Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்ஆப்பிரிக்கா தொடரில் அஸ்வின், ஜடேஜா இடத்தை உறுதி செய்ய முடியாது: விராட் கோலி

Featured Replies

தென்ஆப்பிரிக்கா தொடரில் அஸ்வின், ஜடேஜா இடத்தை உறுதி செய்ய முடியாது: விராட் கோலி

 

தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கும் என உத்தரவாதம் அளிக்க முடியாது என கோலி கூறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா தொடரில் அஸ்வின், ஜடேஜா இடத்தை உறுதி செய்ய முடியாது: விராட் கோலி
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று வகை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் டிசம்பர் மாதம் இறுதியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது.

தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வேலை இருக்காது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இந்தியாவின் நம்பிக்கை சுழற்பந்து வீச்சாளர்களாக இருக்கும் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஆடும் லெவனில் இடம்கிடைக்கும் என்பதை உறதியாக சொல்ல முடியாது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

201711231848561713_1_5Kohli002-s._L_styvpf.jpg

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘வெளிநாட்டு மண்ணில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்கும் என்று என்னால் உறுதியளிக்க முடியாது. ஏனென்றால், இந்திய அணியை சரிசம பலத்துடன் கொண்டு செல்ல வேண்டும். உண்மையிலேயே இருவரும் பேட்டிங் திறமை கொண்டவர்கள். மாற்று பேட்ஸ்மேன்களுக்கு போட்டியளிக்கக்கூடியவர்கள். இருந்தாலும் எதிர் அணியை பார்த்து அதற்கு ஏற்றபடி தேர்வு செய்யப்படுவார்கள்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஐந்து வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவார்கள். அல்லது வலது கை சுழற்பந்து வீச்சாளர்கள் நான்கு இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவார்கள். இதை புரிந்து கொள்வது முக்கியம். வெளிநாட்டு மண்ணில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்வதற்கு முன், எவ்வாறு செயல்படுகிறோம் என்பது குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/23184843/1130642/Virat-Kohli-Says-Ravichandran-Ashwin-And-Ravindra.vpf

  • தொடங்கியவர்

இந்திய அணியின் போட்டி அட்டவணை: விராட் கோலி காட்டம்

 

 
virat_kholi1123

 

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி பேசியதாவது:

வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கான காரணங்கள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. ஒரு போட்டித் தொடருக்கு தயாராக எங்களுக்கு போதிய கால அவகாசம் கிடைப்பதில்லை. 

அடுத்து நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்கா தொடருக்கு 2 நாட்கள் தான் அவகாசம் உள்ளது. அதனால் தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இந்தத் தொடரை பயிற்சிக் களமாகப் பயன்படுத்தி வருகிறோம். 

முன்பெல்லாம் அந்நிய நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களுக்கு 20 நாட்கள் முன்பாகச் சென்று அங்குள்ள தட்பவெட்ப நிலைக்கு பழகிக்கொண்டு, பயிற்சிப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு ஏற்படும். இதனால் வீரர்கள் மனதளவில் உற்சாகமாக இருப்பர். 

ஆனால், இப்போதைய நிலை தலைகீழாக உள்ளது. தொடர் போட்டிகளின் காரணமாக வீரர்கள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்து விடுகிறார்கள். இதற்கு போட்டி அட்டவணையே முக்கியக் காரணம். இங்கு போதிய காலஅவகாசம் இருப்பதில்லை. இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று. 

ஒவ்வொரு போட்டித் தொடருக்கு முன்னதாகவும் எங்களை உடலளவிலும், மனதளவிலும் தயார்படுத்திக்கொள்ள குறைந்தபட்சம் 1 மாத காலம் தேவைப்படுகிறது. இதனால் எங்களால் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று சரமாரியாகச் சாடினார்.

விராட் கோலியின் இந்த கருத்து தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் சி.கே.கண்ணா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, என் உடம்பைக் கிழித்தால் அதில் ரத்தம் தான் வரும், நான் ஒன்றும் இயந்திரம் இல்லை என தொடர் போட்டிகள் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/sports/sports-news/2017/nov/23/no-time-for-prep-kohli-blames-management-2813533.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.