Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூயார்க் மன்ஹாட்டன் பஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு?

Featured Replies

நியூயார்க் மன்ஹாட்டன் பஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு? .. ஒருவர் கைது என தகவல் 

 

 நியூயார்க்: நியூ யார்க் மன்ஹாட்டன் பஸ் நிலையத்தில் குண்டு வெடித்ததாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/international/bomb-blast-newyork-manhattan-s-port-authority-bus-terminal-304696.html?utm_source=pn-desktop&utm_medium=pn-article&utm_campaign=pn-cms&ref=pn-cms

New York explosion at Manhattan bus terminal

 

 

A man is being held after an attempted terror attack at America's biggest and busiest bus terminal, officials say.

"Terrorists won't win. We are New Yorkers," said Mayor Bill De Blasio said after a blast in an underpass at the Port Authority terminal on Monday.

The suspect was wounded. Fire officials say four people were injured, but none is in danger.

US media say the man had a pipe bomb strapped to his body when it detonated at the start of the morning rush hour.

Mr De Blasio said the suspect was believed to have acted alone.

A photo circulating on social media shows a man, said to be the suspect, lying on the ground with his clothes ripped and lacerations on his upper body.

Map

White House press secretary Sarah Sanders said President Donald Trump had been briefed on the incident.

The Port Authority Bus Terminal serves more than 65 million people a year.

 

http://www.bbc.com/news/world-us-canada-42312293

 
  • தொடங்கியவர்

நியூயார்க்கின் மான்ஹாட்டன் பேருந்து முனையத்தில் `தீவிரவாதத் தாக்குதல் முயற்சி'

காவல் துறை அதிகாரிகள் Image captionதுறைமுக ஆணைய பேருந்து முனையத்தில் - காவல் துறை அதிகாரிகள்

நியுயார்க்கின் மான்ஹாட்டனில் உள்ள ஒரு பேருந்து முனையத்தில் தீவிரவாதத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"பயங்கரவாதிகள் ஜெயிக்க முடியாது. நாங்கள் நியுயார்க்வாசிகள்" என்று பேருந்து முனையத்தில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்துக்குப் பிறகு நியுயர்க் மேயர் பில் டி பிளேசியோ தெரிவித்தார்.

திங்கட்கிழமை காலை, டைம்ஸ் ஸ்கொயர் அருகே உள்ள துறைமுக ஆணைய பேருந்து முனையத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அகாயத் உல்லா என்ற 27 வயது நபர், குறைந்த தொழில்நுட்பம் கொண்ட வெடிக்கும் கருவிகளை தன் உடலில் சுற்றியிருந்த நிலையில், மக்கள் நெரிசலுக்கு இடையில் அதை வெடிக்கச் செய்தபோது அவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படத்தில், சந்தேகத்துக்குரியவராகக் கருதப்படும் நபர், துணிகள் கிழிந்து சிதறி, காயங்களுடன் தரையில் கிடப்பதையும், அவரது உடலில் வயர்கள் சுற்றப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

நியுயார்க்படத்தின் காப்புரிமைREUTERS Image captionநியுயார்க் நகரின் பல பகுதிகள் கண்காணிப்பு வலயத்துக்குள்...

அந்த நபர் தனியாக செயல்பட்டிருப்பதாக நம்புவதாக மேயர் தெரிவித்துள்ளார்.

''42ஆவது தெரு, 8ஆவது அவென்யூ, #மான்ஹாட்டனில் ஏற்பட்ட காரணம் அறியப்படாத தீ விபத்து சம்பவத்திற்கு நியூயார்க் நகர போலீசார் தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்'' என்று நியூயார்க் காவல் துறை ட்வீட் செய்துள்ளது.

பேருந்து முனையத்தில் தரைத்தளத்தில் உள்ளச சுரங்கப்பாதையில் குழாய் வெடிகுண்டு வெடிக்கப்பட்டிருக்கலாம் என்று ABC செய்திகள் கூறுகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் டிரம்பிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகத் தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

துறைமுக ஆணைய பேருந்து முனையம், ஓர் ஆண்டிற்கு 65 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய பேருந்து முனையம் ஆகும்.

http://www.bbc.com/tamil/global-42313797

  • தொடங்கியவர்

நியூயார்க் பேருந்து முனையத்தில் தாக்குதல்: வங்கதேச குடியேறி கைது

அகாயத் உல்லாபடத்தின் காப்புரிமைCBS Image captionஅகாயத் உல்லா

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள முக்கிய பேருந்து முனையத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சிதத்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்

திங்கட்கிழமையன்று பரபரப்பான காலை நேரத்தின்போது, மான்ஹாட்டனில் உள்ள துறைமுக ஆணைய பேருந்து முனையத்தில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்துக்கு பிறகு பேசிய நியுயார்க் மேயர் பில் டி பிளேசியோ,"பயங்கரவாதிகள் ஜெயிக்க முடியாது'' என கூறினார்.

இத்தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரான 27 வயதான வங்கதேச குடியேறி அகாயத் உல்லா, குறைந்த தொழில்நுட்பம் கொண்ட வெடிக்கும் கருவிகளை தன் உடலில் சுற்றியிருந்ததால் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படத்தில், சந்தேகத்துக்குரியவராகக் கருதப்படும் நபர், துணிகள் கிழிந்து சிதறி, காயங்களுடன் தரையில் கிடப்பதையும், அவரது உடலில் வயர்கள் சுற்றப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

அந்த நபர் தனியாக செயல்பட்டிருப்பதாக நம்புவதாக மேயர் தெரிவித்துள்ளார்.

வெடிப்பு சம்பவம் நடந்த இந்த பேருந்து முனையம் உலகிலே மிகவும் பரபரப்பானது. வருடத்திற்கு 65 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்குப் பயணிக்கின்றனர்.

இந்தப் பேருந்து முனையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

''நான் சுரங்கபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். திடீரென வெடிப்பு சத்தம் கேட்டது. அனைவரும் ஓட தொடங்கினர்'' என ஆண்ட்ரே ரோட்ரிக்ஸ் என்பவர் நியூயார்க் டைம்ஸிடம் கூறியுள்ளார்.

நியூயார்கில் உள்ள சந்தேச நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நியுயார்கில்படத்தின் காப்புரிமைREUTERS

நியூயார்க் போஸ்டின் செய்தியின்படி, தற்போது இவர் ஒரு மின் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.

அகாயத் உல்லாவின் குடும்பம் 2011-ம் ஆண்டு அமெரிக்காவுக்குக் குடியேறியுள்ளது. உல்லா தொடர்பாக எந்த குற்ற பதிவும் இல்லை எனவும், கடந்த செப்டம்பர் மாதம் அவர் வங்கதேசம் வந்ததாகவும் வங்கதேச அரசு கூறியுள்ளது.

http://www.bbc.com/tamil/global-42319060

  • தொடங்கியவர்

ஃபேஸ்புக்கில் டிரம்பை எச்சரித்து தாக்குதல் நடத்திய நியூயார்க் தாக்குதல்தாரி

தாக்குதல்தாரிபடத்தின் காப்புரிமைCBS

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பேருந்து முனையத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததால் தீவிரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் நபர், தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரப்பை எச்சரிக்கும் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

''உங்கள் நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள் டிரம்ப்'' என அந்த பதிவு கூறுகிறது. செவ்வாய்க்கிழமையன்று அரசு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தபோது, அகாயத் உல்லாவின் பதிவு குறித்த தகவல் வெளிவந்தது.

ஐ.எஸ் குழுக்களால் ஈர்க்கப்பட்ட 27 வயதான வங்கதேச குடியேறியான அகாயத் உல்லா, வெடிகுண்டை உடலில் சுமந்து வந்து வெடிக்கச் செய்தார்.

திங்கட்கிழமையன்று பரபரப்பான காலை நேரத்தின்போது மான்ஹாட்டனில் உள்ள துறைமுக ஆணைய பேருந்து முனையத்தில், குறைந்த தொழில்நுட்பம் கொண்ட வெடிக்கும் கருவிகளை அகாயத் உல்லா தன் உடலில் சுற்றிவந்து வெடிக்கச் செய்தார்.

இந்த தாக்குதலில் அவரும் மற்ற மூவரும் காயமடைந்தனர்.

தீவிரவாத செயலுக்கு ஆதரவளித்தது, தீவிரவாத அச்சுறுத்தல் செய்தது போன்ற குற்றச்சாட்டுகளை அகாயத் உல்லா எதிர்கொண்டுள்ளதாக நியூயார்க் போலீஸார் ட்வீட் செய்துள்ளனர்.

நியூயார்க்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

''ஐ.எஸ் அமைப்புக்காக நான் இதைச் செய்தேன்'' என கைதுக்கு பிறகு அகாயத் உல்லா கூறியதாக அரசு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தபுகாரில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐ.எஸ் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதால் தான் தூண்டப்பட்டதாக அகாயத் உல்லா விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாக ஆவணங்கள் கூறுகின்றன.

இந்த வெடிக்கும் சாதனத்தை தயாரிக்க கிருத்துமஸ் விளக்கு உள்ளிட்ட பல பொருட்களை உல்லா பயன்படுத்தியதாக புகார் கூறுகின்றது. வெல்க்ரோ பட்டையின் உதவியால் இந்த சாதனத்தை உடலில் இணைத்துள்ளார்.

சந்தேச நபர் உல்லாவின் வீட்டில் சோதனை செய்தபோது, ''உலோக குழாய்கள், வயர்கள் மற்றும் உலோக திருகுகள் கண்டுபிடிக்கப்பட்டன. வெடிகுண்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வெடி பொருட்களுடன் இவை ஒத்துபோகின்றன'' என அரசு வழக்கறிஞர் ஜூம் கிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

''ஒரு வருடத்திற்கு முன்பே எப்படி வெடிகுண்டு செய்வது என்ற ஆராய்ச்சியைத் தொடங்கியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த குறிப்பிட்ட தாக்குலை நடத்த அவர் பல வாரங்களாகத் திட்டமிட்டுள்ளார்'' எனவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.

'அதிகளவு மக்களைக் கொல்ல'' இந்த இடத்தையும் நேரத்தையும் அவர் தேர்ந்தேடுத்துள்ளார் என ஜூம் கூறுகிறார்.

அகாயத் உல்லாவின் குடும்பம் 2011-ம் ஆண்டு அமெரிக்காவுக்குக் குடியேறியுள்ளது. உல்லா தொடர்பாக எந்த குற்ற பதிவும் இல்லை எனவும், கடந்த செப்டம்பர் மாதம் அவர் வங்கதேசம் வந்ததாகவும் வங்கதேச அரசு கூறியுள்ளது.

http://www.bbc.com/tamil/global-42334416

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.