Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூக்குத் தண்டணை நிறைவேற்றப்பட வேண்டும்

Featured Replies

தூக்குத் தண்டணை நிறைவேற்றப்பட வேண்டும்

 

வித்­தி­யாவை மிகக் கொடு­மை­யாக வன்­பு­ணர்வு செய்து கொலை செய்த நபர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பது மிகவும் சந்­தோஷமான விடயம். ஆனால் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லையே. ஏன் மரண தண்­டனை விதிக்­கப்­பட வேண்டும்? எமது நாட்டில் சட்­டங்கள் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் குற்­றங்கள் கூடிக் கொண்­டேதான் இருக்கும். எமது நாட்டில் தற்­பொ­ழுது கொலைகள் அள­வுக்­க­தி­க­மாக நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. பாலியல் வன்­கொ­டு­மைகள் அள­வுக்­க­தி­க­மாக அரங்­கேறி வரு­கி­றன. இதை எப்­போது இந்த நல்­லாட்சி அர­சாங்கம் நிறுத்தப் போகி­றது? பொது மக்கள் நிம்­ம­தி­யாக வாழ முடி­யாத பட்­சத்தில் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் எதற்கு?

எமது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஜனா­தி­பதி மிக மிக நல்­லவர். காருண்­ய­மிக்­கவர்,மனி­த­நேயம் உள்­ளவர். இப்­ப­டிப்­பட்ட ஒரு­வரால் குற்­ற­வா­ளிகள் நிறைந்­தி­ருக்கும் எமது நாட்டை எப்­படி ஆள முடியும்? சர்வ அதி­கா­ரமும் பொருந்­திய ஜனா­தி­பதியாகிய நீங்கள் சுய­மாக சிந்­தித்து செய­லாற்­றுங்கள்.

ஜனா­தி­பதிக்கு ஒரு வேண்­டுகோள்.சட்­டங்­களை நீங்கள் கடு­மை­யாக்­கா­விட்டால் குற்­றங்கள் நாட்டில் கூடிக்­கொண்­டேதான் போகும். நீங்கள் நிலை­யான ஆட்­சியை நடத்த முடி­யாத நிலை­மைக்கு அது கொண்­டுபோய் விடும். ஆகையால் நீங்கள் சட்­டத்தை கடு­மை­யாக்­குங்கள். பார­தூ­ர­மான குற்­றங்­க­ளுக்கு மரண தண்­ட­னையை அமுல் படுத்­துங்கள்.

எமது இலங்கை வாழ் மக்­களே எமது நாடு பௌத்த நாடு. இங்கு தூக்குத் தண்­டனை கொண்­டு­வர முடி­யாது என்று கூறு­வார்­க­ளே­யானால் சொல்­லுங்கள் சீனா ஒரு பௌத்த நாடு அங்கு தூக்குத் தண்­டனை இல்­லையா? ஜப்பான் ஒரு ஒரு பௌத்த நாடு அங்கு தூக்கு தண்­டனை இல்­லையா? தாய்வான் ஒரு ஒரு பௌத்த நாடு அங்கு தூக்குத் தண்­டனை இல்­லையா? பர்மா ஒரு பௌத்த நாடு அங்கு தூக்கு தண்­டனை இல்­லையா? ஏன் இந்­தி­யாவில் கூட தூக்கு தண்­டனை உள்­ளது. இவ்­வ­ளவு ஏன் ஐக்­கிய நாடுகள் சபை அமைந்­துள்ள அமெ­ரிக்­காவில் கூட மரண தண்­டனை பல­வி­த­மாக நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றது. அப்­படி இருக்­கும்­போது ஏன் நமது நாட்டில் கொண்­டு­வ­ரப்­படக் கூடாது?

ஆகையால் மக்­களே மனதால் ஒன்­றி­ணைவோம்.மாற்­றத்தைக் கொண்டு வருவோம் என்­கிற சிந்­த­னை­யோடு எமது ஜனா­தி­ப­திக்கு தூக்கு தண்­டனை கொண்டு வரும்­படி ஒவ்­வொ­ரு­வரும் குறுஞ்செய்தி மூல­மா­கவோ மின்­னஞ்சல் மூல­மா­கவோ தகவல் அனுப்­பிக்­கொண்டே இருக்க வேண்டும்.அதே­போல எமது பிர­தமருக்கும் அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

அர­சி­யல்­வா­தி­களே தூக்குத் தண்­ட­னையை கொண்டு வரு­வ­தற்கு நீங்கள் அனை­வரும் பாரா­ளு­மன்­றத்தில் பேச வேண்டும்.மக்­களின் குறை­களை அனை­வரும் பாரா­ளு­மன்­றத்தில் பேச வேண்டும். மக்­களின் குறை­களை தீர்க்க வேண்­டிய பொறுப்பு உங்­க­ளுக்கும் உள்­ளது. உங்­களால் மக்­க­ளுக்கு நல்­லது நடந்தால் அது உங்­க­ளுக்கு நல்­ல­தாக அமையும். தூக்கு தண்­ட­னையை யார் கொண்டு வரு­கின்­றார்­களோ அந்த அர­சியல் தலை­வர்­க­ளுக்கு மக்­களின் செல்­வாக்கு கிடைக்கப் பெறும்.

உதா­ர­ண­மாக சிந்­தித்துப் பாருங்கள் இப்­பொ­ழுது 1187 மரண தண்­டனைக் கைதிகள் சிறைச்­சா­லை­களில் இருக்­கின்­றார்கள்.அவர்­க­ளுக்கு பாது­காப்பு வழங்கி, எவ்­வித வேலை­களும் செய்­யாமல் நேரத்­திற்கு உணவு வழங்கி, அவர்­க­ளுக்கு ஏதா­வது வருத்தம் ஏற்­பட்டால் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்து, குண­மாக்கி எக்­கச்­சக்­க­மாக செலவு செய்­கின்­றார்கள்.இந்தச் செல­வுகள் எல்லாம் யாரு­டைய பணத்திலிருந்து மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன? அவர்­க­ளுக்கு செலவு செய்யும் தொகை எவ்­வ­ளவு? ஒரு மரண தண்­டனை கைதிக்கு நீங்கள் இவ்­வ­ளவு தொகை செல­வு செய்­யும்­போது இதனை அறிந்­து­கொள்ளும் ஏனை­ய­வர்­களும் வெளியில் இருப்­பதை விட சிறையில் இருப்­ப­தைத்தான் விரும்­பு­வார்கள்.

எமது நாட்டில் குற்­றங்கள் அதி­க­ரிக்க காரணம் சட்­டங்கள் திருத்­தப்­ப­டா­மையே. இப்­ப­டியே போனால் எமது நாட்டில் சிறைச்­சா­லை­களை அதி­க­ரிக்க வேண்­டிய நிலை­மையே ஏற்­படும்.ஒரு குற்றம் நிரூ­பிக்­கப்­ப­டவே குறைந்­தது 10 வரு­டங்­க­ளா­வது கடந்து விடு­கி­றது.அப்­ப­டி­யெனில் நாட்டில் நீதி­மன்­றங்­களும் அதி­க­ரித்துக் கொண்டே போக வேண்­டிய நிர்ப்­பந்­தமும் ஏற்­படும்.

எமது நாட்டில் நிம்­ம­தி­யாக மக்கள் வாழ வேண்­டு­மெனில் அதற்கு ஏற்ற சட்­டங்­களை உரு­வாக்க வேண்டும். மேலும் அச்­சட்­டங்கள் கடு­மை­யாக்­கப்­ப­டவும் வேண்டும். முதலில் மரண தண்­ட­னை நிறை­வேற்­றப்­பட வேண்டும். நாட்­டி­லுள்ள மரண தண்­டனை கைதிகள் அனை­வ­ருக்கும் உட­ன­டி­யாக குறித்த அத்­தண்­ட­னையை நிறை­வேற்ற வேண்டும். களவு செய்­ப­வர்கள் அனை­வ­ருக்கும் சிங்­கப்பூர் நாட்டில் வழங்­கப்­ப­டு­வதை போன்று கசை­யடி வழங்கி தண்­டனை வழங்க வேண்டும்.அதுவும் பொது மக்கள் முன்­னி­லையில் அத்­த­ண­்டனை வழங்­கப்­படல் வேண்டும். சிறு கள­வு­க­ளுக்கு 12 கசை­ய­டி­களும் பெரிய கள­வு­க­ளுக்கு 100 கசை­ய­டி­களும் வழங்க வேண்டும்.

பாலியல் குற்றம் செய்யும் ஆண்­களின் ஆணு­றுப்பை நெருப்­பினால் சுட வேண்டும்.இப்­படி குற்­றங்­க­ளுக்கு அதற்­கேற்­றாற்­போன்று தண்­ட­னைகள் வழங்­கப்­பட்­டாலே ஒழிய குற்­றங்கள் குறை­வ­தற்கு வேறு வாய்ப்­பில்லை. இந்தச் சட்­டங்­களை மக்கள் அறிந்து கொண்டால் மேலும் இப்­ப­டி­யான குற்­றங்­களை செய்ய மாட்­டார்கள்.

ஜனா­தி­பதி மரண தண்­ட­னை­களை உட­ன­டி­யாக நிறை­வேற்­றுங்கள். நீங்கள் வித்­தி­யாவின் வீட்­டிற்கு நேரில் சென்று அவர்­க­ளுக்கு வீடு வழங்­கி­யது எல்­லாமே உங்­க­ளது மனி­த­நே­யமும் கரு­ணை­யுள்­ள­முமே என்­பதில் எவ்­வித சந்­தே­க­மு­மில்லை.

ஆனால் எம்மை பொறுத்­த­வரை வித்­தியா பாலியல் வன்­பு­ணர்வு செய்­யப்­பட்டு கொடூ­ர­மாக கொலை செய்­யப்பட்டுள்ளார்.அந்த கொலை­யா­னது செய்­யப்­பட்ட விதம் யாரா­லும நினைத்துகூடப் பார்க்க முடி­யாத கொடூ­ர­மான பாலியல் வன்­பு­ணர்­வாகும். அப்­ப­டி­யான கொடூர கொலை­யா­ளி­க­ளுக்கு நீங்கள் வழங்­கி­யுள்ள தண்­ட­னை­யா­னது மரண தண்­டனை எனும் பெயரில் சிறைச்­சாலை உல்­லாச வாழ்க்­கை­யாகும்.இத­னால்தான் எமது இலங்கை நாட்டில் குற்­றங்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

ஜனா­தி­பதி உங்­க­ளுக்கே நன்கு தெரியும். தற்­பொ­ழுது எமது நாட்டில் தினந்­தோறும் கொலை­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து கொண்­டி­ருக்­கின்­றது. நீங்கள் உட­ன­டி­யாக கவ­னத்தில் கொண்டு இதனை கட்­டுப்­ப­டுத்த வேண்டும். ஏனென்றால் மரண தண்­டனை எனும் பெயரில் கொலை­யா­ளி­க­ளுக்கு கிடைத்­தி­ருக்கும் உல்­லாச வாழ்க்­கையே இது­வென்­பது கொலை­யா­ளி­க­ளுக்கு நன்கு தெரியும். எத்­தனை கொலைகள் செய்­தாலும் சிறைச்சாலைகளில் உல்லாசமாக வாழலாம் என்பது கொலையாளிகளுக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய வரப்பிரசாதமாகும். ஒரு கொலை செய்து தலைவன் எனும் அந்தஸ்து வேறு கிடைத்துவிடும். மேலும் அதன் பிறகு அவர்களுக்கு அரசியல் வாதிகளின் செல்வாக்கும் கிடைத்துவிடும். அத்துடன் மக்களும் பயம் கலந்த மரியாதை அளிக்க தொடங்குவார்கள்.

மக்களே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இன்றிலிருந்து குறுந்தகவல், மின்னஞ்சல் அனுப்பும் பணி தொடரட்டும். மரண தண்டனைகள் நிறைவேற்றப்படட்டும். மக்கள் எவ்வித அச்சமுமின்றி நிம்மதியாக வாழ வழி பிறக்கட்டும். மனதால் ஒன்றுபடுவோம் மாற்றத்தை கொண்டு வருவோம்.

வி.முத்துசுவாமி

 

http://epaper.virakesari.lk

 

 

தூக்குத் தண்டணை தேவையா?

 

18.11.2017 வீர­கே­சரி இத ழில் 'தூக்­குத்­தண்­டனை நிறை­வேற்­றப்­பட வேண்டும்' என வி.முத்­து­சாமி எழு­திய கட்­டு­ ரைக்கு ஒரு பதில் கட்­டு­ரை­யாக எனது பார்­வையில் சில விடயங்­களை இங்கு சுட்­டிக்­காட்­டு­கின்றேன். இந்த கட்­டுரை சிறிது உணர்ச்சி வசப்­பட்டு எழு­தி­யி­ருப்­ப­துபோல் இருக்­கி­றது. முத­லா­வது, நல்­லாட்சி அர­சாங்­கத்தை குறை­கூ­று ­கிறார். உண்­மையில் 2015க்கு முன்னர் ஆட்சியிலிருந்த அர­சாங்­கங்கள் மக்கள் மீது கடு­மை­யான போக்கைக் கடைப்­பி­டித்­தன. முக்­கி­ய­மாக சிறு­பான்­மை­யினர் அரச பயங்­க­ர­வா­தத்தில் சிக்கி வருந்­தினர். ஆகவே நல்­லாட்சி அர­சாங்கம் ஓர­ள­வி ற்கு சிறு­பான்­மை­யி­ன­ருக்கு நிம்­மதி தரும் என எதிர்­பார்க்­கிறேன். அதற்­காக தூக்­குத் ­தண்­டனை கொண்டு வர­வேண்­டிய அவ­ சியம் இல்லை.

1974 இல் இருந்தே தூக்­குத்­தண்­டனை நிறுத்­தப்­பட்­டு­விட்­டது. இப்­போது நாட்டில் பெரு­கி­யி­ருக்கும் பாரிய குற்­றச்­செ­யல்­க­ளுக்கு இது காரணம் அல்ல. சட்டச் சீர்­கு­லைவு, அரச பயங்­க­ர­வாதம் ஆயு­தக்­கு­ழுக்­களின் வெறி­யாட்டம், போதை­ம­ருந்து, மது பாவ­னை­களின் அதி­க­ரிப்பு, விரக்தி மனப்­பான்மை, சட்­டத்தை நிர்­வ­கிக்கும் அதி­கா­ரி­களின் ஆண­ வப்­போக்கு, அலட்­சியம் இவை தான் குற்­றங்கள் அதி­க­ரிப்­பிற்கு கார ணம்.

குற்­றங்கள் களை­யப்­பட வேண்­டு­மா னால் சட்­டத்­திட்­டங்கள் கடு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும். பார­பட் சம் காட்­டப்­ப­ட­லா­காது. இதைத்தான் சிங்­கப்பூர் அமுல்­ப­டுத்­தி­யுள்­ளது. அங்கு அர­ சாங்க அதி­கா­ரிகள், அமைச்­சர்கள், பாரா­ளு­ மன்ற உறுப்­பி­னர்கள், மக்கள் அனை­வ­ருமே சட்­டத்­திற்கு உட்­பட்­ட­வர்கள். பார­பட்சம் கிடை­யாது. எமது நாட்டில் இது நடக்­குமா?

எமது நாடு பௌத்­த­நாடு. ஆகவே, தூக்­குத்­தண்­டனை கூடாது என்று கூற­மாட்டேன். தண்­டனை விதிப்­ப­தற்கு மதம் ஒரு தடை­யாக இருக்­கக்­கூ­டாது. ஆனால், தண்­டனை விதிப்பில் தவறு நேர்ந்­து­விட் டால் எப்­படி நிவர்த்தி செய்­வது? போன உயிர் திரும்பி வருமா? சட் டம் ஒரு இருட்­டறை. அதில் சட்­டத்­த­ர­ணியின் வாதம் விளக்­கைப்­போன்­றது என்று கூறி­யவர் அறிஞர் அண்­ணா­துரை. ஆனால், அந்த விளக்கு எல்­லோ­ருக்கும் சம­மாகக் கிடைக்­குமா?

 இலங்­கையில் நடந்த பிர­பல வழக்கு 1950 களில் நடந்த சதா­சிவம் கொலை வழக்­குத்தான். கிரிக்கெட் வீர­ரான சதா­சிவம் மனை­வியைக் கொலை செய்­த­தாகக் கைது செய்­யப்­பட்டார். அரச சாட்­ சி­யா­ள­ராக மாறிய வேலைக்­காரன் ஜேசு­தா­சன்தான் கால்­களைப் பிடிக்க, சதா­சிவம் கழுத்தை திருகி கொலை செய்­த­தாகக் கூறினார். அய­லவர் ஒரு­வ­ரது சாட்­சியம் சதா­சி­வத்­திற்கு எதி­ராக அமைந்­தது. ஆனால், சதா­சி­வத்­திற்­காக வாதாட முன்­வந்­தது சட்­ட­மேதை, பிர­பல அர­சி­யல்­வாதி டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா.

அவர் முதன்­மு­த­லாக நவீன மருத்­துவ நிபுணர் சிட்னி சிமித்தின் உத­வி­யோடு நீதி­மன்­றத்தில் வாதா­டினார். நீதி­பதி கூட டாக்டர் கொல்வின் ஆர். டி. சில்­வாவைப் பாராட்­டினார். டாக்டர் கொல்வின் ஆர். டி .சில்­வாவைப் போன்ற சட்­ட­மே­தையின் உத­வி­பெற சதா­சி­வத்­திற்கு பண­பலம் இருந்­தது. சாதா­ ரண குடி­ம­க­னுக்கு இருந்­ததா?

1969 இல் பிர­ப­ல­மான கொலை வழ க்கு காமினி பத்­மினி குல­ரட்ன என்ற பெண்­ம­ணியின் கொலை, அவர்­க­ளுக்­காக வாதா­டி­யவர் வழக்­க­றிஞர் ஜீ.ஜீ.பொன்­னம்­பலம் குல­ரட்ன, அவ­ரது தாயார், அவர்­க­ளது வேலைக்­காரி ஒரு­வ­ருக்கும் மர­ண­தண்­டனை கிடைத்­தது. மேன் முறை­யீடு செய்­தார்கள். இவர்­க­ ளுக்­காக வாதா­டி­யவர் சட்­ட­மேதை கொல்வின் தான். மூவரும் நிர­ப­ரா­திகள் என விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

தூக்­குத்­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்தால் போன உயிர் திரும்பி வந்­தி­ருக்­குமா? ஆகவேதான் தூக்குத் தண்­ட­னையை நாம் எதிர்க்­கிறோம். சில வேளை­களில் பொலிஸ் அதி­கா­ரி கள் அதி­கார பலத்தை உப­யோ­கித்து சாட்­சி­களை மிரட்டி குற்­றஞ்­சாட்­டி­வி­டுவர். பண­பலம், வழக்­க­றிஞர் திறமை இருந்தால் தப்­பலாம். இல்­லா­விடின் அதோ கதிதான்.

சமீ­பத்தில் இந்­தி­யாவை உலுக்­கி­யி­ருக் கும் செய்தி, ராஜீவ்­காந்­தியைக் கொலை செய்­த­தாகக் குற்றம் சாட்­டப்­பட்ட பேர­றி­ வாளன் நிர­ப­ரா­தியோ என சந்­தே­கப்­படும் ஒரு நிகழ்ச்சி. அந்தக் குற்­றத்தை பதி­வு­செய்த அதி­கா­ரிதான் தவ­று­த­லாக பேர­றி­வா­ளனின் வாக்குமூலத்தை முறை­யாக பதி­வு­செய்­ய­வில்லை என்று ஒப்­புக்­கொண்­டி­ருக்­கிறார். தண்­டனை கொடுத்த நீதி­ப­தியே அவர்­களை விடு­ தலை செய்­யும்­படி சோனியா காந்­தி­யிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருக்­கிறார். அப்­ப­டி­யானால் 26 வரு­டங்­களின் பின் உண்மை வெளி­வ­ரு­கி­றதா? அவ­ருக்கு விதிக்­கப்­பட்ட தூக்­குத்­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்தால்?

அது மட்­டுமா? 30.01.1948ஆம் ஆண்டு மகாத்­மா­காந்தி சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். அவரைக் கொலை செய்த கோட்சே 1949 ஆம் ஆண்டு தூக்­கி­லி­டப்­பட்டார். இப் ­போது ஒரு புது­செய்தி. மகாத்­மா­காந்­தி யின் உடலில் நான்கு குண்­டுகள் இருந்­த­னவாம். மூன்று மட்­டுமே கோட்­சேயின் துப்­பாக்­கியில் இருந்து சுடப்­பட்­டவை. அப்­ப­டி­யானால் நான்­கா­வது குண்டு யாரால் சுடப்­பட்­டது? குற்­ற­வாளி யார்? ஒரு­வேளை அந்தக் குண்­டி­னால்தான் காந்­தியின் உயிர் பிரிந்­தி­ருந்தால் கோட்சே நிர­ப­ரா­தி­தானே?

சட்­ட­மேதை கொல்வின் ஆர்.டி.சில்வா பிரி­யா­விடை பெறும்­போது பேசிய பேச்சு இது. “என்­னிடம் 8 பேர்தான் கொலை செய்­த­தாக ஒத்­துக்­கொண்­டனர். 5 பேர் விடு­த­லை­யா­னார் கள். 3 பேருக்கு குறைந்த தண்­ட­னைதான் வழங்­கப்­பட்­டது. ''தூக்­குத்­தண்­ட­னைக்கு எதிர் என்­பது சக­லரும் அறிந்த செய்தி. உலகில் பல நாடு­களில் தூக்­குத்­தண்­டனை உண்டு. உண்­மையில் அமெ­ரிக்­காவில் 18 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் கூட தூக்கில் இடப்­பட்­டுள்­ளனர். (இந்­தி­யாவில் இந்த முறை இல்லை) அப்­ப­டி­யானால் இந்த நாடு­களில் வன்­முறை குறைந்­து­விட்­டதா? பௌத்­த­ நா­டான மியன்­மாரில் சிறு­பான்­மை­யி­ன­ரான முஸ் ­லிம்­கள் கொலை செய்­யப்­ப­டு­கின்­ற­னரே? அவர்­க­ளுக்கு தூக்குத் தண்­டனை உண்டா?

அது மட்­டுல்ல, இலங்­கை­யி­லி­ருந்து பணிப்­பெண்­ணாகச் சென்ற முஸ்லிம் சிறு­மிக்கு (18 வயதை விடக் குறைந்­தவர்) மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அது மட்­டுமா? 18 வய­திற்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்கு மர­ண­தண்­டனை கூடாது என்­பது சவூ­தியில் சட்டம். ஆனால், அச்­சி­று­மியை அனுப்­பிய முகவர் வயதைக் கூட்­டிக்­காட்­டி­யதை சவூதி நீதி­ப­திகள் கவ­னத்தில் கொண்­டார்­களா? இல்­லையே! வித்தியா படுகொலை பயங்கரமானதுதான். அதே போல் கிருசாந்தியின் கொலையும் பயங் கரமானதுதான். இந்தியாவில் பாலியல் குற்றம் செய்தவனை மலடு ஆக்க வேண் டும் என்ற கோரிக்கை வந்தபோது பெண் களே அதை எதிர்த்தார்களாம்.

தூக்குத் தண்டனை கொடுப்பதன் மூலம் கொலை, பாலியல் குற்றங்களை தடுக்க முடியாது. ஆனால் கூடிய தண் டனை வழங்கலாம். சட்ட திட்டங்கள் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டால் குற்றங்கள் குறை யும். இதையே நல்லாட்சி அரசாங்கம் செய்யும் என எதிர் பார்க்கிறேன். எமது இன சந்ததியினருக்கு ஒழுக்கத்தின் உயர்வை பெற்றோர் போதிக்க வேண்டும். மது, புகை, போதை மருந்துகளின் பாவனையை குறைக்க வேண்டும்.

எஸ்.ஆர். பாலச்சந்திரன்

http://epaper.virakesari.lk

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.