Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தரை பச்சை குத்திய பெண்ணுக்கு நட்ட ஈடு; அரசுக்கு மீயுயர் நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

புத்தரை பச்சை குத்திய பெண்ணுக்கு நட்ட ஈடு; அரசுக்கு மீயுயர் நீதிமன்றம் உத்தரவு

 

 

புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்டதற்காக தடுத்து வைக்கப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு ஐந்து இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்குமாறு அரசுக்கு மீயுயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1_Tattoo.jpg

நயோமி கோல்மன் என்ற பிரித்தானிய சுற்றுலாப் பயணியான பெண் அண்மையில் இலங்கை வந்திருந்தார். அவரது கையில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி கட்டுநாயக்க பொலிஸார் அவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்தனர்.

மீயுயர் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதன் தீர்ப்பு இன்று (15) வழங்கப்பட்டது.

நயோமி புத்தரின் உருவத்தைப் பச்சை குத்திக்கொண்டது அவரது அடிப்படை மனித உரிமை என்றும், அவரைக் கைது செய்ததன் மூலம் அவரது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றும் கூறிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, நயோமிக்கு நட்ட ஈடாக ஐந்து இலட்ச ரூபாவையும், வழக்குக்காக அவர் செலவிட்ட இரண்டு இலட்ச ரூபாவையும் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், நயோமியை கைது செய்த கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் தலா ஐம்பதாயிரம் ரூபாவை நயோமிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/27081

  • தொடங்கியவர்

"இலங்கைக்கு இனி ஒருபோதும் வரமாட்டேன்"

 

 

தனது கையில் புத்­த­பெ­ரு­மானின் உரு­வத்தை பச்சை குத்­தி­யி­ருந்த நிலையில் இலங்­கைக்கு வரு­கை­தந்த சமயம் கட்­டு­நா­யக்க விமா­ன­நி­லை­யத்தில் கைது­செய்­யப்­பட்டு, அங்கு மிகவும் தரக்­கு­றை­வாக நடத்­தப்­பட்ட பிரித்­தா­னியப் பெண், தான் இனி ஒரு­போதும் இலங்­கைக்கு வரப்­போ­வ­தில்லை எனத் தெரி­வித்­துள்ளார்.

நயோமி மைக்கல் கொல்மன் என்ற குறித்த பிரித்­தா­னியப் பெண் தனது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­ட­தாகக் கூறி தாக்கல் செய்த வழக்கில் அவ­ருக்கு ரூபா 6இலட்சம் நஷ்­ட­ஈடும்  2இலட்சம் வழக்­கு­செ­லவு தொகையும் வழங்கக் கூறி உச்­ச­நீ­தி­மன்றம் அண்­மையில் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது.

wld.jpg

 பிரிட்டிஸ் பெண்­ணான கொல்மன், ஹோக்ஸ்பர் லொட்ஜ் என்ற இடத்தைச் சேர்ந்த புனர்­வாழ்வு உள­நல மருத்­துவ சேவைகள் நிறு­வ­னத்தில் தாதி­யாக பணி­பு­ரிந்து வரு­கின்றார். 

சம்­பவம் நிகழ்ந்த 2014ஆம் ஆண்டு அவர் சட்ட மாஅ­திபர், பொலிஸ் சார்ஜன்ட் உப­சேன, குரு­ணாகல் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுர­வீர, நீர்­கொ­ழும்பு சிறைச்­சாலை பொறுப்­ப­தி­காரி, பொலிஸ் மாஅ­திபர், குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­கள கட்­டுப்­பாட்­டாளர் சூளா­னந்த டி சில்வா ஆகி­யோரை பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பிட்டு தனக்கு பத்து மில்­லியன் ரூபா இழப்­பீடு வழங்­கும்­படி தனது மனுவை சமர்ப்­பித்­தி­ருந்தார். 

கொல்­ம­னுக்­காக விஷ்வா டி லிவேரா தென்­னக்­கோனின், ஆலோ­ச­னையின் கீழ் ஜே.சீ வெலி­ய­முன உடன் புலஸ்தி ஹேவ­மான ஆகிய இரு­வரும் ஆஜ­ரா­கி­னார்கள். 

தான் ஒரு அர்ப்­ப­ணிப்­பு­ட­னான பௌத்தர் எனவும் நேபாளம், தாய்­லாந்து, கம்­போ­டியா மற்றும் இந்­தி­யாவில் தியான நிகழ்­வு­களில் தான் பங்­கு­பற்­று­வ­தா­கவும் ஒரு காணிக்­கை­யா­கவும் தன்­னு­டைய அர்ப்­ப­ணிப்பின் ஒரு வெளிப்­பா­டா­கவும் தாமரை மலரில் அமர்ந்­துள்ள புத்­தரின் உரு­வத்தை தனது வல­து­புற மேற்­பு­ஜத்தில் பச்­சை­குத்தி உள்­ள­தா­கவும் மனு­தா­ரரின் மனுவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

மேலும் தான் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வந்­தி­றங்கி தனது பயணப் பொதி­களைப் பெற்றுக் கொள்ள முயற்­சிக்­கையில், தன்னை அணு­கிய டெக்ஸி சாரதி ஒருவர், தனது கரத்தில் காணப்­படும் புத்தர் உருவம் இலங்­கையில் ஆட்­சே­ப­னைக்­கு­ரி­ய­தாக இருக்­கலாம் எனத் தெரி­வித்தார் என்றும் அவர் கெலும் சமிந்த என பின்னர் அடை­யாளம் காணப்­பட்­ட­தா­கவும் அவ­ருடன் சிவில் பாது­காப்புப் படைப்­பி­ரிவைச் சேர்ந்த ஒரு­வரும்  இணைந்து கொண்­ட­தா­கவும் அவர் தனது மனுவில் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும், அவர்கள் தன்னை கட்­டு­நா­யக்க பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துச் சென்­ற­தை­ய­டுத்து பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி தனது கட­வுச்­சீட்டைப் பறி­முதல் செய்­த­தா­கவும் எனினும், தன்னிடம் வாக்­கு­மூலம் எதுவும் பெறப்­ப­ட­வில்லை என்றும் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டு பின்னர் தடுத்து வைக்­கப்­பட்­டதாகவும், தான் எதற்­காக தடுத்துவைக்கப்பட்டேன் என்று தனக்கு விளக்­க­ ம­ளிக்­கப்­ப­ட­வில்லை எனவும் கொல்மன் தனது மனுவில் தெரி­வித்­துள்ளார். 

மேலும், அவர் தனக்கு பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­கரை சந்­திக்க சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் தனது கைது பற்றி உயர்ஸ்­தா­னி­க­ருக்கு தெரி­விக்­கப்­பட்­டதா? என்­பது தனக்கு தெரி­விக்­கப்­ப­ட­வில்லை எனவும் முறை­யிட்­டுள்ளார். 

சிறைச்­சா­லையில் காவலர் ஒரு­வ­ரினால் தனக்கு ஒரு சட்­டத்­த­ரணி அறி­முகம் செய்து வைக்­கப்­பட்டார். எனினும் எந்­த­வித ஆலோ­ச­னை­களும் வழங்­க­வில்லை எனவும், அதற்­காக தான் ரூபா 5000 செலுத்த வேண்டி இருந்­த­தெ­னவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

தான் நீதி­மன்­றத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த போது அங்கு பொறுப்­பாக இருந்த காவலர் ஒருவர் கீழ்த்தர­மான, ஆபா­ச­மான, வெளிப்­ப­டை­யான பாலியல் ரீதி­யான கருத்­துக்­களைத் தெரி­வித்து தன்னைக் கேவ­லப்­ப­டுத்­தி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

மேற்­படி காவலர் தனக்கு "ஜிகி ஜிகி" தேவை­யெனக் குறிப்­பிட்­ட­தோடு, நாக்கை நீட்டிக் காட்­டு­வது உட்­பட பல்­வேறு பாலியல் சமிக்­ஞை­களைப் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் செய்­த­தா­கவும் கொல்மன் குறிப்­பிட்­டுள்ளார். 

தனது வழக்கு பி.ப 2.30 மணி­ய­ளவில் கூப்­பி­டப்­பட்­ட­தா­கவும் எனினும், வழக்கு நட­வ­டிக்­கைகள் ஆங்­கி­லத்தில் மொழி பெயர்க்­கப்­ப­டா­ததால் வழக்கு நடை­மு­றை­களைத் தன்னால் புரிந்து கொள்ள முடி­ய­வில்லை எனவும் தான் பேச அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை எனவும் அவர் முறை­யிட்­டுள்ளார்.

வழக்கின் முடிவில் அவ­ரது வேண்­டு­கோள்கள் எவையும் பொருட்­ப­டுத்­தப்படாமல் தான் நாடு­க­டத்­தப்­பட இருந்­த­தா­கவும் தன்னை மாலை­தீ­வுக்­கு ­செல்ல அனு­ம­திப்­ப­தாக தனது சட்­டத்­த­ரணி தன்­னிடம் தெரி­வித்­த­தாகவும் கூறிய கொல்மன், அதன்­பின்னர் தான் நாடு­க­டத்தல் நிலையம் ஒன்றில் காவல் வைக்­கப்­பட்­ட­தா­கவும் கூறினார். 

தன்­னு­டைய வழக்கு, சட்­டத்தின் எந்த ஏற்­பாட்டின் கீழ் தான் கைது செய்­யப்­பட்டு குற்­றஞ்­சாட்­டப்­பட்­டா­ரெ­னவோ தண்­டனைக்குள்­ளாக்­கப்­பட்டு காவலில் வைக்­கப்­பட்டு நாடு­க­டத்­தப்­பட்­டமை குறித்தோ தனக்கு எந்­த­வித விளக்­கமும் அளிக்­கப்­ப­ட­வில்லை எனவும் கொல்மன் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும், சிறைச்­சாலை பெண்­கா­வலர் ஒருவர் ரூ.10,000 தன்­னிடம் கேட்­ட­தா­கவும் தன்­னு­டைய கைய­டக்கத் தொலை­பே­சியை எடுத்துச் செல்ல முயற்­சித்­த­தா­கவும் அவர்  குறிப்­பிட்­டுள்ளார்.

தன் முழு உடம்­பையும் பெண் சிறைச்­சாலை அதி­கா­ரி­யொ­ருவர் பரி­சோ­தனை செய்­த­தா­கவும் சுமார் அறு­பது பெண் சிறைக்­கை­தி­க­ளுடன் தான் படுத்­து­றங்­கி­ய­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

 அவ­ரு­டைய கட­வுச்­சீட்டு, குடி­வ­ரவு, குடி­ய­கல்வு அதி­கா­ரி­யொ­ரு­வ­ரினால் மீண்டும் பறி­முதல் செய்­யப்­பட்­ட­தாக தெரி­வித்த அவர், பல வேண்­டு­கோள்­க­ளுக்குப் பின் தன்னை உயர்ஸ்­தா­னி­க­ருடன் தொடர்­பு­கொள்ள அனுமதித்ததாகவும் அதன் பின்னர் தன்னை மீரிஹானை குடியகல்வு தடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் சென்று இருநாட்கள் வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இழப்பீடு வழங்குவது குறித்த தீர்ப்பையடுத்து ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய கொல்மன், ''இத்தீர்ப்பு தனக்கு அதிர்ச்சியளித்ததாகவும் பல முயற்சிகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும்'' தெரிவித்துள்ளார்.

தான் உண்மையாக பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர் எனவும் தெரிவித்த அவர், இனியொருபோதும் இலங்கை வரும் எண்ணம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

http://www.virakesari.lk/article/27225

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ இந்தப்பெண் புத்தமதம் என்றால் அமைதி, சமாதானம் என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார். புத்தர் பேரால் நாட்டில் இரத்த ஆறு ஓடியதை கேள்விப்பட்டிருக்கவில்லைபோலும். இதோடு புத்தருக்கு முழுக்கு போட்டிட வேண்டியதுதான். புத்தமதம் என்றால் எளியவர், ஏழைகளை அடக்கி, ஒடுக்கி, இருப்பிடத்தை விட்டு விரட்டி, வெட்டி  வெளிப்படுத்தினால் அது புத்தமதம். நல்ல வடிவாக புத்த மதத்தை இந்தப் பெண்ணுக்கு போதித்திருக்கிறார்கள் புத்தரின் அடியார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.