Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரிசல் நிலையை நோக்கி இந்திய இலங்கை உறவு

Featured Replies

விரிசல் நிலையை நோக்கி இந்திய இலங்கை உறவு `

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்ன ரான கடந்த பதினாறு மாத காலத்தில் இலங்கைக்கும் அயல் வல்லாதிக்க நாடான இந்தியாவுக்கும் இடையி லான நல்லுறவில் பெருமளவு விரிசல் ஏற்படத் தொடங்கி யிருப்பதை அரசியல் நோக்கர்கள் மேம்போக்காக வேனும் அவதானிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதற்குப் பல்வேறு காரணங்கள் பின்னணியாக அமைந்தாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ற தனிநபரின் ஆளுமை, சிந்தனைப்போக்கு, செயலாற் றும் பாங்கு, நம்பகத்தன்மை ஆகியவை தொடர்பாக புதுடில்லிக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியும், அதன் காரண மாக ""நான் இந்தியாவின் ஆத்மார்த்த நண்பன்'' என்று இந்தியத் தலைவர்களிடம் நேரடியாகவே ஜனாதிபதி மஹிந்தர் அடிக்கடி கூறும் வாசகத்தின் இதயபூர்வ தன்மை குறித்து புதுடில்லித் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள நம் பிக்கையீனமும் அவற் றில் முக்கியமானவை எனலாம்.

இந்தப் பதினாறு மாதகால ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி மஹிந்தர் இரண்டு தடவைகள் இந்தியா வுக்கு விஜயம் செய்திருக்கின்றார். அவரது கடைசி இந் திய விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் சேர்ந்து அவர் புகைப்படத்துக்கு "போஸ்' கொடுக்க எடுத்த முயற்சி, இந்திய அதிகாரி களினால் வேண்டுமென்றே நாசூக்காக வெட்டி விடப்பட்டதா கக் கூறப்படுகிறது. அதன்மூலமும், அவருக்கான விமான நிலைய வரவேற்பை உயர்நிலைத் தரத்திலிருந்து இறக்கி அடுத்த கட்டத்தில் இந்தியா முன்னெடுத்ததன் வாயிலாகவும் அவ ருடனான நட்புறவுத் தொடர்பாடலில் தனக்குள்ள "பின்னடிப்பை' புதுடில்லி பூடக மாக வெளிப்படுத்திக்கொண்டது. எனினும் இந்த இரண்டு விஜயங்களின் போதும் இந்திய உயர் மட்டத் தலைவர்கள் அவரைச் சந்தித்து அவருடன் விரிவாக உரையாடத் தவறவில்லை.

இதேவேளை மஹிந்தரின் இந்தப் பதினாறு மாத ஆட்சிக்காலத்தில் இந்திய வெளியுறவுத்துறையில் முன்னர் செயலாளராக இருந்த ஷியாம் சரண் இரண்டு தடவைகளும், தற்போதைய செயலாளர் சிவசங்கர் மேனர் ஒரு தடவையும் (கடந்த நவம்பரில்) இலங் கைக்கு விஜயம் செய்தனர். அதேபோல இந்திய வெளி யுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஒரு தடவை (கடந்த டிசம்பரில்) இலங்கைக்கு வந்தார்.

இந்த நான்கு விஜயங்களின் போதும் கொழும்பில் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தருடன் உயர்மட்டச் சந் திப்பில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி மஹிந்தருடன் அவரது பதினாறு மாத ஆட்சிக்காலத்தில் புதுடில்லியிலும் கொழும்பிலும் இடம்பெற்ற இந்த ஆறு உயர்மட்டச் சந்திப்புகளின் பதிவு கள் பற்றிய ஆவணங்களைப் பரிசீலித்த புதுடில்லித் தலைமை, ஒரு குறுகிய காலத்தில் மஹிந்தர் ஒப்புவித்த விடயங்களில் அவர் காட்டியுள்ள தடம் புரள்கை குறித்து அதிருப்தியும், விசனமும், ஆச்சரியமும் அடைந் திருப்பதாகவும் தெரிகின்றது.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர் பாக இந்தியாவின் கரிசனையை மஹிந்தர் புறம் ஒதுக்கி நடக்கின்றார் என்றும், இது தொடர்பாகக் காலத்துக்குக் காலம் தாம் கூறிய உறுதி மொழிகளை அவர் உதாசீனம் செய்து விட்டேத்தியாக செயற்படுகின்றார் எனவும் புதுடில்லி கருதுவதாகவும் தெரிகிறது.

மேலும் அருகில் உள்ள வல்லாதிக்க நாடான இந்தி யாவை விலத்தி, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் அரவணைப்புக்குள் மஹிந்தரின் நிர்வாகம் "குளிர் காய் வதாக' புதுடில்லி உணர்கின்றது எனவும் தெரிகின்றது.

மேற்படி கொழும்புக்கான விஜயம் ஒன்றின்போது புதுடில்லித் தலைமை இதனை நேரடியாகவே மஹிந் தரிடம் சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்தது என்றும் அறிய முடிகின்றது.

இதேசமயத்தில்

இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அதன் நேரடி விளைவுகளையும் தாக்கங்களையும் எதிர்கொள் ளக்கூடிய சிக்கல் இந்தியாவுக்கு இருக்கத்தக்கதாக, அந்த நிலையைக் கவனத்தில் எடுக்காமல் இது தொடர்பான இந்தியாவின் சிரத்தையை புறமொதுக்கி கொழும்பு பொறுப்பற்று நடக்கிறது. இந்திய சிரத்தை யைத் தட்டிக்கழிக்கிறது. அளவுக்கு அதிகமாக அமெ ரிக்காவை இவ்விடயத்துக்குள் இழுத்து வந்து நுழைத்து, இந்தியாவின் தென்கோடியில் அமெரிக்க ஈடுபாட்டு டன் கூடிய ஒரு மையத்தை உருவாக்க கொழும்பு துணை போகிறது என்றெல்லாம் புதுடில்லி அரசியல் தலைமை சீறி, சினப்ப தாகவும் நம்பகமாக அறியவருகின்றது.

அமெரிக்காவில் வசிப்பதற்கான "கிறீன் கார்ட் விஸா' கொண்டவர்களை அமெரிக்கப்பிரஜை என்றே கருதமுடியும். அத்தகைய தகுதியுடையவர்கள் ஜனாதி பதி மஹிந்தரின் சகோதரர்களான அவரது ஆலோசகர் பஸில் ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளரான கோட் டாபய ராஜபக்ஷவும். மஹிந்தர் நாட்டின் ஜனாதிபதி என்றாலும் அவரின் இந்த இரு சகோதரர்களுமே நாட்டை ஆளுபவர்கள் என்ற அரசியல் யதார்த்தம் நிலைப்பாடு கருத்து பொதுவாக இலங்கை அரசிய லின் அவதானிகளின் மனதில் ஆழமாகப் புதைந்திருக் கும் ஒன்றே. இந்நாட்டு மக்களினது கருத்தும் அதுவாகவே உள்ளது.

தனது பிரஜைகள் போன்ற இந்த இருவர் மூலமும் அமெரிக்காவே பின்னணியில் நின்று இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை தனக்குச் சார்பான விதத்தில் வழி நடத்துகின்றது என்ற எரிச்சல் ஏற்கனவே இந்தியா வுக்கு உள்ளது.

இந்தப் பின்னணியில் இப்போது சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்றை இலங்கையும் அமெரிக்காவும் பாதுகாப்பு அமைச்சு மட்டத்தில் செய்துகொண்டிருக்கின்றமை இந்தியா வுக்கு மேலும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஏற்கனவே கொழும்பு மற்றும் புதுடில்லித் தலை வர்களுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட கடிதப் பரிமாற்றங்கள் மற்றும் ஆவணப்பரிமாற்றங்களில் இந் தியாவும், இலங்கையும் தமது பிரதேசங்களை ஒன்று, மற்றதன் சிரத்தைக்குரிய விடயங்களுக்கு எதிராகப் பிற நாடு ஏதும் பயன்படுத்த அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்திருந்தன. அந்த இணக்கத்தை கிடப்பில் தூக்கி வீசும் வகையிலும், இலங்கையை அமெரிக்கா தனது விநியோகத் தளமாக அல்லது வழங்கல் மைய மாகப் பயன்படுத்த வழிசெய்யும் விதத்தில் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகப் புதுடில்லி கருதுகிறது.

இவை, கொழும்பு தொடர்பான புதுடில்லியின் இராஜதந்திர அணுகுமுறையில் பெரும் திருப்பத்தை அல்லது மாற்றத்தை விரைவில் உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதுடில்லியில் அதிகார மற்றும் செல்வாக்கு ஸ்தி ரத்தைக் கொண்ட வலுவான அரசியல் தலைமை இல் லாமையும்

புதுடில்லியின் அழுத்தத்துக்கு மசிந்து கொடுக் காத பிடிவாதத் திமிர்ப் போக்கை இந்திய விவகாரத்தில் கைக்கொள்ள கொழும்பு தீர்மானிக்குமானால், அதை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான உரிய தந்திரோபாயம் மற்றும் இராஜதந்திர யுக்தியுடன் கூடிய மாற்றுத் திட் டம் ஏதும் புதுடில்லியிடம் இல்லாமையும்

இவ்விடயத்தில் புதுடில்லியின் இராஜதந்திர அணுகுமுறை மாற்றங்களை தாமதிக்க வைக்கின்றன என்று விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

http://www.uthayan.com/editor.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஊடகங்கள் எல்லாம் இலங்கை இந்தியா உறவில் விரிசல் என்று செய்தி எழுதுகிறார்கள். ஆனால் இலங்கைக்கு இந்தியா தமிழக மக்களின் விருப்பத்துக்கு எதிராக ஆயூத உதவிகளும் செய்கிறது. டக்லஸ், ஆனந்த சங்கரியையும் குப்பிட்டு கதைக்கிறார்கள். சொந்த மீனவர்களை இலங்கை கடற்படை கொல்லும் போது பேசமால் இருக்கிறது. இப்பொழுது ஜ. நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும் போது இலங்கைக்கு ஆதரவாக இருக்கிறது.

இது உலகத் தமிழரின் தலையில் மிளகாய் அரைக்கும் கதை. விரிசல் வெளிப்பார்வைக்குத்தான் உள்ளளே கட்டிப் பிடித்த மு... கொடுக்காத குறைதான். இரண்டு பொருளாதார ஒப்பந்தங்களை இந்தியனுக்கு கொடுத்தால் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு மகிந்தவின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் பாரதம்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆய்வாளர்கள் தொல்லை தாங்க முடியலப்பா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.