Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளித்தது கூட்டு எதிரணி

Featured Replies

அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளித்தது கூட்டு எதிரணி

musthapadailynews-5c7c89b9b6ff5d5d03b76a3f80c20a82f891fc10.jpg

 

(ஆர்.ராம்.எம்.எம்.மின்ஹாஜ்)

உள்­ளூ­ராட்­சி­மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வுக்கு எதி­ராக பாரா­ளு­ மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யினர் நேற்று நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கைய­ளித்­துள்­ளனர்.  

பாரா­ளு­மன்­றத்தில் உள்ள சபா­நா­யகர் அலு­வ­ல­கத்தில் நேற்று பிற்­பகல் சபா­நா­யகர் கரு­ ஜ­ய சூ­ரி­ய­விடம் தினேஷ் குண­வர்­தன தலை­மை­யி­லான குழு­வினர்   நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கைய­ளித்­துள்­ளனர்.    

பாரா­ளு­மன்­றத்­தையும் நாட்டு மக்­க­ளையும் அமைச்சர் பைசஸ் முஸ்­தபா ஏமாற்­றி­யுள்ளார். எனவே அவர் அனைத்து தரப்­பி­னதும் நம்­பிக்­கையை இழந்­துள்­ள­தாலும் தனது பொறுப்பை உரிய முறையில் நிறை­வேற்­றா­மையின் கார­ண­மா­கவும் அவர் உட­ன­டி­யாக பதவி வில­க­வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்தே இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பாக விரை­வாக விவா­தத்தை நடத்­து­மாறு கூட்டு எதி­ர­ணியின் பிர­தி­நி­திகள் சபா­ந­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விடம் இதன்­போது கோரிக்­கை­வி­டுத்­துள்­ளனர்.

அந்­த­வ­கையில் இன்று நடை­பெ­ற­வுள்ள கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்தில் இது­தொ­டர்பில் ஆராய்ந்து விரை­வாக விவா­தத்தை நடத்த தான் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக இதன்­போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கூட்டு எதி­ர­ணியின் பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­வித்தார்.

 

நம்பிக்கையில்லா பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன, சமல் ராஜபக்ஷ,பந்துல குணவர்தன,ரஞ்ஜித் டி சொய்சா, ரோஷான் ரணசிங்க, விமலவீர திஸாநாயக்க, பத்ம உதயசாந்த குணசேகர,உதய கம்மன்பில, சிசிற ஜயகொடி, மஹிந்த யாபா அபேவர்தன, விஜித பேருகொட, ஞானக வக்கும்புர உள்ளிட்டோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இதே­வேளை உள்­ளூ­ராட்சி மன்ற மற்றும் மாகா­ண­ச­பைகள் அமைச்சர் பைசஸ் முஸ்­தா­பா­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் .கணி­ச­மான எம்.பி.க்கள் கைச்­சாத்­திட்­டுள்­ள­தாக மக்கள் விடு­தலை முன்­னணி, தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு, மற்றும் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி ஆகி­ய­வற்றின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆத­ரவு வழங்­கு­வார்கள் என்று நம்­பிக்­கை­யுள்­ள­தா­கவும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளித்த கூட்டு எதி­ர­ணியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.  

 

 

இது தொடர்பில் கூட்டு எதி­ர­ணியின் தலை­வரும் எம்.பி.யுமான தினேஷ் குண­வர்த்­தன கேச­ரிக்கு குறிப்­பி­டு­கையில்:

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­து­வதில் விட­ய­தானம் சம்­பந்­தப்­பட்ட அமைச்சர் பைஸர் முஸ்­தபா தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கின்றார். அது­மட்­டு­மன்றி அவர் பாரா­ளு­மன்­றத்­தி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் நம்­பிக்­கையை இழந்­தி­ருக்­கின்றார்.

தனது அமைச்சுப் பத­வியின் பொறுப்பை அவர் நிறை­வேற்ற தவ­றி­யி­ருக்­கின்றார். எனவே இவர் தனது செயற்­பாட்டில் தோல்­வி­ய­டைந்­தி­ருப்­பதால் உட­ன­டி­யாக அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து வில­க­வேண்டும். அந்த வகை­யி­லேயே அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வி­விற்கு எதி­ராக நாங்கள் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சபா­நா­ய­க­ரிடம் ஒப்­ப­டைத்­தி­ருக்­கின்றோம்.

அமைச்சர் பைஸர் முஸ்­தபா உட­ன­டி­யாக பத­வி­வி­ல­க­வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் உட­ன­டி­யாக விவா­தத்தை நடத்தி தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நாங்கள் சபா­நா­ய­க­ரிடம் கோரிக்கை விடுத்தோம். அவர் வெள்­ளிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் கலந்து பேசி முடிவு எடுப்­ப­தாக எம்­மிடம் அறி­வித்தார்.

 அந்த வகையில் சில தினங்­க­ளுக்­குள்­ளேயே அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பான விவாதம் நடக்கும் என்று நம்­பு­கின்றோம். அது­மட்­டு­மன்றி இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தி­ருக்­கின்­றது. எனவே அந்­தக்­கட்­சியின் ஆத­ரவு நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு கிடைக்கும் என்று எதிர்­பார்க்­கின்றோம்.

அதே­போன்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்­தி­ருக்­கின்­றது. அந்தக் கட்­சியின் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்தக் கருத்தை முன்­வைத்­தி­ருக்­கின்­றனர்.

எனவே ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்கும் அதே­போன்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்கும் என்று நம்­பு­கின்றோம். தற்­போ­தைய சூழலில் கூட்­ட­மைப்பு நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்கும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

ஆனால் இடை­ந­டுவில் ஏதா­வது டீல்­போட்டு முடிவை மாற்­றி­வி­டு­வார்­களோ தெரி­யாது. எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை நாங்கள் நிறை­வேற்றி பாரா­ளு­மன்­றத்­தி­னதும் மக்­க­ளி­னதும் நம்­பிக்­கையை இழந்த அமைச்­சரை வீட்­டுக்கு அனுப்­புவோம் என்றார்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை புதிய முறையில் நடத்­து­வ­தற்­காக புதிய உள்­ளூ­ராட்சி தேர்தல் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இது­தொ­டர்­பான சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. தொகு­தி­வாரி மற்றும் பிர­தேச வாரி முறையில் அமைந்த களப்பு தேர்தல் முறையே இவ்­வாறு முன்­வைக்­கப்­பட்­டது. எனினும் முன்­னைய அர­சாங்கம் மேற்­கொண்ட எல்லை நிர்­ண­யத்தில் குள­று­ப­டிகள் இருப்­ப­தாக புதிய அர­சாங்­கத்தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அத­னை­ய­டுத்து அமைச்சர் பைஸர் முஸ்­தபா இது­தொ­டர்பில் ஆராய எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவை நிய­மித்­தி­ருந்தார். அந்த ஆணைக்­குழு அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்த நிலையில் அது பாரா­ளு­மன்­றத்­திலும் சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. எவ்­வா­றெ­னினும் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வேண்­டிய உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்து தாம­த­மா­கி­வந்­தது.

இந்­நி­லையில் எல்லை நிர்­ணயப் பணிகள் முடி­வ­டைந்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்கு பிர­தி­நி­திகள் தெரி­வு­செய்­யப்­படும் முறை மற்றும் எண்­ணிக்கை தொடர்­பான வர்த்­த­மான அறி­வித்தல் அண்­மையில் வெளி­யா­கி­யது. அந்­த­வ­கையில் டிசம்­பர்­மாதம் 14 ஆம் திக­தி­லி­ருந்து 17 ஆம்­தி­க­தி­வரை வேட்­பு­ம­னுக்­கோரல் இடம்­பெறும் என தேர்தல் திணைக்­களம் அறி­வித்­தி­ருந்­தது.

அது­மட்­டு­மன்றி ஜன­வ­ரி­மாதம் இறு­திப்­ப­கு­தியில் புதிய தேர்தல் முறை­மையின் கீழ் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் எல்லை நிர்­ணய மற்றும் வர்த்­த­மானி அறி­வித்­தலில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆறுபேர் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அதில் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா பிரதிவாதிக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை டிசம்பர் 4ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு இடைக்கால தடையை விதித்தது. இந்நிலையிலேயே கூட்டு எதிரணி நேற்றைய தினம் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்திருக்கிறது. இதற்கு ஆதரவு வழங்குவதாக ஜே.வி.பி.யும் அறிவித்துள்ளதுடன் ஐக்கிய தேசியக்கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்ளூரட்சி மன்ற விடயங்களுக்கு தொடர்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரத்தை வழங்கப்பட்டது. இதன்படி இந்த தருணத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணைக்குழு மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்ற நிலையில் அமைச்சரின் செயற்பாட்டினால் உள்ளூராட்சி தேர்தலுக்கு முட்டுகட்டையிடப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான செயற்பாடு அமைச்சருக்கு இயலாமையையே எடுத்து காட்டுகின்றது.

எனவே இவ்வாறான செயற்பாட்டினால இலங்கையின் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இனிமேலும் சம்பந்த அமைச்சர் மீது எமக்கு நம்பிக்கை செலுத்த முடியாது. ஆகவே உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தனது பதவியை உடன் இராஜினாமா செய்ய வேண்டும் என பிரேரிக்கின்றோம் என நம்பிக்கையில்லா பிரேரணைக்கான ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-24#page-1

 

 

பைஸ­ருக்கு எதி­ராக ஜே.வி.பி.யும் இன்று நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை

p4-fe5e4c63907da70096c8ce689bfabe57b8e27512.jpg

 

கைய­ளிக்­கப்­படும் என்­கிறார் அனு­ர­கு­மார திசா­நா­யக்க 

(ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்)

உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை இன்று வெள்­ளிக்­கி­ழமை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­க­வுள்­ள­தாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அனுரகுமார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

தேர்­தலை நடத்த விரும்பும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் எமது நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்க வேண்டும். ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யாக  இருந்தும் அமைச்சர் வேண்டும் என்றே தேர்தல்  தாம­தத்­திற்கு வழி­வ­குத்­துள்ளார். எனவே இனி­மேலும் அமைச்சர் பைசர் முஸ்­த­பாவின் மீது நம்­பிக்கை வைக்க முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார். 

இது தொடர்­பாக பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் வைத்து நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அறி­வுத்தும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நீதி­மன்­றத்தில் வர்த்­த­மானி அறி­வு­றுத்தல் தடை விதித்­த­மையின் ஊடாக உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா தனது பொறுப்­பையும் கட­மை­யையும் உரிய முறையில் நிறை­வேற்­ற­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

அமைச்­சரின் அதி­கா­ரத்தின் கீழேயே எல்லை நிர்­ணயம் தொடர்­பான முறைப்­பாடு குழு­வினை அமைச்சர் பைசர் முஸ்­தபா நிய­மித்­துள்ளார். எனினும் அமைச்சர் தனக்­குள்ள அதி­கா­ரத்தை மீறி செயற்­பட்­டி­ருந்தால் அவ்­வா­றான வர்த்­த­மா­னியை ஒரு போதும் வெளி­யிட முடி­யாது. அமைச்சர் பைசர் முஸ்­தபா தனது காரி­யத்தை உரிய முறையில் நிறை­வேற்­ற­வில்லை என்றே தோன்­று­கின்­றது.

இதன்­படி இன்று வெள்­ளிக்­கி­ழமை அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­க­வுள்ளோம். எனவே தேர்­தலை நடத்த விரும்பும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் எமது நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்க வேண்டும்.

கூட்டு எதி­ரக்­கட்சி நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை சமர்ப்­பித்­தாலும் அவர்­க­ளது நிபந்­தனை என்­ன­வென்­பது எமக்கு தெரி­யாது. எனினும் நாம் அமைச்­சரின் குறைப்­பா­டு­களை இனங்­கண்­டுள்ளோம். இதன்­படி எல்லை நிர்­ணயம் தொடர்­பான முறைப்­பாடு குழு­வினை நிய­மித்தார். அந்த குழுவின் ஊடாக அமைச்சர் அதி­கா­ரத்தை மீறி செயற்­பட்­டுள்ளார். அவர் ஜனா­தி­பதி சட்­ட­த­ர­ணி­யாவார். இதன் விப­ரீ­தங்­களை அறிந்தும் அமைச்சர் பைசர் முஸ்­தபா வேண்டும் என்றே இவ்­வாறு செயற்­பட்­டுள்ளார். ஆகவே இந்த அமைச்சர் மீது இனி­மேலும் நம்­பிக்கை வைக்க முடி­யாது.

இதன்­படி நீதி­மன்­றத்­தி­லுள்ள வழக்கை மீள­பெ­ற­வி­டாத்து எந்த தரு­ணத்­திலும் தேர்­தலை எதிர்­பார்க்க முடி­யாது போகும். ஒரு­வேளை நீதி­மன்ற வழக்கு தோல்வி கண்டால் மீண்டும் எல்லை நிர்­ணயம் செய்ய வேண்டி வரும். ஆகவே இந்த வழக்கை வாபஸ் பெறுவதின் ஊடாக தேர்தலை உடன் நடத்த முடியும். மேலும் பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஆரம்பித்தில் இருந்து சட்ட திருத்த செய்ய வேண்டும். எனவே இதுதான் தற்போது சிக்கலான நிலைமையாகும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.