீதும் தங்கியிருக்காது தன்னிச்சையான முடிவை எடுக்கக்கூடிய ஆளுமையாக மைத்திரிபால சிறிசேன தற்போது மாறியிருப்பதாகவும் அது ஊழல்களுக்கும் காட்டிக்கொடுப்பு களுக்கும் கடிவாளமிடக்கூடிய விடயமாக அமையும் எனவும் பலரும் கருதுகின்றனர்.
மைத்திரி ரணில் முரண்பாடு
மைத்திரி ரணில் முரண்பாடு கடந்த இரு மாதங்களில் மிகவும் உக்கிரமடைந்துள்ளது. அவர்களுக் கிடையில் பல தடவைகள் மூடிய அறையில் பேச்சுகள் நடைபெற்றுள்ளன. ரணிலை பெயர் குறிப்பிட்டு திட்டாத ஒரு குறை மட்டுமே உள்ளது. அதற்கப்பால் நல்லாட்சி அரசின் சில அமைச்சர்கள் தொடர்பிலும் ஆட்சியில் உள்ளவர்களது செயற்பாடுகள் தொடர்பிலும் வெளிப்பபடையான தனது ஆவேசத்தை மைத்திரி வெளிப்படுத்திவிட்டார் என்றே கூறவேண்டும்.

ரணிலைக் காட்டிக்கொடுக்கும் தோரணையில் மைத்திரி செயற்படுகின்றார் என விமர்சித்தாலும் குற்றஞ்செய்தது ரணிலானாலும் சரி, வேறு யாரானாலும் சரி நிச்சயம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். ஆனால், தேர்தல் காலம் என்பதாலும் கட்சியைப் பலப்படுத்தவேண்டிய கட்டாயம் இரு தலைமைகளிடமுமே காணப்படுகின்றமையாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியதாகத் தென்படவில்லை. தனக்கு எதிரான பலமான அணியாக மஹிந்த உருவாகியிருப்பதும், நல்லாட்சி அரசை நம்பி கால்பதித்த மைத்திரிக்கு தற்போது கூட்டரசுக்குள்ளேயே உருவாகியுள்ள காழ்ப்புணர்ச்சிகளும் அவரைப் பித்துப்பிடிக்க வைத்திருக்கும்.
ஆனால், இந்த விடயங்கள் எல்லாம் சிறுபான்மையினரைக் கவலைப்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதோடு, அனைத்து இன மக்களதும் பொதுவான தலைமையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட வேண்டும்.

இராணுவத்திரை ஓர் அரச தலைவராகப் பாதுகாக்க வேண்டியது அவசியமான விடயமெனினும், விசாரணைகளுக்குக்கூட உட்படுத்தக்கூடாது என வீம்பாக நிற்பது மைத்திரியையும் அடிப்படைவாதியாக அல்லது இனவாதியாக அடையாளப்படுத்திவிடக் கூடாது.

கட்சியைப் பாதுகாக்கவேண்டியது அவரது கடமை. அதற்காக ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாதொழித்து காட்டிக்கொடுப்புகளை மேற்கொண்டு அரசியல்வாதிகளை வளைத்துப்போட வேண்டுமென நினைப்பதுவும் முட்டாள்தனம். ஆனாலும், நேர்மையான அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள இது காலமல்ல. போட்டா போட்டிகளுக்காக இரு தலைமைகளும் முட்டிமோதிக்கொள்ளாது நல்லாட்சி அரசு என்ன நோக்கத்துக்காகத் தனது பயணத்தை இணைந்து ஆரம்பித்ததோ அதனை இடையில் முறித்துக்கொண்டு செல்லும் அளவுக்கு பிரச்சினைகளை இழுத்துச் செல்லாமல் குற்றவாளிகளைக் களைந்து நேர்மையான கூட்டரசு வெற்றிநடை போட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Bild könnte enthalten: 2 Personen, Text

http://www.sudaroli.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.