Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டு அர­சும் தமி­ழர்­க­ளுக்கு வேட்டு அரசா?

Featured Replies

  • கூட்டு அர­சும் தமி­ழர்­க­ளுக்கு வேட்டு அரசா?
கூட்டு அர­சும் தமி­ழர்­க­ளுக்கு வேட்டு அரசா?
 
 

கூட்டு அர­சும் தமி­ழர்­க­ளுக்கு வேட்டு அரசா?

 
 
 

நாட்­டின் அரச தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் 9ஆம் திகதி மூன்­றாண்­டு­கள் நிறை­வு­பெ­ற­வுள்­ளது.

இந்த மூன்று வருட காலப்­ப­கு­திக்­குள் கூட்டு அர­சின் நிர்­வா­கத்­தில் தமிழ்­மக்­கள் நிம்­ம­தி­யாக வாழ்ந்­தார்­களா? என்ற வினா­வுக்கு இல்லை என்­று­தான் பதில் கூற முடி­யும்.

மைத்­திரி அரசு தமிழ் மக்­க­ளுக்கு பெரும் ஏமாற்­றத்­தையே தந்து கொண்­டி­ருக்­கின்­றது என்­பதே இன்­றைய யதார்த்த உண்மை.

கூட்டு அர­சின் ஆட்­சி­யும் மகிந்­த­வைப் போன்­றதே

மைத்­தி­ரி­யின் கூட்டு ஆட்­சி­யில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு சம்­ப­வங்­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. மகிந்த ராஜ­பக்ச அர­சின் காலத்­தில் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருந்­ததைப் போலவே மைத்­திரி அர­சி­லும் அவை தொட­ரு­கின்­றன.

விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முன்­னாள் போரா­ளி­கள், தள­ப­தி­க­ளின் கைது­கள், மத்­திய கிழக்கு நாடு­க­ளில் வேலை வாய்ப்­புக்­கா­க­வும் புலம் பெயர்ந்­தும் வாழ்­ப­வர்­கள் சுதந்­தி­ர­மாக கட்­டு­நா­ய­கக்க விமான நிலை­யம் ஊடா­கப் பய­ணிக்க முடி­யா­த­நிலை என்பன தற்போதும் நிலவுகின் றன.

மத்­திய கிழக்கு நாடு­க­ளில் வேலை­வாய்ப்­புக்­கா­கச் சென்­ற­வர்­க­ளும் ஐரோப்­பிய நாடு­க­ளில் புலம் பெயர்ந்து வாழ்­ப­வர்­க­ளும் நாடு திரும்­பிய சந்­தர்ப்­பங்­க­ளில் கடந்த ஆட்­சி­யில் இடம்­பெற்­ற­தைப்­போல் சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­யப்­பட்டு நான்­காம் மாடி­யி­லும் ஏனைய சிறைச்­சா­லை­க­ளி­லும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மைத்­திரி நாட்­டின் அரச தலை­வ­ரா­கப் பத­வி­யேற்று மூன்று மாத­கா­லப்­ப­கு­திக்­குள் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளி­லி­ருந்து ஆரம்­ப­மாகி, படை­யி­ன­ரின் துப்­பாக்­கிச் சூட்­டுக்கு இலக்­காகி இளை­ஞர்­கள் படு­கொலை செய்­யப்­ப­டு­கின்ற சம்­ப­வங்­கள் இன்­றைய அர­சின் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் தமிழ்­மக்­க­ளுக்கு எதி­ரான அச்­சு­றுத்­தல்­க­ளா­க­வே­யுள்­ளன.

தமிழ் மக்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக அரச படை­யி­னர் உள்­ள­னர்

யாழ். குட­நாட்­டில் பொலி­ஸார், இரா­ணு­வம், விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரின் பிர­சன்­னம் ஆகி­யன தமிழ் மக்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது. சிவில் நட­வ­டிக்­கை­க­ளுக்­குள்­ளும் அவர்­க­ளின் தலை­யீ­டு­கள் பெரு­ம­ள­வில் இடம்­பெ­று­கின்­றன.

அவ­ச­ர­கா­லச் சட்­டத்­தைச் சேர்த்து வைத்­துக் கொண்டு கூட்டு அரசு இணக்க ஆட்சி, தேசிய ஆட்சி, என்­றெல்­லாம் வியாக்­கி­யா­னம் பேசு­வ­தன் மூலம் முழு உல­கத்­தையே ஏமாற்றி வரு­கின்­றது.

மகிந்த ஆட்­சி­யின்­போது தமிழ்ப் பிர­தே­சங்­க­ளில் நில­விய பார­தூ­ர­மான சிரம நில­மை­க­ளில் எதை­யுமே ஒரு முடி­வுக்கு இன்­றைய கூட்டு ஆட்சி கொண்டு வர­வில்லை என்ற கடும் விமர்­ச­ னங்­களை பன்­னாட்டு தரப்­புக்­கள் பல கோணங்­க­ளில் முன்­வைத்து வரு­கின்­றன.

தமிழ்­மக்­க­ளும் பல­த­ரப்­பட்ட தமது நியா­ய­மான கோரிக்­கை­க­ளோடு வீதி­க­ளில் நின்று அற­வ­ழிப் போராட்­டங்­களை இன்று வரை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

இரா­ணு­வக் கெடு­பி­டி­க­ளி­ல்­இருந்து இன்­ன­மும் விடு­ப­டாத நிலை­யி­லும், சுத்­த­மான நிலத்­தடி நீரைக்­கூ­டத் தமது சொந்­தக் கிண­று­க­ளி­ல்­ இருந்து பெற்­றுக் கொள்­ள­மு­டி­யாத சூழ்­நி­லை­யி­லும் தமிழ்­மக்­கள் அவ­தி­யுற்று வரு­கின்­ற­னர்.

வடக்கு – கிழக்­குப் பகு­தி­க­ளில் இரா­ணுவ முகாம்­க­ளைக் குறைப்­பது, படை­யி­ன­ரின் எண்­ணிக்­கை­யைக் குறைப்­பது குறித்து கூட்­டாட்சி அரசு எள்­ள­வே­னும் சிந்­திப்­ப­தும் இல்லை.

அர­சி­யல் கைதி­க­ளுக்கு விடி­வில்­லாத நிலை

சிறைச்­சா­லை­க­ளில் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமிழ்க் கைதி­கள் கடந்த மூன்று வரு­ட­ கா­லத்­தில் பொது மன்­னிப்பு வேண்­டித் தங்­க­ளது உணவு ஒறுப்­புப் போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தா­லும், கூட்டு அர­சி­னால் அவர்­க­ளின் விடு­தலை சம்­பந்­த­மாக துரி­த­மான நட­வ­டிக்­கை­யெ­டுக்க இய­லாது போயுள்­ளது.

படைத்­த­ரப்­பி­னால் போர் முடி­வுக்­குக் கொண்டு வரப்­பட்ட பின்­னர் சர­ண­டைந்த புலி­க­ளின் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு என்ன நடந்­தது? காணா­மல் போனோர்­க­ளின் உற­வு­கள் அவர்­க­ளைக் கண்­ட­றிந்து தரு­மாறு வேண்டி மகிந்த அர­சி­ட­மும் உரத்­துக் குரல் கொடுத்­தமை போன்றே மைத்­திரி அர­சி­ட­மும் கோரிக்கை முன்­வைத்து இரவு பக­லாக பல போராட்­டங்­களை நடத்­திக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள்.

ஆனால் கூட்டு அரசு அவர்­க­ளது கோரிக்­கை­க­ளுக்கு எந்­த­வி­த­மான பதி­லை­யும் உறு­தி­யா­கத் தெரி­விக்­காது ஏமாற்றி வரு­கின்­றது.

தலைமை அமைச்­ச­ரின் பொறுப்­பற்ற பதில்

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­னர் ஒரு தடவை ‘‘காணா­மல் போனோர்­கள் என்று கரு­தப்­ப­டு­ப­வர்­கள் வெளி­நாடு தப்­பிச்­சென்­றி­ருக்­க­லாம்’’ என்று பொறுப்­பற்ற விதத்­தில் பதில்­கூறி காணா­மல் போனோர்­க­ளின் உற­வு­க­ளின் மன­தில் ஆழ­மான காயங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் தமிழ்­மக்­க­ளின் பூர்­வி­க­மான நிலங்­கள் அப­க­ரிக்­கப்­பட்டு சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளும், புத்­தர் சிலை­களை நிறு­வு­த­லும், பௌத்த விகா­ரை­களை நிறுவு­வ­தி­லும் மைத்­தி­ரி­யின் ஆட்­சி­யி­லும் சர்­வ­சா­தா­ர­ண­மாக நடை­பெற்று வரு­கின்­றன.

இரா­ணு­வத்­தி­ன­ரின் பக்­க­ப­ல­மும், ஆத­ர­வும் அவற்­றுக்கு முழு­மை­ யா­கக் கிடைக்­கின்­றன.

வட­கில் தலை­தூக்­கும் பௌத்த கலா­சா­ரம்

யாழ்ப்­பா­ணத்­துக்­கான முக்­கிய நுழை­வா­யி­லான நாவற்­கு­ழி­யில் பௌத்த விகாரை நிறு­வும் முயற்­சி­ யில் அரசு ஈடு­பட்டு வரு­கின்­றது. இரா­ணு­வத் தள­ப­தி­யான ஒரு­வர் இதற்­கான அத்­தி­பா­ரக்­கல்லை நட்டு­வைத்­துள்­ளார்.

நயி­னா­தீவு கடற் பரப்­பில் மிக உய­ர­மான புத்­தர் சிலையை நிறு­வு­வ­தற்­கான பெரு முயற்­சி­களை நயி­னா­தீவு பௌத்த விகா­ரை­யின் பீடா­தி­பதி செய்து கொண்­டி­ருக்­கின்­றார்.

திருக்­கே­தீஸ்­வ­ரத்­தில் புத்­தர்­சிலை ஏற்­க­னவே திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. வடக்­கை­யும் பௌத்த கலா­சா­ர­மாக மாற்­றி­ய­மைக்­கின்ற திட்­டத்­தில் மைத்­திரி அரசு தானும் சளைத்­தது அல்ல என்­ப­தை­யும், தனது பௌத்த சிங்­கள மேலா­திக்க நிலைப்­பாட்­டால் மற்­ற­வர்­க­ளுக்கு நிரூ­பித்து வரு­கின்­றது.

அரச தலை­வ­ரும் இந்த விட­யத்­தில் நேர­டி­யா­கத் தலை­யிட்டு அவற்றை தடுத்து நிறுத்த இய­லாத கையறு நிலை­யில் உள்­ளார்.

போர் முடி­ வுற்று எட்டு ஆண்­டு­கள் முடி­வ­ டைந்­த­தும் தங்­கள் பூர்­வீக நிலங்­க­ளுக்­குத் திருப்­பிச் சென்று நிம்­ம­தி­யான வாழ்க்­கை­யைத் தொட­ர­மு­டி­யாது இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்­கள் தவிக்­கின்­ற­னர்.

போர் முடி­வ­டைந்து எட்டு ஆண்­டு­கள் கழிந்­தும், போரி­னால் பாதி।க்­கப்­பட்ட மக்­க­ளின் வாழ்க்­கை­யில் எந்த வித முன்­னேற்­றத்­தை­யும் காண, ஏற்படுத்த முடி­ய­வில்லை.

குறிப்­பாக வன்­னிப்­பி­ர­தே­சத்­தைச் சேர்ந்த மக்­கள் போர் நட­வ­டிக்கை கார­ண­மா­கப் பெரி­தும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­க ­தா­கும்.

பாதிக்­கப்­பட்ட மக்­கள் பொரு­ளா­தார ரீதி­யா­கவோ, வேறு வழி­க­ளிலோ முன்­னேற்­று­வ­தற்­கான மார்க்­கங்­கள் போது­மான அளவு இல்­லாத நிலையே தொடர்ந்து வரு­கின்­றது.

போர் முடிந்த பின்­னர் ஏற்­பட்ட அமை­தி­யைத்­த­விர வேறு எத­னை­யும் காண­மு­டி­யாது தமிழ் மக்­கள் வெறுப்­புற்­றுள்­ள­னர். தமிழ்ப் பகு­தி­க­ளுக்கு அரச தலை­வர் தொடக்­கம் சகல அமைச்­சர்­க­ளும் அடிக்­கடி வந்து செல்­கின்­ற­னர்.

ஆனால் இவர்­க­ளில் எவ­ரா­லும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்­க­மு­டி­ய­வில்லை.

தமி­ழர்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­சினையேனும் கூட்டு அர­சால் தீர்க்­கப்­ப­ட­வில்லை

இன்­றைய மைத்­திரி – ரணில் கூட்டு அர­சி­லும் தமிழ்­மக்­கள் தொடர்ச்­சி­யா­கப் பல்­வேறு அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளான நிலை­யில் அதி­லி­ருந்து மீள முடி­யா­த­வர்­க­ளாக இருந்து வரு­கின்­ற­னர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­கள் தீர்த்து வைக்­கப்­ப­டா­மல் இருப்­ப­த­னால் அவர்­கள் இந்த அரசின் மீது அதி­ருப்­தி யுடனும் பெரும் மன உளைச்­சல்­க­ளு­டனும் காணப்­ப­டு­கின்­ற­னர் என்று சுட்­டிக் காட்­டப்­ப­டு­கின்­றது.

போர் கார­ண­மாக அங்­க­வீ­ன­ம­டைந்­த­வர்­கள், வித­வை­கள், போரா­ளி ­க­ளின் குடும்­பங்­கள், பெற்­றோரை இழந்த பிள்­ளை­கள் போன்­ற­வர்­க­ளின் பிரச்­சி­னை­கள் இன்­றும் துன்­ப­க­ர­மா­ன­தா­கவே இருக்­கி­றது.

குறைந்த பட்­சம் தமிழ்­மக்­க­ளின் இன்­றைய அடிப்­ப­டைப் பிரச்­சி­னை க­ளை­யே­னும் கூட்டு அரசு தீர்த்து அவர்­கள் மத்­தி­யில் நம்­பிக்­கை­யைக் கட்­டி­யெ­ழுப்ப முன்­வ­ரா­தமை தமிழ் மக்­கள் மத்­தி­யில் மைத்­திரி அரசு மீதான நம்­பிக்­கையை சித­ற­டித்து வரு­கின்­றது.

கடந்த வரு­டம் முல்­லைத்­தீவு கொக்­குத்­தொ­டு­வாய் பகு­தி­யில் அத்­து­மீறி கடற்­தொ­ழி­லில் ஈடு­பட்டு வந்த தென் னி­லங்­கை­யைச் சேர்ந்த மீன­வர்­க­ ளி­டம் தக­வல் சேக­ரிக்­கச் சென்ற அப்­ப­குதி கிராம அலு­வ­லர் குறித்த மீன­வர்­க­ளால் தாக்­கப்­பட்­டி­ருந்­தார்.

மீன­வர்­க­ளின் தக­வ­லை­ய­டுத்து அவ்­வி­டத்­துக்கு விரைந்து வந்த இரா­ணு­வத்­தி­னர் குறித்த கிராம அலு­வ­லரை மிக­வும் தரக்­கு­றை­வாக நடத்­தி­யி­ருந்­த­னர்.

இரா­ணு­வப் பிர­சன்­னம் முல்­லைத்­தீ­வில் அதி­கம்

முல்­லைத்தீவு மாவட்­டத்­தில் பொது­மக்­க­ளில் இரு­வ­ருக்கு ஒரு இரா­ணு­வச் சிப்­பாய் என்ற அடிப்­ப­டை­யில் இரா­ணு­வப் பிர­சன்­னம் அதி­க­ரித்­துள்­ளது என்று வடக்­கு­மா­கா­ண­சபை உறுப்­பி­ன­ரான வ.ரவி­க­ரன் வடக்கு மாகா­ண­ச­பை­யின் 108ஆவது அமர்­வின்­போது சுட்­டிக் காட்­டி­யி­ருந்­தார்.

வடக்­கில் சிவில் நிர்­வா­கமா? அல்­லது இரா­ணுவ ஆட்­சியா நடை­பெ­று­கின்­றது என கடந்த வரு­டம் எப்­ரல் மாதத்­தில் வடக்கு மாகா­ண­ச­பை­யில் கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­டி­ருந்­தன.

கடந்த வரு­டம் ஒக்­டோ­பர் மாதம் கொக்­கு­வில் காங்­கே­சன் துறை­வீ­தி­யில் இரவு நேரம் இரண்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் பொலி­சா­ரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்­த­னர்.

அண்­மை­யில் வட­ம­ராட்­சி­யில் ஒரு இளை­ஞ­னும், அரி­யா­லை­யில் மற்­று­மொரு இளை­ஞ­னும் படை­யி­ன­ரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

கடந்த மாதம் அரி­யாலை மணி­யம் தோட்­டப்­ப­கு­தி­யில் சுட்­டுக்­கொல்­லப் பட்ட இளை­ஞ­ரின் சாவு சம்­பந்­த­மாக விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னர் மீது பலத்த சந்­தே­கங்­கள் எழுந்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாது­காப்­புப் படை­யி­ன­ரையோ, முகாம்­க­ளையோ எக்­கா­ர­ணம் கொண்­டும் வட­ப­கு­தி­யில் இருந்து அகற்­ற­மு­டி­யாது என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவான் விஜ­ய­ வர்த்­த­னவும், வடக்கு– கிழக்­கில் இருந்து இரா­ணுவ முகாம்­களை துரித கதி­யில் அகற்­று­வது பொருத்­த­மற்ற விட­யம் என இரா­ணு­வத் தள­ப­தி­யான லெப்­டி­னன்ட் ஜென­ரல் மகேஷ் சேன­நா­யக்­க­வும் ஒக்­டோ­பர் மாத இறு­தி­யில் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

கடும்­போக்கு இருந்­தால் நல்­லி­ணக்­கம் ஏற்படாது

அர­சைப் பொறுத்த வரை­யில் தமி­ழர் விவ­கா­ரம் தொடர்­பில் இத்­த­கைய கடும் போக்­கு­களே தொடர்ந்து கொண்­டி­ருப்­ப­த­னால் உண்­மை­யான நல்­லி­ணக்­கம் எப்­படி ஏற்­ப­டும்? தமிழ்­தே­சி­யக் கூட்­ட­மைப்­பி­ னர்­க­ளும் இந்­தப் பிரச்­சி­னை­கள் சம்­பந்­த­மா­கப் பல தடவை நாட­ளு­மன்­றத்­தில் எடுத்து விளக்­கி­யி­ ருந்­த­னர்.

மைத்­திரி தலை­மை­யி­லான கூட்டு அரசு தமிழ்­மக்­க­ளு­டன் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென அரச தலை­வ­ரா­கப் பத­வி­யேற்­ற­பின்­னர் மைத்­திரி தெரி­வித்­தி­ருந்­தார்.

அப்­போது பன்­னாட்­டுச் சமூ­கம் அத­னைப் பாராட்­டி­யி­ருந்­தது. ஆயி­னும் அவர் வழங்­கிய அந்த உறு­தி­மொ­ழி­கள் இன்­று­வரை செயல்­வ­டி­வம் பெற­வில்லை. தமி­ழர்­கள் தமது அர­சி­யல் உரி­மை­க­ளுக்­கப்­பால் தமது அடிப்­படை உரி­மை­க­ளுக்­கா­கப் போராடி வரு­கின்­ற­னர்.

ஆனால் இவற்­றில் எது­வும் நிறை­வே­றாத தொன்­றா­கவே இருக்­கின்­றது. தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் இன்று எவர் மீது நம்­பிக்கை வைப்­பது என்று தெரி­யாத நிலை­யில் தர்­ம­சங்­க­டத்­துக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­ற­னர். மொத்­தத்­தில் கூட்டு அர­சும் தமிழ் மக்­க­ளுக்கு வேட்டு அர­சா­கவே மாறி­யுள்­ளது.

 

http://newuthayan.com/story/48592.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.