Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலும் கூட்டணியும்

Featured Replies

தேர்தலும் கூட்டணியும்

 

தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் விளைவாகவே, மாற்றுத் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என்ற தேவை தலையெடுத்திருந்தது. அந்த வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை உதயமாகியது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் உள்ளடக்கிய மாற்று அரசியல் அணியொன்றின் உருவாக்கத்திற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. 

இழுத்தடிக்கப்பட்டு வந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள ஓர் அரசியல் சூழலில், இந்த நடவடிக்கைகள் தமிழ் அரசியல் களத்தில் தளம்பலான ஒரு நிலைமையையே உருவாக்கியிருக்கின்றன. 

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மட்டுமல்லாமல், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று உத்தரவாதமளிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியல் சூழல் என்ற பின்னணியும், இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. 

இந்த நிலையில் இப்போது ஏற்பட்டுள்ள இந்தத் தளம்பல் நிலை தமிழ் மக்களின் ஆரோக்கியமானதோர் அரசியல் செல்நெறிக்கு உகந்த வகையில் தெளிவுபெறுமா அல்லது என்ன நடக்கும் என்பது பல்வேறு தரப்பினருடைய கரிசனைக்கும், அரசியல் ரீதியான ஆர்வம் மிகுந்த அக்கறைக்கும் உரியதாகியிருக்கின்றது. 

தமிழ் மக்கள் பேரவை

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்பின் அயராத முயற்சியில் உருக்கொண்ட தமிழ் மக்கள் பேரவை, ஓர் அரசியல் அமைப்பாக செயற்படுவதற்குத் தயாராக இருக்கவில்லை. ஒரு கட்சியைப் போன்று அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என அடித்துக் கூறிய தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தவறவிட்டதாகக் கருதப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. 

குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அரசியல் தீர்வை காண்பதற்குரிய முன்மொழிவு ஒன்றைத் தயார் செய்து முன்வைத்தது. காணிப்பிரச்சினை, மீள்குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பு கூறல், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட அவசரமான பிரச்சினைகளுக்குத் தீர்வை காண்பதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எழுக தமிழ் என்ற பெயரில் மக்களை எழுச்சி கொள்ளச் செய்வதற்கான பேரணிகளை வடக்கிலும் கிழக்கிலும் ஒழுங்கு செய்து நடத்தியிருந்தது. 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக்கட்சி இந்த நடவடிக்கைகளை விரும்பவில்லை. அரசியல் ரீதியாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்ற நடவடிக்கைகள், நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிர் சக்தியாகிய மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணியினரை ஊக்குவித்து, அரசாங்கத்தைப் பலவீனமாக்குவதற்கு வழிவகுக்கும் என்ற அரசியல் ரீதியான அச்சத்தை தமிழரசுக்கட்சி கொண்டிருந்ததே இதற்குக் காரணம் என கூறப்பட்டது.

ஆயினும் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுள்ள கூட்டமைப்பு அந்த மக்களின் எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வை காண்பதற்கே முன்னுரிமை வழங்கிச் செயற்பட வேண்டும் என்று, தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்றிருந்த தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட தரப்பினர் வாதிட்டிருந்தனர். இருப்பினும் ஓர் அழுத்தக் குழுவாகச் செயற்பட்டதே அல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்று அரசியல் தலைமையாகச் செயற்படுவதற்கு தமிழ் மக்கள் பேரவை முனையவில்லை. 

எதிர்ப்பிரசாரமும் விமர்சனங்களும்

தமிழ் மக்கள் பேரவையில் வடக்கு கிழக்குப் பிரதேச சிவில் அமைப்பின் முன் முயற்சியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட் ஆகிய அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, தமிழ் மக்கள் பேரவை எழுச்சி பெற்றது. இந்தப் பேரவைக்கு மூன்று பேர் இணைத்தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களில் வடமாகாண முதலமைச்சர் முக்கியமானவர். ஏனைய இருவரும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளாக இணைத்தலைமையை ஏற்றிருந்தார்கள். ஆயினும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரும்,, மக்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளவருமாகிய வடமாகாண முதலமைச்சரை மக்கள் செல்வாக்குடைய அரசியல் தலைவராக – ஓர் அரசியல் அடையாளமாகவே தமிழ் மக்கள் பேரவை உள்வாங்கியிருந்தது.

தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கைப் பெற்றிருந்த போதிலும், தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் நிறைவேறாமல் இருந்த வெற்றிடத்தை அதனால் நிரப்ப முடியவில்லை. 

ஆயினும், தமிழ் மக்கள் பேரவையானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குப் போட்டியானதோர் அரசியல் சக்தியாகவே செயற்பட முனைகின்றது என தமிழரசுக் கட்சியினரும், அதன் ஆதரவாளர்களும், பிரசாரம் செய்தனர். கூட்டமைப்புத் தலைமையின் கீழ் ஓரணியாகத் திரண்டிருந்த தமிழ் மக்களுடைய அரசியல் ரீதியான ஒற்றுமையைக் குலைக்கின்ற பாரதூரமான செயற்பாடுகளில் தமிழ் மக்கள் பேரவையினர் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினர். அது மட்டுமல்லாமல், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போனமையைக் குத்திக்காட்டி, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மக்களைக் குழப்பியடித்து, அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றார்கள் என்ற பிரசாரத்தையும் முன்னெடுத்திருந்தனர். 

நம்பிக்கையில்லாப் பிரேரணை

அந்த வகையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் இரா.சம்பந்தனால், வடமாகாணத்தின் முதலமைச்சராக அரசியலுக்குள் கொண்டு வரப்பட்ட முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் கூட்டமைப்புக்கு எதிரான வகையில் தமிழ் மக்கள் பேரவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்ததையும் அவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். 

தமிழரசுக்கட்சியினால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் இணக்கத்துடனும், அவர்களுடைய அங்கிகார ஆதரவுடனுமே வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் விக்கினேஸ்வரனின் அரசியல் பிரவேசம் அமைந்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டி, தான் எந்தவொரு தனிக் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே சார்ந்திருக்கின்றேன் என்ற அரசியல் தன்னிலை விளக்கத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், அதற்கேற்ற வகையில் அவர் செயற்பட்டிருந்தார். இருப்பினும், அவரை அரசியலுக்குள் கொண்டு வந்த தமிழரசுக்கட்சியினர் அவருடைய அரசியல் நிலைப்பாடு தொடர்பான தன்னிலை விளக்கத்தை ஏற்பதற்குத் தயாராக இருக்கவில்லை. முதலமைச்சர் பதவியில் இருந்து அவரைத் தூக்கி எறியும் அளவுக்கு தமிழரசுக்கட்சியின் அரசியல் மனநிலை கடுமையாக இருந்தது. 

தமிழரசுக்கட்சியின் இந்த அரசியல் கடும்போக்கே, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வடமாகாண ஆளுநரிடம் நேரடியாகச் சமர்ப்பித்து, அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கையாக வெளிப்பட்டிருந்தது. 

எல்லைக் கோட்டைக் கடக்காத அரசியல் கொள்கை 

அதேநேரம், அவருடைய அரசியல் போக்குக்கு ஆதரவாக தமிழ் மக்கள் பேரவையில் செயற்படுகின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகளையும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட குழுவினர் என்ற அரசியல் ரீதியான ஏளனத் தொனியில் தமிழரசுக் கட்சியினருடைய பிரசாரங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆயினும், இந்த இரண்டு அரசியல் கட்சிகளும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு அளித்த உறுதியான பகிரங்க ஆதரவும், அத்துடன், இளம் சமூகத்தினர் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தியிருந்த ஆதரவும், தமிழரசுக்கட்சியினருடைய நம்பிக்கையில்லாப் பிரேரணையை முறியடித்திருந்தன. 

அரசியல் களத்தில் புதியவராக, முன் அனுபவமில்லாதவராக வடமாகாண முதலமைச்சராக அரசியலில் பிரவேசித்த விக்னேஸ்வரன் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் என்ற ரீதியில் அவர் தன்னால் இயன்ற உரிய முயற்சிகளை மேற்கொள்வார் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அத்துடன் அரசியல் ரீதியாக வலுவானதொரு தலைமையைக் கட்டியெழுப்பிச் செயற்படுவார் என்ற எதிர்பார்ப்பையும் அவர்கள் கொண்டிருந்தார்கள். 

அதேவேளை, வடக்கு, கிழக்கு சிவில் அமைப்பும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய இரண்டு அரசியல் கட்சிகளும்கூட, வடமாகாண முதலமைச்சர் என்ற அரசியல் அந்தஸ்தின் ஊடாக ஒரு மாற்று அரசியல் அணிக்கு உறுதியானதோர் அரசியல் தலைமைத்துவத்தை அவர் வழங்குவார் என்று எதிர்பார்த்திருந்தன. ஆனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் வட்ட, எல்லைக் கோட்டைக் கடந்து வெளியில் வர முடியாது என்ற தனது நிலைப்பாட்டை அவர் தெளிவாகக் கூறிவிட்டார். அது மட்டுமல்லாமல், கட்சி ரீதியான அரசியல் செயற்பாடுகளிலோ அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் சக்தியாகவோ தமிழ் மக்கள் பேரவை செயற்படமாட்டாது என்ற பேரவையின் ஆரம்பகால அரசியல் நிலைப்பாட்டில் இருந்து விலகப் போவதில்லை. பேரவையை அவ்வாறு விலகுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்ற இறுக்கமான தனது நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தத் தவறவில்லை.

உறுதியற்ற அரசியல் தலைமை....

இருப்பினும் முதலமைச்சர் என்ற ரீதியில் வடமாகாண சபையை இறுக்கமான ஒரு கட்டமைப்புக்குள் வழிநடத்தி, அடிமட்டத்தில் மக்களுடைய தேவைகைளப் பூர்த்தி செய்து அபிவிருத்தியை முன்னேற்றகரமாக முன்னெடுப்பதிலும், தமிழ் மக்களின் ஏனைய அரசியல் பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியாகவும், அரசியல் நுட்பத்துடனும் கையாளத்தக்க வல்லமை முதலமைச்சரிடமிருந்து வெளிப்படவில்லை. 

தமிழரசுக்கட்சியுடன் மட்டுமல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் மத்தியிலும் ஒரு கவர்ச்சிகரமான ஆளுமையும் வல்லமையும் கொண்ட தலைமைத்துவத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அத்துடன், யாழ். குடாநாட்டின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான இரணைமடு குடிநீர்த்திட்டம், சுன்னாகம் குடிநீரில் எண்ணெய் கலந்த விவகாரம், வவுனியா பொருளாதார மையம், வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் போன்ற விடயங்கள் முதலமைச்சரின் கையை மீறிய விடயங்களாக விஸ்வரூபமெடுத்து, வடமாகாண சபையின் நிர்வாகப் பலவீனத்தை வெளிப்படுத்துவதற்கே வழி வகுத்திருந்தன. 

வடமாகாண சபையின் ஊடாக வலுவானதோர் அரசியல் தலைமை வடக்கில் பரிணமித்திருக்குமேயானால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியாக மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பின்னடைவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு குறைவடைந்திருக்கும். அரசியல் ரீதியான அதன் பலவீனங்களும்கூட குறைந்திருக்கும். மாற்று அரசியல் அணிக்கான சிந்தனை – அதற்கான தேவையும்கூட பெரிய அளவில் எழுந்திருக்கமாட்டாது என்றே கூற வேண்டும். 

யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்­க­ளா­கின்­றன. வட­மா­காண சபை அதி­கா­ரத்­திற்கு வந்து நான்கு வரு­டங்­க­ளா­கின்­றன. அதன் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு இன்னும் சுமார் பத்து மாதங்­களே இருக்­கின்­றன. ஆயினும் பாதிக்­கப்­பட்ட மக்கள் எதிர்­பார்த்­த­வாறு மாகாண சபையின் அதி­கார எல்­லைக்கு உட்­பட்ட அளவில் அவர்­களின் அடிப்­படைத் தேவைகள் பெரிய அளவில் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. தேவை­களை நிறை­ வேற்­று­வ­தற்­கான செயற்­பா­டு­க­ளையே மக் கள் அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும், அதி­கா­ரி­க­ளி­டமும் எதிர்­பார்க்­கின்­றார்கள்.  குறிப்­பாக மக்­க­ளுக்கு சேவை­யாற்­று­வ­தற்­கா­கவே தங்­களை அர்ப்­ப­ணித்­துள்­ள­தாகக் கூறு­கின்ற அர­சி­யல்­வா­தி­க­ளிடம் மக் கள் அதிக அளவில் இந்த எதிர்­பார்ப் பைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அறிக்கை அர­சி­யலும், வாராந்த கேள்வி பதில் மூல­மான விளக்­கங்­க­ளிலும் பார்க்க நடைமுறைச் செயற்­பா­டு­களே மக்­க­ளுக்கு இப்­போது அவ­சி­ய­ மா­கி­யி­ருக்­கின்­றன. புதிய அர­சியல் அணி யின் உரு­வாக்கம் என்­பது,  இத்­த­கைய பின்­ன­ணி­யி­லேயே முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது.  

தளம்பல் நிலை

அர­சாங்­கமும் தமிழ்த்­தே­சிய கூட்ட மைப்பும் கொண்­டுள்ள இணக்­க­மான அர­சியல் உறவைப் பயன்­ப­டுத்தி தமிழ் மக்­க­ளு­ டைய பிரச்­சி­னை­க­ளுக்கு, மேலும் தாம­த­மின்றி, தீர்வு காண வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கின்ற ஓர் அழுத்தக் குழு­வாக உரு­வா­கிய தமிழ் மக்கள் பேர­வையின் ஊடாக ஒன்­றி­ணைந்த சிவில் சமூகம், பொது அமைப்­புக்கள் மற்றும் அர­சியல் கட்­சிகள் என் ப­வற்றை உள்­ள­டக்­கிய மாற்று அர­சியல் அணியை முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் தலை­மையில் உரு­வாக்­கலாம் என்ற அர­ச யல் நப்­பா­சையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட முயற்­சிகள் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அத்­த­கை­யதோர் அர­சியல் தலை­மையை ஏற்றுச் செயற்­ப­டு­வ­தற்கு அவர் விரும்­ப­வில்லை. அதற்கு அவர் தயா­ராக இல்லை என்­பது இதற்கு முக்­கிய கார­ண­மா­கி­யது.  

இருப்­பினும், உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­த­தை­ய­டுத்து, கூட்­ட­மைப்பின் தேர்தல் சின்­ன­மா­கிய வீட்டுச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தில்லை என்ற முடிவை எடுத்த ஈ.பி.ஆர்.எல்.எவ். மாற்று அர­சியல் அணி­யொன்றை உரு­வாக்க வேண்

­டிய கட்­டாய நிலை­மைக்குள் தள்­ளப்­பட்­டது. கூட்­ட­மைப்பின் ஏனைய பங்­காளிக் கட்­சி­க­ளா­கிய ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்­சி­களும், கூட்­ட­மைப்புத் தலை­மையின் செயற்­பா­டு­களில் முழு­மை­யான உடன்­பாடோ அல்­லது திருப்­தியோ கொண்­டி­ராத போதிலும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யுடன் இணைந்து மாற்று அர­சியல் அணியை உரு­வாக்­கு­வ­தற்கு முன்­வ­ர­வில்லை. 

இதனால், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணி­யி­னதும், பொது அமைப்­புக்­க­ளி­னதும் ஆத­ர­வுடன் மாற்று அர­சியல் அணியை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான முயற்­சி­களில் ஈ.பி.­ஆர்­.எல்.எவ். ஈடு­பட்­டது. ஆயினும் தேர்தல் களம் ஒன்றில் முகம் காட்­டு­கின்ற புதிய அர­சியல் அணி மக்­களைக் கவர்ந்து, அவர்­க­ளு­டைய ஆத­ரவைப் பெறக் கூடி­ய­தான ஒரு தேர்தல் சின்­னத்தைத் தெரிவு செய்ய வேண்டும், அது ஒரு பொதுச் சின்­ன­மா­கவும் இருக்க வேண்டும் என்று உண­ரப்­பட்­டது. இந்த நிலையில் புதிய அர­சியல் அணிக்­கான சின்­னத்தைத் தெரிவு செய்­வதும் தீவிர சிந்­த­னைக்கு உரிய விட­ய­மா­கி­யது. 

இந்த நிலையில், தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி தனது உத­ய­சூ­ரியன் சின்­னத்தைப் புதிய அர­சியல் அணி ஒரு பொதுச்­சின்­ன­மாகக் கொண்டு செயற்­ப­டு­வ­தற்கு இண க்கம் தெரி­வித்­துள்­ள­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.  இருந்த போதிலும், தமிழ் த்­தே­சிய மக்கள் முன்­னணி உத­ய­சூ­ரியன் சின்­னத்தைப் பயன்­ப­டுத்­து­வ­தற்குத் தயக்கம் காட்­டு­வ­தா­கவும் தனது சொந்தச் சின்­ன­மா­கிய சைக்கிள் சின்­னத்தைப் பயன்­ப­டுத்­து­வ­தி­லேயே அது விருப்பம் கொண்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­கின்­றது. இதனால், புதிய அர சியல் அணியின் உரு­வாக்கம் என்­பது பல்­வேறு படி­மு­றை­களைக் கடந்து வந்­தி­ருந்­தா­லும்­கூட, பொதுச்­சின்னம் ஒன்றைத் தெரிவு செய்­வதில் தளம்பிக் கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.  

பொதுச்­சின்னம் 

பல்­வேறு அமைப்­புக்­களும், ஒன்­றுக்கும் மேற்­பட்ட அர­சியல் கட்­சி­களும் ஒன்­றி­ணை­யும்­போது, அவர்­க­ளுக்கு ஏற்­ற­தொரு பொதுச்­சின்­னத்தைத் தெரிவு செய்ய வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மாகும். அனைத்துத் தரப்­பி­ன­ரதும் இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் அந்தத் தெரிவு அமைய வேண்­டி­யது அவ­சியம். பொது இணக்­கப்­பா­டில்­லாமல் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற சின்னம் அந்தக் கூட்டு அமைப்பை கட்­டுக்­கோப்­பினுள் வைத்­தி­ருக்க முடி­யாது. ஆனால் இன்­றைய அர­சியல் சூழலில் தமிழ் மக்கள் பல ஆண்­டு­க­ளா­கவே வீட்டுச் சின்­னத்­திற்கே தேர்­தலில் வாக்­க­ளித்து பழக்­கப்­பட்­டு­விட்­டார்கள். எனவே, அந்தச் சின்­னத்தில் இருந்து அவர்­க­ளு­டைய கவ­னத்தைத் திசை திருப்­பக்­கூ­டிய வகையில் பொருத்­த­மா­ன­தொரு சின்­னத்தைத் தெரிவு செய்ய வேண்டும் என்­பதில் கூடிய கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது. 

தந்தை செல்வா தமி­ழர்­வி­டு­தலைக் கூட்­ட­ணியை உரு­வாக்­கி­ய­போது, அதன் சின்­ன­மாக உத­ய­சூ­ரியன் சின்னம் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது பழம்­பெரும் கட்­சி­யான. தமி­ழ­ர­சுக்­கட்சி , பரம்­பரை பரம்­ப­ரை­யாக தமிழ் மக்கள் மத்­தியில் செல்­வாக்குப் பெற்­றி­ருந்த போதிலும், அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­பதில் அந்தக் கட்­சியின் தனித்­து­வ­மான செயற்­பாடு போது­மா­ன­தல்ல என்­பதை உணர்ந்த கார­ணத்­தி­னா­லேயே தமி­ழ­

ரசுக் கட்­சியைக் கைவிட்டு, தந்தை செல்­வா­வினால் தமிழர் விடு­தலைக் கூட்­டணி உரு­வாக்­கப்­பட்­டது. தமிழ்க்­காங்­கிரஸ் மட்­டு­மல்­லாமல் மலை­யகக் கட்­சி­யா­கிய இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ர­ஸையும் அவர் அந்தக் கூட்­ட­ணிக்குள் உள்­ள­டக்கி மூன்று இணைத்­த­லை­வர்­களின் தலை­மையில் அதனை அவர் செயற்­ப­டுத்­தி­யி­ருந்தார். 

அந்தக் கூட்­ட­ணியின் வழி­யி­லேயே தந்தை செல்­வாவின் மறை­வுக்குப் பின்னர், விடு­த­லைப்­பு­லிகள் காலத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. அக்­கா­லப் ப­கு­தியில் விடு­த­லைப்­பு­லி­களின் வடி­வத்தில், தமிழ் மக்­க­ளுக்கு உறு­தி­யான அர­சியல் தலைமை இருந்­தது. அப்­போது மக்கள் அந்தத் தலை­மையின் ஆளு­கைக்குள் கட்­டுண்டு இருந்­தார்கள். இதனால், தமிழர் விடு­த லைக் கூட்­ட­ணிக்குப் பதி­லாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­ய­போது, மக்­களைக் கவ­ரத்­தக்க ஒரு பொதுச்­சின்­னத் தைத் தேடிய அலைய வேண்­டிய தேவை எழுத்­தி­ருக்­க­வில்லை. தலை­மையின் இறுக்­க­மான பிடிக்குள் கட்­டுண்­டி­ருந்த மக்கள் வீட்டுச் சின்­னத்தை அப்­ப­டியே ஏற்­றுக்­கொண்டு அதற்கு அமோக ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தார்கள்.  

மக்­களின் நம்­பிக்கை அவ­சியம்

ஆனால் யுத்தம் முடி­வ­டைந்­ததைத் தொடர்ந்து விடு­த­லைப்­பு­லி­களின் பிர­சன்னம் இல்­லாத இன்­றைய சூழலில் அர­சியல் கட்­டுக்­கோப்பு தலை­மை­யிடம் இருந்து நழுவி சிதைந்த நிலையில் மக்­க­ளிடம் சார்ந்­தி­ருக்­கின்­றது. இதன் கார­ண­மா­கவே, அர­சியல் தலைமை தான் விரும்­பிய ஒரு

சின்­னத்தைத் தெரிவு செய்­வ­தி­லும்­பார்க்க, மக்­களைக் கவ­ரத்­தக்க ஒரு சின்­னத்தைத் தெரிவு செய்ய வேண்­டுமே என்ற அர­சியல் ரீதி­யான கரி­சனை எழுந்­தி­ருக்­கின்­றது. 

உண்­மையில் மக்­க­ளு­டைய கவனம் சின்­னத்தின் மீதல்ல. தமது தலை­வர்கள் மீதான நம்­பிக்­கை­யி­லேயே தங்­கி­யி­ருக்­கின்­றது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும் அரசியல் தலைவர்கள். எமது தலைவர்கள். பிரச்சினைகளை ஆய்ந்து அறிந்து எங்க ளுக்கு நன்மை பயக்கத்தக்க வகையில் உரிய சரியான தீர்வுகளைக் காண்பார்கள். தமது தலைவர்கள் தங்களை முன்னேற்றகரமான வழியில் நடத்திச் செல்கின்ற செயல் வல் லமை உடையவர்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட வேண்டும். அத் தகைய நம்பிக்கையே காலத்திற்கேற்ற வகையில் அரசியல் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கத்தக்க அரசியல் தலைமைகள் உருவாகுவதற்கு உறுதுணையாக இருக்கும்.  

அந்த வகையில் உள்ளூராட்சி சபைகளில் இருந்து, பாராளுமன்றம் வரையிலான அரசியல் கட்டமைப்புக்களில் மக்களின் மனங் களை வென்ற – மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கத்தக்க அரசியல் தலைமையே இன்றைய அவசிய அவசர அரசியல் தேவை யாகும்.   சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து செயற்பட வேண்டும். புரிந்து செயற்படுவார்களா...? 

பி.மாணிக்கவாசகம் 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-02#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.