Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் : நடந்தது என்ன ?

Featured Replies

கடற்படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் : நடந்தது என்ன ?

 

 
 

மன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று திங்கட்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில் கடற்படையினருக்கும், தாழ்வுபாட்டு கிராம மக்களுக்கும் இடையில் நேற்று மாலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

mannar8.jpg

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்கு வலையினை பயன்படுத்தியே மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

mannar1.jpg

இந்த நிலையில் தொழிலுக்குச் சென்ற தாழ்வுப்பாட்டு மீனவர்களில் 5 படகுகளைச் சேர்ந்த 25 மீனவர்களை கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்து தாழ்வுப்பாட்டு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

mannar2.jpg

மீனவர்கள் கைது செய்யப்பட்டதனை அறிந்து கொண்ட தாழ்வுப்பாட்டு கிராமமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தாழ்வுப்பாட்டு கடற்கரை முகாமை நோக்கி சென்ற மக்கள் குறித்த மீனவர்களின் கைது தொடர்பில் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்ததோடு அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரி இருந்தனர்.

mannar3.jpg

குறித்த கிராமத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சூழ்ந்து கொண்டமையினால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந் து மன்னார் பொலிஸார் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினர்.

mannar4.jpg

எனினும் கடற்படையினர் கைதுசெய்த குறித்த  25மீனவர்களையும்  உடனடியாக விடுவிக்குமாறும் விடுவிக்காதபட்சத்தில் குறித்த தாழ்வுப்பாட்டு கடற்படை முகாமை விட்டு தாம் கலைந்து செல்லப் போவதில்லை எனவும் தெரிவித்ததை அடுத்து தாழ்வுப்பாட்டு கிராமத்தில்  பதற்றநிலை ஏற்பட்டது.

 

குறித்த மீனவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பில் கிராம மக்கள் கடற்படையினரிடம் கேட்ட போது அவர்கள் மீன் பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை தம் வசம் வைத்திருக்கவில்லை என கடற்படை தெரிவித்ததாக அந்த மக்கள் தெரிவித்தனர்.

mannar5.jpg

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார்   தாழ்வுப்பாட்டு கிராம மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் பொலிஸார் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் கடற்படையினரிடம் இருந்து பொலிஸார் பொறுப்பேற்று மன்னார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

mannar7.jpg

 மன்னார் மாவட்டத்தில்  ஏனைய பல பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட மீன் பிடித்தொழில்கள் இடம் பெறுகின்ற போதும் எமது  தாழ்வுப்பாட்டு பிரதேசத்தில் மாத்திரம் ஏன் கடற்படையினர் இவ்வாறான  கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றார்கள் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27859

  • தொடங்கியவர்

கடற்படையினர் கைது செய்த 25 மீனவர்களை மன்னார் நீதவான் விடுதலை செய்தார்.

 

 
 

மன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று  காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில், குறித்த மீனவர்கள் இன்று மதியம் மன்னார் நீதிமன்றில் ஆஜராகிய போது குறித்த மீனவர்களை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா விடுதலை செய்தார். 

online_New_Slide.jpg

மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று  காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்கு வலையினை பயண்படுத்தியே மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் தொழிலுக்குச் சென்ற தாழ்வுபாட்டு மீனவர்களில் 5 படகுகளைச் சேர்ந்த 25 மீனவர்களை கடற்படையினர் கடலில் வைத்து நேற்று கைது செய்து தாழ்வுபாட்டு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டதினை அறிந்து கொண்ட தாழ்வுபாட்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தாழ்வுபாட்டு கடற்படை முகாமை நோக்கி சென்று  மீனவர்களின் கைது தொடர்பில் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்ததோடு அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரி இருந்தனர்.

இந் நிலையில் அங்கு வந்த பொலிஸார் குறித்த மீனவர்களை நேற்று  மாலை பொறுப்பேற்று மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்ததோடு, இன்று காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

இந் நிலையில் குறித்த 25 மீனவர்களும் இன்று காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இதன் போது குறித்த 25 மீனவர்களும் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரத்தை தம் வசம் வைத்திருக்காததன் காரணத்தினாலேயே அவர்கள் கைது செய்யப்படுள்ளதாக கடற்படையினர் மன்றில் தெரிவித்திருந்தனர்.

விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் எவ்வித நிபந்தனைகளும் இன்றி குறித்த மீனவர்கள் 25 பேரையும் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27881

On 12/5/2017 at 11:25 PM, நவீனன் said:

குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்கு வலையினை பயண்படுத்தியே மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் தொழிலுக்குச் சென்ற தாழ்வுபாட்டு மீனவர்களில் 5 படகுகளைச் சேர்ந்த 25 மீனவர்களை கடற்படையினர் கடலில் வைத்து நேற்று கைது செய்து தாழ்வுபாட்டு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிங்கள-பௌத்த "நல்லாட்சி" அரச பயங்கரவாதத்தின் கோரமுகங்களில் இதுவும் ஒன்று!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.