Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வந்தடைந்த ஹத்துருசிங்கவுக்கு விரைவில் நியமனம்!

Featured Replies

இலங்கை வந்தடைந்த ஹத்துருசிங்கவுக்கு விரைவில் நியமனம்!

Hathurusingha
 

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை நெருங்கியுள்ளதாக கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற ஹத்துருசிங்க, நேற்று(21) மாலை இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக கொழும்புக்கு வருகை தந்துள்ள சந்திக ஹத்துருசிங்க, நேற்று இரவு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டார். சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, உப தலைவர் மதிவானன் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்றுக்குழு அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்கவை நியமிப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஹத்துருசிங்க இதுவரை நீக்கப்படவில்லை. அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அவர் பங்களாதேஷ் செல்லாமல், கடிதம் மூலம் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு தனது இராஜினாமாவை அறிவித்திருந்தார்.

இதன் பின்னணியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்கவை தக்க வைப்பதற்கான நம்பிக்கையை இழந்துள்ளதாகவும், அவரைப் பிரதியீடு செய்வோர் குறித்து கவனஞ் செலுத்துவதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் ஊடகங்களுக்கு நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.

எனினும், அவருடைய வருகையை தொடர்ந்து எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள நஸ்முல் ஹஸன், இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், அதற்கான உரிய காரணத்தை அவர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் எழுந்துள்ள சட்ட சிக்கல்களை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரிடம் ஹத்துருசிங்க கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இரு நாட்டு கிரிக்கெட் சபைகளின் அதிகாரிகளுக்கிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்றை நடாத்தி அவரை உடனடியாக குறித்த பதவியிலிருந்து விடுவித்து இலங்கை அணிக்கு கொண்டு வருவதற்கும் கவனம் செலுத்தப்படும் எனவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்திய அணிக்கெதிரான தொடரின் பின்னர் ஹத்துருசிங்க இலங்கை அணியைப் பொறுப்பெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பொறுப்பேற்குமிடத்து, தனது முன்னைய அணியான பங்களாதேஷுக்கெதிரானதாகவே சந்திக ஹத்துருசிங்கவின் இலங்கையுடனான முதலாவது தொடர் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை அணிக்கெதிராக எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கு முன்னர் வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளரொருவரை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கண்டுபிடிப்பது கடினம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இலங்கை அணிக்கெதிரான தொடரின்போது தற்காலிக பயிற்சியாளராக, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலிட் மஹ்மூட் செயற்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

ஹத்துருசிங்க தொடர்பில் தீர்மானத்தை வெளியிட்டது இலங்கை கிரிக்கெட்

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சந்திக்க ஹத்துருசிங்கவை விடுவித்தால், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பதற்கு தயாராக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

chandika-hathurusingha.jpg

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால மேலும் தெரிவிக்கையில்,

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சந்திக்க ஹத்துருசிங்கவை விடுவித்தால் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க தயாராகவுள்ளோம்.

இதுதொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைவருக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த கிரகம் போர்ட் கடந்த ஜுன் மாதம் இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, நிக் போத்தாஸ் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹத்துருசிங்கவை நியமிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது இலங்கை கிரிக்கெட் சபை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யாள­ரா­­வது கிட்­டத்­தட்ட உறு­தி­யா­கி­யுள்­ள­து. 

 

ஆனாலும் ஹத்துருசிங்கவை பங்களாதேஷிலிருந்து விடுவித்துக்கொள்வதில் சட்ட சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை அணிக்கு நிரந்தர தலைமைப் பயிற்சியாளர் ஒருவர் இல்லாத நிலையில், பங்­க­ளா­தேஷின் பயிற்­சி­யா­ள­ராக இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்­திக்க ஹத்­துரு­சிங்­கவை இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக்க இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் பெரும் பிர­யத்­தனத்தை மேற்­கொண்­டது.

இதன் முயற்சியாக ஹத்துருசிங்க பங்களாதேஷ் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

எவ்­வா­றா­யினும், பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்­சி­யாளர் பத­வி­யி­லி­ருந்து ஹத்­து­ரு­சிங்க இது­வரை நீக்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் கடந்த ஒக்­டோபர் மாதம் முதல் அவர் பங்­க­ளாதேஷ் செல்­லாமல், கடிதம் மூலம் அந்­நாட்டு கிரிக்கெட் சபைக்கு தனது ராஜி­னா­மாவை அறி­வித்­தி­ருந்தார்.

இதன் பின்­ன­ணியில், பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவை தக்க வைப்­ப­தற்­கான நம்­பிக்­கையை இழந்­துள்­ள­தா­கவும், அவரைப் பிர­தி­யீடு செய்வோர் குறித்து கவனம் செலுத்­து­வ­தா­கவும் பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தார்.

எனினும், அவ­ரு­டைய வரு­கையை தொடர்ந்து எதிர்­பார்த்­தி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்ள நஸ்முல் ஹஸன், ரா­ஜி­னாமா கடி­தத்தை ஏற்­றுக்­கொண்ட போதிலும், அதற்­கான உரிய கார­ணத்தை அவர் தெளி­வு­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இதே­வேளை, குறித்த விடயம் தொடர்பில் எழுந்­துள்ள சட்ட சிக்­கல்­களை உட­ன­டி­யாக நிவர்த்தி செய்து தரு­மாறு இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் ஹத்­து­ரு­சிங்க கோரிக்கை விடுத்­தி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இந்­நி­லையில் ஹத்­து­ரு­சிங்­கவை பயிற்­சி­யா­ள­ராக நியமிப்பது குறித்து இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

http://www.virakesari.lk/article/27373

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.