Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாபய விரைவில் கைது செய்யப்படுவார்...மஹிந்த ராஜபக்ஸ

Featured Replies

கோட்டாபய விரைவில் கைது செய்யப்படுவார்...மஹிந்த ராஜபக்ஸ
 

image_e6202d4be5.jpgமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவை விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகந்ததாச விளையாட்டரங்கில் இன்று(21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசுக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"தற்போதைய அரசு பலிவாங்கும் நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்றால் அவர்களின் முதலாவது இலக்கு தான் என்றும்,அதற்கு பிறகு குடும்ப உறுப்பினர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும்"  மஹிந்த தெரிவித்துள்ளார்.

"எனவே வெகுவிரைவில் கோட்டாபயவை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,அரசு மற்றும் அரசமைப்புக்கு எதிராக 'வெளிச்சம்'அமைப்பினால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடலை தடுக்கும் முகமாகவே அரசு  கோட்டாபயவை கைது செய்ய முயல்வதாகவும்"மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கோட்டாபய-விரைவில்-கைது-செய்யப்படுவார்/175-207654

  • தொடங்கியவர்

“பிணைமுறி விவகாரத்தை மறைக்க ராஜபக்ச கைதாகலாம்”

 

 

“தன் மீது சுமத்தப்படும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை மறைக்க, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரேனும் ஒருவரை விரைவில் கைது செய்ய நல்லாட்சி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

8_Bandula.JPG

கூட்டு எதிரணி சார்பில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதைத் தெரிவித்தார். அப்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

“பிணைமுறி விவகாரம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. இந்த நிலையில் அரசிடம் நாம் இரண்டு கோரிக்கைகளை விடுக்கிறோம்.

“ஒன்று, பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட உடனேயே அதன் முழுமையான நகல் ஒன்று சபாநாயகருக்கு கையளிக்கப்பட வேண்டும். 

“இரண்டாவது, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் அது குறித்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவாக நடத்தி முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். இவ்விரு கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.

“பிணைமுறி விவகாரத்தில் அரசு தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இவ்விவகாரம் மீதான அவதானத்தை திசை திருப்புவதற்காக, மிக விரைவில் ராஜபக்ச குடும்பத்தில் எவரேனும் ஒருவரைக் கைது செய்யுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

“இதன்படி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ச அல்லது பசில் ராஜபக்ச என்று யாரேனும் ஒருவரை கைது செய்யுமாறும் அவருக்கு பிணை வழங்காது சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்றும் அரசு திட்டமிட்டுள்ளது.” 

இவ்வாறு பந்துல குணவர்தன தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/27310

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.