Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டியின் மூலம் சவால்களை வெற்றி கொள்ள முடியும்

Featured Replies

சமஷ்டியின் மூலம் சவால்களை வெற்றி கொள்ள முடியும்

 

இனப்­பி­ரச்­சி­னைக்கு விரைவில் அர­சியல் தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய தேவை இப்­போது மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது. இவ்­வி­ட­யத்தில் இழுத்­த­டிப்­பு­களை மேற்­கொள்­ளு­மி­டத்து நாடு அபா­ய­க­ர­மான சூழ்­நி­லையை சந்­திக்க வேண்­டி­வரும் என்று தொடர்ச்­சி­யா­கவே எச்­ச­ரிக்­கைகள் விடுக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும் என்று சர்­வ­தே­சமும் வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில், இலங்­கையின் பசப்பு வார்த்­தை­களை இனியும் சர்­வ­தேசம் நம்­பு­வ­தற்கு தயா­ராக இல்லை என்­ப­த­னையே சர்­வ­தே­சத்தின் அண்­மைக்­கால போக்­குகள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

இலங்­கையின் கடந்­த­கால மற்றும் சம­கால அர­சி­ய­ல­மைப்­புகள் நாட்டு மக்­களின் எதிர்ப்­பினை சம்­பா­தித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. நம்­ப­கத்­தன்­மையை இழந்­தி­ருக்­கின்­றன. ஐக்­கி­ய­மிக்க நாட்­டினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு பதி­லாக விரி­சல்­க­ளுக்கும் வேற்­று­மை­க­ளுக்கும் இவ்­வ­ர­சி­ய­ல­மைப்­புகள் வலுச் சேர்த்தி­ருக்­கின்­றன என்­பது யாவரும் அறிந்த ஒரு விட­ய­மாகும். 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டின் அர­சி­ய­ல­மைப்பை பார்க்­கும்­போது, அதி­கா­ரத்தை வரை­ய­றைக்கு உட்­ப­டுத்தும் (Check and Balance) முறை­யொன்­றினை காணக்­கூ­டி­ய­தாக இல்லை. 1992 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­பின்கீழ் தேசிய அரச சபைக்கு அதி­க­ள­வான அதி­கா­ரங்கள் கிடைத்­தன. இதே­வேளை 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பின் கீழ் ஜனா­தி­ப­திக்கு அதி­க­ள­வான அதி­கா­ரங்கள் கிடைத்­தன. இந்­நி­லையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­ப­டும்­போது எந்­த­வொரு பத­விக்கோ அல்­லது நப­ருக்கோ வரை­ய­றை­யற்ற அதி­காரம் கிடைக்­கின்ற முறை­மை­யொன்று உரு­வாக்­கப்­ப­டாது இருப்­பதில் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும் என்று புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர்.

கடந்­த­கால மற்றும் சம­கால அர­சி­ய­ல­மைப்பின் அதி­ருப்தி நிலைகள் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு வித்­திட்­டி­ருந்­தன. அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் தொடர்பில் தொடர்ச்­சி­யா­கவே கருத்­துகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்டு வரப்­பட வேண்டும் என்­ப­தனை கடந்­த­கால ஆட்­சி­யா­ளர்­களும் வலி­யு­றுத்தி இருந்­தனர். எனினும் கால மாற்­றத்­தினால் இப்­போது எதி­ர­ணியில் இருக்கும் அத்­த­கையோர் புதிய அர­சி­ய­ல­மைப்புத் தேவை­யில்லை என்­கிற ரீதியில் தற்­போது கருத்­து­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­ற­மை­யா­னது விந்­தை­யிலும் விந்­தை­யாகும் என்று பலரும் பேசிக் கொள்­வ­த­னையும் கேட்கக் கூடி­ய­தாக உள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது இனப்­பி­ரச்­சினை உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கும் உரிய தீர்­வினை பெற்றுக் கொடுக்கும் என்று நம்­பிக்­கையும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு முன்­வைக்­கப்­ப­டுமா? என்­கிற கேள்வி இப்­போது மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரான சக்­திகள் இப்­போது பல­ம­டைந்து காணப்­ப­டு­கின்­றன. இதற்­கி­டையில் விரைவில் அர­சியல் ரீதி­யாக பல மாற்­றங்கள் ஏற்­பட உள்­ள­தா­கவும் ஊகங்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த மாற்­றங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை முன்­வைப்­ப­தற்கு சாத­க­மாக அமை­யுமா? அல்­லது புதிய அர­சி­ய­ல­மைப்பு என்­பது கன­வாகிப் போகுமா? என்­றெல்லாம் சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக சமஷ்­டி­முறை தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டி­ருந்­தது. எனினும் சமஷ்டி முறை­யினை ஏற்றுக் கொள்­வதில் சிலர் தயக்கம் காட்டி வரு­கின்­றனர். வர­லாற்றில் ஜன­நா­யக ரீதியில் செயற்­பட்ட செல்­வ­நா­யகம், அமிர்­த­லிங்கம் போன்­ற­வர்கள் 1950 களில் ஜன­நா­யக ரீதியில் சமஷ்டி முறை ஒன்­றினை கோரி இருந்­த­தாக ரொஹான் எதி­ரி­சிங்க போன்­ற­வர்கள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர். எனினும் அவ்­வா­றான முறை­யொன்று பெற்றுக் கொடுக்­கப்­ப­ட­வில்லை. இறு­தியில் 1972 இல் ஒற்­றை­யாட்சி என்று கூறி முத்­தி­ரை­யொன்றை அர­சி­ய­ல­மைப்­பிற்குள் குத்­தி­விட்­டனர். அதற்கு பின்­னரே ஜன­நா­யக ரீதியில் தமது கோரிக்­கை­களை பெற்­றுக்­கொள்ள முடி­யா­மை­யினால் யுத்­தத்­திற்கு செல்ல வேண்­டிய நிலைக்கு நாம் தள்­ளப்­பட்­ட­தாக கருத்­துகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் ரொஹான் எதி­ரி­சிங்க மேலும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். நாம் இந்த யதார்த்­தத்­தினை புரிந்து கொள்ள வேண்டும். அவ் உள்­ள­டக்­கத்­தினை ஏற்றுக் கொண்டு இப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு உதவும் வகையில் அர­சியல் யாப்பு ஒன்­றினை நிர்­மா­ணிக்க வேண்டும். 'ஒற்றை' என்ற சொற்­ப­தமே பாரிய பிரச்­சினை என்­றா­கி­யுள்­ளது. அதன் மூலம் 1972 ஆம் ஆண்டு ஞாப­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

அது சிங்­கள பெரும்­பான்­மையின் ஏகா­தி­பத்­தி­யத்­தினை நினை­வூட்­டு­கின்­றது. நாம் இந்­நி­லை­மை­யினை ஏற்றுக் கொள்­ள­வேண்டும் என்று ரொஹான் ஏற்­க­னவே (2006) தெளி­வு­ப­டுத்தி இருந்­த­மை­யையும் இங்கு நோக்­கத்­தக்­க­தாக உள்­ளது.

இதே­வேளை, சமஷ்டி முறை கலந்­து­ரை­யா­டலின் முக்­கி­யத்­துவம் குறித்து சிரால் லக்­தி­லக்­கவும் ஒரு சமயம் வலி­யு­றுத்தி இருந்தார். சமஷ்டி கட்­ட­மைப்­பிற்குள் இனத்­துவ சமூ­க­மொன்றில் ஏற்­படும் சவால்­களை நிர்­வ­கிக்க முடி­யுமா? என்­பது குறித்து ஆராய்தல் வேண்டும். இலங்கை பன்­மைத்­துவ சமூ­க­மொன்­றென நாம் யதார்த்­த­மாக ஏற்றுக் கொள்­ளுதல் வேண்டும். சிங்­க­ள­வர்கள் 2500 வருட வர­லாறு ஒன்­றினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தாக ஒரு கட்சி கூறு­கின்­றது. ஆனால் வேறு இனங்­களும் பல காலங்­களின் போது அவர்­களின் கலா­சா­ரங்­களை கட்­டி­யெ­ழுப்பி உள்­ளனர் என்­ப­தையும் மறந்­து­வி­ட­லா­காது. இந்­நாட்டில் பல இன கலா­சா­ரங்கள் நில­வு­கின்­றன. இவ்­வ­னைத்து இனங்­க­ளுக்கும் நடை­மு­றையில் இங்கு உரிமை உள்­ளது. இதனை நாம் ஏற்றுக் கொள்­ளுதல் வேண்டும் ஆனாலும் அவ்­வி­னங்­க­ளுக்கு தீர்­மா­னங்­களை எடுக்கும் அதி­கா­ரங்கள், ஜன­நா­யக ரீதி­யான சவால்கள் மற்றும் மனித உரிமை தொடர்­பான சவால்கள் போன்­றன நில­வு­கின்­றன. சமஷ்டிக் கோட்­பாட்டால் இச்­ச­வால்­களை வெற்றி கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும். பிரச்­சி­னை­க­ளுக்குக் காரணம் அரசின் சுயா­தி­பத்­தி­யத்­திற்குள் பல இனங்­களின் தேவைகள் உள்­வாங்கிக் கொள்ளும் தன்­மைகள் இல்­லா­மை­யாகும்.

பெரும்­பான்மை ஜன­நா­ய­க­வாதம் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களை சவா­லுக்கு உட்­ப­டுத்­து­கின்­றது. பன்­மைத்­துவ நாடு ஒன்றில் பெரும்­பான்­மைக்கு ஏற்ப முடி­வு­களை எடுத்தல் மிகவும் கடி­ன­மான விட­ய­மொன்­றாகும். சமஷ்டிக் கருத்­துகள் இதற்கு பதி­ல­ளிப்­ப­தாக அமையும் என்று சிரால் லக்­தி­லக ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

மேலும், உலகில் பல நாடுகள் சமஷ்டி முறை­மை­யினை ஏற்றுக் கொள்­கின்­றன. உலக சனத்­தொ­கையில் சுமார் அறு­பது சத­வீ­தத்­தினர் சமஷ்டி முறைக்­குள்ளே வாழ்­கின்­றனர். உலகில் பன்­மைத்­துவ நாடுகள் மட்­டு­மன்றி பிராந்­திய அபி­வி­ருத்தி தேவைப்­படும் நாடு­களும் சமஷ்டி முறை­மை­யினை பின்­பற்­று­கின்­றன. சமஷ்டி முறைமை இலங்­கைக்கு பொருத்­த­மா­னது என்ற கலந்­து­ரை­யாடல் முக்­கி­ய­மான ஒன்­றாகும். அங்கு பல விதி­மு­றை­க­ளையும் வழி­மு­றை­க­ளையும் இனங் கண்­டு­கொள்ள முடியும் என்றும் சிரால் குறிப்­பி­டு­கின்­றமையும் இங்கு நோக்­கத்­தக்­க­தாக உள்­ளது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி ரீதி­யி­லான தீர்வே மிகவும் பொருத்­த­மா­ன­தாக அமையும் என்று தொடர்ச்­சி­யா­கவே வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்று வந்­தி­ருக்­கின்­றன. இதற்­கி­டையில் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை தாண்­டினால் அது சமஷ்­டி­யா­கி­விடும் என்று துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­றுறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க அண்­மையில் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

மாகா­ணங்­க­ளுக்­கான அதி­கா­ரத்­தினை அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­திற்குள் பகிர வேண்டும். அதற்கு அப்பால் சென்றால் அது சமஷ்­டி­யா­கி­விடும். அதி­காரப் பகிர்வு தொடர்­பாக எமக்கு மிகுந்த அனு­பவம் உள்­ளது. பேச்­சு­வார்த்தை மூலம் தீர்­வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

இதே­வேளை, 13 ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தினால் அது சமஷ்­டியே என்­பது ஜே.வி.பி.யின் கருத்­தாக இருக்­கின்­றது. 13 ஆவது திருத்­தத்தில் உள்ள சில மோச­மான செயற்­பாடுகள் இப்­போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாமல் உள்­ளன. இவற்றை நடை­முறைக்கு கொண்டு வந்­தாலே பிரச்­சி­னைகள் உரு­வாகும். 13 ஆம் திருத்தம் சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டால் சமஷ்டி முறை­யினை கையாள வேண்­டி­வரும். இதனால் பிரி­வினை மேலும் அதி­க­ரிக்கும். வடக்கு மக்­க­ளுடன் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க முடி­யா­விட்டால் இறு­தியில் நாடு பிள­வு­படும் என்­றெல்லாம் ஜே.வி.பி. கூறி வரு­வ­த­னையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

சமஷ்டி குறித்து தேவை­யில்­லாது சிலர் அச்சம் கொண்டு வரு­கின்­றனர். சமஷ்­டிக்கு சாவு மணி­ய­டிக்க இவர்கள் முனைந்து வரு­கின்­றனர். சமஷ்டி குறித்து பேசு­ப­வர்கள் இது­தொ­டர்பில் பூரண அறி­வினை பெற்­றுள்­ளார்­களா? என்று சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது. அர­சியல் சுய இலா­பங்­க­ளுக்­காக எதிர்க்க வேண்டும் என்­கிற நோக்கில் சமஷ்­டி­யினை சிலர் தூக்கிப் பிடித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். எனினும் இவர்­க­ளுக்கு இந்தத் துறையில் எவ்­வ­ள­விற்கு புலமை இருக்­கின்­றது என்­பது ஒரு கேள்­விக்­கு­றி­யே­யாகும்.

சமஷ்டி என்­பது எத்­தனை முக்­கி­யத்­துவம் மிக்கது என்பதனை ஒவ்வொருவரும் விளங்கிச் செயற்படுதல் வேண்டும். சமஷ்டிக் கொள்கையானது ஒரு அரசியல் யாப்பு மட்டுமல்ல. அது ஒரு அரசாங்கம். ஒரு சமூகத்தின் அடிமூலம் என்று கூறுகின்றார் சமஷ்டிக் கொள்கையின் ஆராய்வாளர் ரொன்வோற்ஸ். இது குறித்தும் நாம் ஆழமாக சிந்தித்து செயற்படுதல் வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வினை எட்டுவதில் சகல தரப்பினரினதும் பங்களிப்பு என்பது மிகவும் அவசியமாக உள்ளது. அதேபோல் பெரும்பான்மை சமூகத்தினர் சில விட்டுக் கொடுப்புகளையும் செய்ய வேண்டிய நிலையும் மேலெழுந்திருக்கின்றது. விடாப்பிடியான போக்குகள் பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் அரசியல் இலாபத்துக்காகவும் பெரும்பான்மை­யினரை திருப்திப்படுத்து­வதற்காகவும் பிழையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசியல் தீர்வு முன்னெடுப்புகளை குழப்புகின்ற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதனையும் இப்போது காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் தம்மை திருத்திக் கொண்டு பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முற்படுதல் வேண்டும். இல்லாவிட்டால், தமிழர்களின் சாபம் இவர்களை சும்மா விட்டுவிடாது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-07#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.