Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர்களுக்கு நாசா அறிவித்தல்

Featured Replies

இலங்கையர்களுக்கு நாசா அறிவித்தல்

 

சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கை வான்பரப்பில் தென்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

International-Space-Station.jpg

சர்வதேச விண்வெளி நிலையம் இன்று மாலை இலங்கை வான்பரப்பினூடாக இலங்கையை கடந்து செல்லவுள்ளது.

இன்று மாலை 6.25 மணியளவில் இலங்கையின் தென்மேற்கு திசையில் குறித்த சர்வதேச விண்வெளி நிலையமானது பயணிக்கவுள்ளதாகவும் 5 நிமிடங்களே அது பயணிக்கவுள்ளதாகவும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையர்கள் வெற்றுக்கண்களால் பார்வையிட முடியுமென நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27350

இன்று மாலை இலங்கை வான்பரப்பில் தெரியும் அதிசயம்; வெற்றுக் கண்களால் அவதானிக்கலாம்

இன்று மாலை இலங்கை வான்பரப்பில் தெரியும் அதிசயம்; வெற்றுக் கண்களால் அவதானிக்கலாம்

 

 
 
 
நாசாவின் சர்வதேச விண்வௌி மையத்தை இன்று இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.25 மணியளவில் இலங்கையர்கள் இதனை விண்ணில் அவதானிக்கலாம் என்று நாசா விண்வௌி ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது அதிக பட்சமாக ஐந்து நிமிடங்கள் மாத்திரமே தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் அல்லது மிகவும் பிரகாசமான நட்சத்திரம் ஒன்று நகருவது போன்று சர்வதேச விண்வௌி மையத்தை அவதானிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சாதாரணமாக விமானம் ஒன்று மணித்தியாலத்துக்கு 965 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என்பதுடன், சர்வதேச விண்வௌி மையம் மணித்தியாலத்துக்கு 28,000 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என்று நாசா விண்வௌி ஆய்வு மையம் கூறியுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=97713

  • தொடங்கியவர்

இலங்கை வான்பரப்பில் பறந்த சர்வதேச விண்வெளி நிலையம் - காணொளி

 

http://www.hirunews.lk/tamil

  • தொடங்கியவர்

இலங்கையைக் கடந்த சர்வதேச விண்வெளி நிலையம் 

 

 

சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கையை நேற்று புதன்கிழமை மாலை 6:25 க்கு கடந்துள்ளது. 

naasa.jpg

குறித்த சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையர்கள் வெற்றுக்கண்களினால் அவதானிக்க முடிந்தது.

மனிதரினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சர்வதேச விண்வெளி நிலையமானது, பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள, மிக விசாலமான சர்வதேச சொத்தென விண்வெளி மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது,

ISS003.jpg  

108 மீற்றர் விசாலமான இந்த விண்வெளி நிலையமானது, பூமியிலிருந்து 408 கிலோமீற்றர் உயரத்தில் உள்ளது.

சர்வதேச விண்வெளி கலத்தை வெற்றுக்கண்களினால் பார்வையிடுவதற்கு, இலங்கையர்கள் நேற்றையதினம் சந்தர்ப்பம் கிடைத்ததுடன், மாலை 6:25 மணிமுதல் ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே தென்பட்டுள்ளது.

ISS-001.jpg

வெளிச்சத்துடன், இலங்கையின்  கிழக்கு திசையில் மிகவேகமாக, அது நகர்ந்துசென்றுள்ளது. 1998 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்தின் அந்த கலத்தில், ஒரு தடவையில் அறிவியலறிஞர்கள் அறுவர் மட்டுமே ஆராய்ச்சிகளில் ஈடுபடமுடியும்.

இந்த விண்வெளி கலமானது சுற்றாடல் தொடர்பில் மிகமுக்கியமான ஆராய்சிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது.

இந்த கலம், ஒரு மணித்தியாலயத்தில் 27 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில், பூமியை விடவும் வேகமாக பயணிக்கக்கூடியது.

இது வானில் நிலைகொண்டுள்ள, மூன்றாவது பிரகாசமான பொருளாகும். அதனை, எதிர்வரும் 27 ஆம் திகதிவரையிலும் இலங்கை வானில் அவ்வப்போது வெற்றுக்கண்களினால் அவதானிக்க முடியும் என்றும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) அறிவித்துள்ளது,

இதேவேளை, 24 ஆம் திகதி அதிகாலை 5:04 க்கு 29 பாகைக்கு மேலாக வடமேற்கில் தோன்றி, 12 பாகைக்கு மேலாக தென், தென்கிழக்கு திசையில் 4 நிமிடங்களுக்குள் மறையும்.

அன்றையதினம் மாலை 6:18க்கு 17 பாகைக்கு மேலே மேற்கு, வடமேற்கு திசையில் தோன்றி, 11 பாகைக்கு மேலே வடக்கு திசையில்  3 நிமிடங்களில் கடக்கும்.

அத்துடன் 25 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 4:14 க்கு, கிழக்கு திசையில் 24 பாகைக்கு மேலே தோன்று, ஒருநிமிடத்துக்கும் குறைந்த நேரத்தில் 21 பாகையில் கிழக்கு திசையில் மறையும்.

ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் திகதியன்று அதிகாலை 4:57 க்கு தென்மேற்கு திசையில், 18 பாகைக்கு மேலாக தோன்றி, தென் மற்றும் தென்மேற்று திசையில் இரண்டு நிமிடங்களில் கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/27406

  • தொடங்கியவர்
சர்வதேச விண்வெளிக் கலம் இலங்கையில் தென்படுகிறது
 

மு.இராமச்சந்திரன்

சர்வதேச விண்வெளிக் கலம், இலங்கையை, புதன்கிழமை மாலை 6:25க்குக் கடந்துள்ளது. அதனை, இலங்கைவாழ் பிரஜைகள் வெற்றுக்கண்களால் பார்க்கமுடிந்தது. இதேவேளை, அந்தக் கலமானது, எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலும் அவ்வப்போது தென்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த விண்வெளிக் கலம், பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் சுற்றிவருகிறது. இது மிக விசாலமானது எனவும் சர்வதேச சொத்தெனவும், விண்வெளி மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது,   

108 மீற்றர் விசாலமான இந்தக் கலம், பூமியிலிருந்து 408 கிலோமீற்றர் உயரத்தில் சுற்றிவருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சர்வதேச விண்வெளிக் கலத்தை வெற்றுக்கண்களால் பார்வையிடுவதற்கு, இலங்கைவாழ் பிரஜைகளுக்கு புதன்கிழமை சந்தர்ப்பம் கிடைத்ததுடன், மாலை 6:25 மணிமுதல் ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே, அது தென்பட்டுள்ளது.   

அந்த நேரத்தில், சிவனொளிபாதமலையின் உச்சியில் இருந்தவர்கள், வெற்றுக்கண்களால் மிகத்தெளிவாகப் பார்த்துள்ளனர்.   

பாரிய வெளிச்சத்துடன், இலங்கையின் கிழக்குத் திசையில் மிகவேகமாக, அது நகர்ந்துசென்றுள்ளது.   
1998ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்தின் அந்தக் கலத்தில், ஒரு தடவையில் அறிவியலறிஞர்கள் அறுவர் மட்டுமே ஆராய்ச்சிகளில் ஈடுபடமுடியும்.   

இந்த விண்வெளிக் கலம், சுற்றாடல் தொடர்பில் மிகமுக்கியமான ஆராய்சிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்தக் கலம், ஒரு மணித்தியாலயத்தில் 27 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில், பூமியை விடவும் வேகமாகப் பயணிக்கக்கூடியது.  

இது வானில் நிலைகொண்டுள்ள, மூன்றாவது பிரகாசமான பொருளாகும். அதனை, எதிர்வரும் 27ஆம் திகதிவரையிலும் இலங்கை வானில் அவ்வப்போது வெற்றுக்கண்களால் பார்வையிடமுடியும் என்றும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) அறிவித்துள்ளது,   

இதேவேளை, இந்தக் கலம், 24ஆம் திகதி அதிகாலை 5:04க்கு 29 பாகைக்கு மேலாக, வடமேற்கில் தோன்றி, 12 பாகைக்கு மேலாக தென்,தென்கிழக்குத் திசையில் 4 நிமிடங்களுக்குள் மறையும்.   

அன்றையதினம் மாலை 6:18க்கு 17 பாகைக்கு மேலே, மேற்கு, வடமேற்குத் திசையில் தோன்றி, 11 பாகைக்கு மேலே வடக்குத் திசையில் 3 நிமிடங்களில் கடக்கும்.  அத்துடன், 25ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 4:14க்கு, கிழக்குத் திசையில் 24 பாகைக்கு மேலே தோன்றி, ஒருநிமிடத்துக்கும் குறைந்த நேரத்தில் 21 பாகையில் கிழக்குத் திசையில் மறையும்.  

ஞாயிற்றுக்கிழமை 26ஆம் திகதியன்று அதிகாலை 4:57க்கு தென்மேற்குத் திசையில், 18 பாகைக்கு மேலாகத் தோன்றி, தென் மற்றும் தென்மேற்கு திசையில் இரண்டு நிமிடங்களில் கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/சர்வதேச-விண்வெளிக்-கலம்-இலங்கையில்-தென்படுகிறது/175-207824

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.