Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

Featured Replies

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

 

 
lalu_prasad_yadav

 

பிகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ஜகன்னாத் மிஸ்ரா ஆகியோருக்கு எதிரான கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.

கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், கால்நடைத் தீவனம் வாங்குவதாகக் கூறி, ரூ.89.27 லட்சம் வரை மோசடி செய்ததாக, லாலு பிரசாத், ஜகன்னாத் மிஸ்ரா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர, முன்னாள் எம்.பி. ஆர்.கே.ராணா, 3 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 22 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் முன்னிலையில் ஆஜராவதற்காக, லாலு பிரசாத் தனது மகன் தேஜஸ்வி யாதவுடன் நீதிமன்றம் வந்தடைந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, 34 பேருக்கு எதிராக கடந்த 1997-ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில், 11 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் சிபிஐ தரப்பு சாட்சியாக மாறிவிட்டார். 

இந்நிலையில், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் இருந்து பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவை உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு. இதில் இருந்து பிகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேரை விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கு தொடர்பான தண்டனை விவரங்களை வருகிற ஜனவரி 3-ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி ஷிவ்பால் சிங் தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/india/2017/dec/23/fodder-scam-case-verdict-lalu-prasad-yadav-released-by-cbi-special-court-2831874.html

கைது செய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவ் ஹோட்வார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்    

Read more at: https://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பு

LALUPRASAD-RABRIjpg

தேஜஸ்வி யாதவ் - ராப்ரி தேவி- லாலு பிரசாத் (கோப்பு படம்)

கால்நடைத் தீவன  ஊழல் தொடர்பான 2வது வழக்கில், பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் குற்றவாளி என  ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று (டிச.23 2017) தீர்ப்பளித்துள்ளது.  அவருக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

பிஹார் முதல்வராக லாலு பிரசாத் பதவிவகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 1994-95-ல் சைபாசா கருவூலத்திலிருந்து 78 போலி ஒதுக்கீடு கடிதங்கள் மூலம் லாலு ரூ.37.7 கோடி பணம் எடுத்ததாக கூறப்பட்டது.

   
lalu%20aniPNG

ராஞ்சி நீதிமன்றத்திற்கு வந்த லாலு பிரசாத்

 

இது தொடர்பாக, சிபிஐ லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்தது. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ல் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் அவரது அரசியல் வாழ்க்கையில் இருள் சூழ்ந்தது. 11 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே ஒரே புகாரின் கீழ் வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி லாலு பிரசாத் தரப்பில், ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. குற்ற நடைமுறைச் சட்டத்தின் படி, ஒரே குற்றத்திற்காக இருமுறை ஒருவர் மீது குற்றஞ்சாட்ட முடியாது என்று கூறி லாலு மீதான விசாரணையை நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல் செய்தது. அரசு கருவூலங்களில் இருந்து வெவ்வேறு காலங்கட்டங்களில் பணம் எடுக்கப்பட்டுள்ளன, இரண்டு தடவைகளிலும் நிதி நஷ்டம், பாதிக்கப்பட்ட நபர்கள், பயனடைந்த நபர்கள் வேறு வேறு என சிபிஐ வாதிட்டது. இதை ஏற்று மீண்டும் விசாரணையை தொடங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 1991-94-ல் தியோகார் கரூவூலத்திலிருந்து ரூ.84.53 லட்சம் தொகையை எடுத்தது மற்றும் ஆவணங்களில் முறைகேடு செய்தது தொடர்பாக லாலு உள்ளிட்டோர் மீது தனித்த விசாரணை வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

இதைதொடர்ந்து ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  கால்நடைத் தீவன ஊழல் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கால்நடைத் தீவன  ஊழல் தொடர்பான 2வது வழக்கில், பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் குற்றவாளி என  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரை தவிர மேலும் 15 பேர் குற்றவாளி எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ranchiPNG

தீர்ப்பை கேட்பதற்காக ராஞ்சி நீதிமன்றம் முன்பு கூடியிருந்த லாலு ஆதரவாளர்கள்   -  படம்: ஏஎன்ஐ

http://tamil.thehindu.com/india/article22266307.ece?homepage=true

  • தொடங்கியவர்

அம்பேத்கர், நெல்சன் மண்டேலாவை வரலாறு வில்லன்களாத்தான் பார்க்கிறது..! லாலு பிரசாத் யாதவ் உருக்கம்

 
 

நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங், அம்பேத்கர் ஆகியோரை வரலாறு வில்லன்களாகத்தான் பார்க்கிறது என்று கால்நடைத் தீவன ஊழல் வழக்கு தீர்ப்புக்குப் பிறகு லாலு பிரசாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

lalu-prasad-yadav-08-1465368823_17584.jp

 

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என்று சி.பி.ஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, அவர் சிறைக்குச் செல்லவுள்ளார். தீர்ப்புக்குப் பிறகு லாலு பிரசாத் யாதவ் ட்விட்டர் பதிவில், 'ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுவதன் மூலம் உண்மையைப் பொய்யாகவோ அல்லது பாதிப் பொய்யாகவோ அல்லது மறைக்கவோ முடியும். ஆனால், எது நடந்தாலும் ஒருதலைப்பட்சமான செயல்பாடு விலகும். உண்மை ஒருநாள் வெற்றி பெறும். உண்மை, காலணிகளை அணிவதற்கு முன்னதாகப் பொய் உலகத்தின் பாதியைச் சுற்றிவந்துவிடும்.

ஆனால், உண்மை நிலைத்துநிற்கும். ஆளும் வர்க்கம் மற்றும் ஆண்ட வர்க்கம் என்று சமூகத்தை அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிரித்து வைத்திருப்பார்கள். என்றாவது ஒருநாள் அடித்தட்டிலிருந்து ஒருவர் வந்து இந்தப் படிநிலைக்கு எதிராக கேள்வி எழுப்பும்போது, அதிகாரத்தில் உள்ளவர்கள் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார்கள். நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங், பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோர் முயற்சிகள் தோல்வியடைந்தன. வரலாறு அவர்களை வில்லன்களாகத்தான் சித்திரித்துள்ளது. இனவாதிகள், சாதியவாதிகளுக்கு, மேற்கூறிய தலைவர்கள் இன்று வில்லன்கள்தான். அவர்களிடமிருந்து வேறு எதுவும் எதிர்பார்க்கமுடியாது' என்று பதிவிட்டுள்ளார். 

https://www.vikatan.com/news/india/111672-lalu-prasad-tweets-emotionally.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.